Cauvery Karaiyil Oru Kaadhal Kathai
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsPon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Mudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Aval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Oomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Cauvery Karaiyil Oru Kaadhal Kathai
Related ebooks
Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsMaya Malarvanam Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Kannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Idhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ninaikka Therindha Manamey! Rating: 3 out of 5 stars3/5En Varna Nila Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsYazhini Endroru Thenaruvi Rating: 4 out of 5 stars4/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Nila Nesam Rating: 5 out of 5 stars5/5Manasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsPlum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsEn Priyasakhi Rating: 2 out of 5 stars2/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Cauvery Karaiyil Oru Kaadhal Kathai
0 ratings0 reviews
Book preview
Cauvery Karaiyil Oru Kaadhal Kathai - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
காவிரிக் கரையில் ஒரு காதல் கதை
Cauvery karaiyil oru kaadhal kathai
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For other books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
காவிரிக் கரையில் ஒரு காதல் கதை
1
இன்னும் ஒரு மணி நேரத்துல தஞ்சாவூர் போய்டுவோமா?
குளிர் காற்றை அனுபவித்தபடி டிரைவரிடம் கேட்டான் மெளலி. கை திருப்பி மணி பார்த்தான். மூன்றடிக்க இன்னும் ஐந்து நிமிடமிருந்தது.
போயிடலாம் சார். வேகமா போனா முக்கா மணிதான்.
வேணாம், வேணாம். நிதானமாப் போ. போதும். டயர்டா இருந்தா எங்கயாவது நிறுத்திக்க. டீயோ காப்பியோ சாப்பிட்டுட்டுப் போகலாம்.
டிரைவர் டீக்கடை ஒன்றின் ஓரமாய் வண்டியை நிறுத்தினான். நல்ல மழை பெய்து நின்றிருந்தது. சென்னையிலிருந்து புறப்படும்போது மழை இல்லை. சிதம்பரம் தாண்டிய பிறகுதான் மழை. சில ஊரில் தூறலாக இருந்தது. சில இடத்தில் கனமாய் இருந்தது.
எப்படியோ தஞ்சாவூரை நெருங்கியாகி விட்டது. ஐப்பசியில் மழை பெய்யாமலிருந்தால்தான் அதிசயம். இந்த முறையாவது நல்ல மழை பெய்யட்டும். ஒவ்வொரு முறையும் அப்பா அனுப்பும் ஈ-மெயிலில் 'இந்த முறையும் பருவ மழை ஏமாற்றி விட்டது' என்ற வார்த்தை தவறாமல் இடம் பெற்றிருக்கும். 'காவிரி பாலைவனமாகிக் கொண்டு வருகிறது' என்று கவலைப்பட்டிருப்பார்.
இந்த முறை கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால் உபரி நீரின் உபயத்தில் காவிரியில் வெள்ளம் ஒடிக் கொண்டிருந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
அவன் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கப் போனபோது காவிரி இத்தனை மோசமாக இல்லை. ஆனால் இந்தப் பத்து வருடத்தில் அப்பாவின் கடிதங்கள் மூலம்தான் தண்ணீர் பிரச்சனைகள் பூதாகரமாகிக் கொண்டிருப்பது தெரியும். அப்போதெல்லாம் அவன் கவலைப்படுவான்.
'நான் இந்தியா திரும்பி வந்து செட்டிலாகும்போது தமிழ்நாட்டு வரை படத்துல காவிரியின் தடம் இருக்குமா, இல்லை, அழிஞ்சு போயிருக்குமாப்பா?' அவனது கடிதத்திலும் கவலை தென்படும்.
'இயற்கை நம்மை வஞ்சிக்காத வரை அந்தப் பயம் உனக்குத் தேவையில்லை.' அப்பா தைரியம் கூறுவார். எதற்குப் பணிகிறானோ இல்லையோ, இயற்கைக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும் மனிதன். இயற்கையின் சக்தி அளவிட இயலாதது. அதன் வலிமைக்கு முன் அவனது ஆற்றல்கள் வெறும் தூசுதான் என்பதை இயற்கை நிரூபித்துக் கொண்டிருந்தது.
போகலாமா சார்?
டிரைவர் சூடான டீ தந்த புத்துணர்ச்சியோடு வண்டியில் ஏறினான்.
சொந்த ஊரா சார் தஞ்சாவூர்?
இவ்வளவு நேரம் வண்டியோட்டிக் கொண்டு வந்த நெருக்கத்தில் கேட்டான்.
ஆமா. ஆனா பத்து வருஷத்துக்குப் பிறகு இப்பதான் ஊர்ப் பக்கம் போறேன்.
தனியா போறீங்க. இன்னும் கல்யாணம் ஆகலையா?
இனிமேத்தான்.
அப்பொ அதுக்குத்தான் இந்தியா வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க.
மெளலி பதில் சொல்லாமல் சிரித்தான்.
தீபாவளிக்குள்ள வந்துடுடா மெளலி. நாலஞ்சு பொண்ணு பார்த்து வெச்சிருக்கா உங்கம்மா. உனக்குப் பிடிச்சிருந்தா உடனே முகூர்த்தம் வெச்சுடறோம்.
அப்பா கேட்டுக் கொண்டதன் பேரில்தான் மூன்று மாத விடுப்பில் விமானம் ஏறினான். விதவிதமாய் நாலு பெண்கள் அவன் மனத்திரையில் கண்ணாமூச்சி ஆடினார்கள்.
வேடிக்கையாக இருந்தது அவனுக்கு. உத்தியோக ரீதியில் எவ்வளவோ பெண்களோடு நட்புக் கொண்டாடியிருக்கிறான். ஒரே காரில் பயணித்திருக்கிறான். ஒரே அறையில் தங்க வேண்டிய சூழல் கூட ஏற்பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம் தான் ஆண், அவர்கள் பெண் என்ற உணர்வெல்லாம் ஏற்பட்டதில்லை. ஆனால் திருமணம் என்ற ஒரு விஷயம் தன் வாழ்க்கையில் எதிர்ப்படப் போகிறது என்றதும் தன் மனைவியாகப் போகிறவளை நினைத்து எவ்வளவு எதிர்பார்ப்புகள் கனவுகள் இம்சைகள்! வியந்தான் அவன்.
வெளியில் மரங்களும் வயல்களும் இருட்டில் கருநிழல்களாய் ஒடிக் கொண்டிருந்தன. பாதி இறக்கியிருந்த கண்ணாடி வழியே சிலீரென்ற காற்று முகத்தில் மோதியது.
அதோ பாருங்க சார்!
திடீரென்று டிரைவர் சொன்னான்.
என்னது?
பெரிய கோயில் கோபுரம் தெரியுது பாருங்க.
அவன் காட்டிய திசையில் நிழலுருவமாய்ப் பெரிய கோயிலின் கோபுரம் தெரிய, மெளலி சிலிர்த்துப் போனான். மின்னலொன்று நீளமாய் வெளிச்சம் எழுப்ப, கோயிலும் ஒரு வினாடி மின்னியது. வைத்த விழி எடுக்காமல் அந்த அழகைப் பார்த்துக் கொண்டே பயணித்தான்.
ஜனித்ததிலிருந்து பத்தொன்பது வருட காலம் தினமும் பார்த்துப் பிரமித்து மயங்கிய கோபுரம். நந்தியைச் சுற்றிச் சுற்றி விளையாடிய காலங்கள் பசுமையானவை.
அகிலாவோடு சோழ வரலாற்றைப் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசி மகிழ்ந்த நாட்களைத் தஞ்சைக் கோபுரம் மெளனமாய் நினைவு படுத்திற்று.
அகிலா இப்போது என்ன செய்கிறாள், திருமணமாகிவிட்டதா, எங்கிருக்கிறாள், புருஷன் என்ன செய்கிறான், குழந்தை பிறந்திருக்கிறதா, ஒரு விஷயமும் தெரியாது. எப்படி அந்தத் தொடர்பு அறுந்து போனதென்றே தெரியவில்லை.
ப்ளஸ் டூ முடிக்கிற வரையில் அவள்தான் நெருங்கின தோழியாக இருந்தாள். புத்திசாலி. எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து படிக்கிற குணம். கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டுமல்ல என்பது அவளது கொள்கை. அவளுடைய மதிப்பெண்களை விடக் கூடுதலாக இருக்கும் அவளுடைய பொது அறிவு.
அவளோடு ஒப்பிட்டால் மெளலி இரண்டு படி கீழேதான் இருந்தான். அப்பாவின் ஊக்கமும், அதிர்ஷ்டமும், அவனுடைய விடா முயற்சியும் கை கொடுக்க, ஆஸ்திரேலியாவில் மேற் படிப்பைத் தொடர அனுமதி கிடைத்தது.
உன் அறிவுக்கு நீ முயற்சி செய்திருந்தா உனக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம் இல்ல?
தட்சிணாமூர்த்தி சந்நிதியின் படிக்கட்டில் அமர்ந்தபடி கிளம்புவதற்கு முதல் நாள் அவளிடம் வருத்தப்பட்டான். அவள் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். அதற்கு என்ன அர்த்தம் என்பது அவளுக்குத்தான் வெளிச்சம்.
ஏன் சிரிக்கற?
அவன் கேட்டு விட்டான்.
ஒண்ணுமில்ல!
அவள் தட்சிணாமூர்த்தியைத் திரும்பிப் பார்த்தாள். என்பிரண்டு எங்க இருந்தாலும் நல்லார்க்கணும்.
சத்தமாகச் சொல்லியபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
நீ மேற்கொண்டு என்ன படிக்கப்போற அகிலா?
பி.ஏ. ஹிஸ்டரி.
ஹிஸ்டரி படிச்சு என்ன பண்ணப் போற?
என்ன பண்ணனும்?
வேலை கிடைக்குமா?
ஹிஸ்டரி படிக்கணுங்கறது என்னோட ஆர்வத்தினால். வேலைக்காகப் படிக்கலை நான்.
அவன் முகம் சுருங்கிப் போயிற்று.
பெண்கள் ஆர்வத்துக்காக என்ன வேணா செய்யலாம். ஏன்னா நீங்க சம்பாதிச்சுதான் ஆகணும்னு அவசியம் ஒண்ணும் இல்லையே. கல்யாண வயசு வந்தா, நல்லா சம்பாதிக்கற ஒரு புருஷனைப் பார்த்துக் கட்டிக் கொடுத்துடுவா. அவன் சம்பாதிச்சுப் போடுவான். நீங்க சமைச்சுப் போட்டுட்டு ஆர்வமா என்ன வேணா படிக்கலாம். ஒரு விதத்துல பொம்மனாட்டிகள் பாடு தேவலைதான். எங்களைச் சொல்லு. வேலைதான் எங்களுக்கு எல்லாம். எவ்வளவு சம்பாதிக்கிறோம்ங்கறதைப் பொறுத்துதான் மரியாதை, மணவாழ்க்கை எல்லாம். சம்பாதிக்கறதுக்காகத்தான் படிப்பு கூட. எது படிச்சா நிறையச் சம்பாதிக்கலாம்னுதான் யோசிப்போம். அது ஒரு பெரிய ரேஸ். பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் ஆண்கள் அதுல கண்டிப்பா கலந்து ஓடித்தான் ஆகணும்.
அவன் கோபமும் குத்தலுமாகச் சொல்லி நிறுத்த, அகிலா கண்கள் சிரிக்க அவனைப் பார்த்தாள்.
எதுக்கு இவ்வளவு பெரிய வியாக்யானம்?
சொன்னேன். எங்களுக்கும் ஏதேதோ படிக்கனும், தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருந்தாலும் நடைமுறையில் அது நிறைவேறாது. ஏன்னா நாங்க பந்தயக் குதிரைகள். ஓடாத குதிரை மேல உன்னை மாதிரி பெண்கள் ஏறி உக்காருவாளா சொல்லு? நீங்க பீத்திக்கறதுக்காகவும் சேர்த்துல்ல நாங்க உயரத்துல பறக்க வேண்டியிருக்கு!
போதுமே மெளலி. பிரியற நேரத்துல எதுக்கு நாம சண்டை போட்டுக்கணும்? நான் பேசினது ஒரு வேளை உன் மனசைக் காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுடு. உண்மையில் நான் சாதாரணமாதான் சொன்னேன்.
அப்படி அவள் இறங்கி வந்து இதமாகப் பேசி அந்த சம்பாஷணை தொடராமல் முற்றுப்புள்ளி வைத்ததும் அவனது சூடு தணிந்தது.
அப்புறம்... முடியறப்போ எல்லாம் எனக்கு லெட்டர் போடுவயோன்னோ? போனதும் உன் விலாசம் எழுது. எங்க இருந்தாலும் ஜாக்கிரதையா இரு. என்னையும் இந்தக் கோவிலையும் மறந்துடாதே. மறுபடியும் உன்னை எப்போ பார்ப்பேனோ தெரியாது. அதனால உனக்கு என் நினைவா ஒரு சின்னப் பரிசு வாங்கியிருக்கேன்.
அகிலா அதுவரை மறைவாக வைத்திருந்த அந்தப் பொருளை எடுத்து அவனிடம் நீட்டினாள். வர்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த சிறிய பெட்டியை வாங்கி ஆவலுடன் பிரித்தான். உள்ளே சிறிய வெல்வெட் பெட்டி. கருநீல வெல்வெட்டுக்குள் அழகான தங்க மோதிரம். மோதிரத்தின் முகப்பில் பெரிய கோயிலின் கோபுரம் பொறித்திருந்தது. மிக அழகான வேலைப்பாடு. மெளலி விழி விரியப் பார்த்தான்.
எப்படி வாங்கின? நிறைய விலை இருக்கும் போலிருக்கே. எதுக்கு அகிலா இவ்வளவு காசைக் கொட்டி..
உனக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு அப்பாகிட்ட கேட்டேன். அவரும் நானுமா ரொம்ப நாழி யோசிச்சு முடிவு பண்ணினோம். நானே டிஸைன் பண்ணி ஆசாரிகிட்ட குடுத்தேன். கரெக்டா நேத்திக்குத்தான் வந்தது. அதுக்கே பத்து தரம் அவர் கடைக்குப் போய் நச்சரிச்சு ஒரு வழியா வந்தப்புறம் தான் மனசு சமாதானமாச்சு. நீ கிளம்பறதுக்குள்ள குடுக்க முடிஞ்சுதே.