Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellam Poi
Ellam Poi
Ellam Poi
Ebook190 pages1 hour

Ellam Poi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583949
Ellam Poi

Read more from Rajesh Kumar

Related to Ellam Poi

Related ebooks

Reviews for Ellam Poi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellam Poi - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    எல்லாம் பொய்

    Ellam Poi

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    எல்லாம் பொய்

    1

    எந்த ஒரு விநாடியிலும் சூரியனைப் பிரசவிக்கத் தயாராய் இருந்தது கிழக்கு திசை. காற்றில் குளிர் பரவியிருக்க, ஒலிபெருக்கியில் கந்த சஷ்டி கவசம் வழிந்தது. ஆறுமுகம் படைத்த அய்யா வருக, நீரிடும் வேலவன் சீக்கிரம் வருக, சரவணபவனார் சடுதியில் வருக."

    ஆனந்த் முருகனை தரிசனம் செய்துவிட்டு கோவிலின் உட்பிரகாரத்தையும், வெளிப்பிரகாரத்தையும் சுற்றி முடித்து கோவிலின் அலுவலக அறைக்கு வந்தபோது செயல் அலுவலர் பவ்வியமாய் அவனை நெருங்கினார்.

    தம்பி…! கோவில்ல இப்ப கூட்டம் இருக்கு. அன்னதானம் குடுத்துடலாமா?

    அந்த அழகான இருபத்தேழு வயது இளைஞன் ஆனந்த், தன் மணிக்கட்டை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 6.11.

    சரியாய் 6.26-க்கு அன்னதானத்தை தொடங்கிடலாம்.

    தம்பி தப்பாய் நினைச்சுக்கக்கூடாது… சர்க்கரைப் பொங்கல் ஐநூறு பொட்டலம், புளியோதரை ஐநூறு பொட்டலம் 'ஆர்டர்’ குடுத்து வரவழைச்சுட்டோம். இன்னிக்கு சஷ்டி நாள். கோவில்ல கூட்டம் இருக்கும். இருந்தாலும் இன்னும் ஒரு பதினைஞ்சு நிமிஷத்துக் குள்ளே இதுல பாதி கூட்டம் காணாமே போயிடும். அதுக்கப்புறமாய் கூட்டம் சாயந்தரம்தான் வரும்….அதனால அன்னதானத்தை இப்பவே கொடுக்க ஆரம்பிச்சா, பொட்டலங்கள் மீதம் இருக்காது!

    ஆனந்த் அவரை ஒரு சின்னப் புன்னகையில் நனைத்துவிட்டு சொன்னான். சார்! நீங்க சொல்றது சரிதான்… இருந்தாலும் சரியாய் 6.26-க்கு அன்ன தானத்தை ஆரம்பிச்சா, என்னோட மனசுக்கு சந்தோஷ மாய் இருக்கும்.

    சரி தம்பி! உங்க விருப்பப்படியே 6.26-க்கு ஆரம் பிச்சுடலாம். இன்னும் பதினைஞ்சு நிமிஷம் இருக்கு… உள்ளே வந்து உட்காருங்க. காபி சொல்லட்டுமா?

    வேண்டாம்… நான் விரதம். ஒரு தம்ளர் பால், ஒரு மலைப்பழம்… இதுதான் இன்னிக்கு என்னோட உணவுப் பட்டியல்.

    விரதம் இருந்து அன்னதானம் பண்ற அளவுக்கு இன்னிக்கு என்ன விசேஷம் தம்பி? அதுவும் சரியாய் 6.26-க்குத்தான் பண்ணனும்னு சொல்றீங்க… ஏதாவது வேண்டுதலா?

    அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இன்னிக்கு அந்த நேரத்துக்கு அன்னதானம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்…! - ஆனந்த் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, அவன் கட்டியிருந்த பட்டு வேட்டியின் இடுப்பு மறைவில் இருந்த செல்போன் தன் ‘ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து,அழைப்பது யார் என்று பார்த்தான்.

    அவனுடைய அப்பா சங்கரநாராயணன்.

    ஹலோ அப்பா... குட்மார்னிங்.

    உன்னோட குட்மார்னிங்கை அப்புறமாய் வாங்கிக் கறேன். மொதல்ல நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு, பட்டு வேட்டியைக் கட்டிக்கிட்டு, பட்டுத்துண்டை போர்த்திக்கிட்டு காலையில் அஞ்சரை மணிக் கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பி கார்ல புறப்பட்டுட் டியாமே! எங்கே போனே?

    கோவிலுக்கு.

    திடீர்னு என்ன கோவிலுக்கு! இன்னிக்கு உன்னோட பிறந்த நாள் கூட இல்லையே?

    பிறந்த நாளைக்குத்தான் கோவிலுக்குப் போகணுமா? இன்னிக்குப் போகணும்னு தோணிச்சு... போனேன்.

    "சரி... எந்தக் கோவில்?

    ஆர்.எஸ்.புரத்தில் இருக்கிற பாலதண்டாயுதபாணி கோவில்.

    கோவிலில் இருந்து வீடு திரும்ப எவ்வளவு நேரமாகும்?

    ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடுவேன்.

    வந்ததும் என்னை வந்து பாரு. ஒரு முக்கியமான விஷயம்.

    என்ன?

    நீ இன்னிக்கு மத்தியானம் விமானத்துல டெல்லிக்குப் புறப்பட்டுப் போகணும். மத்திய அமைச்சர் அலுவல கத்தில் இருந்து ‘பேக்ஸ்’ கொடுத்து இருக்காங்க. நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அமைச்சரின் தலைமை செயலாளரோடு உனக்கு ‘அப்பாயிண்ட் மெண்ட்’ நாம புதுசா தொடங்கப்போற 'சோலார் எனர்ஜி’ திட்டம் சம்பந்தமாய் அவர் உன்கிட்டே சில விளக்கங் களை கேட்க இருக்கிறார்.

    என்னப்பா. திடீர்னு?

    இதோ பாரு! இது நான் முடிவு செய்த 'அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. அமைச்சரோட தலைமை செய லாளர் முடிவு செய்தது. ஏன், இன்னிக்கு உனக்கு வேற முக்கியமான வேலை ஏதாவது இருக்கா?

    அது... வந்து… - ஆனந்த் குரலை இழுக்க. மறு முனையில் சங்கரநாராயணன் படபடத்தார்.

    ஆனந்த்! இன்னிக்கு உனக்கு என்ன முக்கியமான வேலை இருந்தாலும் சரி… அதை ரத்து செய்துவிட்டு டெல்லிக்குப் புறப்படத் தயாரா இரு. இந்த டெல்லி ‘அப்பாயிண்ட்மெண்ட்’டை வாங்க எவ்வளவு கஷ்டப் பட்டோம்னு உனக்கே தெரியும்.

    சரிப்பா! நான் புறப்படறேன். விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.

    பண்ணிட்டேன்... - சங்கரநாராயணன் செல் போனை அணைத்துவிட, ஆனந்த் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தான்.

    ‘சே! இன்னிக்குப் பார்த்து டெல்லிக்குப் புறப்படும் படியாய் ஆகிவிட்டதே!’ நெற்றியைத் தேய்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தான்.

    எவ்வளவு நேரம்?

    தெரியவில்லை!

    தம்பி! என்ற குரல் கேட்டு சட்டென்று கலைந்தான். எதிரே கோவிலின் செயல் அலுவலர்.

    தம்பி! நேரம் இப்போ 6.25. நீங்க சொன்ன 6.26-க்கு இன்னும் ஒரு நிமிஷம்தான் பாக்கி இருக்கு. அன்ன தானத்தை ஆரம்பிச்சுடலாமா?

    ஆனந்த் எழுந்தான்.

    ம்... வாங்க… - சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான். அறை வாசலில் இரண்டு பெரிய கூடைகள் நிறைய உணவுப் பொட்டலங்கள் தெரிய, வெளிப்பிரகாரம் வரைக்கும் ஒரு வரிசை நீண்டு இருந்தது. ஆனந்த் தன் மணிக்கட்டில் இருந்த கடி காரத்தை மறுபடி பார்த்தான்.

    சரியாய் 6.26 ஆனதும் உணவுப் பொட்டலங்களை எடுத்து விநியோகிக்க ஆரம்பித்தான். ஆண்கள், பெண் கள், குழந்தைகள் என்று நிரம்பி இருந்த வரிசை கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரம்பித்தது.

    ஒரு பெரியவருக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பின்னால் வந்த அந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் திகைப்புக்குள் விழுந்தான். சாதுர்யா!

    அந்த அழகான 21 வயது பெண், அவன் அருகே குனிந்து மெல்லிய கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

    என்ன... இதெல்லாம்?

    எது?

    இப்படி ஒரேடியாய் பக்திப் பழமாய் மாறி அன்ன தானமெல்லாம் பண்ணிக்கிட்டு?

    ஆனந்த், செயல் அலுவலரிடம் திரும்பினான். சார்! இந்த அன்னதானத்தை நீங்க தொடர்ந்து நடத்துங்க... நான் இப்ப வந்திடறேன்.

    பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, சாதுர்யா வோடு நடந்து ஒரு மரத்துக்குக் கீழே ஒதுங்கினான் ஆனந்த்.

    நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை சாதுர்யா.

    என்னோட தோழி புனிதா, தினமும் காலையில் இந்தக் கோவிலுக்கு வருவா. நீங்க கோவிலில் இருக்கிற தாய் அவதான் எனக்கு போன் பண்ணி, உன்னோட ஆனந்த், பாலதண்டாயுதபாணி கோவில்ல பக்தி பரவசத்தோடு அன்னதானம் பண்ணிக்கிட்டு இருக்கார். போய்ப் பாரு'ன்னு சொன்னா! நல்ல வேளையாய் குளிச்சிட்டு தயாராய் இருந்ததால, உடனே புறப்பட்டு வர முடிந்தது. ஆமா… என்ன இதெல்லாம்? இப்படி யொரு பட்டு வேட்டி, மேல் துண்டு பாணியில இந்த ஒரு வருட காலத்துல உங்களை ஒரு தடவைகூட பார்த்தது இல்லையே?

    அது. வந்து...

    ம்... சொல்லுங்க.

    இன்னிக்கு தேதி என்ன?

    மார்ச் 23.

    போன வருடம் இதே தேதியில் என்ன நடந்தது?

    சாதுர்யா யோசித்துவிட்டு தலையாட்டினாள். உதட்டை அழகாய் பிதுக்கினாள்.

    தெரியலையே!... என்ன நடந்தது?

    பார்த்தியா… நீ மறந்துட்டே! ஆனா நான் மறக்கலை. என்ன நடந்ததுன்னு நான் சொல்லட்டுமா?

    சொல்லுங்க.

    போன வருடம் இதே மாதம், இதே தேதியில் காலை மணி 6.26-க்கு சாதுர்யா என்கிற ஒரு தேவதையை இந்தக் கோவிலில்தான் சந்திச்சேன். அந்த மகோன்னத மான வைபவத்தைக் கொண்டாடத்தான் இப்படியொரு அன்னதானம்.

    அவளின் கடல்நிறக் கண்கள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் விரிந்தன. அட... ஆமாம். இதை நான் எப்படி மறந்தேன்? - தன் தலையில் தானே குட்டிக் கொண் டாள்.

    ஆனந்த் தொடர்ந்து பேசினான்.

    ஒவ்வொருத்தர் தன்னோட பிறந்த நாளைக்கு கோவில்ல போய் அன்னதானம் பண்ணுவாங்க. ஆனா, நான் என்னோட காதல் பிறந்த தினத்துக்காக அன்ன தானம் பண்ணிட்டு இருக்கேன்.

    ஆனந்த்! உங்களுக்கே இது கொஞ்சம் ‘ஓவரா’தெரியலையா?

    கொஞ்சம் ‘ஓவர்’தான்... எனக்கே தெரியுது. அதனால்தான் வெளியே யார்கிட்டேயும் சொல்லாம, எனக்குப் பிடிச்ச இந்த வேலையைப் பண்ணிட்டிருக்கேன்.

    சாதுர்யா, கோவில் என்றுகூடப் பார்க்காமல் ஆனந் தின் கைகளைப் பற்றிக் கொண்டாள். நீங்க என் மேல வெச்சிருக்கற காதலோட ஆழத்தைக் காட்டிட்டீங்க... எனக்கு எப்படிக் காட்டறதுன்னு தெரியலை.

    அதை நீ ஏற்கெனவே காட்டிட்டே சாதுர்யா.

    எப்படி?

    நாம ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சு இன்னிக்கியோட ஒரு வருடம் முடியப் போகுது. கடந்த 365 நாட்களில் ஒரு நாள்கூட நீ என்னைப் பார்க்காமே இருந்ததில்லை.

    அப்படியா?

    என்ன அப்படியா...? வேணும்னா என்னோட டைரியைக் கொண்டு வந்து காட்டுறேன். நாம ஒவ்வொரு நாளும் எங்கே சந்திச்சோம்... என்ன பேசிக்கிட்டோம்... என்ன சாப்பிட்டோம்ங்கிற விவரங்கள் அதில் இருக்கு.

    இந்த வருடமும் நாம அதே மாதிரி இருக்கணும்.

    அது முடியாது போலிருக்கே!

    என்ன சொல்றீங்க?

    நான் இன்னிக்கு மத்தியானம் டெல்லி போறேன். மத்திய அமைச்சரின் செயலாளரோடு ஒரு சந்திப்பு.

    முடிச்சிட்டு எப்ப வருவீங்க?

    எப்படியும் ரெண்டு அல்லது மூணு நாள் ஆகிடும்.

    நோ! நீங்க போகக்கூடாது. உங்க கம்பெனியில இருந்து வேற யாரையாவது அனுப்பினா என்ன?

    அப்பா என்னைத்தான் போகச் சொல்றார். அது ஒரு முக்கியமான தொழில் சம்பந்தமானது. நான்தான் போய் ஆகணும். வேற வழி இல்லை.

    நாளைக்கே டெல்லியில் இருந்து திரும்ப முடி யாதா?

    வாய்ப்பு இல்லை சாதுர்யா... ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ. மூணாவது நாள் நிச்சயம் திரும்பிட றேன்.

    சரி! அப்படீன்னா நான் இப்ப சொல்றபடி கேட்கணும்.

    என்ன?

    கோவிலில் இருந்து நேரா என்னோட வீட்டுக்குப் போறோம்...

    என்னது! உன்னோட வீட்டுக்கா?

    ஆமா..

    எதுக்கு சாதுர்யா?

    என்னோட அம்மாவும், அப்பாவும் அவங்களோட வருங்கால மருமகனைப் பார்க்க வேண்டாமா?

    "ஏய்... என்ன உளர்றே? நம்ம காதலை நான் இன்னும் எங்க

    Enjoying the preview?
    Page 1 of 1