Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaniyadha Thagangal
Thaniyadha Thagangal
Thaniyadha Thagangal
Ebook43 pages23 minutes

Thaniyadha Thagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120002266
Thaniyadha Thagangal

Read more from Jayasree Shanker

Related to Thaniyadha Thagangal

Related ebooks

Related categories

Reviews for Thaniyadha Thagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaniyadha Thagangal - Jayasree Shanker

    http://www.pustaka.co.in

    தணியாத தாகங்கள்

    Thaniyadha Thagangal

    Author:

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    Jayasree Shanker

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayashree-shanker

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    தணியாத தாகங்கள்

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    1

    அம்மா.... அம்மா.... இங்க வந்து பாரேன்..... வாசல்ல யார் வந்திருக்கான்னு.....! - வாசலில் போட்டுக் கொண்டிருந்த கோலத்தை அப்படியே விட்டுவிட்டு எழுந்து கத்திக் கொண்டே உள்ளே தலைதெறிக்க ஓடினாள் ரவியின் தங்கை மைதிலி.

    அம்மா...நம்ப ரவி அண்ணா........ கல்யாணியைக் கல்யாணம் பண்ணிண்டுட்டான்னு நினைக்கறேன்...ரெண்டு பேருமாத் தான் வந்திருக்கா..... ரகசியக் குரலில் கூட ஒரே பதற்றம் அவளிடம். அரிசி மாவுக் கையாலேயே வாயைப் பொத்திக் கொண்டு திகிலில் மூச்சிரைக்க நின்றாள் அவள்.

    துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மா, சோப்பு நுரை மூடிய கையோடு தூக்கிச் செருகிய புடவையைத் தளர்த்தியபடி, அரக்கப் பரக்க வந்தவள், வாசலில் வந்து நின்ற ரவியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் ஒரு நிமிஷம் தயங்கினாள். பின்பு, ஓடிச் சென்று அவனையும், அவன் பின்னால் பாதி மறைந்தபடி நின்றிருந்த தன் தம்பி மகள் கல்யாணியையும் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கதவை வேகமாகச் சாத்தினாள். அவளது கழுத்தில் துருத்திக் கொண்டு நின்ற புத்தம் புது மஞ்சள் சரட்டை வெளியில் இழுத்து லேசாகக் கைகளால்.... நீவி விட்டபடி...கண்கள் பனிக்க நின்றவளின் காலடியில் கல்யாணி நமஸ்காரம் பண்ணத் தவறவில்லை.

    இருக்கட்டும்.... நன்னாருங்கோ..... எழுந்திருங்கோ...! ஏன்.... இப்படிப் பண்ணினே... ரவி..? அத்தனை அவசரமா.... இந்தக் கல்யாணத்துக்கு உனக்கு?... ஏன் நாங்க இன்னும் உசுரோட இல்லையா..? என்று தழு தழுத்த குரலில்

    Enjoying the preview?
    Page 1 of 1