Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullai Panthal
Mullai Panthal
Mullai Panthal
Ebook102 pages59 minutes

Mullai Panthal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580109902328
Mullai Panthal

Read more from Kanchana Jeyathilagar

Related to Mullai Panthal

Related ebooks

Related categories

Reviews for Mullai Panthal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullai Panthal - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    முல்லைப் பந்தல்

    Mullai Panthal

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    கலையரங்கத்தின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் சில நிமிடங்களில் கலைந்து போயின. அந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களும், சில தொழிலாளிகளும் மீதி இருந்த வேலைகளை முடித்துக்கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் களைப்பை மீறிய திருப்தி.

    'அழைச்ச அத்தனை வி.ஐ.பி.களுமே வாயார புகழ்ந்துட்டாங்க. ரொம்ப நேர்த்தியான நிகழ்ச்சி.'

    'கண்ணகியாய் சிலம்போடு வந்து ஒரு பார்வை விட்டாளே-எனக்கே நடுங்கிடுத்து!'

    'பாஞ்சாலியா சிரிச்சப்போ, நமக்கு சிலிர்த்தது.'

    'இன்னா நடிப்பை கொடுத்துச்சுபா... இது நடிக்கிற டி.வி. தொடர் நல்லா இருக்கு.'

    'நடிப்புல கவுந்துட்டேன்னு கத விடாத கண்ணு! பொண்ணு ஜாங்கிரி மாதிரி வளைவு சுளிவா ஜில்லுன்னு இருக்கு. அதான் விசயம்.'

    அங்கிருந்த அத்தனை பேரும் தங்களுக்குத் தெரிந்தமட்டில் பாராட்டிக்கொண்டனர்.

    நீலநயனா ஒப்பனையைக் கலைத்திருந்தாள். நாட்டிய நாடகத்தின் நாயகிகளான சீதை, கண்ணகி, பாஞ்சாலியாய் ஆடிய களைப்பு. ஆனால், உழைப்புக்கேற்ற வெற்றி கிடைத்த களிப்பும் இருந்தது.

    அந்த நாட்டிய நாடகத்தின் ஆணிவர் நீலநயனாதான்.

    தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக்கொண்டிருந்ததால் பிரபலமடைந்த அவள் முகம் நிகழ்ச்சியை மேலும் தூக்கி நிறுத்தியது.

    கலாஷத்திராவில் பயின்ற நாட்டியம் நல்ல அடிப்படை. மேலும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் எழ, தகுந்த நண்பர்களும் கைகொடுக்க இந்த நிகழ்ச்சி சாத்தியமானது. நண்பர்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது கார்த்திதான். பணபலம் திரட்டித் தந்ததோடு நில்லாமல் பக்கபலமாகவும் அந்த ஒற்றை மனிதன் நின்றானே... டி.வி. தொடர் வாய்ப்பும் அவன் மூலம் கிடைத்ததுதான்.

    நெகிழ்ந்து நன்றி தெரிவித்தாள்.

    அவனோ உன் திறமை, உழைப்பு, அழகு மூணும்தான் காரணம் நீலா என்றான்.

    உன் உதவிக்கு சிறு நன்றிகூட வேண்டாமா?

    பாராட்டு வேணாம்மா. பணமாக கொடுத்திடு! -அவன் தனக்குச் சேரவேண்டிய தொகையை வாங்கிக்கொண்டாலும், நல்ல நண்பன். தன் உழைப்பிற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு சரியான ஒதுங்கலுடன் நிற்கும் கண்ணியன்.

    இவர்களைக் கவனித்த ஊர் வாயை மென்றது.

    இந்த கார்த்திக்கை அவன் கம்ப்யூட்டர் சென்ட்டரில் பார்க்கவே முடியறதில்லை. முழுக்க நீலநயனாவுக்கு ஜால்ரா தட்டுற வேலைதான். இது கல்யாணத்திலே முடிஞ்சிருமோ?

    'இந்தக் காலத்துல நட்பாவது...'

    'காதலும்தான் கத்தரிக்காய் மாதிரி மலிவாயிடுச்சு. அந்தப் பொண்ணு பட்டணத்திலே தனியா இருக்குது... ஆக எதுவும் நடக்கலாம்.'

    பெட்டியினுள் இவள் தன்னுடைய நடன நகைகளை வைத்த நேரம் கார்த்திக் நுழைந்தான்.

    நீ தேர்வு பண்ணின நகை அற்புதமா இருந்துச்சு. முன்வரிசையில் உட்கார்ந்திருந்த நாலு பொண்ணுங்க பிரமாதம்னாங்க நீலா...

    ஊகூம்...?

    அந்த சாக்குல நானும் அதுங்களோட பேச்சு கொடுத்தேன்.

    இளவட்ட பொண்ணுங்களா?

    இல்ல-மாமிஸ்.

    மாமிகளைப் பார்த்தெல்லாம் பெருமூச்சு விடற நிலைக்கு வந்தபிறகும் ஏன் கார்த்தி நீ கல்யாணத்தைத் தள்ளிப்போடறே?"

    அந்த அளவுக்கான சரியான பெண் இன்னும் என் கண்ணுலபடலியே நீலா... எதையோ தேடுவதுபோல பாவனை செய்தான்.

    அதுக்காக ரொம்ப கண்ணை உருட்டிட்டு அலையாதே.

    முதல்ல அந்த நீல சேலை எங்கே வாங்கினேன்னு சொல்லு.

    திண்டுக்கல்லில் பேர் தெரியாத ஒரு சின்னக் கடையிலே.

    நிஜமாவா?

    வாங்கற கடையைவிட வாங்கறவங்க ரசனை முக்கியம் கார்த்தி...

    ஐயயோ.... நீலாகிட்ட விசாரிச்சு உங்களுக்கு அதேபோல நாலு சேலை ஆர்டர் செய்துடறேன்னு மாமிகள்ட்ட சொல்லிட்டேனே?

    என்னை வீட்டில் கொண்டு விடறேன்னும் சொன்னே...

    நினைப்பிருக்குது... வா.

    அவன் பெட்டியைத் தூக்கிக்கொண்டான்.

    பிரபல பத்திரிகைகளின் அட்டையில் இடம்பிடித்திருந்த நீலநயனாவிற்கு அவளின் கருநீலக் கண்கள் அசாதாரண அழகைத் தந்தன.

    இந்த ஒரு வாரத்துல ரொம்பப் பிரபலமாயிட்டே நீலா.

    பாராட்டினாள் கீர்த்திகா-

    நீலாவுடன் ஒரு பிளாட்டைப் பகிர்ந்துகொண்ட அவளும் ஒரு மாடல் அழகி.

    நான் மாடலிங் பண்ணியிருக்கேன் கீர்த்திகா. ஆனா, அதிலே எனக்குத்திருப்தியில்லே... அதுஎன் நோக்கமும் இல்லைங்கறதால் நாட்டமுமில்லை.

    நாலே ஒத்திகை. கைநிறைய சன்மானம்!

    "இருக்கலாம். ஆனா, என் அழகை மட்டுமே காட்டிட்டுப் போறது ஏனோ நெருடுது. கலையை வெளிப்படுத்தினா அதிலே நல்ல கண்ணியம் உண்டு. வெறுமனே வந்து போறபோது எல்லார் கண்ணும் உன் உடம்பிலேதான்படும். பிளீஸ்... வேணாம்

    Enjoying the preview?
    Page 1 of 1