Mohini Illam
()
About this ebook
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Read more from Kottayam Pushpanath
Mohini Koyil Rating: 5 out of 5 stars5/5Naaga Salangai Rating: 5 out of 5 stars5/5Pei Bungalow Rating: 4 out of 5 stars4/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 5 out of 5 stars5/5Sakasa Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMohini Silai Rating: 3 out of 5 stars3/5Kaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsMohiniyin Kaadhal Rating: 4 out of 5 stars4/5Maya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMohiniyattam Rating: 0 out of 5 stars0 ratingsMarma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Vennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsDeva Mohini Rating: 4 out of 5 stars4/5Brahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsMohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsVaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Malligai Rating: 0 out of 5 stars0 ratingsThaandavam Rating: 5 out of 5 stars5/5Mandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Mannukku Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Illatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsPathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Terror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsOnbathavathu Ward Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mohini Illam
Related ebooks
Deva Mohini Rating: 4 out of 5 stars4/5Terror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Mohini Koyil Rating: 5 out of 5 stars5/5Mohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsMannukku Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsThulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsNandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Vennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsVanji Nagar Vanji Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 3 out of 5 stars3/5Mandhira Mohini Rating: 4 out of 5 stars4/5Kaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsBrahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsAal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsPandiya Nayagi Rating: 0 out of 5 stars0 ratingsPuligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/5Pathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Maanikka Veenai Rating: 3 out of 5 stars3/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsPei Bungalow Rating: 4 out of 5 stars4/5Silambu Salai Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Sakasa Mohini Rating: 0 out of 5 stars0 ratingsAthimalai Devan - Part 2 Rating: 2 out of 5 stars2/5
Related categories
Reviews for Mohini Illam
0 ratings0 reviews
Book preview
Mohini Illam - Kottayam Pushpanath
http://www.pustaka.co.in
மோகினி இல்லம்
Mohini Illam
Author :
கோட்டயம் புஷ்பநாத்
Kottayam Pushpanath
Translated by :
சிவன்
Sivan
For other books
http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
மோகினி இல்லம்
1
கேள்விப்பட்டது உண்மையா? வள்ளிக் காட்டு மனையை விற்கப் போறாங்களாமே?
பத்திரிகைச் செய்தியைப் படித்தவர்கள் மூக்கின் மீது விரலை வைத்துப் பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர்.
யாராலும் அதை நம்ப முடியவில்லை. அதை எப்படி நம்ப முடியும்?
அந்த மனையை வாங்குமளவுக்கு யாருக்குத் தைரியம் இருக்க முடியும்?
எத்தனையோ நூற்றாண்டுப் பழமை வாய்ந்தது வள்ளிக்காட்டு மனை! அதை யார் கட்டினார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை. பிரஸ்னம் பார்த்த போதுகூட அதுமட்டும் விளங்கவில்லை.
ஒரு தடவை மனையின் பரதேவதைகளில் ஒரு மூர்த்தியான ரத்த சாமுண்டீஸ்வரியின் கோயிலை மறுகட்டுமானம் செய்வதற்காகத் தேவபிரஸ்னம் நடத்தியபோது, ஏதோ ஒரு நீலகண்டன் நம்பூதிரி என்பவர் அடிக்கல் நாட்டிய தாகத் தெரிந்து அதுவும் உடனே மறையவும் செய்தது அவ்வளவுதான்.
ஏறத்தாழ இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள சுற்றுப்புற மதிலுக்குள் அடங்கியிருந்தது வள்ளிக்காட்டுமனை. அதன் நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய கருவறைகள். அதில் ஒன்று மோகினி கோயில். மற்றொன்று உயிருள்ள கருநாகம் சுற்றிக் கிடக்கும் ஸ்ரீபரமேஸ்வரனின் சுயம்புவான விக்கிரகம் உள்ள கோயில், இன்னொன்று நாகதேவதைகளைக் குடியமர்த்தியிருந்த சர்ப்பக்காவு-பாம்புக் கோயில்.
காலத்தால் முதிர்ந்து வலிமை பெற்றிருந்த கருமையான எட்டி மரத்தில் அதன் பட்டைகள், ஆங்காங்கே வெடித்துப் பிளந்திருந்தன. இதுபோல் ஏராளமான மரங்கள் நிறைந்ததுதான் சர்ப்பக்காவு.
மரத்தைச் சுற்றிப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நாக விக்கிரகங்களில் பல்வேறு வகைகளில் மழையால் படிந்த பாசம், தங்க நாணயங்களைப் போல் துருத்திக் கொண்டிருந்தன.
அவற்றின் ஊடாகப் பாம்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன. கண்களில் சக்தி, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த விக்கிரகம்தான் ரத்த சாமுண்டீஸ்வரியினுடையது. ஆபத்துக்குக் கூப்பிட்டால் உடனேயே வந்து காப்பாற்று வார் என்று இன்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
மனையைப் பற்றி எத்தனையோ ஐதீகக் கதைகள் உலவுகின்றன. நம்ப முடிவதாகவும், நம்ப முடியாத தாகவும், அவை எண்ணிக்கையில் அடங்காததாக விளங்கின.
ஆனால், அவற்றில் பெரும்பாலானவற்றை இன்றுகூட யாரும் மறுக்கவில்லை. அதில் ஒன்றை நேரில் பார்த்தது போல இப்போதுகூட அந்த ஊரின் மிகவும் வயதான வாரஸ்யார் (வாரியார் வீட்டுப்) பெண்மணி கூறுவதுண்டு. வாரஸ்யாரின் வயது என்னவென்று அவருக்கே கூடத் தெரியாதாம். இருப்பினும் நூற்றுப்பத்தை நெருங்கு வதாகத்தான் ஊரார் கூறுகின்றனர்.
‘வள்ளிக்காட்டு மனை' என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை வாரஸ்யார் சில சந்தர்ப்பங்களில் விவரிப்ப துண்டு. அது பின்வருவது மாதிரித்தான்:
‘பழங்காலத்தில்... மிகப் பழங்காலத்தில் அந்த கருவெட்டி மரத்தில் இப்படிச் செதில்கள் போன்ற பட்டைகள் எதுவும் கிடையாதாம். அதற்குப் பதிலாக அடிமரம் மற்றும் அதன் கிளைகளில் எண்ணிக்கையற்ற நாகப்பாம்புகள் தொங்கிக் கொண்டிருக்குமாம். சட்டென்று பார்த்தால் அவையெல்லாம் மரத்தின் சுள்ளிகள் டோலவே தோன்றுமாம். நாம் நெருங்கித் தொட்டால்கூட, நம்மை எந்த விதத்திலும் தொல்லைப்படுத்தாத கடுமையான விஷமுள்ள நாகப் பாம்புகள். அதில் சிலவற்றிடம் நாகமாணிக்கங்கள் உள்ளதாம்!
அவை அபூர்வமாகச் சில இரவுகளில் நாகமானரிக்கத் தின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யுமாம்.
அப்படிப்பட்ட ஓர் இரவில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றதாம்.
அன்று வள்ளிக் காட்டுமனையில் இருந்த அந்தர்ஜனம் (நம்பூதிரிப் பெண்) ஒருத்தி இந்த ஒளியைக் கண்ணால் கண்டாளாம்.
வயதுக்கு வராத பெண் அவள். ஏறத்தாழ பதின் மூன்று வயதிருக்கும் அவளுக்கு.
தம்புராட்டி (அந்தர் ஜனம்) அது ஏதோ விளக்கு வெளிச்சம்தான் என்று நினைத்து அந்த இடத்துக்குப் போனாள்.
சட்டென்று அந்த கருநிற எட்டி மரம் குலுங்கி நடுங்கியது.
அதில் குடியிருந்த நாகதேவதைகள் கோபம் கொண்டன. அப்போதுதான் அந்தத் தம்புராட்டிக்கு அதில் ஏதோ விபரீதம் இருப்பது புரிந்தது. அலறியடித்த படியே அந்த அந்தர்ஜனம் ஓடினாள்…
கடைசியில் எத்தனையோ தடவை சுத்திக் கலசம் செய்தார்கள். பரிகாரங்களைச் செய்தனர். ஆனால், அந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நாகங்கள் சட்டென்று சுள்ளிக் குச்சிகளாக மாறின. இப்போதுகூட அந்தச் சுள்ளிகளுக்குப் பாம்புகளின் உருவங்கள்தானாம்.
அந்தத் தம்புராட்டிப் பெண் நாற்பத்தோரு நாள் - நான்கு நாள் நீங்கலாக அந்த அந்த எட்டி மரத்தின் கீழ் பஜனையில் ஈடுபட்டாள்.
இப்படியாக அந்த இல்லத்துக்கு (நம்பூதிரியின் வீட்டுக்கு) வள்ளிக்காட்டு மனை என்ற பெயர் ஏற்பட்டதாம்.
இதற்குமேல் வாரஸ்யார் கூறுவதைக் கேட்டால், கேட்பவர்களுக்கு மெய் சிலிர்க்கும்.
எண்ணுறு வருடங்களுக்கு முன் வள்ளிக்காட்டு மனையில் அஸ்வதி என்ற பெயரில் ஓர் அந்தர் ஜனம் இருந்தாளாம். அவளது ஜென்ம நட்சத்திரம் அஸ்வதி யானதால், அவளது பெயரும் அஸ்வதியானது.
தேவதை மாதிரிப் பேரழகியாக இருந்தாள் அஸ்வதி அந்தர் ஜனம். சிற்பங்களில் தென்படுவது போன்ற உடல்வாகு.
இந்திரனின் வில்லைத் தோற்கடிக்கும் புருவக் கொடிகள்.
நட்சத்திரங்கள் பிறப்பெடுக்கும் கண்கள்.
நீண்டு, நுனியில் வளைந்த மூக்கு.
சிவப்பு நிறமுள்ள ஈர உதடுகள்.
சற்று உட்புறமாக உள்வாங்கிய தாடைப்பகுதி.
வலம்புரிச் சங்கு போன்ற கழுத்து.
அவளது அப்பா மந்திர தந்திரங்களில் தேர்ந்தவராக இருந்ததால், அஸ்வதி அந்தர் ஜனமும் சிறுவயதிலிருந்தே ஒலைச்சுவடிகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.
இந்தச் சூழ்நிலையில் மோகினி கோயிலை ஒட்டியிருந்த கந்தர்வனின் கோயிலுக்கு யதேச்சையாகப் போன அஸ்வதி அந்தர்ஜனம், அதற்குள் செதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலையின் வடிவழகைக் கண்டு காதல் கொண்டாள்.
அன்று பெளர்ணமி நாள்.
சித்ரா பெளர்ணமி.
அஸ்வதி அந்தர் ஜனம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது... அங்கே நின்றுகொண்டிருந்தான் கந்தர்வன், சிலைவடிவத்திலிருந்து விடுபட்டு.
தான் காண்பது கனவா, உண்மையா என்பதை அறிந்துகொள்ள இரண்டு தடவை கண்களைக் கசக்கிப் பார்த்தாள். பிறகு மெதுவாக அறைக்கதவின் தாழ்ப் பாளை விலக்கினாள்.
மூச்சை அடக்கியபடி மெதுவாகக் கதவைத் திறந்தாள்.
காலில் போட்டிருந்த கொலுசுகளின் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அதைக் கழற்றி, வாசற்படியின் ஒரமாக வைத்தாள்.
அதன் பிறகு வலது காலை எடுத்து வைத்து வெளியே வந்தாள்.
நடந்தவள் பாலை மரத்தின் அடிப்பகுதிக்கு வந்தாள்.
அங்கு நின்றுகொண்டிருந்த கந்தர்வன், அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஸ்வதி…
கந்தர்வனின் நாக்கு அசைந்து குரல் எழுப்பியது.
ம்.
-அவள் முனகினாள்.
முதல் நட்சத்திரம்…
கந்தர்வனின் கைகள் அஸ்வதி அந்தர் ஜனத்தின் உடையற்ற தோள்மீது பதிந்தன. அப்போது பாலை மரத்தின் பூக்கள் உதிர்ந்து அவர்களது மேனிகளில் விழுந்தன.
கூச்சமடைந்த அந்தர் ஜனம் வெட்கத்தால் நெளிந்தாள்.
கந்தர்வ கோயிலின் மண்டபச் சுவரில் அஸ்வதி அந்தர் ஜனத்தின் உடலின் பின்புறப் பகுதிகள் உராய்ந்தன. பளபளப்பான தரையில் சதைப்பகுதிகள் அழுந்திப் பதிந்தன.
பின்னர் அதுவே ஒரு வழக்கமாகிப் போனது.
ஒருநாள் மாலை நேரத்தில் விளக்கில் எண்ணெய் ஊற்றும் போது, அஸ்வதியின் பாட்டி கேட்டார்.
அஸ்வதி... இன்னிக்கு…?
அவள் திரும்பிப் பார்த்தாள்.
மீதமுள்ள வார்த்தைகளைப் பேசாமல் சந்தேகத்துடன் அவர், அவளைத் தலை முதல் பாதம் வரை பார்த்தார் - கண்களைக் கசக்கியபடி.
ஒருவேளை ஓரிரு நாள்கள் தள்ளிப் போகலாமே.
ஆனால், மறுநாளும் அஸ்வதி துளசி மாடத்தில் விளக்கு ஏற்றினாள்.
பாட்டி பயந்தார், பதறினார்.
அஸ்வதியிடம் காரணம் கேட்டார்.
அதோ... அங்கே...
அஸ்வதி பாலை மரத்தைச் சுட்டிக் காட்டினாள். ஆனால், பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஆனால், அஸ்வதியின் அடிவயிற்றுப் பகுதி நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வந்தது.
ஒரு தடவை தாத்தா அவளை அருகில் வருமாறு அழைத்தார்.
என்னடி இது? யாரவன்...? எந்தப் பொறுக்கி அவன்?
தாத்தா தனது வலது காலை உயர்த்தினார்.
திடுமென்று அது நிகழ்ந்தது. தாத்தா ஒரே ஒரு முறைதான் பார்த்தார்.
அஸ்வதியின் அடிவயிற்றுப் பகுதியில் ஒர் ஒளி தென்பட்டது! அவர் கண்களை மூடிக் கொண்டார்.
அதற்குப் பிறகு வள்ளிக் காட்டு மனையைச் சேர்ந்த நாராயணன் நம்பூதிரி அடுத்த சூரியோதயத்தையே காணவில்லை. என்னென்னமோ சிகிச்சைகள் செய்தும் தாத்தா நாராயணன் நம்பூதிரி மரணம் வரையில் கண் தெரியாத வராகவே வாழ்ந்தார்.
மறுநாள் அவர் உத்தர விட்டார். அஸ்வதி இனிமேல் துளசி மாடத்திலும் சர்ப்பக்காவிலும் விளக்கேற்றக் கூடாது!
திடுமென்று மாதங்கள் கடந்தன.
துல்லியமாக இருநூற்றுத் தொண்ணுாற்றொன்பதாம் நாளன்று அஸ்வதி அந்தர் ஜனம் வலியெடுக்காமலே பிரசவித்தாள்- கருவறையிலேயே இறந்த ஒரு குழந்தையை.
ஒரு தங்கக் குழந்தையை…
பெண் குழந்தை…
பாட்டி அந்தக் குழந்தையைக் கையில் தூக்கிப் பார்த்தாள். பதினேழு ராத்தல் எடை... பாட்டியின் கை பாரம் தாங்காமல் தாழ்ந்து போயின.
அந்தக் குழந்தையை அந்த இல்லத்தின் நிலவறையிலேயே புதைத்தார்களாம். இதையெல்லாம் வாரஸ்யார் சொல்லும் கற்பனைகள் என்றே மற்றவர்கள் நினைத்தனர்.
ஆனால், அந்த இல்லத்தை விற்கப் போகிறார்கள் என்ற விளம்பரம் வெளியானபோது அது முதலில் தட்டுப் பட்டது சைமன் டிக்கோஸ்ட்டாவின் பார்வையில்தான்.
கொச்சி நகரைச் சேர்ந்த சைமன் டிக்கோஸ்ட்டாவின் முக்கியமான வேலையே பழைய மனை மற்றும் இல்லங்களை விலைக்கு வாங்குவதுதான். மிகவும் புராதனமான இல்லங்கள் மிகவும் மலிவான விலைக்குக் கிடைக்கும் என்பது அவனது கணிப்பு. அதே நேரம் அவற்றுக்குள் அடங்கியுள்ள செல்வம் மிகவும் அதிகம் என்பதும் அவனுக்குத் தெரியும்.
பழங்காலத்தில் இல்லங்களை எழுப்ப அஸ்திவாரம் தோண்டினால் அதற்குள் கை நிறையத் தங்க நாணயங்களை அள்ளிப் போடுவார்கள் என்பதும், நிலை வாசற்படியின் கீழே நாகப்பணத் (ஒருவகை தங்க நாணயம்) தைக் கொட்டுவார்கள் என்பதும் அனுபவங்கள் அவனுக்கு உணர்த்தியிருந்தன.
ஆனால், ஆசாரப்படி நடந்து கொள்ளும் இந்துக் களைப் பொறுத்தவரை இல்லத்தை உடைப்பது என்பதே அபசாரம்.
ஆறடி மூன்றங்குல உயரம். அதற்கேற்ற உடல்வாகு. காதுகளின் கீழ்ப்பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்கும் மென்மையான முடிநிறைந்த கிருதாக்கள். கிருதாவின் உயரத்துக்கு ஏற்றவாறு வெட்டிச் சீராக்கப்பட்டிருந்த பின்புறத் தலைமுடி, இணைந்த புருவங்கள். கழுகுப் பார்வை. நீண்டு வளைந்த மூக்கு. பாண்ட் பாக்கெட்டில் லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கி. இத்தனையும் கொண்ட டிக்கோஸ்ட்டா பயங்கரமான மனிதன்.
அவனுக்கு ஏற்றாற் போலவே சில கூட்டாளிகளும் இருந்தனர். மந்திரவித்தைகளில் தேர்ந்த அப்துல்ரஹ்மான், பாஸ்கரவாரியார், சண்டை முறைகளில் பயிற்சி பெற்ற ஃபிரான்சிஸ் ஃபெர்னாண்டஸ்.
வள்ளிக்காட்டு மனையின் கடைசி வாரிசான பவத்ராதன் நம்பூதிரி, பத்திரிகையில் விளம்பரம் கொடுத்த பிறகு அதிகமாகக் காத்திருக்க நேரவில்லை.
ஒருநாள் விடியற்காலை வேளையில் ஜீப் ஒன்று தெரு வாசற்படியருகில் வந்து நின்றது.
அதிலிருந்து இளைஞன் ஒருவன் இறங்கி வந்தான்.
வெளித்தோற்றத்தில் முப்பது வயது கணிக்கக்கூடிய அவன், நம்பூதிரிக் குடும்பத்தைச் சேர்ந்தவன் போல் தென்பட்டான்.
யாரு... அடையாளம் தெரியவில்லையே?
நம்பூதிரி கண்களுக்கு மேலாக வலது கையை அண்டக் கொடுத்தபடி கேட்டார்.
என் பெயர் சசிதரன். ‘பாறுக்குட்டி’ என்று அழைக்கப்பட்ட என் அம்மா பார்வதியை உங்களுக்குத் தெரியுமா? மனையை விற்கப் போகிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்
வந்த இளைஞன் படபடவென்று பேசினான்.
அதைக் கேட்ட நம்பூதிரி ஒருகணம் அதிர்ந்தார்.
பாறுக்குட்டி என்கிற பதினேழு வயதுப் பெண்ணின் வடிவம், அவரது மனத்தைக் கடந்து வெளியேறியது.
ஒரு முறை பூஜையறைக்குள் வந்த பாறுக்குட்டியை அவர் பலாத்காரமாக நெருங்கினார். கடைசியில் கர்ப்பமாகி விட்டாள் என்பது தெரிந்ததும் அவளைக் கொன்று விடுவது என்று முடிவு செய்து அந்தப் பொறுப்பைத் தனது காரியஸ்தரான பரமு நாயரிடம் ஒப்படைத்தார்.
மிகவும் மோசமான மனிதனான பரமுநாயர், பாறுக் குட்டியைக் கொலை செய்யும் பொறுப்பை ‘கரடி’ வாசுவிடமும், ‘கேடி’ மரைக்காயரிடமும் ஒப்படைத்தார்.
கொலை செய்து ஆற்றில் வீசியெறிவதற்காகக் கொண்டு வரப்பட்ட பாறுக்குட்டியைக் காப்பாற்றியவர் மரைக்காயர்தான்.
பிழைத்துப் போகட்டும் இவள்... ஏதாவது ஒரு ஊர்ல தலைமறைவா வாழட்டும்...மறுகரையில விட்டுட்டு வத்துடு!
மரைக்காயர் சொன்னார்.
இப்படித்தான் பார்வதி உயிர் பிழைத்தாள்.
மறுகரையை அடைந்த பார்வதி எத்தனையோ மைல்கள் பயணம் செய்து புளிங்கோம் என்ற கிராமத்துக்கு வந்து சேர்ந்தாள். அந்த ஊரிலிருந்த சாத்துக்குட்டி என்பவர் அவளுக்கு அடைக்கலம் தந்தார்.
காலம் முழுமையடைந்ததும் பார்வதி குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
குழந்தையின் ‘தந்தை’ என்ற பட்டத்தை சாத்துக் குட்டி ஏற்றுக் கொண்டார். ஆனால், பத்திரிகை விளம்பரம் வெளியானதும், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தார் சாத்துக்குட்டி.
இப்படித்தான் சசிதரன் அங்கு வந்து சேர்ந்தான்.
இல்லத்தை ஏற்கெனவே விற்று விட்டேன். நீ போகலாம். உனக்கும் இந்த இடத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இங்கேயே நின்று கொண்டிருந் தால் இல்லத்தை வாங்கியிருப்பவன் உன் தலையை வெட்டித் தள்ளுவான்
பவத்ராதன் மிரட்டினார்.
சசிதரன் அங்கிருந்து கிளம்பினான்.
பவத்ராதன் ஒரு பேச்சுக்குத்தான் விற்பனையாகி விட்டதாகச் சொன்னாலும் அன்று மாலை நேரத்தில் அது நிகழவே செய்தது. டிக்கோஸ்ட்டாவும் அவனது கூட்டாளி களும் வந்து பேரம் பேசினர். ஐம்பதாயிரம் ரூபாய்!
ஒரு வார காலத்துக்குள் பத்திரப் பதிவு நடந்தது. அதற்கு மறுநாள் பவத்ராதன் கொல்லப்பட்டார். யாருக்கும் தெரியாமல் அந்த உடல் ‘யாராலோ’ எரிக்கப் பட்டது.
இல்லத்தை உடைப்பதற்காக பிரஸ்னம் (ஜோதிடம்) பார்த்தனர்.
பாஸ்கர வாரியர்தான் பிரஸ்னம் பார்த்தவர். அவருடன் அப்துல்ரஹ்மானும் இருந்தான்.
இருவரது கண்களிலும் வியப்பு படர்ந்தது! அவர்கள் பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர்.
"என்ன விஷயம்??? சைமன் டிக்கோஸ்ட்டா கேட்டான்.
தங்கக் குழந்தை!
என்ன உளறுகிறீர்கள்?
அவனுக்கு விஷயம் புரியவில்லை.
டிக்கோஸ்ட்டா சவரம் செய்வதற்காக மரச்சுவரில் பொருத்தமான ஒரிடத்தில் ஆணியறைய முயன்றான்.
சுற்றியல் மற்றும் ஆணியைக் கையில் எடுத்து, தன் உயரத்துக்குச் சரியான பகுதியென்று நிதானித்து ஆணியின் முனையை அந்தப் பகுதியில் ஒட்ட வைத்தான்.
மரச்சுவரில் புடைத்து நிற்கும் ஒரு பெண்ணின் நடுநெற்றியில் இருந்தது ஆணியின் முனை.
சுற்றியலால் ஆணியின் தலைப்பகுதியில் ஓங்கி அடித்தான்.
திடீரென்று –
ச்சே...
என்றவாறு டிக்கோஸ்ட்டா பின்வாங்கி நகர்ந்தான்.
வலது கையால் முகத்தில் விழுந்த எதையோ துடைத்தான். ஈரமாகத் தெரிந்ததால் உள்ளங்கைப் பகுதியைச் சட்டென்று கவனித்தான்.
ரத்தம்... ரத்தம்!
சைமன் டிக்கோஸ்ட்டா உரத்த குரலில் அலறினான்.
2
சைமனிடமிருந்து எழுந்த அசாதாரணமான அலறலைக் கேட்டு அவனது நண்பர்கள் அவனிடம் ஓடிவந்தனர்.
அவர்கள் இல்லத்தின் உள்ளே தங்குவதற்கான இடத்தைச்சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
நாலுகட்டு (நடுவில் திறந்தவெளி முற்றமும் சுற்றிலும் நான்கு அறைகளும் கொண்ட வீட்டின் பெயர்) வீட்டின் நடுவிலுள்ள முற்றத்தை நான்கு திசையிலுள்ள கல் தூண்கள்தான் தாங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தூண்களில் சிங்கமுகம் உட்படப் பல்வேறு சிற்ப வேலைப் பாடுகள் செதுக்கப்பட்டிருந்தன.
எழும்பி நிற்கும் நாக வடிவங்கள்.
முற்றத்தில் விழும் மழைநீர் வடிய நேர்த்தியாக அமைக்கப்பட்ட கால்வாய்கள்.
வலது புறத் தளத்தின் கிழக்குப் பகுதியில் குளியலறை இருந்தது. அதையொட்டி மற்றோர் அறையும், அதன் கீழே நிலவறையும் இருந்தது.
குளியலறையிலிருந்து கீழ்ப்புறமாக இறங்கும் படிகள் குளத்தில் சென்று முடிவடைந்தன. குளத்திலுள்ள நீரளவுக்கு அருகிலுள்ள ஆறு ஒரு காரணமாக இருந்தது.
ஒரு காலத்தில் அந்தக் குளத்தில் எத்தனையோ அழகிய பெண்கள் குளித்திருக்கின்றனர்.
இப்போது குளத்தில் கால் பகுதிக்கும் குறைவாகத் தான் தண்ணீர் இருந்தது. இருப்பினும் ஆங்காங்கே தாமரை மற்றும் ஆம்பல் பூக்கள் மலர்ந்திருந்தன.
என்ன...என்ன ஆச்சு?
பாஸ்கரவாரியர் ஒடி வந்தான்.
இங்க பார்த்தியா... ரத்தம்!
சைமன்டிக்கோஸ்ட்டா தனது வலது கையை விரித்துக் காட்டினான்.
யோவ் துரை என்னய்யா சொல்ற? ரத்தமா... எங்க கையில இருக்கிறது பச்சைத் தண்ணியாச்சே.
பாஸ்கர வாரியர் அந்தத் தண்ணீரைத் தன் கையால் துடைத்தபடியே சொன்னான்.
ஆனால், சைமன் அதை தம்பவில்லை.
சற்று நேரத்துக்கு முன்னால்-ஒரு சில நொடிகளுக்கு முன்னால் கையில் தெறித்து வீழ்ந்த ரத்தத்துளிகள் அதற்குள் தண்ணீராக மாறி விட்டிருக்கிறது!
'இது ஒரு துர்ச்சகுனமா?’ -அவன் யோசனையில் ஆழ்ந்தான்.
இதற்கு முன் இதைவிடப் பெரிய எத்தனையோ அனுபவங்கள் பெற்றுள்ள சைமன் தற்காலிகமாக அதை மறக்க முயன்றான்.
அப்படியே ஒருவேளை துர்ச்சகுனமாக இருந்தால்கூட அதையெல்லாம் ஒழித்துக்கட்ட பெரிய மந்திரவாதியான பாஸ்கர வாரியரும் அப்துல் ரஹ்மானும் இருக்கிறார்களே!
பாஸ்கர வாரியருக்கு அறுபது வயது தாண்டி விட்டிருக்கிறது. பரம்பரையாகவே மந்திரவாதி குடும்பம் அவனுடையது. அதுவும் சாதாரணமான மந்திர வாதிகள் இல்லை... எப்படிப்பட்ட மோசமான செயல் களுக்கும் துணை போனவர்கள். பூனைத்தலை முதல் மனிதத்தலை வரை மந்திரம் செய்து எதிராளியின் வாசலைக்கூடத் தாண்ட விடாமல் குழிதோண்டிப் புதைப் பவர்கள். எப்படிப்பட்டவர்களாலும் அதையெல்லாம் அடையாளமே கண்டுபிடிக்க முடியாது.
பன்னிரண்டு நாள்களுக்குள் பலன் தெரியும். ஒன்று உடனடியான மரணம் அல்லது ஊரைவிட்டே ஓடிவிடுவார்கள்.
அராபிய மந்திரத்தில் புகழ்பெற்றவன் அப்துல் ரஹ்மான். எப்படிப்பட்ட பயங்கரமான வேலைகளையும் செய்யக் கூடிய ‘ஜின்’னுகள்தான் அவனது உபாசனா மூர்த்திகள். ஒரு பார்வையிலேயே எப்படிப்பட்ட பச்சை மரத்தையும் பட்டுப் போக வைப்பவன்.
ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் பைசாசிகமான சக்திகள் அவனுடனேயே உள்ளன. பெரும்பாலான மனை களில் அப்துல் ரஹ்மானின் மாந்திரீக வித்தைகள்தான் கை கொடுத்திருக்கின்றன. இதையெல்லாம் முறைப்படி செய்த பிறகுதான் வீட்டைப் பிரித்துப் போடும் வேலை ஆரம்பமாகும். ஆசாரிகள் கவிழ்த்து ஒட்டைத்தான் முதலில் பிரிப்பார்கள்.
ஃபிரான்சிஸ் ஃபெர்னாண்டஸும் ஓடி வந்தான்.
மீன் பிடிக்கும் தொழிலாளியாக அறிமுகமாகி, பிறகு கள்ளக் கடத்தலில் ஈடுபட்டுக் கடைசியாக சைமன் டிக்கோஸ்ட்டாவிடம் வந்து சேர்ந்திருக்கிறான். எதற்கும் தயங்காத பேர்வழி. எப்படிப்பட்ட கொடூரச் செயலைச் செய்யவும் தைரியமும் அதற்கான வலுவும் வாய்ந்தவன். அத்துடன் அவன் என்ன சொன்னாலும் அதை சொல் பிறழாமல் நிறைவேற்றும் ஒரு கும்பலே அவனுக்கு இருந்தது.
இல்லங்களை விலைக்கு வாங்கும்போது புராதனமான சிலைகளும் பெரும்பாலும் அங்கெல்லாம் கிடைப்பதுண்டு. இப்படிப்பட்ட சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு இருந்தது. அவற்றையெல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொறுப்பும் டிக்கோஸ்ட்டாவினுடையது தான்.
ஆனால், அப்படிப்பட்ட சிற்பங்களைப் போலியாகத் தயாரித்து அதற்குள் போதை மருந்துகளை நிரப்பி வெளி நாடுகளுக்கு அனுப்பிவருகிறான் சைமன் என்பது போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரியாத விஷயம்.
இதோ... இங்கதான் ஆணியடிச்சேன்.
சைமன் சுட்டிக் காட்டினான்.
முதலாளி… அது ஒரு சிலையாச்சே. லட்சணமான மரச்சிலை.
பாஸ்கரவாரியர் சொன்னார்.
பரவாயில்லை! ஷேவிங் பண்ணிட்டதும் ஆணியை உருவிட்டாப் போகுது.
டிக்கோஸ்ட்டா பிளேடை ரேஸரில் பொருத்தி முகத்தை வழிக்க ஆரம்பித்தான் மற்றவர்கள் தங்கள் வேலையைத் தொடர்வதற்காகக் கிளம்பினர். தடைகள் ஏதாவது இருந்தால், முதலில் அவற்றைச் சரிசெய்துவிட்டு வீட்டை ஒட்டு மொத்தமாகப் பிரிப்பதுதான் அவர்களது திட்டம். அதுதான் அவர்களது வழக்கமும்கூட.
மெழுகுவத்தி வெளிச்சத்தில் சைமன் ஷேவிங்கை முடித்தான். முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பெட்டிக்குள் வைத்தான்.
பிறகு மெதுவாக ஆணியை உருவ முயன்று, உருவவும் செய்தான்.
மறுபடியும் முகத்தில் எதுவோ பீய்ச்சியடித்தது.
ஐயோ...
டிக்கோஸ்ட்டா மறுபடியும் உரத்துக் குரல் எழுப்பினான்.
கையால் தொட்டுப் பார்த்தான்.
ரத்தம்!
மறுபடியும் கூட்டாளிகள் ஒட்டு மொத்தமாக ஓடி வந்தனர்.
பார்த்தீங்களா?
அவன் உள்ளங்கைப் பகுதியை அவர்களிடம் காட்டினான்.
என்ன துரை இது... பச்சைத் தண்ணி... இதோ இந்தச் சொம்புல இருக்கே, அதே பச்சைத் தண்ணி...
ஃபிரான்சிஸ் கூறினான்.
அப்படியா சொல்ற... சரி எதுக்கும் வாரியரும் ரஹ்மானும் என்னன்னு பாருங்க. இது ஏதோ பிரச்சனையுள்ள இடமாத் தெரியுது. நாம கோட்டயத்துல ஒரு இல்லம் வாங்கினோமே, ஞாபகமிருக்கா...
அவன் ஒரு பழைய சம்பவத்தை நினைவூட்டினான்.
பாஸ்கர வாரியர் திடுமென்று ஒருகணம் நடுங்கினார்.
கோட்டயம் நகரின் வடக்குப் பகுதியில் இருந்த ஓர் இல்லத்துக்கு வாரிசு யாரும் இல்லாமல் போனபோது, கடைசி வாரிசாக இருந்த-குழந்தைகள் இல்லாத நம்பூதிரி யன் மனைவியின் தம்பி மகனுக்கு வாரிசுரிமை கிடைத்தது.
அரசாங்க ஊழியரான அந்த வாரிசுதாரர் அதை, இதே சைமன் டிக்கோஸ்ட்டாவுக்குத்தான் விற்றார்.
இல்லத்தைப் பிரிக்கப் போனபோது ஒவ்வொரு மரத்துண்டின்மீதும் எண்ணிக்கைக்கு அடங்காத பாம்புகள். கட்டடத்தை நெருங்கவே முடியவில்லை.
மரச்சட்டங்களைப் பிரித்தெடுக்க வந்த