Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandil Ondru
Irandil Ondru
Irandil Ondru
Ebook157 pages1 hour

Irandil Ondru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'இரண்டில் ஒன்று' - நம்மில் பலருக்கு ஒரு முக்கியமான விஷய்த்தில் முடிவு எடுக்கத் திணறுவார்கள். அதா... இதா.. என்று தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களைக் கேட்டு, அவர்களையும் குழப்பி தங்களையும் குழப்பிக் கொள்வார்கள். ஒருவர் ஒரு செயலில் இறங்கி வெற்றிக்காக போராடும்போது மற்றவர்கள் அதை விமர்சிக்கும் பொழுது வீண் முயற்சி என்று சொல்வார்கள். அந்த செயலில் அவர் வெற்றி பெற்றுவிட்டால் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் இரண்டில் ஒன்று நாவல்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பெண் பார்க்கும் நிகழ்வில் கதை ஆரம்பித்து பிறகு ஒரு லாரி ட்ரான்ஸ்போர்ட் ஆபீஸில் நடைபெறும் சம்பவங்களோடு கலந்து குற்றங்களின் பின்னணியில் கதை நகர்ந்து திரும்பவும் அந்த வீட்டிலேயே வந்து கதை முடிகிறது.

- ராஜேஷ்குமார்.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400216
Irandil Ondru

Read more from Rajesh Kumar

Related to Irandil Ondru

Related ebooks

Reviews for Irandil Ondru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandil Ondru - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    இரண்டில் ஒன்று

    Irandil Ondru

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அந்தச் சின்ன ஓட்டு வீடு இந்த தொடர்கதை ஆரம்பமாகிற நிமிஷங்களில் சந்தோஷத்தடவலோடு இருந்தது. அதன் பின்

    பகல்த்தனமாய் சுற்றுப்புறச் சுவர்களில் சமீபத்திய ஒயிட் வாஷ். பசேலென சாணி மெழுகின தரை வாசலில், வீட்டுக்குள் கண்களை நிறுத்துகிற மாவுக்கோலங்கள்.

    உள் அறைக்குள் இருந்தாள் சாந்தி. மெரூன் நிற ஜாப்பனிஸ் சில்க்கை உடலுக்குக் கொடுத்திருந்தாள். தலைப்பிரதேசத்தில் ஜெயப்பிரதாத்தனம் இருந்தது. முகத்தில் விசேஷமாய் தெரிகிற கண்களில் காந்த மண்டல் அசைந்தது. சந்தன நெற்றியின் மையத்தில் சிவப்பு சாந்துப் பொட்டும் அதற்கும் கீழே கொஞ்சமாய் குங்குமத் தீற்றல். சறுக்குகிற சின்ன நாசி. ஈரத்தனத்தோடு செர்ரி பழ நிற உதடுகள்.

    அவளுக்கு கொஞ்சம் தள்ளி பாக்யலட்சுமி உட்கார்ந்திருந்தாள். பச்சை நிற பட்டுப் புடவையை தன் தடிமனான உடம்புக்கு சமர்ப்பித்திருந்தாள். நெற்றியை நிறைத்துக் கொண்டு குங்குமம் பெரிய சைஸில் தெரிந்தது. தலைப்பகுதியில் பாதி நிறம் மாறியிருந்தது. இன்று பெண் பார்க்க வருபவர்களாலாவது மகள் சாந்திக்கு ஒரு நல்ல வழி பிறக்குமா? என்ற கவலை மனசை நிறைத்திருக்க சாந்தியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    நாற்பது வயதான வெங்கடேசன் வாசலுக்கும், வீட்டுக்குமாய் பரபரப்போடு அலைந்து கொண்டிருந்தான். பிளெய்ன் காட்டன் சர்ட்டும், வெள்ளை வேஷ்டியுமாய் இருந்தான். புருவங்கள் ஒரே நேர் கோடாய் இணைந்து கிடந்தது. போஷாக்காய் மீசை வளர்த்திருந்தான். கண்ணுக்குக் கீழே நிறைய கோடுகள் வாங்கியிருந்தான். லாரி உரிமையாளர் ஒருவரிடம் டிரைவராக பத்து வருஷங்களாய் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தான்.

    அடிக்கடி வாசலை எட்டிப் பார்த்தான்.

    சாந்தியும், பாக்யலட்சுமியும் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

    சாந்தியின் நெற்றியில் பொடித்திருந்த வியர்வையை புடவைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டிருந்த பாக்யலட்சுமி திரும்பினாள்.

    புன்னகைத்தபடியே சொன்னாள்.

    என்னங்க... எதுக்காக இப்படி அலையறீங்க...? நீங்க வாசல்ல போய் எட்டிப் பார்த்துவிட்ட, பரபரன்னு நடந்திட்டிருந்தா அவங்க இப்பவே வந்துடுவாங்களா...? பதினோரு மணிக்கு வர்றதா சொல்லியிருக்காங்க... இப்ப மணி பத்து... கொஞ்ச நேரம்தான் ஸ்டூலை இழுத்துப் போட்டு உட்காருங்களேன்...

    வெங்கடேசன் சிரித்தான்.

    அவங்கல்லாம் வந்துட்டு போகட்டும்... அப்பத்தான் உட்கார முடியும்.

    என்னங்க... இந்த இடமாவது தகைஞ்சு வருமா...?

    பாக்யலட்சுமி மெல்லிய குரலில் கேட்டாள்.

    நிச்சயமாக தகையும் பாக்யம்...

    இப்படித்தாங்க... போன தடவை வந்த அந்த வாத்தியார் மாப்பிள்ளை மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தோம். கடைசியில என்ன ஆச்சு...?

    அது வேற விஷயம்... இவங்க அப்படியில்ல...

    எனக்கென்னவோ அவங்க வந்து பார்த்து சரின்னு சொல்ற வரைக்கும் நெஞ்சுக்குழில திக்திக்ன்னு பயம்தாங்க...

    இல்ல பாக்யம்... இந்த இடம் நிச்சயமா முடிஞ்சிடும்... எனக்கு நம்பிக்கையிருக்கு... நம்ம புரோக்கர் பொய் சொல்லமாட்டார்...

    நல்லபடியா முடிஞ்சா சந்தோஷம்தான்.

    வெங்கடேசன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் கேட்டான்.

    உன் தம்பிக்காரன் எங்கே காலைலர்ந்தே காணோம்?

    அவனைக் கேக்காதீங்க... வீட்ல நல்லதுன்னா அவன் தங்கமாட்டான். எங்கேயாவது போயிருப்பான்... தொலையட்டும். அவன் வீட்ல இல்லாததே நல்லதுதான்...

    பாக்யலட்சுமி சொன்ன விநாடி

    வாசலில் ஏதோ சத்தம் கேட்க

    அவள் நிமிர்ந்தாள்.

    வெங்கடேசன் ஏறிட்டான். ஆர்வமாய் சொன்னாள்.

    என்னங்க... அவங்க வந்துட்டாங்க... போலிருக்கு...!

    வெங்கடேசன் பரபரப்போடு எழுந்து வாசலை நோக்கிப் போனான்.

    வாங்க வாங்க...

    வாய் நிறைய புன்னகையை அமர்த்திக் கொண்டு வரவேற்றான்.

    மூன்றே பேர்தான் வந்திருந்தார்கள்.

    மாப்பிள்ளை இளைஞன், அவனின் அம்மா... அப்பா.

    நீளமுகமாய் இருந்தார் பையனின் அப்பா. பொமரேனியன் ரோமம் மாதிரி தலைப்பிரதேசம் பூராவும் பொலபொலவென வெள்ளை முடி. அந்த வெள்ளை முடியை சிரத்தையாய் சம்மர்கிராப் வெட்டியிருந்தார். மகாத்மா மாதிரி மீசை.

    பையனின் அம்மா அவரைவிட இரண்டு மூன்று அங்குலம் உயரமாய் தெரிந்தாள். மயில் கழுத்து நிற பட்டுப்புடவைக்குள் புதைத்திருந்தாள். சராசரி உடம்பு. கொஞ்சம் தூக்கலான நிறத்தோடு இருந்தாள். கழுத்தில் மூக்கில் கையில் ஒன்றிரண்டு தங்கச்சமாச்சாரங்கள் பளீரிட்டன...!

    மாப்பிள்ளை பையன் நடிகர் ராஜீவின் சாயலை வாங்கியிருந்தான். அபார கூர்மையோடு தெரிந்த நாசிக்குக் கீழே அடர்த்தியாய் மீசை. சிகரெட் நிகோடின் ஊதாநிறத்தை... வாங்கிக் கொண்டிருந்த உதடுகள் கண்களில் பெண் எங்கே? பெண் எங்கே? என்ற தேடல் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    வெங்கடேசன் மூலையிலிருந்த பாயை எடுத்து

    அவசர அவசரமாய் பிரித்தான்.

    உட்காருங்க...! அம்மா உக்காருங்க...

    வெங்கடேசன் பவ்யமாய் சொல்ல

    அவர்கள் பாயில் நிறைந்தார்கள். சீக்கிரமாகவே பெண் பார்த்துவிட்டு போக வேண்டும் என்கிற அவசரத்தில் கொஞ்சம் முன்னதாகவே வந்து விட்டதை பற்றி பேசினார்கள். ஐந்து நிமிஷங்கள் கழிந்ததும்

    பாக்யம்வெங்கடேசன் கூப்பிட்டான்.

    இதோ வந்துட்டேங்க...

    சமையறையிலிருந்து குரல் வந்த சில விநாடிகளில்

    கையில் காரம், ஸ்வீட் தட்டுகளோடு பாக்யலட்சுமி வெளிப்பட்டாள். எல்லாருக்கும் புன்னகையோடு தட்டுகளை வைத்தாள். இன்னொரு நடை நடந்து தண்ணீர் எடுத்து வந்து வைத்தாள்.

    சாப்பிடுங்க.

    எல்லாரும் தட்டிலிருந்த ஜிலேபியின் உடம்பைத் தடவினார்கள். மாப்பிள்ளையின் அப்பா ஜிலேபியை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே நேரடியாய் விஷயத்துக்கு வந்தார்.

    வெங்கடேசன்...

    சொல்லுங்க... பவ்யம் காட்டினான் வெங்கடேசன்.

    நாம பேச வேண்டிய எல்லா விஷயங்களையுமே முதலிலேயே பேசிட்டோம். பொண்ணை மட்டும் பார்க்கிறதுக்காகத்தான் நாங்க வந்திருக்கோம்... புரோக்கர் சொன்னார்... பொண்ணைக் கூப்பிட்டு விடுங்க... சாப்பிட்டுகிட்டே பொண்ணையும் பார்த்துடுவோம்...

    இதோ...

    வெங்கடேசன் பாக்யலட்சுமியிடம் திரும்பினார்.

    பாக்யம்... சாந்திகிட்டே... காபி கொடுத்து விடு...

    கதவோரம் நின்றிருந்த பாக்யலட்சுமி தலையசைத்து விட்டு உள்ளே போனாள். சொற்ப நிமிஷங்களில்

    சாந்தி தட்டில் ஏந்திய காபி டம்ளர்களோடு வந்தாள். தலை குனிந்திருந்தாள். கைகளில் இருந்த லேசான நடுக்கம் காபி தட்டுக்கு மாற்றலாகி துல்லியமாய்த் தெரிந்தது.

    மாப்பிள்ளையின் அப்பா சிரித்தார்.

    பொண்ணுக்கு ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கு...

    வெங்கடேசன் தலையாட்டினான்.

    சின்னதிலிருந்தே... அது அப்படித்தாங்க...

    சாந்தி குனிந்து காபி டம்ளர்களை ஒவ்வொருத்தரிடமும் நீட்டினாள்.

    அந்த அம்மாள் கேட்டாள்...

    உன் பேரென்னமா...?

    சாந்தி...

    பெயருக்கு ஏற்ற மாதிரி சாந்தமாகத்தான் இருக்கே...

    அவள் சொல்ல

    பெரிய ஜோக்கைக் கேட்ட மாதிரி சிரித்தார்கள். மாப்பிள்ளை பையன் தன் விஷம கண்களால் சாந்தியின் மார்பு பிரதேசங்களை அளந்து கொண்டிருந்தான்.

    சாந்தி காபி தட்டை வைத்து விட்டு

    ஓரமாய் ஒசிந்து நிற்க...

    என்னடா பொண்ணை பார்த்துக்கிட்டியா...?

    பையனின் அப்பா கேட்டார்.

    அவன் வழியலான புன்னகையோடு தலையசைத்தான்.

    ம்.

    அவர் சாந்தியை ஏறிட்டார்.

    சரி நீ உள்ளே போம்மா...

    விட்டால் போதும் என்கிற மாதிரி சாந்தி உடனே திரும்பி நடந்தாள். வெங்கடேசன் பரீட்சை எழுதி ரிசல்ட் பார்க்கிற ஆர்வத்தோடு அவர்களை

    Enjoying the preview?
    Page 1 of 1