Pattikkattu Krishnan
()
About this ebook
Read more from Yandamoori Veerendranath
Agnip Pravesam Rating: 0 out of 5 stars0 ratingsDharmayutham Rating: 5 out of 5 stars5/5Casanova - 99 Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Kadhalan Rating: 5 out of 5 stars5/5Thalapathi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theeviniley Rating: 0 out of 5 stars0 ratingsProfessional Killer Rating: 3 out of 5 stars3/5Saagara Sangamam Rating: 0 out of 5 stars0 ratingsPanam Rating: 5 out of 5 stars5/5
Related to Pattikkattu Krishnan
Related ebooks
Aval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Innoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsSollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Sandhya Nee Saagalam! Rating: 0 out of 5 stars0 ratingsAalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsKolathai Maatravaa Rating: 5 out of 5 stars5/5Nayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Iruthi Naal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsGnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaatha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsMegalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Pattikkattu Krishnan
0 ratings0 reviews
Book preview
Pattikkattu Krishnan - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
பட்டிக்காட்டு கிருஷ்ணன்
Pattikattu Krishnan
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
சிறைச்சாலையின் மணி பன்னிரண்டு முறை அடித்து விட்டு ஓய்ந்தது.
'சாப்பிடு' என்றான் சென்ட்ரி.
தட்டு பக்கம் பார்த்தேன். சாதம் என்ற பெயரில் கோதுமை நிறத்தில் கவளம் இருந்தது. கண்களில் நீர் நிரம்பியது. அதைக் கவனித்து விட்டான் போலும். இரக்கத்துடன் முறுவலித்தான்.
'தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும். பழக்கப்படுத்திக் கொள்ளணும்' என்றான்.
அந்தக் கொஞ்ச நஞ்சம் பரிவிற்கே எனக்குள் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டேன். அவன் மேலும் கெஞ்சுவதற்கு இடம் தராமல் விரல்களால் சாதத்தை கிளறிக் கொண்டிருந்தேன். சென்ட்ரி தொலைவிற்கு போய் விட்டான். கவளம் தொண்டையை விட்டு இறங்க மறுத்தது. நசுங்கி கோணல் மாணலாக இருந்த அந்தத் தட்டைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்டியது. எனக்கு பெற்றோர்கள் இல்லாமல் போனாலும் சிறு வயது முதல் உழைப்பின் அருமை தெரிந்திருப்பதால் நல்ல உணவுக்கும், உடைக்கும் என்றுமே குறை இருந்தது இல்லை.
என்னையும் அறியாமல் என் உடைகளை பார்த்துக் கொண்டேன். இன்றுதான் உடுத்திக் கொண்டதால் வெண்மை நிறத்தில் இருந்தன. கழுத்தைச் சுற்றிலும் வட்டமான காலர். சில நாட்களில் இந்த உடைகளும் கருப்பாகிவிடும். உடையின் வெண்மை நிறத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த உடலும் கறுத்துவிடும்.
பன்னிரெண்டு ஆண்டுகள்!
உயரமான சிறைச்சாலையின் மதில் சுவர்களுக்கு நடுவில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கு பொருளையே மறந்து போய் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ வேண்டும். பன்னிரண்டு நீண்ட ஆண்டுகள். அதுவரை அம்மா எப்படி இருப்பாளோ? பார்வதி என்ன ஆவாளோ?
'இன்னுமா சாப்பிடவில்லை?'
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
'சீக்கிரமாகச் சாப்பிடு' என்று எச்சரித்துவிட்டுப் போய் விட்டான். கண்களை மூடிக்கொண்டு சாப்பிட முயற்சி செய்தேன்.
'பாவம்! ரொம்பவும் அப்பாவியாக இருக்கிறான். எப்படித்தான் இருக்கப் போகிறானோ இங்கே.' தொலைவிலிருந்து சென்ட்ரி சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. பார்வதிகூட சரியாக இதே போல் சொல்லுவாள்.
'உன்னைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது தெரியுமா?'
'என்ன தோன்றுகிறது?'
'எந்த அரச மாளிகையிலிருந்தோ இப்பொழுதுதான். இங்கே வந்து குதித்தாற் போல் இருக்கு.'
'ஆமாம். வந்திருக்கிறேன். உன்னை அழைத்துக்கொண்டு போவதற்கு.'
'எங்கே'
ஆமாம். எங்கே அழைத்துக்கொண்டு போவேன்? யார் இருக்கிறார்கள் எனக்கு? சிறு வயதிலிருந்து கண்ணின் இமையை போல் வளர்த்த அம்மாவைத் தவிர.
பார்வதி புத்திசாலி. என் மனதில் இருப்பதை சட்டென்று உணர்ந்துகொண்டு விடுவாள். 'எங்கேயும் போக வேண்டாம். நாமே சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டுவோம். சரிதானே.'
சிரித்து விடுவேன். 'ஓ... அப்படியே கட்டுவோம். நான் காட்டிற்குப் போய் வீடு கட்டிக்கொள்வதற்கு வேண்டிய கட்டைகளைக் கொண்டு வருகிறேன். அதோடு நான் சம்பாதித்து சேர்த்து வைத்த பணம் பத்தாயிரம் வரையில் இருக்கிறது.'
'எங்க அப்பா ஒரு பத்தாயிரம் ரூபாய் தருவார்.'
'ச்சீ...' முகத்தைச் சுளித்தான். 'உங்க அப்பாவின் பணம் நமக்கெதற்கு? மேலும் பணம் தேவையாக இருந்தால் ஒரு ஆறுமாதம் பொறுத்துக்கொள். இன்னொரு பத்தாயிரத்தை சம்பாதித்துத் தந்து விடுகிறேன்' என்றேன்.
'எப்படி?'
'காட்டிற்குப் போய் தேனடை எடுத்து வருவேன்.'
கலகலவென்று நகைத்துவிட்டாள். 'அவ்வளவு பணம் எந்தக் காலத்தில் சேரும்?'
எனக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. 'என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?'
நெருங்கி வந்து என் மார்பில் சாய்ந்துகொண்டாள். 'உன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு யார் மீதுதான் நம்பிக்கை இருக்கும்?' கண்களை மூடிக்கொண்டே சொன்னாள்.
நிலா வெளிச்சத்தில் கிராமம். அதை அடுத்து மலையடிவாரம். மலையிலிருந்து கீழே விழும் அருவி. எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம். ஏரிக்குப் பக்கத்தில் மணற் பரப்பில் மல்லாந்து படுத்தபடி வானத்தைப் பார்த்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்போம். இருவரின் கணக்கும் என்றுமே ஒன்றாக இருந்தது இல்லை. காட்டில் அபூர்வமாகக் கிடைக்கும் பூவரச மலர்களைக் கொண்டு வந்து கொடுப்பேன்.
'இந்தப் பூக்களை எங்கேயிருந்து கொண்டு வந்தாய்?'
'உனக்காக காட்டிலிருந்து பொருக்கிக் கொண்டு வந்தேன்.'
'இவ்வளவு பூக்களா?'
'உனக்கென்ன தெரியும்? இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?'
'ஏனோ?'
'உனக்காகத்தான்.'
'வேலை செய்வதை விட்டுவிட்டு இப்படி பூக்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறாய் என்று உங்க அம்மாவிடம் சொல்லுகிறேன்.'
'தாராளமாகச் சொல்லு. எனக்கென்ன பயமா?'
இருவரும் சேர்ந்து அம்மாவிடம் போவோம். அம்மா எப்போதுமே பார்வதியின் பக்கம்தான். அதனால் என்ன? எனக்குத் தெரியும். அம்மா எந்த அளவுக்கு என்னை நேசிக்கிறாள் என்று. சின்னக்குழந்தையைப் போல் அவள் மடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொள்வேன். என் தலைமுடியை விரலால் கோதி விட்டுக்கொண்டே 'டேய் கிருஷ்ணா! உன்னைப் பெற்றவள் யாரோ தெரியாது. ஆனால் அவள் ரொம்ப துரதிர்ஷ்டசாலி' என்பாள்.
நான் பேசாமல் மௌனமாக இருந்து விடுவேன். எனக்கு என்னுடையை கதையைக் கேட்பதென்றால் ரொம்பவும் பிடிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது திரும்பத்திரும்ப சொல்லச் சொல்லி அம்மாவை நச்சரித்துக் கொண்டே இருப்பேன்.
'அப்போ என்ன ஆச்சு?'
'குழந்தையின் அழும் குரல் கேட்டது.'
'அப்புறம்?'
'அவர் தேடிப் பார்த்தாராம். புதருக்குள் நீ தென்பட்டாய். தொலைவில் உடைந்து போன பல்லாக்கும், சண்டை நடந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டதே தவிர, அந்தக் காலத்தில் கொள்ளக்கூட்டத்தினர் எங்கே பார்த்தாலும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.'
எனக்குள் ஆர்வம் பெருகத் தொடங்கி விடும்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்து, அம்மா மௌனமாக இருந்து விட்டால் 'சொல்லும்மா' என்று கெஞ்சிக் கேட்பேன்.
'யாராவது தென்படுவார்களோ என்று அவர் ரொம்ப நேரம் தேடினாராம். திருடர்களையும் காணவில்லை. பல்லாக்கில் வந்தவர்களையும் காணவில்லையாம். அவர் உன்னைத் தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்து விட்டார். அப்பொ நீ எப்படி இருந்தாய் தெரியுமா? தங்க விக்கிரகம் போல் பளபளவென்று இருப்பாய். அந்த வயதில்கூட அரசக் குடும்பத்திற்கே உரிய கம்பீரம் உன்னிடம் தென்பட்டது. யாரோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உன்னைத் தொலைத்து விட்டிருப்பார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள்.'
அதுவரையில் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி களுக்கென்று சிரிப்பாள். 'அப்படி ஏன் நினைக்கணும்? அந்தக் கொள்ளைக்காரர்களே விட்டுவிட்டு போயிருக்கலாம் என்று ஏன் நினைக்கக் கூடாது?' கோபத்தைத் தூண்டிவிடுவது போல் சொல்வாள்.
என் முகம் கோபத்தினால் கன்றி சிவந்து விடும். அவள் காதைப் பிடித்து திருகப் போனால் அம்மா தடுத்து விடுவாள்.
'இவன் ராஜா வீட்டுக் குழந்தைதான். எத்தனை வேலை செய்தாலும் சொகுசாய் இருக்கும் அந்தக் கன்னங்களைப் பார்' என்பாள் அம்மா.
பார்வதி குறும்பாக சிரிப்பாள். வெட்கத்தினால் தலையைக் குனிந்து கொள்வேன்.
அம்மா சொன்னது முற்றிலும் உண்மை. எத்தனை வேலை செய்தாலும், வெய்யில் மழை என்று பார்க்காமல் உழைத்தாலும் சொகுசும், நளினமும் என்னை விட்டுப் போகவே இல்லை. ஒருக்கால் என்னைப் பெற்றெடுத்த தாய் சூரிய வெளிச்சம்கூட படாத அளவுக்கு அந்தப்புரத்திலேயே பிறந்து வளர்ந்த சுகுமாரியாய் இருந்திருப்பாள்.
'என் கன்னத்தை விட உன் கன்னம்தான் மெத்தென்று இருக்கு. பெண் பிள்ளையைப் போல் இருக்கிறாய். நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் போ.' பார்வதி சிலசமயம் கேலி செய்வாள்.
'இந்த ஊரில் எந்த ஆம்பிளையை வேண்டுமானாலும் வரச் சொல்லு. என் பலத்தை நிரூபித்துக் காட்டுகிறேன். பந்தயம்!' சவால் விடுவது போல் சொன்னேன்.
'அந்தப் பலத்தைப் பற்றி இல்லை நான் சொன்னது.'
'அந்த விஷயம் என்றால் எந்தப் பெண்பிள்ளையை வேண்டுமானாலும் வரச்சொல்லு.'
'ச்சீ...' அந்த இடத்தைவிட்டு ஓடிப்போய் விடுவாள்.
அந்த நாட்கள் மறுபடியும் வராது. எப்படி வரும்? பன்னிரெண்டு ஆண்டுகள்! அதிகாரிகள் இரக்கப்பட்டால் தண்டனை காலம் கொஞ்சம் குறையக் கூடும்.
சென்ட்ரி வந்து 'எழுந்திரு' என்றான். எழுந்து தட்டை அலம்பி வைத்து விட்டு அறைக்குள் வந்தேன். பின்னால் தாழ்ப்பாள் போட்ட சத்தம் கேட்டது. மேலே இருந்த சின்ன ஜன்னல் வழியாக மங்கலான வெளிச்சம் உள்ளே விழுந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் ஒரு விதமான நெடி பரவியிருந்தது. இந்தச் சூழலுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.
'நாளையிலிருந்து நீயும் வேலைக்குப் போக வேண்டியிருக்கும்.' கம்பிகளுக்கு அப்பாலிருந்து சென்ட்ரி சொன்னான்.
தலையை அசைத்தேன். அதுதான் நல்லது. இந்த அறையில் இருந்தால் மூச்சு முட்டும் போல் இருந்தது.
'உன்னைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது.' சென்ட்ரி சொன்னான்.
நான் பதில் பேசவில்லை.
'இவ்வளவு அப்பாவியாக தென்படுகிறாய். கொலை செய்திருப்பாய் என்றால் என்னால் நம்ப முடியவில்லை.'
'இல்லை. நான் கொலை செய்யவில்லை.' குரலை உயர்த்தி கத்த வேண்டும் போல் தோன்றியது. ஆனால் தெம்பு இருக்கவில்லை. கோர்ட்டில் கத்திக்கத்தி பலம் குன்றிப் போய் விட்டது. பொறுமையும் நசிந்துவிட்டது. நான் பதில் சொல்வேன் என்று சென்ட்ரியும் எதிர்பார்க்கவில்லை. பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே சொன்னான்.
'இந்த அறையில் உன்னைத்தவிர இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் வருவார்கள். மனித ரத்தத்தை குடிக்கிற மிருகங்கள். எத்தனை வருடங்களாக இந்த ஜெயிலில் இருக்கிறார்களோ அவர்களுக்கே தெரியாது. கிட்டத் தட்ட பைத்தியக்காரர்களை போல் நடந்து கொள்வார்கள். அவர்கள் போடும் கூச்சலுக்கு ஜெயில் சுவர்கள் அதிர்ந்து போய் விடும். அவர்களுக்கு ஜெயில் அதிகாரி ஒரு பொருட்டல்ல. அவர்களைப் பார்த்து பயந்து விடாதே.'
சிரிப்பு வந்து விட்டது எனக்கு. எதுக்காக பயப்பட வேண்டும்? நடக்க வேண்டிய அநியாயம் எப்படியும் நடந்து முடிந்து விட்டது. இன்னும் என்ன நடக்கப் போகிறது என்று பயப்பட வேண்டும்?
என் மௌனத்தை சென்ட்ரி வேறு விதமாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். தைரியம் சொல்வது போல் 'அவர்களை பகைத்துக் கொள்ளாதே. என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாதே. நானும் அவர்களிடம் சொல்லி வைக்கிறேன்' என்றான்.
ஜெயிலுக்கு யாராவது புதிதாக கைதி வந்து விட்டால் பழைய ஆட்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். அதிலும் வந்தவன் கொஞ்சம் அப்பாவியாக தென்பட்டு விட்டால் போதும். இன்னும் கொஞ்சம் ஆட்டம் காட்டுவார்கள். வந்தவன் வெளி உலகத்தைச் சேர்ந்தவன். அதனால் அந்த ஆத்திரத்தை எல்லாம் புதிதாக வந்த ஆளின் மீது தீர்த்துக்கொண்டு விட வேண்டும். அதுதான் அவர்களுடைய லட்சியம். ஆனால் கொஞ்சம் பழகி விட்டால் அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேறு யாரிடமும் தென்படாது என்று தோன்றும். அவர்களைப் பற்றி சென்ட்ரி மேலும் சில விவரங்களை தெரிவித்தான். ஒருத்தன் மூன்று கொலைகளை செய்தவன். இன்னொருத்தன் பெரிய ரௌடி. மூன்றாவது ஆள் மனைவி மேல் சந்தேகப்பட்டுக் கோடாலியால் வெட்டிக் கொன்று போட்டுவிட்டானாம். கேட்கும் போதே என் முதுகுத்தண்டில் சிலிரிப்பு ஏற்பட்டது.
சென்ட்ரி மேலும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். என் காதில் எதுவும் விழவில்லை. என் எண்ணங்கள் எல்லாம் பார்வதியைச் சுற்றி வந்தன.
எப்படி இருக்கிறாளோ?
கடைசி நிமிடம் வரை அவளைப் பார்க்க வேண்டும் என்று என் உள்ளம் தவியாய் தவித்தது. ஜட்ஜ் தண்டனை விதித்த போது கூட நான் வருதப்படவில்லை. தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். சாட்சியங்கள் அவ்வளவு பலமாக இருந்தன. என் வேதனையெல்லாம் பார்வதி கண்ணில் படாததுதான்.
என்னவாகிவிட்டது அவளுக்கு? கோர்ட்டில் வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டு இருந்த போதுகூட என் கண்கள் எதிர்பார்ப்புடன் சுற்றும் முற்றும் தேடிக்கொண்டே இருந்தன. பார்வதி எங்குமே தென்படவில்லை. குறைந்த பட்சம் அம்மா! அம்மாகூட தென்படவில்லை. பெற்ற பாசத்தை விட வளர்த்த பாசம் உயர்ந்தது என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்போது எல்லோருமாக சேர்ந்து பேசி வைத்துக் கொண்டது போல் ஏன் என்னை தனியாக ஒதுக்கி விட்டார்கள்?
இந்த யோசனையில் மூழ்கியபடி எப்பொழுது உறக்கத்தில் ஆழ்ந்து போனானே எனக்கே தெரியாது. திடீரென்று பெருத்த ஓசையும், கூக்குரலும் கேட்கவே விழிப்பு வந்துவிட்டது.
அறை முழுவதும் இருட்டாக இருந்தது. குளிர்காலமாக இருந்ததால் சீக்கிரமாக இருட்டிவிட்டது.
கதவைத் திறந்த சத்தம் கேட்டது. மூவரும் உள்ளே வந்தார்கள். ஒருத்தன் உரத்த குரலில் ஆபாசமான பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான். மற்ற இருவரும் வாயால் தாளம் போட்டாற் போல் கத்திக்கொண்டிருந்தார்கள். இருட்டில் இருந்ததால் அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
'பீடியைக் கொடுடா.' எல்லோரைக் காட்டிலும் உயரமாக இருந்தவன் சொன்னான். ஏறக்குறைய சிம்மகர்ஜனை போல் ஒலித்தது அந்தக் குரல்.
'ஒன்றுதான் இருக்கு வாத்தியாரே.'
'கொடுடா சோமாறி' பிடுங்கி வாயில் வைத்துக் கொண்டான். மூன்றாவது ஆள் இதை எதுவும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.
இரண்டாவது ஆள் தீக்குச்சியைக் கிழித்து பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு குச்சியை கீழே போடப் போனவன் சட்டென்று நின்று விட்டான். தீக்குச்சியின் வெளிச்சம் என்னுடைய வெள்ளை நிற ஆடையின் மீது பட்டு பிரதிபலித்தது ஒரு நிமிடம். தீக்குச்சி முழுவதுமாக எரிந்து அணைந்து விட்டது. குச்சியை கீழே போட்டு விட்டான்.
ஒரு வினாடி அந்த அறையில் மயான அமைதி தாண்டவ மாடியது. நான் அசையவில்லை. மூன்று ஜோடிக்கண்கள் அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.
'அட!' என்றான் ஒருவன். நாராசமான அந்தக் குரல் சிறைச்சாலையின் சுவர்களுக்கு இடையே எதிரொலித்தது. எங்குமே தப்பித்துக்கொண்டு ஓட முடியாத விலங்கைப் பார்த்து உருமும் புலியின் கர்ஜனை போல் இருந்தது. மேலும் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டேன்.
'புதுசாக யாரோ வந்திருக்காங்க போலிருக்கு வாத்தியாரே.'
எல்லோரையும் விட உயரமாக இருந்தவன்