Ottrai Paravai
By Sivasankari
5/5
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsThulla Mudiyatha Pulliman Rating: 5 out of 5 stars5/5Verillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5Suriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Rushi Kanda Poonai Rating: 0 out of 5 stars0 ratingsShantha Yen Azhugiral? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ottrai Paravai
Related ebooks
Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsKutty Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Athu Sari Appuram? Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Vimochanam Rating: 4 out of 5 stars4/5Pathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsIthuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Ragasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Nooleni Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Ini Thodarathu Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Yerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsIni... Rating: 0 out of 5 stars0 ratingsPoi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Ottrai Paravai
1 rating0 reviews
Book preview
Ottrai Paravai - Sivasankari
http://www.pustaka.co.in
ஒற்றைப் பறவை
Ottrai Paravai
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
வைகாசி மாசத்து வெள்ளை வெயில், கண்களைக் கூசவைத்தது.
மணி பிற்பகல் மூன்று என்றால், நம்புவது கஷ்டமாக இருந்தது.
நித்தியமல்லிகைப் பந்தலின்கீழ் நின்று மொக்குகளைப் பறித்துக் கொண்டிருந்த சுசீலா, தலையைச் சாய்த்து, ஒரு கையால் வெயில் கண்களில் அடிக்காமல் மறைத்து, இன்னும் ஏதேனும் மொட்டுக்கள் விடுபட்டுப் போயிருக்கின்றனவா என்று பார்த்தாள்.
இல்லை. அதிக உயரத்திலிருந்த நாலைந்து கொத்துக்களைத் தவிர, பாக்கியெல்லாம் அனேகமாய் பறித்தாகிவிட்டது. விட்டுப்போன பூக்களை, காலையில் பக்கத்து வீட்டுத் தம்பியை ஸ்டூல் போட்டு ஏறி பறித்துத்தரச் சொன்னால், அரளி, செம்பருத்திகளுடன் கலந்து சாமிப் படங்களுக்குப் போடலாம்.
மல்லிகை மொட்டுக்களைப் பறித்து முடித்தவள், சற்று தள்ளியிருந்த கனகாம்பரச் செடிகளிடம் சென்றாள்.
நன்றாகப் பூத்திருந்த பூக்களையும், விபூதிப்பச்சைச் செடியிலிருந்து நாலைந்து கதிர்களையும் இலைகளையும் பறித்துக்கொண்டு, கொல்லை வாசல் வழியாக சமையலறைக்குள் நுழைந்தாள்.
இதுநாழிகை வெயிலில் நின்றிருந்ததன் விளைவாக, எதையும் தெளிவாகப் பார்க்க முடியாமல் கண்களில் கருமை படர, பானையிலிருந்து ஒரு லோட்டா ஜலத்தைக் குடித்து, தன்னை ஆஸ்வாசப்படுத்திக்கொண்டாள்.
இன்னும் கொஞ்சம் ஜலம், நாருடன் ஒருபக்கமாய் உட்கார்ந்து, கூடையிலிருந்த பூக்களைத் தரையில் கொட்டினாள். நாரைத் தண்ணீரில் நனைத்து, சட்டையிலிருந்த பின்னை எடுத்து மெல்லிசாகக் கிழித்தாள்.
இரண்டிரண்டாக மல்லிகை மொக்குகளை முதலில் கட்டி, ஒருதரம் கனகாம்பரத்தையும், இன்னொரு தரம் விபூதிப்பச்சை இலையையும் கதிரையும் வைத்துக் கட்டிய பிறகு, கட்டிய பூவை சற்றுத் தள்ளிவைத்து சரியாக இருக்கிறதாவென்று அழகு பார்த்தாள்.
கதம்பம் நிச்சயம் அழகாகவும் மணமாகவும் இருக்குமென்ற நம்பிக்கை பிறந்ததும், தொடர்ந்து கட்டினாள்.
நித்தமும் சுசீலா பூப்பறிக்க தோட்டத்தில் இறங்கிவிட்டால் மணி மூன்று என்றும், அதைக் கட்டிமுடித்து நிமிர்ந்தால் நாலு என்றும் கடிகாரத்தைப் பார்க்காமலேயே சொல்லலாம் என்பது அக்கம்பக்கத்தவர் கணிப்பு.
அது என்னவோ தெரியவில்லை... சோம்பிக்கொண்டு உட்காராமல், அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளைச் செய்து முடித்தால்தான், சுசீலாவுக்கு நிம்மதியாய் இருக்கிறது. அப்படியொரு குணம்.
அவள் அம்மா அப்படித்தான் சுறுசுறுவென்று எறும்பு மாதிரி இருப்பாளாம். அப்பாவும், அம்மாவை அறிந்தவர்களும் சொல்லி சுசீலா கேட்டிருக்கிறாள்.
தினமும் பூக்கும் பூக்களுக்குத் தக்கபடி, ஒரு முழத்துக்குக் குறையாமல் சரமாகக் கட்டி, அம்மா படத்திற்கு அவள் சாற்றிவிடுவாள்.
அப்புறம், சித்தி தன் கொண்டைக்குப் போக பாக்கி உள்ளதை இவளிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொல்வாள்.
அது விரற்கடை நீளமாகவும் இருக்கும், அல்லது சாண் அளவு இருந்தாலும் இருக்கும். எல்லாம் சித்தியின் மனநிலையைப் பொறுத்தது.
சுசீலாவின் தாயார் அகாலமாய் இறக்கும்போது, அவளுக்கு வயசு ஏழு, அக்கா ராஜிக்கு பத்து.
சுமார் ஒண்ணரை வருஷங்கள்போல இரண்டு பெண்குழந்தைகளுடனும் ஒண்டியாய் மன்றாடிப் பார்த்துவிட்டு, முடியாமல்போன பிறகே சித்தி பாகீரதியை அப்பா கைப்பிடித்து வீட்டுக்கு அழைத்துவந்தார்.
அம்மாவை நினைக்கும்போதெல்லாம் சுசீலாவுக்கு நினைவு வருவது, அந்தப் பெரிய கண்களும், வெற்றிலை போட்டுப்போட்டுச் சிவந்த உதடுகளில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்த புன்னகையும், இப்படியப்படி திரும்பினால் 'டால்' அடிக்கும் அந்த ஒற்றை மூக்குத்தியும்தான்.
அம்மா நல்ல அழகியாம்... தெரிந்தவர்கள் சொல்வதுண்டு.
குணவதியும் கூடவாம்... அதிர்ந்து பேச மாட்டாளாம், புருஷன் முகம்கோண நடந்ததில்லையாம்.
சித்தி அருகில் இல்லாதபோது, எப்போதாவது வீட்டுக்கு வரும் பெரியவர்கள் இத்தனையும் கூறி, 'குழந்தைங்கன்னா உசிரா இருப்பாளே... எப்படித்தான் தங்கமான புருஷனையும், லட்டுலட்டா பொண்களையும் விட்டுட்டுப் போக மனசு வந்துதோ!' என்றும் சின்னக்குரலில் அங்கலாய்த்து சுசீலா நிறையவே கேட்டிருக்கிறாள்.
அம்மா பற்றின நினைப்பு எழுந்ததும், கைக்காரியத்தை நிறுத்திவிட்டு, தலையைத் திருப்பி கூடத்தில் மாட்டியிருந்த படத்தை ஒரு நிமிஷம் கண்சிமிட்டாமல் சுசீலா ஏறிட்டாள்.
அம்மாவுடைய பெரிய கண்களும், எடுப்பான நாசியும், நிறமும், தனக்கும் இருக்கின்றன என்கிற எண்ணம் எப்போதும் தரும் பெருமைகலந்த நிறைவை இப்போதும் தர, உதடுகள் சன்னமான சிரிப்பில் விரிய, பூ கட்டுவதைத் தொடர்ந்தாள்.
வாசல் சார்ப்பில், சித்தி இருப்புக்கொள்ளாமல் உட்காருவதும் நடப்பதுமாக இருப்பதை, இங்கிருந்து அவளால் பார்க்க முடிந்தது.
மூன்று மணிவரை மதியத் தூக்கத்தைப் போட்டு, சுமார் அரைமணிநேரம் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துப் பொழுதைக் கழித்த மாதிரி இனியும் இருக்கமுடியாமல் தவிக்கிறாள் என்று சுசீலா நினைத்ததை ஊர்ஜிதப்படுத்தும் தினுசில், சற்றைக்கெல்லாம் பாகீரதி உள்ளே வந்தாள்.
''போனோம் வந்தோம்னு இல்லாம, என்னதான் பண்ணுவாரோ இத்தன நாழி!'' என்று, இவள் பதிலை எதிர்பார்க்காமல் முணுமுணுத்துக்கொண்டே கொல்லைப் படிக்கட்டில் அமர்ந்தாள். பின், சரியாக ஐந்து நிமிஷங்களில் எழுந்து மீண்டும் வாசலுக்குப் போனாள்.
சித்தியின் பரபரப்பை சுசீலாவால் புரிந்துகொள்ளவே முடிந்தது.
காலையில் மாம்பலம் குமரேசன் வீட்டிலிருந்து ஆள் வந்து, ''உங்களை மத்தியானமா அய்யா வரச்சொன்னாங்க...'' என்று சொல்லிய கணத்திலிருந்தே, அப்பாவுக்கும் சித்திக்கும், ஏன் அவளுக்கும்தான், 'என்ன விஷயம்?' என்கிற ஆர்வம் உண்டானது.
குமரேசன் அவர்களுக்கு தூரத்து சொந்தம். வசதியானவர்கள்.
இவர்கள் சாதாரணம் என்பதால், இத்தனை வருஷங்களாக 'என்ன, செளக்கியமா?' என்றுகூடக் கேட்டுக்கொண்டு வராதவர்கள், இன்று அவர்களே வலியப் பேசுவதற்காகக் கூப்பிட்டனுப்பினால், என்னவோ விஷயம் என்றுதானே அர்த்தம்!
சோழியன் குடுமி சும்மாவா ஆடும்!
ஒரு மணி சுமாருக்குப் போனவரை இன்னும் காணாததால், மின்சார ரயிலில் போக அரைமணி, வர அரைமணி, அவர்கள் வீட்டில் பேச அரைமணி என்று கணக்குப் போட்டு, மூன்று மணிவரை காத்திருந்துவிட்டு, இப்போது மேற்கொண்டு ஒருமணிநேரம் ஆகிவிட்டதில், பாகீரதிக்கு இருப்புக்கொள்ளாமல் போனது நியாயம்தானே!
கட்டி முடித்த பூவை அம்மா படத்திற்கு மாலையாகப் போட்டுவிட்டு, நார்ப் பந்தையும் தண்ணீர் லோட்டாவையும் அதனதன் இடத்தில் எடுத்துவைத்தாள் சுசீலா. அரைமணியாய் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருந்ததில் மரத்திருந்த காலை இரண்டு தரம் உதறிக்கொண்டு, என்ன டிபன் செய்யட்டு மென்று சித்தியைக் கேட்க வாசல் சார்ப்புக்கு அவள் வந்தபோது, தெருமுனையில் அப்பா வருவது தெரிந்தது.
தூரத்திலிருந்து பார்க்கையில் அப்பா, அவருடைய அறுபது வயசுக்கு கூடுதலாகவே கிழடாகிவிட்ட மாதிரி பட்டது.
மரகேட்டைத் திறந்து, உள்ளே வந்து, படியேறி, செருப்பைக் கழட்டுமுன், பாகீரதி இடுப்பில் கை வைத்தபடி கேட்டாள், ''ஏன் இத்தன நாழி?''
பொன்னம்பலம் கூடத்தில் நுழைந்து சட்டையை அவிழ்த்து மரஸ்டாண்டில் மாட்டினார்.
''எதுக்காகக் கூப்பிட்டாங்களாம்?''
பேசியவளுக்கு உடனே பதில் சொல்லாமல், மகள் பக்கம் திரும்பி, ''குடிக்க தண்ணி கொண்டு வா, சுசீ... யம வெயில்... ஸ்ஸப்பாடா...'' என, சுசீலா சமையலறையிலிருந்த குளிர்ந்த நிரை ஒரு டம்ளரில் கொண்டுவந்து நீட்டினாள்.
''காபி சாப்பிடறீங்களாப்பா?''
''வேணாம்மா... அவங்க வீட்டுலயே சாப்டுட்டேன்...''
காலி லோட்டாவுடன் சுசீலா நகர, பாகீரதி கோபத்துடன் அவர் முன் வந்தாள். ''நா ஒருத்தி கேள்வி மேல கேள்வி கேக்கறது காதுல விழல?''
''விழுது... விழுது... எதுக்கு அவசரப்படறே? சொல்லாம ஓடிடவா போறேன்?''
''கேலி இருக்கட்டும்... சொல்லுங்க... எதுக்காக வரச்சொன்னாங்க?''
பொன்னம்பலம் ஜன்னலோர நாற்காலியில் உட்கார்ந்தார். துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். தெருவை வெறித்தபடி பேசினார்.
''அவங்க நம்மகூட சம்பந்தம் பண்ணிக்கப் பிரியப்படறாங்க, பாகி...''
''எ... என்னது!''
''செந்திலுக்கு நம்ம சுசீலாவைக் கட்டிவைக்க சம்மதமானு கேட்டாங்க...''
''எ... என்னது!''
இத்தனாம் பெரிய விஷயத்தை சர்வசாதாரணமாகக் கணவர் கூறுவது நம்ப முடியாமலிருக்க, மீண்டும் ஒருதரம் ''என்னது!'' என்றாள் பாகீரதி. நம்ம சுசீய... அவங்க மகனுக்கா?
"ம்.''
''என்னங்க அதிசயம் இது! தலைகால் புரியாம குதிச்சுகிட்டு வந்து சேதியச் சொல்லாம, காமாசோமான்னு... இது உங்களுக்கே நல்லாயிருக்கா?''
கோபமும் சந்தோஷமும் கலந்த குரலில் பாகீரதி அவரைக் குற்றம்சாட்ட, பொன்னம்பலம் பார்வையைத் தழைத்தார்.
சில நொடிகளுக்கு மெளனித்து, பின், ''அந்தப் பையன் நடத்தை அத்தனை உசத்தியானதில்ல, பாகி... இது ஊரறிஞ்ச விஷயம்தானே? அப்பறமா... எப்படி?'' என்றபோது, அடித்துப்பேசி மறுக்கவேண்டிய ஒரு சமாச்சாரத்தை, சித்திக்கு பயந்து கொண்டு ரொம்பவும் தயக்கத்துடன் அப்பா வெளியிடுவதாகவே, கதவுப் பின்னால் நின்று அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சுசீலாவுக்குத் தோன்றியது.
***
2
"என்ன... என்ன சொன்னீங்க?''
உக்கிரமாக பாகீரதி கேட்க, பதில் சொல்லத் தெரியாதது போல பொன்னம்பலம் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்.
''கேக்கறேனே... வாயில என்ன கொழுக்கட்டையா? ஆம்பிளையா லட்சணமா பதில் சொல்லப்போறீங்களா, இல்லியா?''
பொன்னம்பலம் இருக்கையில் நெளிந்தார். பார்வையை நிமிர்த்தாமலேயே பேசினார். ''அந்தப் பையன் குணங்கெட்டவன்னு...''
அவர் முடிக்கும் முன் பாகீரதி பாய்ந்தாள். ''யாரு சொன்னாங்க அப்படீன்னு?''
''எல்லாருந்தான், பாகி...''
''மழுப்பாதீங்க... தெளிவா பேசுங்க...''
''...............''
''பதில் சொல்ல முடியல... அதானே தலையக் குனிஞ்சுக்கறீங்க! குணங்கெட்டவனாம், நடத்தை அத்தனை உசத்தியானது இல்லியாம்... பெரிசா தெரிஞ்ச மாதிரி பேச வந்துட்டாரு!''
''அதில்ல, பாகி...