Thigil Roja
By Rajesh Kumar
4/5
()
About this ebook
Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Namruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Ingeydhan Irappargal Rating: 5 out of 5 stars5/5
Related to Thigil Roja
Related ebooks
Kann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsNadamaattam Rating: 0 out of 5 stars0 ratingsKai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Thevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsRaadhaiyai..., Kothaiyai... Seethayai... Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsBharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Yazhini Endroru Thenaruvi Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Thedu Kidaikathu..! Rating: 0 out of 5 stars0 ratingsThittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Pooja, PuthuDelhi, Boogambam Rating: 5 out of 5 stars5/5Marakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Sodukkinal Sorgam Rating: 5 out of 5 stars5/5Rathathil Ezhuthiyathu Rating: 5 out of 5 stars5/5Sirappu Yethiri Rating: 5 out of 5 stars5/5Poovey… Poovey! Rating: 5 out of 5 stars5/5Ithuthan Bathil! Rating: 5 out of 5 stars5/5Kathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsArjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Thaa! Rating: 5 out of 5 stars5/5Inge Mazhai…! Ange…! Rating: 2 out of 5 stars2/5Miss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Theeye! Rating: 5 out of 5 stars5/5Raajali Rating: 3 out of 5 stars3/5Ethaiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vanakam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Thigil Roja
2 ratings0 reviews
Book preview
Thigil Roja - Rajesh Kumar
http://www.pustaka.co.in
திகில் ரோஜா
Thigil Roja
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For other books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
திகில் ரோஜா
-ராஜேஸ்குமார்
1
கன்னியாகுமரி கலர் கலராய் விடிந்துகொண்டிருந்த அந்த காலை நேரத்தில் பேருந்தை விட்டு இறங்கினாள் விஜயா. சுற்றும் முற்றும் பார்த்து மெல்ல நடை போட்டாள்.
கையில் லேசாய் கனக்கிற பெட்டி, ராத்திரி பேருந்துப் பயணம் அவளுடைய தூக்கத்தைக் கெடுத்திருக்க, கண்களில் மிளகாயைத் தேய்த்த மாதிரி எரிச்சல். 450 கிலோ மீட்டர் பயணம், அவளுடைய 23 வயது மென்மையான உடம்பை துவைத்துப் போட்டிருந்தது.
விஜயா நடந்தாள். அந்த காலை நேரத்தில் பேருந்து நிலையம் வெறிச்சோடிப் போயிருக்க, சுசீந்தரம் போகும் ஒரு பேருந்தில் மட்டும் பயணிகள் கூட்டம் தெரிந்தது. நடத்துநர் படியில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.
சுசீந்திரம்… சுசீந்திரம்…!
விஜயா, பேருந்தை நெருங்கி நடத்துநரிடம் கேட்டாள். நேசமணி நகருக்குப் போக பஸ் இருக்கா…?
நடத்துநரின் நெற்றி, ஒரு சுருக்கத்துக்கு உட்பட்டது. நேசமணி நகரா… அங்கே போக பஸ் வசதி கிடையாதம்மா! ஆட்டோ பிடிச்சுத்தான் போகணும்…
இங்கிருந்து எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்…?
அதெல்லாம் தெரியாதம்மா… இருபது ரூபாயிலிருந்து முப்பது ரூபாய்க்குள்ளே கேட்பாங்க…!
விஜயா, நடத்துநருக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலை நோக்கிப் போனாள். வெளியே விடியற்காலையின் வைகறை இருட்டில் நான்கைந்து ஆட்டோக்கள் தெரிந்தன. பக்கத்து தேநீர் கடையில் பாய்லர் தெருப்பு கணகணவென்று தெரிய, டிரைவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து கண்ணாடி தம்ளரில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். விஜயா தயங்கிக் கொண்டு நிற்க, அவர்கள் எழுந்து வந்தார்கள்.
ஆட்டோ வேணுமாம்மா…? வயதான டிரைவர் ஒருவர் கேட்டார்.
ம்…
எங்கே போகணும்…?
நேசமணி நகர்…
இப்படி பொதுவாய் சொன்னா எப்படிம்மா. நேசமணி நகர்ல எந்தப் பகுதி.
விஜயா தன் கையில் இருந்த பெட்டியைக் கீழே வைத்துவிட்டு பர்ஸை எடுத்துப் பிரித்து ஒரு காகிதத் துண்டை உருவி அதில் இருந்த முகவரியைப் படித்துவிட்டு சொன்னாள்.
நேசமணி நகர்ல பைரவி தெரு…
கிட்டத்தட்ட கடைசிக்குப் போகணும்மா… அம்பது ரூபாய் ஆகும்…
ரொம்ப அதிகமா சொல்றீங்களே…?
இது அதிகம் இல்லேம்மா… சரியான கட்டணம்தான். நேசமணி நகர், இங்கிருந்து மூணு கிலோ மீட்டர் ஊரை விட்டுத் தள்ளியிருக்கு…வீடுகளும் அதிகம் கிடையாது. இப்பத்தான் ஒவ்வொருத்தரா வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்துக்கு சவாரி போனா வரும்போது ஆட்டோவை காலியாகத்தான் ஓட்டிக்கிட்டு வரணும்…
சரி… நாப்பது ரூபாய் வாங்கிக்கங்க…
கட்டாதும்மா… காலங்கார்த்தால முதல் போணியா வந்திருக்கீங்க… பேரம் பேசாம ஏறி உட்காரும்மா…
தேநீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு அந்த டிரைவர் ஆட்டோவுக்குப் போக விஜயா வேறு வழி இல்லாமல் பின் தொடர்ந்தாள்.
உட்காருங்கம்மா…!
ஏறி உட்கார்ந்தாள்.
ஆட்டோ புறப்பட்டது. கடல் காற்று கன்னியாகுமரியை அலம்பிக் கொண்டிருக்க – வள்ளுவர் சிலைக்கு அப்பால் கிழக்குவானம் லேசாய் குங்குமம் பூசியிருந்தது. சூரியோதயத்தைப் பார்ப்பதற்காக ஓட்டல் தமிழ்நாடு கேட் வழியாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் ஒன்று உற்சாகத்தோடு கடற்கரையை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
எந்த ஊரில் இருந்து வர்றீங்கம்மா…?
ஆட்டோ டிரைவர் கேட்ட கேள்விக்கு விஜயா பதில் சொல்லத் தயங்க… டிரைவர் சிரித்தார். இஸ்டம் இருந்தா சொல்லுங்கம்மா. இல்லேன்னா வேண்டாம்…
இதிலென்ன இருக்கு…! கோயமுத்தூரிலிருந்து வர்றேன்…
தனியா வந்து இருக்கீங்களே…! யாரையாவது கூட்டிக்கிட்டு வந்திருக்கக் கூடாது…?
என்ன பயம்…?
காலம் முன்னே மாதிரி இல்லை… எல்லாமே கெட்டுப்போச்சு… கண்ணுக்கு ரொம்பவும் அழகா வேற இருக்கீங்க… கன்னியாகுமரிக்கு இப்பத்தான் முதல் தடவையாய் வர்றீங்களோ…?
ஆமா…!
இங்கே சொந்தக்காரங்க இருக்காங்களா…?
அது… வந்து…!
"என்னடா…! இந்தக் கிழவன் பேசாமே ஆட்டோ ஓட்டறதை விட்டுட்டு
வேண்டாத கேள்விகளையெல்லாம் கேட்கிறானேன்னு நினைச்சுக்காதேம்மா…! உன் வயசுல எனக்கு பெண்ணொருத்தி இருக்கா… அந்த உரிமையில்தான் கேட்கிறேன்…"
விஜயா, சில விநாடிகள் தயங்கிவிட்டு பின் தொடர்ந்தாள். என் கூட கல்லூரியில் படிச்ச பெண் ஒருத்தி நேசமணி நகர்ல இருக்கா. அவளைப் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…!
அப்படீன்னா சரிதான்…
ஆட்டோ, வேகம் பிடித்து பறந்தது. திருவள்ளுவர் சிலையும் விவேகானந்தர் பாறையும் வைகறையின் ரோஜா நிற வெளிச்சத்தில் பார்வைக்குக் குளிர்ச்சியாய்க் கிடைத்தது. மக்கள் பாறைத் திட்டுக்களின் மேல் அதிகாலைச் சூரியனின் தரிசனத்துக்காக கும்பல் கும்பலாய் காத்துக் கிடந்தார்கள்.
டிரைவர் சொன்னார். கன்னியாகுமரிக்கு முதல் தடவையா வந்திருக்கீங்க… சூரியோதயம் பார்க்கறீங்களாம்மா… ஆட்டோவை வேணும்ன்னா ஒரு பத்து நிமிஷம் வெயிட்டிங்கில் போடறேன்!
வேண்டாம்… எப்படியும் இங்கே ரெண்டு மூணு நாள் தங்க வேண்டியிருக்கும். அப்ப பார்த்துக்கிறேன்… இப்ப மொதல்ல நேசமணி நகருக்குப் போகணும்…!
சரிங்கம்மா…!
"ஆட்டோ, கடற்கரையை ஒட்டிய சாலையில் ஒரு ஐந்து நிமிஷ நேரம் பயணித்ததுமே கட்டிடங்கள் காணாமல் போய் ரோட்டின் இரண்டு பக்கமும் சவுக்கு மரத் தோப்புகள் அடர்த்தியாய் வந்தன. அதிகாலை இருட்டு கொஞ்சம் அதிகப்படியாய் தெரிந்தது. மரங்களில் தங்கியிருந்த கடற்பறவைகள் விதவிதமான தொனியில் கத்திக் கொண்டிருந்தன. விஜயாவின் இதயத்தை பயம் மெல்ல பிறாண்டியது.
ஆட்டோ டிரைவரிடம் கேட்டாள்.
என்ன… ஏரியா இப்படியிருக்கு…?
நான்தான் முதலிலேயே சொன்னேனேம்மா… ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏரியான்னு! பணக்காரங்கதான் இந்த இடத்துல பங்களா கட்டுவாங்க…
விஜயா, ஆட்டோவில் இருந்து குனிந்து பார்த்தாள். சவுக்குத்தோப்புக்கு மத்தியில் ஒரு வீடு தெரிந்தது. உடனே மறைந்தது.
‘இப்படிப்பட்ட இடத்திலா அபிநயா குடியிருக்கிறாள்?"
‘முதலில் அவளை வீடு மாற்றச் சொல்ல வேண்டும்!’
‘எப்படி தனியாய் இருக்கிறாளோ…?’
விஜயா, யோசிப்பில் நிமிஷங்களைக் கரைத்துக் கொண்டிருக்கும் போதே ஆட்டோ ஒரு குறுக்கு மண்பாதையில் நுழைந்தது.
இந்த இடத்திலிருந்துதாம்மா நேசமணி நகர் ஆரம்பமாகுது. இங்கே குடியிருக்கிற பணக்காரங்களே அரசாங்கத்தை எதிர்பார்க்காமே எல்லா அடிப்படை வசதிகளையும் பண்ணிக்கிட்டாங்க…
விஜயா, இரண்டு பக்கமும் குனிந்து குனிந்து பார்த்தாள். கோபித்துக் கொண்ட கூட்டணி கட்சிகள் போல் ஒவ்வொரு பங்களாவும் ஒவ்வொரு திசையைப் பார்த்து உட்கார்ந்திருந்தது. ஆள் நடமாட்டம் அறவே இல்லை.
டிரைவர் குரல் கொடுத்தார். பைரவி தெரு வந்தாச்சம்மா… இந்த தெருவுல ஒரே ஒரு பங்களாதான் இருக்கு. அங்கே கொண்டுபோய் நிப்பாட்டட்டுமாம்மா…?
சரி…!
ஆட்டோ, முக்கி முனகிக் கொண்டு சிறிது மேடான அந்த தெருவில் பயணித்து அழுக்கான அந்த பழைய பங்களாவுக்கு முன்பாய் போய் நின்றது.
இந்த வீடான்னு பாருங்கம்மா…!
விஜயா ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி காம்பவுண்டு கேட்டின் முகப்பைப் பார்த்தாள்.
அபி இல்லம்
என்ற எழுத்துக்கள் ஒரு சலவைக்கல்லில் மங்கலாய் தெரிந்தன.
இந்த வீடுதான்!
என்று சொன்ன விஜயா, பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை டிரைவரிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டு டிரைவர் சிரித்தார்.
பார்த்தீங்களாம்மா… இனி நான் வெறும் ஆட்டோவை ஓட்டிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் போகணும்…!
சொல்லிக் கொண்டே ஆட்டோவை உசுப்பிக் கொண்டு அவர் கிளம்பிப் போய்விட, விஜயா அந்த பங்களாவை ஏறிட்டுப் பார்த்தாள்.
ரொம்பவும் பழைய பங்களா. எப்போதோ அடிக்கப்பட்ட டிஸ்டெம்பர், அடித்த வெய்யிலுக்கும் மழைக்கும் கறுத்துப் போயிருந்தது. பங்களாவுக்கு இரண்டு பக்கத்திலும் நெருக்கமாய் மரங்கள்.
விஜயா தயக்கமாய் நடந்துபோய் காம்பவுண்டு கேட்டின் மேல் கையை வைத்து மெல்லத் தள்ளிப் பார்த்தாள்.
சத்தம் காட்டாமல் திறந்து கொண்டது. நாய் ஏதேனும் இருக்குமோ என்கிற பய உணர்வில் எட்டிப் பார்த்தாள்.
போர்டிகோவில் ஒரு பழைய அம்பாசிடர் கார் நின்றிருந்தது. நாய் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இருந்தால் இந்நேரம் குரல் கொடுத்து இருக்குமே…!
விஜயா, துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, உள்ளே போனாள். ஒரு காலத்தில் பங்களாவைச் சுற்றி தோட்டமாய் இருந்த இடம், இப்போது சரியான பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடந்தது. தண்ணீர் இல்லாமல் செயற்கைக்குளத்தின் நடுவே குடத்தோடு நின்றிருந்த ஒரு பெண்ணின் சிலை உருக்குலைந்து போயிருந்தது.
கண்களுக்கு யாராவது தட்டுப்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டே விஜயா, போர்டிகோவுக்குள் நுழைந்து காரைச் சுற்றிக் கொண்டு போய் வாசற்படிகளில் ஏறினாள். வேலைப்பாடுகளோடு கூடிய கனமான தேக்குக் கதவு இறுக்கமாய்ச் சாத்தப்பட்டிருக்க, அழைப்புமணியின் பொத்தானைக் கண்டுபிடித்து அழுத்தினாள். அது உள்ளே வீரிட்டு அடங்கியது.
முழுதாய் ஒரு நிமிஷ நேரத்துக்குப் பிறகு அந்த தேக்குக் கதவு ‘ப்ப்ர்ர்ர்…’ என்ற சத்தத்தோடு திறக்க, இரவு நேர பைஜாமா அணிந்த ஒரு இளைஞன் தெரிந்தான். கலைந்த தலை, இறுக்கமான முகம்.
விஜயா கேட்டாள்.
அபிநயா இருக்காங்களா?
நீங்க…?
நான் அபிநயாவோட தோழி விஜயா. கல்லூரியில் ஒண்ணாப் படிச்சவங்க… கோயமுத்தூரிலிருந்து வர்றேன்…!
அபிநயா இல்லையே…?
எங்கே போயிருக்காங்க…?
யோகா, தியானம் சம்பந்தப்பட்ட ஒரு மாநாடு திருவனந்தபுரத்தில் நடக்குது. அதுல கலந்துக்கறதுக்காக நேத்துக் காலையிலேயே புறப்பட்டுப் போயிட்டா…
எப்ப வருவாங்க…?
இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு வர்றதா சொல்லிட்டு போயிருக்கா…
விஜயா, சில விநாடி தயக்கத்துக்குப் பிறகு மெல்லிய குரலில் கேட்டாள். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா…?
அந்த இளைஞன் புன்னகைத்தான். என்னங்க! அபிநயா உங்க சிநேகிதின்னு சொல்றீங்க… என்னைப்பத்தி அவள் உங்ககிட்ட சொல்லியிருக்கணுமே…!
மன்னிக்கணும்! அவள் ஏதும் சொல்லலையே…?
அதனால் என்ன… நானே சொல்றேன்… நாங்க ரெண்டு பேரும் அவசர அவசரமா காதலிச்சோம். அதைவிட அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… யாருக்கும் சொல்லக்கூட நேரம் இல்லை…!
விஜயா, திகைத்து சுவாசிக்க காற்று கிடைக்காமல் திணறினாள். "அபிநயா கல்யாணம் செய்துகொண்டாள்…!