Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pon Veenai
Pon Veenai
Pon Veenai
Ebook98 pages49 minutes

Pon Veenai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580105701478
Pon Veenai

Read more from Vidhya Subramaniam

Related to Pon Veenai

Related ebooks

Related categories

Reviews for Pon Veenai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pon Veenai - Vidhya Subramaniam

    http://www.pustaka.co.in

    பொன் வீணை

    Pon Veenai

    Author :

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    பொன் வீனை

    1

    விளக்கு வைக்கும் நேரத்தில் அவள் வந்து நின்றாள். வாசலுக்கருகில் கூடத்தில் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த பத்து வயது மீனு நிழலாட்டம் கண்டு நிமிர்ந்து பார்த்தவள் ஒரு வினாடி வாயடைத்துப் போனாள். கண்கள் மட்டும் விரிந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு குடுகுடுவென்று எழுந்து உள்ளே ஓடினாள். அடுத்த நிமிடம் மொத்த வீடும் அவளோடு வெளியில் வந்தது. அப்பா, அம்மா, அண்ணா, மன்னி, தங்கைகள் அத்தனை பேரின் பார்வையிலுமிருந்து வீசிய அனல் அவளை தகித்தது. பத்மா தலைகுனிந்து நின்றாள். யாரையும் ஏறிட்டு பார்க்க சக்தியில்லை.

    எங்க வந்த...? அப்பா அடிக்குரலில் உறுமினார்.

    இன்னும் மிச்சம் மீதி இருக்கற எங்க மானம் மரியாதையையும் இல்லாம பண்ணிடணும்னு திரும்பி வந்துட்டயா...? சீனு அண்ணா ஆத்திரத்தோடு கேட்டான்.

    ஓடிப்போனவ அப்படியே ஒழிஞ்சு போய்ட வேண்டியது தானே...? எதுக்குடி வந்திருக்க? எங்க பிராணன் இருக்கா இல்லையான்னு பாக்கவா?

    அம்மா அழுகையோடு ஆத்திரப்பட்டாள். தங்கைகள் எதுவும் கேட்கவில்லை. என்றாலும் அவர்கள் பார்வையிலிருந்து அவர்களது கோபமும் வெறுப்பும் தெரிந்தது.

    எங்க வந்த...? அப்பா மீண்டும் கேட்க, அவள் பதில் சொல்ல தைரியமின்றி கண்ணிர் பொங்க அவர் காலில் விழ அவர் விலகி நின்றார்.

    நாங்க யாரும் வேண்டாம்னுதானே எவனோ ஒருத்தனோட ஓடிப்போன...? அப்புறம் எதுக்கு திரும்பி வந்திருக்க? கூட்டிண்டு போனவன் எல்லாம் முடிஞ்சதும் விட்டுட்டு ஓடிட்டானா? எது எப்படியானாலும் இனி இந்த வாசப்படியை மிதிக்கிற அருகதை உனக்கில்ல. அன்னிக்கே இங்க எல்லோரும் உனக்கு தலைமுழுகியாச்சு. ஆத்ம பிண்டம் கூட போட்டாச்சு. போய்டு… இங்கேர்ந்து போய்டு. பிச்சை எடுப்பயோ ரெயில்ல விழுந்து சாவயோ... இங்க யாரும் கவலைப்படமாட்டோம். உனக்காக எங்க கண்ல சொட்டுத் தண்ணி கூட வராது. நீயா போனா மரியாதை. இல்லாட்டி கழுத்தைப் பிடிச்சு தள்ளுவோம்.

    ப்ளிஸ்ப்பா... நா சொல்றதை...

    அவர் பொறுமை உடைந்தது. அவள் பேசவே அருகதையற்றவள் என்பது போல் தரதரவென்று அவளை இழுத்துக்கொண்டு வந்து கதவுக்கு வெளியில் தள்ளி கதவை அறைந்து சாத்தினார். எல்லோரையும் ஒரு முறை முறைத்தார்.

    உங்கள்ள யாராவது அவளோடு பேசவோ இரக்கமோபட்டீங்க... வெட்டிடுவேன். ஒரு சொட்டு தண்ணி கூட அவளுக்கு குடுக்கக்கூடாது, சொல்லிட்டேன்.

    அவர் உள்ளே போனார். அவர்கள் மெளனமாய்க் கலைந்தார்கள்.

    பத்மா கதவுக்கு வெளியில் சோர்ந்து போய் சாய்ந்து நின்றாள். கண்ணிர் தாரை தாரையாய் வடிந்தது. பயமும் கலக்கமும் பந்தாய்ச் சுருண்டு தொண்டையை அடைத்தது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற தன்னிரக்கம் மேலிட சரிந்து அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து கரையக் கரைய சத்தமின்றி அழுதாள்.

    இப்படி ஒரு வரவேற்புதான் தனக்கு கிடைக்கும் என்பது அவள் எதிர்பார்த்ததுதான். இருப்பினும் அவளுக்கு அவர்கள் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பார்கள், அதன் மூலம் அவர்களது இரக்கத்தை சம்பாதித்து விடலாம் என்று நம்பி வந்தவளுக்கு ஏமாற்றம்தான். அப்பா அவளைப் பேச விட்டால்தானே? எல்லோரும் பாறையாக மாறிப் போயிருந்தது அவள் துரதிருஷ்டம்.

    எவ்வளவு ஆசையாக இருந்தவர்கள். அவள் பெருமூச்சுவிட்டாள். அழுகை கொஞ்சம் தன்னால் அடங்கியது. போய்விடு, செத்துக் தொலை என்று அப்பா சொன்னாலும் போவதற்கு போக்கிடமும் இல்லை. சாவதற்கு தைரியமுமின்றி அங்கேயே சத்யாகிரகி போல் அமர்ந்திருந்தாள். பசி ஒரு பக்கம் வயிற்றை கிள்ளியது. சாப்பிட்டு இரண்டு நாளாகிறது. வாழ்க்கை இப்படி திசை மாறும் என அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

    சுவரில் தலைசாய்த்து கண்களை மூடியவள் பசி மயக்கத்தில்.

    காதல் எனும் கதவு வாழ்க்கையில் எல்லோருக்கும் திறந்து விடுவதில்லை. அதற்கான தலையெழுத்து இருப்பவர்களுக்கு தான் அது திறக்கிறது. அவர்களைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. எல்லோருமா காதலிக்கிறார்கள்? நூற்றில் பத்துபேர்தானே...? அந்த பத்து பேரில் தானும் ஒருத்தியாவோம் என்று அவள் ஐந்து வருடம் முன்பு கனவிலும் நினைத்ததில்லை. பி.காம். படிக்கும்போதே அப்பா அவளை சி.ஏ. பவுண்டேஷன் கோர்ஸில் சேர்த்தார். அங்குதான் சன்னி வின்ஸென்ட்டை சந்தித்தாள். மலையாளி கிறிஸ்டின் அவன். அவனுடைய மலையாளத் தமிழும், ஆங்கில உச்சரிப்பும் ஆரம்பத்தில் அவளுக்கு சிரிப்பாக இருந்தாலும், போகப் போக அதற்காகவே அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் போலிருந்தது. அவனுடைய மலையாளத் தமிழ் அவளை ஈர்த்தது போல அவளுடைய பிராமணத் தமிழ் அவனையும் ஈர்க்கிறதென்று ஆரம்பத்தில் அவளுக்கும் தெரியவில்லை. ஒரு நாள் வகுப்பு முடிந்ததும் எல்லோரும் போன பிறகும்கூட அவள் அமர்ந்து ஏதோ குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.

    எந்தா மேடம் ஆத்துக்கு போகான் சமயமாயில்லே?

    அவள் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

    எந்தா வேணம்?

    யூ நோ மலையாளம்? அவன் வியப்போடு அவளைப் பார்த்தான்.

    அஸ்லாய்ட்டு அறியும். பட்சே நிங்களோடு சம்சாரிக்கான் எனிக்கு உத்தேசமில்லா.

    Enjoying the preview?
    Page 1 of 1