Aayirathoru Appusamy Iravugal
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Appusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Human Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Seitha Kidney Thaanam Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Virumbiya Arputha Kattalaigal Rating: 0 out of 5 stars0 ratingsSeethobadesam Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Bharathi Naarkaaliyum Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsSirithe Ahavendiya Chinna Chinna Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsKurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsSirippum Sinthanaiyum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aayirathoru Appusamy Iravugal
Related ebooks
Aakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Divorce Ketkirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Hee… Hee… Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsRajamani Rating: 5 out of 5 stars5/5Appusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiya? Sirippu Samiya? Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Ottrai Paravai Rating: 5 out of 5 stars5/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5கொசு Rating: 0 out of 5 stars0 ratingsPokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Kadatcham Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Hassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Sabatham - 3 Rating: 5 out of 5 stars5/5Suriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Aayirathoru Appusamy Iravugal
0 ratings0 reviews
Book preview
Aayirathoru Appusamy Iravugal - Bakkiyam Ramasamy
https://www.pustaka.co.in
ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்
Aayirathoru Appusamy Iravugal
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. மெரீன் டிரைவ்
2. சரக்குத் தயார்
3. ஷேக் அலிகான்
4. ஒப்பந்தம்
5. ஸிம்ஸிம்மின் விருந்து
6. சமிக்ஞைகள்
7. பாலைவனச் சிறுத்தை
8. அலீஃப், பே, தே, ஸே, ஜீம்
9. இரண்டு சமையற்காரர்கள்
10. பதவி ஏற்பு
11. தூண் பின்னே ஒரு பேய்
12. ருஸ்தம் கி பார்மாக்
13. ஜபார் துப்பறிகிறார்
14. பிடிப்பவருக்குப் பத்தாயிரம்
15. தளபதியின் விசாரணை
16. மந்திராலோசனை
17. டீல்
18. ஒரு ஷேக் உருவாகிறார்
19. வலையும் கவலையும்
20. அடிமை நான்… ஆடுகிறேன்
21. ரோஜா மலர்கள்
22. துப்பாக்கி முனை
23. அரண்மனையில் கலகம்
24. ஏழரை அடி அபாயம்
25. சலோ அல்ஜுமாய்ன்!
26. கிளியிஞ்சர் தலையீடு
27. எல்லாம் உன்னால்தான்
28. மின்சார நாற்காலி
29. வாட்ச் மேல் வாட்ச்
30. யார் முதலில் குதிப்பது?
31. கேட்டதும் கொடுப்பவளே சீதே!
முன்னுரை
மற்ற அப்புசாமித் தொடர்களுக்கும் ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகளுக்’கும் ஒரு வித்தியாசமுண்டு.
அப்புசாமி சீதாப்பாட்டி தம்பதிகளுடன், அல்ஜுமாய்ன் நாட்டு சர்வாதிகார ஷேக்கையும், அவருடைய விசித்திரமான கெடுபிடிகளையும், முன் கோபத்தையும் சந்திக்கிறோம். ஷேக் பிரபுவுக்குத் தகுந்தபடி ஈடுகொடுத்து, தன் உயிரைக் கையில் பிடித்தவாறு ஒவ்வொரு பதிலுக்கும் மும்முறை வணங்கி, நீட்டி நீட்டி முழங்கி, எஜமானனுக்குப் பதில் சொல்லிச் சமாளிக்கும் பரிதாபத்துக்குரிய அமைச்சர் ஜபாரையும் காண்கிறோம்.
எனது பெருமதிப்புக்குரிய நண்பரும், அராபிய மொழிப் பேரறிஞருமான திரு எம். அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ., பி.டி.எச். அவர்கள் அரபுச் சொற்களை நான் கையாள மிகவும் கைகொடுத்து உதவினார்கள். அவர் அன்பு, விவரணைக்கு அப்பாற்பட்டது.
இதனைத் தொடர்கதையாக வெளியிட்ட குமுதத்திற்கும், நாவல் உருவாவதற்கு அரிய யோசனைகளையும் உத்திகளையும் தந்து என் எழுத்தையும் கதையையும் பண்படுத்திய எனது ஆசிரியர் திரு எஸ். ஏ. பி. அவர்களின் எல்லையற்ற அன்புக்கும் அக்கறைக்கும், என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாக்கியம் ராமசாமி
47, ஹாரிங்டன் ரோடு
சேத்துப்பட்டு,
சென்னை – 31
போன்: 28363873
1. மெரீன் டிரைவ்
மெரீன் டிரைவ் ஓரமாக வாக் போய்விட்டு அப்போதுதான் சீதாப்பாட்டி சற்றே களைத்துப்போய் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்திருந்தாள்.
அப்புசாமி நிதானமாகவும், அமைதியாகவும், முகத்தில் புன்முறுவலுடன் பின்பக்கமாகக் கையில் கைக்குட்டையை வைத்துக்கொண்டு அவளை அணுகினார்.
சீதே!
என்று போலியான அன்புடன் கூப்பிட்டவர், எங்கே வாயை ‘ஆ’ திற! உனக்கு ஒன்று வாங்கி வந்திருக்கிறேனே?
என்றார்.
சீதாப்பாட்டி கடுகடுப்புடன், ஸ்டுப்பிட்! நடுரோட்டில் என்ன விளையாட்டு?
என்று சொல்லி முடித்திருக்கமாட்டாள் அப்புசாமி சட்டென்று கைக்குட்டையை அவள் மூக்கின் மேல் வைத்தார்.
சீதாப்பாட்டி மயக்கமானாள். சபாஷ் ஸாப்!
என்றான், அரபு ஷேக்கின் ஏஜண்ட் சுலைமான்.
சீதாப்பாட்டியும் அப்புசாமியும் ஏன் பம்பாய்க்கு வந்தார்கள்? சுலைமான் என்பவன் யார்? அப்புசாமி ஏன் சீதாப்பாட்டியை மயக்கமடைய வைத்துச் சுலைமானிடம் ஒப்படைக்க வேண்டும்?
பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் என்ற முறையில் சீதாப்பாட்டிக்குப் பம்பாயிலிருந்து கடந்த இரண்டு வருடமாகவே அழைப்புக்கு மேல் அழைப்பாக வந்துகொண்டிருந்தது. அதிலும் சீதாப்பாட்டியின் யோசனையின் பேரில் திருமதி மகிஷாமூர்த்தி என்னும் சமூகசேவகி மாதுங்காவில் பா.மு.கவின் கிளைக்கழகம் ஒன்று ஆரம்பித்து அது மெதுவே ஸயான், தாதர் என்று ஒவ்வோரிடத்திலும் பரவி, நல்ல முறையில் இயங்கத் துவங்கவே எல்லாக் கிளைகளும் ஒன்று சேர்ந்து ஸ்தாபகரான தலைவி சீதாப்பாட்டியை எப்படியாவது வரவழைத்து ஒரு வெல்கம் அட்ரஸ் தருவது என்று தீர்மானித்தன.
பல தடவைகள் சீதாப்பாட்டி சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழித்து விட்டாள். இந்தத் தடவை மகிஷாமூர்த்தி நேரிலேயே வந்துவிட்டாள். அப்போது கூட சீதாப்பாட்டி லேசில் ஒப்புக் கொள்ளவில்லை. அப்புசாமிதான் நச்சரித்தார்.
சீதே! எனக்காக ஒப்புக்கொள் சீதே. நான் பம்பாயே பார்த்ததில்லை. கேவலம் ரசகுண்டு கூட யாரோ உறவுக்காரருடைய ஓசிப் பாஸிலே ஒட்டிக் கொண்டு போய் வந்துவிட்டான். அவர்களே முதல் வகுப்பு டிக்கெட் வாங்கித் தருகிறார்கள். ஏன் இப்படிக் கிராக்கி பண்ணிக்கொள்றே?
சீதாப்பாட்டி சிரித்தாள். அது சரி, இந்த ஸீன்லே நீங்க எங்கே நுழைகிறீர்கள்?
என்றாள்.
ஹிஹி! மகிஷிக்கிட்டே நான் அதுக்கும் கேட்டுக் கொண்டுவிட்டேனாக்கும்? உங்க தலைவி ஏன் வரமாட்டேன் என்கிறாள் தெரியுமா? ஸர்வன்ட் இல்லாமல் அவள் எங்கும் வரமாட்டாள். சர்வன்ட்டுக்கும் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கணும்
என்றேன். அப்படிச் சொன்னால்தானே அவள் மூன்றாம் வகுப்புக்காவது வாங்குவாள். ஐயாதான் சர்வன்ட்!"
சீதாப்பாட்டி யோசித்தாள். ‘இவருக்கும் வயசாகிறது. குழந்தைத்தனமாக என்னவோ ஆசைப்படுகிறார். பம்பாயிலிருப்பவர்களும் மூன்று வருஷமாகக் கூப்பிடுகிறார்கள்’. எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்துப் பம்பாய்க்கு வந்து போக ஒப்புக்கொண்டுவிட்டாள்.
மாதுங்காவில் கழக அங்கத்தினர் ஒருத்தர்கட்டி, அப்போதுதான் கிருகப் பிரவேசம் செய்துவிட்டு இன்னமும் குடியேறாத புதிய ஃபிளாட் ஒன்றில் சீதாப்பாட்டி தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பம்பாய் இவ்வளவு அழகாக இருக்கும் என்று அப்புசாமி கனவிலும் நினைத்ததில்லை, அதுவும் மலபார் ஹில்ஸ்!
சீதே!
என்றார் பரவசப்பட்டவராக, என்ன லைட்! என்ன மாடிகள்! என்ன கட்டிடம்! என்ன சமுத்திரம்! என்ன காற்று சீதே! இதையெல்லாம் பார்க்காதவன் ஒரு மனுஷனா?
சீதாப்பாட்டிக்குக் கணவரின் குழந்தைத்தனமான மகிழ்ச்சியைக் காணத் திருப்தியாயிருந்தது. பம்பாயில் த மோஸ்ட் பாஷ் ஏரியா இந்த ஹாங்கிங் கார்டன்ஸ் ஏரியாதான்.
என்றவள் நன்றி ததும்ப, பட் ஃபார் யூ… இதையெல்லாம் மிஸ் பண்ணியிருப்பேன்,
என்றாள்.
ஜிலுஜிலுவென்று மலையடிவாரத்தை முத்தமிட்டுத் தழுவும் கடற்பரப்பிலிருந்து வந்த அலைஅலையான காற்றும், கீழே விரிந்து செல்லும் செளபாத்திக் கடற்கரைக்கு வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும், நீல புஷ்பராக ரத்தினக் கற்களைக் குவியல் குவியலாக யாரோ கொட்டிவிட்டு எடுக்க மறந்தாற்போல் ஜாஜ்வல்யமாகச் சுற்றிலும் ஒளிர்ந்த பம்பாய் நகரமும் அவளுக்கும் உண்மையில் மகிழ்ச்சியூட்டின.
அந்தப் பக்கம் இருப்பதுதான் கமலாநேரு பார்க்காம். ஷல் வி கோ தேர்?
என்று கணவனிடம் கேட்டாள்.
சுற்றுப்புற அழகு போதாதென்று போனஸ் அழகாக நிலாவேறு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
சீதே! இவ்வளவு அழகான பார்க்கிலே ஒரேஒரு குறைதான் மாங்கா தேங்கா பட்டாணிக்காரன் ஒருத்தன் கூட இல்லை பார்த்தாயா?
சீதாப்பாட்டி சிரித்தாள். இந்த கார்டன்ஸிலும் எதிர் கார்டன்ஸிலும் அதெல்லாம் ஸ்ட்ரிக்ட்லி ப்ரொஹிபிடட்! பேல் பூரி, பானி பூரி, உங்களுக்குப் பிடித்த சுண்டல் கிண்டல் எல்லாம் கீழே செளபாத்தி பீச்சில் வேண்டியது அவய்லபிள்.
அடிசக்கை! அப்போ நாம் போகிறப்போ பீச்சிலே போய்க் கொஞ்சநேரம் இருந்துவிட்டுத்தான் போகிறோம் இல்லையா சீதை…
அப்புசாமிக்குச் சீதாப்பாட்டியை இன்னொரு தரம் பார்க்கவேண்டும் போலிருந்தது. செக்கச் செவேலென்று என்ன நிறம், என்ன அழகான கண்கள்… சிரிக்கிறபோது குமிழ் விழுகிற அந்தக் குறும்புப் புன்னகை… அறிவு சொட்டுகிற முகம். அதே சமயம் அடக்கமான டிரெஸ்…
சீதேக் கண்ணு!
என்று ரகசியமாக அவளிடம் கொஞ்சவேண்டும் போலிருந்தது அவருக்கு சீதே ஒண்ணு சொல்லுவேன்… கோபித்துக்கொள்ள மாட்டாயே?
என்றார்.
ஊம்…
என்று அவரை ஏறிட்டுப் பார்த்தாள் சீதாப்பாட்டி.
நீ வந்து ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறே சீதே! சத்தியமாகச் சொல்றேன். நான் கூட உன்கிட்டே சண்டையே போடக்கூடாதுன்னுதான் சீதே, ஒவ்வொரு தரமும் நினைத்துக்கொள்றது. ஆனால் என்னவோ சமயத்தில் உளறிவிடறேன்…
சே…சே! அதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் துளியூண்டு ஷார்ட் டெம்பர்ட்… அவ்வளவுதான். நான்தான் ஏதாவது உங்களை நறுக்கென்று சொல்லி விடுகிறவள்! யு ஆர் ஆப் ஸல்யூட்லி இன்னொஸென்ட்.
அப்புசாமிக்குச் சீதாப்பாட்டியை அப்படியே கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. அடிக்கடி இப்படி எங்காவது நாம் ஜாலியாகப் போகணும் சீதே. கணவன் - மனைவி ஒற்றுமைக்கு இது ரொம்ப அவசியம் என்று எனக்குத் தோணுகிறது!
அட! ஸைகாலஜியெல்லாம் பிட்டுப் பிட்டுப் வைக்கிறீர்களே. என்றாள் சீதாப்பாட்டி,
டைம் ஆகிறது. நாம் அந்தப் பார்க்கைப் பார்த்துவிட்டு, க்விக்காக ரிடர்ன் ஆக வேண்டும்."
பூங்காவிலிருந்த ஓல்ட் லேடிஸ் அப்புசாமியின் மனத்தை மிகவும் கவர்ந்தது. சிறு குழந்தைகள் அந்தப் பிரம்மாண்டமான பூட்ஸுக்குள் நுழைந்து ஏறி உச்சியிலிருந்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.
சீதே! நானும் போய் நுழைந்து பார்க்கட்டுமா?
என்றார்.
தட் இஸ் ஒன்லி மென்ட் ஃபார் சில்ட்ரன் போலிருக்கிறது,
என்றாள் சீதாப்பாட்டி இருந்தாலும் வாட்ச்மேனிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
ஆனால், அவன் அனுமதி மறுத்துவிட்டான். பெரியவர்கள் போனால் தாங்காதாம்
என்று அவரைச் சமாதானப்படுத்தினாள். ‘எவ்வளவு சிறிய விஷயங்களில் இவர் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்’ என்பதை நினைக்கும்போது இத்தகைய வெள்ளை உள்ளம் படைத்த கணவரைத்தான் அடைந்தது மிகவும் அதிருஷ்டம் என்று எண்ணிக்கொண்டாள்.
சீதே! சீதே!
என்றார் அப்புசாமி. ஏதோ நாய்க் கண்காட்சி நடக்கிறது போலிருக்கிறது. எத்தனை வகையான நாய்களை அழைத்துக் கொண்டு எல்லாரும் எங்கேயோ போகிறார்கள் பார்.
இல்லை. எல்லா வீட்டு வேலைக்காரர்களும் அவரவர் வீட்டு நாயை ‘வாக்’ அழைத்துப்போகிறார்கள் போலிருக்கிறது…
சீதே…
என்று சொல்லிக் கடகடவென்று சிரித்தார் அவர் இந்தா… இந்த நாய்களைப் பார்த்ததும்…
என்ன சிரிக்கிறீர்கள்?
என்று சீதாப்பாட்டி கேட்கும்போதே அவளுக்கும் புரிந்துவிட்டது. நம்ம வீட்டிலே லார்ட் பெலிங்டன் வளர்ந்ததே. அதை நினைத்துத்தானே சிரிக்கிறீர்கள்…
‘அது ரொம்ப ஜோரான நாய் சீதே, அதற்குப் போட்டியா நான் ஒண்ணு வளர்த்தேனே… கடைசியில் கழுதை என்னையே பிடுங்கிட்டு ஓடிட்டுதே…"
சீதாப்பாட்டி கைக்குட்டையால் வாயை நாசூக்காகப் பொத்திச் சிரிப்பை அடக்கிக் கொண்டதாலோ என்னவோ புரை ஏறிவிட்டது. கொக் கொக்…
என்று இருமினாள்.
யாரோ நினைக்கிறார்கள். இரு… இரு
என்ற அப்புசாமி சீதாப்பாட்டியின் தலையை லேசாகத் தட்டினார்.
சீதாப்பாட்டி சிரித்தவாறு, என்னை வேறுயார் நினைக்கப்போகிறார்கள் உங்களைத் தவிர!
என்றாள். ஆல்ரைட்! நாம் புறப்படுவோமா? இன்னும் நமக்கு டாக்ஸி கிடைத்து நாம் மாதுங்கா போக ஒன்பது மணியே ஆனாலும் ஆகிவிடும். டின்னருக்கு மிஸஸ் ராமன் கப்பிள் நமக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.
சீதே!
என்றார் அப்புசாமி அவசரமாக, சப்பாத்தி பீச் போகலியே? பேல்பூரி, பான்பூரி
செளபாத்தி பீச் தானே? இதோ கீழே இறங்கினால் செளபாத்திதான். பட் இன்றைக்கு டூ லேட் நாளைக்கு ஃபங்ஷன் முடிந்ததும் அப்புறம் நாம் ஃப்ரீதான். எப்படியும் அட்லீஸ்ட் ஒன் வீக் இங்கே இருக்கப் போகிறோம்…
அப்புசாமிக்கு மாபெரும் அதிர்ச்சியாயிருந்தது. சீதே! என்ன சொல்கிறே? பேல்பூரி இப்போ வேண்டாமா? கொஞ்ச நேரத்துக்குள்ளே பால்மாறிட்டியே! இன்னாம்மே, இந்த ராங்தானே வேணாம்கிறது?
அவர் ‘இன்னாம்மே’ போட்டது சீதாப்பாட்டிக்குக் குப்பென்ற எரிச்சலைத் தந்தது. தான் என்ன தன்மையாகப் பழகினாலும் இவரால் ஒழுங்காக மட்டும் நடந்துகொள்ள முடியாது என்று எண்ணிக் கொண்டவள், இங்கெல்லாம் சாப்பிடறது அவ்வளவு டீஸென்ஸி இல்லை. அதுவுமில்லாமல் இப்போ பார்க்கிறவர்கள் யாராவது நாளைக்கு என்னை ஃபங்க்ஷனில் பார்த்தால், மட்டமாக எடை போடுவார்கள். இதெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது.
மூக்குக்கு மேல் அவருக்கு ஆத்திரமாக வந்தது. சீதே, இது வடிகட்டின மோசடி… பூரி கேட்டால் முடியாதென்கிறாயே!
என்றவர் கெஞ்சும் குரலில் ஐயோ, ஐயோ, உனக்கு ஒன்றுமே தெரியலை சீதே, இந்த பேல்பூரி நம் மெட்ராஸ் மெரினாவிலே விற்கிற பேல்பூரி மாதிரி இல்லையாம்! இன்னும் பிரமாதமாக இருக்குமாம். ஓமப்பொடி தூவி பால் ஊற்றி ஐயோ ரசம் ஒருதரம் பம்பாய் வந்து சாப்பிட்டவன் இங்கேயே ஒரு வாரம் பழி கிடந்தானாம்… சொன்னான்…
உங்க ரசகுண்டுவுக்குத் தின்கிறதைத் தவிர என்ன தெரியும்? மென் லிவ் நாட் ஆன் ப்ரட் அலோன். நாளைக்கு வெல்கம் அட்ரஸ் அவர்கள் தந்ததும் நன்றியுரை நாலுவார்த்தை நான் சொல்ல ஸ்பீச் தயாரிக்க வேண்டும், புறப்படுவோம்.
அப்புசாமி மக்கர் செய்தார். நீ தின்னாவிட்டால் ஒழி! என் கையிலே துட்டைக் கொடு. நான் தின்னுட்டு வந்து சேருகிறேன். பத்து ரூபாயைத் தள்ளு.
சரியாகப் போயிற்று. டிரெய்னில் வரும்போதே கண்டதை வாங்கி வாங்கித் தின்றீர்கள். ஏதாவது வந்து படுத்துவிட்டீர்களானால் ஹஜூ இஸ் கோயிங் டு ஸஃபர்?
பல்லை நறநறத்துக் கொண்டார் அப்புசாமி. வேதாளம் வேதாளமாகத்தான் இருக்கிறே? காசுப் பிசாசு!
நீங்கள் முருங்கை மரமா இருக்கிறவரை நான் வேதாளமாக இருக்க வேண்டியதுதான். நோ அதர் கோ.
மறுநாள்.
சண்முகானந்த சபா ஹால் நிரம்பி வழிந்தது.
மாதுங்காப் பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் அங்கத்தினர்களுக்கெல்லாம் தாங்க முடியாத மகிழ்ச்சி.
மேடையில் பளபளத்த பட்டுத் திரையின் ஜாஜ்வல்யமான ஒளியை அலங்கார விளக்குகள் இன்னும் பிரகாசிக்கச் செய்த பின்னணியில் சீதாப்பாட்டி கோலாகலமாக உட்கார்ந்து, தனக்கு வாசித்தளிக்கப்படும் வரவேற்புரையை அடக்கமான பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். நன்றி தெரிவிக்கவேண்டிய கட்டம். சீதாப்பாட்டி எழுந்து மைக் அருகே பேச வந்தபோது ஆளுயர ரோஜா மாலையை கோரேகான் பாட்டிகள் முன்னேற்றக் கழக சார்பாக ஒரு பெண்மணி போட்டாள்.
சீதாப்பாட்டி ரஷ்யர்களைப் போலக் கைதட்டல்களுக்குத் தானும் லேசாக இரண்டு தரம் கைதட்டி, மற்றவர்களின் மகிழ்ச்சியில் பங்கு பெற்றுவிட்டு. மாலையை உடனே கழற்றி, மேஜைமீது நாசூக்காக வைத்தாள். கார்லண்ட் இஸ் பிக், அயம் ஸ்மால்.
என்று புன்னகையுடன் அவள் முணுமுணுத்தது மைக்கில் துல்லியமாக அனைவருக்கும் கேட்கத் தவறவில்லை.
ஹிஸ் எக்ஸ்லன்ஸி த கவர்னர் ரெஸ்பெக்டட் சீஃப் மினிஸ்டர்! லேடிஸ் அஃப் த கழகம்.
மூன்றாம் வரிசையிலிருந்த அப்புசாமிக்கு எரிச்சலாக வந்தது.
முந்தினநாள் சாயந்தரம் செளபாத்திக் கடற்கரையில் சீதே பேல்பூரிக்கு ஆசைகாட்டி மோசம் செய்த எரிச்சலே இன்னும் அணையவில்லை. இப்போது இன்னொரு எரிச்சல்.
பாராட்டு விழாவின் போது கெளரவமாகத் தன்னையும் சீதாப் பாட்டியுடன் மேடையில் நாற்காலி போட்டு உட்கார வைப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஒரு கிழவியாவது ஒப்புக்குக்கூட அவரைக் கூப்பிடவில்லை. அட, அவளுக்குப் போட்டதுபோல இவ்வளவு பெரிய ஆளுயர மாலை வேண்டாம். ஒருமுழக் கதம்பத்தைக் கத்தரித்து, பஜனைக்காரன் தோளிலே போடுகிற மாதிரியாவது தனக்குப் போடக்கூடாதா! சூளைச்செங்கல்லும் பிடாரிதான்!
ஆளுயர மாலை. இப்போ இவள் என்ன செய்து கிழித்து விட்டாள்?
மெட்ராஸிலிருந்து பஸ்ட் கிளாஸ் ரயில் சத்தம் கொடுத்து இவளைக் கூட்டிக்கொண்டு வந்து (அவருக்கு வெறும் மூன்றாம் வகுப்பு) இடைவேளையிலே கொஞ்சம் சத்தம் போட வைக்க வேண்டுமாக்கும்?
சீதாப்பாட்டி இன்னமும் பேசிக் கொண்டிருந்தாள். அப்புசாமி பல்லைக் கடித்தவாறு பின்புறம் திரும்பி ரசிகர்களைப் பார்த்தார்.
கிழவி என்னத்தை அப்படிச் சுவாரசியமாகப் பேசுகிறாள் என்று இத்தனைக் கிழவிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறதுகள், மணிபர்ஸுகள்!
சீக்கிரம் பேச்சை முடித்துத் தொலைத்தால் கெஞ்சிக் கூத்தாடி செளபாத்திக்குப் போய்ப் பேல்பூரி ஒரு பிடி பிடிக்கலாம்.
வாய் அவரை அறியாமல் ஊறல் எடுத்துத் தன்னுணர்வு இல்லாமல் ஜொள்ளு ஒழுக்கிவிட்டது. சட்டென்று துடைத்துக் கொண்டார்.
வரவேற்பு விழா அரை மணியில் முடிந்தது.
ஜெய் பேல்பூரி! ஜெய் பானிபூரி,
என்று அப்புசாமி செளபாத்திக் கடற்கரைக்குத் தாவத் தயாரானார். ஆனால் சீதாப்பாட்டி மேடையிலிருந்து இறங்குகிற வழியாயில்லை.
ஆட்டோகிராஃப் வாங்குபவர்கள் சூழ்ந்து கொண்டதால் பாட்டியால் உடனே கீழே இறங்க இயலவில்லை. அதுவுமில்லாமல், இலஸ்டிரேடட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங் போன் செய்ததாக யாரோ அரைகுறையாகச் செய்தியைக் கேட்டுக்கொண்டு வந்து சபாக்காரியதரிசியிடம் கூறினார். குஷ்வந்த் சிங் எதற்காகப் போன் செய்யவேண்டுமென்று ஒருத்தருக்கும் தெரியவில்லை.
ஒருகால் நம்ம ஃபெளண்டர் பிரஸிடென்டை ஏதாவது எக்ஸ்க்ளூஸிவாக இன்டர்வியூ செய்வதற்காக அவர் வருகிறாரோ?
என்று ஒரு கிழவி அபிப்பிராயம் தெரிவித்தாள்.
ஒருபுறம் அப்புசாமி ஒதுங்கி நின்று பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தார். சார், நீங்கள் மிஸ்டர் அப்புசாமிதானே?
ஏழெட்டுப் பத்துக் கிழவிகள் நின்று கொண்டிருந்தனர். தன்னிடம் கையெழுத்து வாங்குவதற்காகத்தான் அவர்கள் நிற்கிறார்கள் என்று அப்புசாமி நினைத்த மாத்திரத்தில் அவருக்கு மூளையில் ஜிலுஜிலுவென்ற உணர்ச்சி ஏற்பட்டது. அடடே, பேனா இல்லையே
என்று சற்றே அசடுவழிய ஜிப்பாப் பையைத் தடவிக் கொண்டார்.
பேனாவா, எதற்கு?
என்றாள் ஒருத்தி.
இன்னொரு கிழவி, குறுஞ்சிரிப்புடன், சார்தான் செக்கிலெல்லாம் கையெழுத்துப் போடுவார். ஏன் சார் கரெக்ட்தானே? உங்ககிட்டே ஒரு சந்தேகம் கேட்கணும் சார்?
என்றாள்.
அப்புசாமிக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது.
ஏண்டி குட்டிகளா. திமிராடி உங்களுக்கெல்லாம்?
என்று கேட்டிருப்பார். ஆனாலும் பொறுமையாக என்னவோ சந்தேகம்னிங்களே, சீக்கிரம் கேளுங்கள்,
என்றார்.
அதில்லை சார்… வந்து… உங்க மிஸஸ்கிட்டே எப்பப் பார்த்தாலும் மூக்கை உடைத்துக் கொள்றீங்களே? அப்படியிருந்தும் உங்க மூக்கு நீளமாகவே இருக்கிறதே எப்படி?
அப்புசாமிக்கு ரத்தம் கொதித்தது.
2. சரக்குத் தயார்
கிழவிகள் கேலி செய்தது அப்புசாமிக்கு உலராத புண்ணின்மேல் உப்புத் தாள் தேய்த்தது போலிருந்தது. விடுவிடுவென்று தங்கியிருந்த இடத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.
ராத்திரி எட்டரைக்கு மேல் சீதாப்பாட்டி அவர் சாப்பாட்டு விஷயத்தையே அடியோடு மறந்தவளாக, வாக் போகலாம் வருகிறீர்களா,
என்றாள்.
அவளைக் கழுத்தை நெறிக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு.
‘வடிகட்டின பழிகாரி நம்பர் ஒண்ணாயிற்றே! நேற்று இவள் குழைந்த குழை என்ன? இன்றைக்குக் கழுத்து நிறைய மாலை ஆளுயரத்துக்கு விழுந்ததும் கர்வம் வந்துட்டுது கர்வம்! கணவனைப் பார்த்தால் புழுவாட்டம் தெரிகிறது.’ அடி அம்மா! புகழ் தேவதே, நீ என்னைப் புழுவாவே நினை. ஆனால் புழுவானால் கூட அந்தப் புழுவுக்கும் வாயும் வயிறும் இருக்குமே. அதற்குப் பசி எடுக்குமே என்கிற அறிவு உனக்கு வேணாம்?
தன்னுள் எரிமலை உருவாகிக் கொண்டிருக்க அவர் சீதாப்பாட்டிக்கு எதிர்த்த திசையில் வாக் போகத் தொடங்கினார்.
கால் வலியெடுக்கவே சாலை ஓரத்திலிருந்த ஒரு மரத்தடியில் நின்றார். தற்செயலாக அண்ணாந்து பார்த்தவர் அடேபாவி!
என்று அடுத்த கணம் கூவிவிட்டார்.
மரக்கிளையில் ஒர் ஆள் நாலு முழக்கயிறு ஒன்றைச் சுருக்குப் போட்டுத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஜங்கென்று கீழே குதிக்கத் தயாராக இருந்தான்.
அப்புசாமிக்குக் கையும் காலும் உதறலெடுத்தது. ஐயோ, ஐயோ? தூக்கு தூக்கு! சாவு, சாவு
என்று ஒலமிட்டார். ஆனால் அவர் கூக்குரல் கேட்டு யாரும் ஓடிவரவில்லை.
ஒரு கால் தமிழில் கத்தியதால் யாருக்கும் புரியவில்லை போலிருக்கிறது, என்றெண்ணியவராக, ஐயோ ஹை! சாவு ஹை!
என்று தமக்குத் தெரிந்த இந்தியில் கத்தினார்.
அதற்குள் மரத்தின் மேலிருந்த அந்த ஆள் கயிற்றைக் கையிலெடுத்துக் கொண்டு விரக்தியாகக் கீழே இறங்கினான்.
அரே சாப்! இந்தப் பாவியை ஏன் காப்பாற்றினீர்கள். விடுங்கள் என்னை… உடனே நான் சாக வேண்டும்… அது ஒன்றுதான் நான் தப்ப வழி
என்று கத்தினான்.
அப்புசாமி அவன் கையிலிருந்த தூக்குக் கயிற்றை லபக்கென்று வாங்கித் தூக்கிப்போட்டார். அவனை ஓடிவிடாதபடி ஒரு கையில் பற்றிக்கொண்டு, என்னய்யா ஆளு! எந்த மனுஷனாவது சாவானாய்யா இப்படி மடத்தனமாகத் தூக்குப் போட்டுக்கொண்டு? அப்படி உனக்கென்ன ஈட்டிக்காரன் கடன்தொல்லை.? உன்னை பார்த்தாலே ஒரு ஈட்டிக்காரன் மாதிரிதான் இருக்கிறது.
என்றவர், புரிந்து கொண்டவரைப் போலக் கடகடவெனச் சிரித்தார். "சரிதான். பாக்கி வசூல் ஆகலையென்று மனசு உடைந்துட்டியாக்கும். காலம் கெட்டுப் போச்சிப்பா.