Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Pournamigal
Karuppu Pournamigal
Karuppu Pournamigal
Ebook169 pages1 hour

Karuppu Pournamigal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403065
Karuppu Pournamigal

Read more from Rajesh Kumar

Related to Karuppu Pournamigal

Related ebooks

Reviews for Karuppu Pournamigal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Pournamigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கறுப்புப் பௌர்ணகமிகள்

    Karuppu Pournamigal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அன்பான உங்களுக்கு

    இந்தப் பெண்களின்

    முகமெல்லாம்

    என்னைப் போலவே

    இருக்கிறதாமே?

    இந்தக் கவிஞர்கள்

    ஏன்தான் இப்படிப்

    பொய் சொல்கிறார்களோ?

    - அன்புடன் நிலா.

    காலை 5.45.

    சென்னை, காரட் நிற விடியலில் இருந்தது.

    பேசின் பிரிட்ஜ் சந்திப்பிலிருந்து மெதுவாய் ஊர்ந்து வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்ட்ரலுக்குள் நுழைந்து ஒரு நீளமான "க்றீச்சிடலோடு நின்றது, போர்ட்டர்கள் பெட்டி பெட்டியாய்த் தாவி உள்ளே கிராக்கிகளைத் தேடிக் கொண்டிருக்க... வகுளா, ஒரு சூட்கேஸோடு - அந்த இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பரிலிருந்து பிளாட்பாரத்திற்குக் கால் பாவினாள்.

    இருபத்து மூன்று வயதான வகுளாவுக்கு, ஐந்தரையடி உயரம். மாநிறம் என்று சொல்ல முடியாத புதுநிறம். அழகான மூக்கில் வலதுபுறம் ஒரு புஷ்பராகம் மூக்குத்தி ஒயிலாய் ஒளிர்ந்தது. பார்க்கிறவர்களை ஈர்க்கிற மாதிரியான உடல்கட்டு. ராத்திரி முழுவதும் சரியாகத் தூங்காத காரணத்தினால், அகலமான பெரிய கண்களின் வெள்ளைப் படலத்தில் சிவப்பு உறைந்து போயிருந்தது. உடம்பின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, மெலிதான நீலநிற க்ரீன் சேலை விசுவாசமாய்ப் பிடித்திருந்தது.

    அம்மா... போர்ட்டர்...

    எதிர்ப்பட்ட ஒரு சிவப்பு முண்டாசு கேட்க, வேண்டாம்... என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவளுக்கு முன்னாலும் பின்னாலும் மனிதக் கும்பல் பெட்டி படுக்கைகளோடு சளசளப்போடு நடந்து கொண்டிருந்தது. ஸ்டேஷனின் உட்புறக் காற்று மண்டலம், மனிதர்கள் விட்ட மூச்சால் வெப்பமாக இருந்தது.

    வகுளா, தான் போக வேண்டிய இடத்தின் அட்ரஸை மனசுக்குள் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

    எம். நல்லசிவம்,

    நெம்பர் 320, முத்துகிருஷ்ணன் தெரு,

    மைலாப்பூர், சென்னை - 4.

    வகுளா, சென்னை சென்ட்ரலின் பிரமாண்டத்தைப் பார்த்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தாள்.

    அவள் நடந்து கொண்டிருந்த அதே விநாடி –

    முதுகுக்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது,

    எக்ஸ்க்யூஸ்மி...

    வகுளா திரும்பினாள்.

    தோளில் தொங்கப் போட்ட பேக்கோடு அந்த இளைஞன் தெரிந்தான். கலைந்த தலை, களையான முகம், மத்தாப்புச் சிரிப்பு.

    வகுளா, அவனை ஏறிட்டாள். எஸ்...

    நீங்க மொதல் தடவையா மெட்ராஸ் வர்றீங்களா...?

    ஆமா...

    நீங்க மயிலாப்பூர்தானே போகணும்...?

    ஆமா... என்று தலையசைத்தாள். இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்...?

    அந்த இளைஞன் சிரித்தான்.

    நீங்க பிரயாணம் பண்ணின அதே கம்பார்ட் மெண்ட்லதான் நானும் வந்தேன். கோயமுத்தூர்ல ட்ரெயின் புறப்படறதுக்கு முந்தி, ஸ்டேஷன்ல ரயில் ஜன்னல் கம்பியைப் பிடிச்சுக்கிட்டு உங்க மாமாதான் நாலு பேருக்குத் தெரியும்படியா சத்தம் போட்டுப் பேசிட்டிருந்தாரே... அப்போ கேட்டேன்...

    மாமாவுக்கு எப்பவுமே தொண்டை பெரிசு...

    இருக்கட்டும். அதுக்காக... நீங்க தனியா மெட்ராஸ் போறதைப் பத்தி மத்தவங்களுக்குக் கேட்கும்படியா சொல்லலாமா...? இது எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொல்ற மாதிரி. எவனாவது ரெளடிப் பையன் கேட்டான்னா உங்க பாடு ஆபத்துதான்...

    நான் கொஞ்சம் துணிச்சலானவ... அதனால மாமாவுக்கு என் பேர்ல நம்பிக்கை. எவனும் என்கிட்டே வாலாட்ட முடியாது...

    நடந்துக்கிட்டே பேசலாமே...?

    ம்...

    இருவரும் கொஞ்சம் இடைவெளிவிட்டு நடந்தார்கள். சோடியம் வேப்பரைஸ்ட் விளக்கு வெளிச்சத்தில் ஜனங்கள் பௌடர் பூசின மாதிரித் தெரிந்தார்கள்.

    மெட்ராஸுக்கு என்ன காரியமா வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?

    அவன் கேட்டு விட்டு, இது எனக்குத் தேவையில்லாத - அதிகப்பிரசங்கித்தனமான கேள்வின்னு நீங்க நினைச்சா... இதை இக்னோர் பண்ணிடலாம்...என்றான்.

    வகுளா, அவனைத் தயக்கமாய்ப் பார்த்தாள்.

    அவன் மறுபடியும் சொன்னான்.

    நோ பிராப்ளம்... உங்களுக்கு இஷ்டமில்லேன்னா சொல்ல வேண்டாம்...

    அவள் புன்னகையாய்க் கேட்டாள். நான் எதுக்காக மெட்ராஸ் வந்திருப்பேன்னு நீங்க கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்...

    "சொந்தக்காரங்களைப் பார்க்க... ஏதாவது இண்டர்

    வியூ...?"

    ராங்...

    காலேஜ்ல சேர்ந்து படிக்க...

    முதல் பாதி கரெக்ட்.. இரண்டாவது பாதி தப்பு...

    எனக்குப் புரியலை...

    நான் ஒரு காலேஜுக்குத்தான் வந்திருக்கேன்... சேர்ந்து படிக்க இல்லை...

    பின்னே..?

    பாட்டனி லெக்சரர் போஸ்ட்டுக்கு எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருக்கு... நாளைக்குள்ளே நான் டியூட்டியிலே ஜாய்ன் பண்ணணும்...

    அவன் கண்களில் வியப்பு வட்டம் அடித்தது.

    'நீங்க லெக்சர்ரா...? பார்த்தா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க...?"

    எம்.எஸ்.ஸி. பாட்டனியைப் போன வருஷந்தான் முடிச்சேன்... கோயமுத்தூர்ல டெம்பரரியா ஒரு காலேஜ்ல ஆறு மாசம் ஒர்க் பண்ணினேன். ஆறுமாசம் முடிஞ்சதும் டெர்மினேட் பண்ணிட்டாங்க. மெட்ராஸ்ல இருக்கிற இந்தக் காலேஜுக்கு அப்ளை பண்ணினேன்... இண்டர்வியூகூட இல்லாமல் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரே அனுப்பிச்சுட் டாங்க...

    மெட்ராஸ்ல எந்தக் காலேஜ்...?

    அவள் கல்லூரியின் பெயரைச் சொன்னாள்.

    அது தனியார் கல்லூரியாச்சே... கரஸ்பான்டென்ட் கஸ்ட்டியில்தான் கல்லூரி நிர்வாகமே நடக்கும்.

    நடந்திட்டுப் போகட்டுமே...

    அது கோ-எஜுகேஷன் காலேஜ்.

    ஐ... கேன் மேனேஜ்...

    அப்போ முன்னேற்பாடோடுதான் வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க மிஸ் வகுளா...

    எம் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்...?

    உங்க மாமாவின் வெண்கலக் குரல் உபயம்...

    வகுளா சிரித்தாள். "நீங்க ஒருத்தர்தான் எங்க மாமாவை உன்னிப்பாய் அப்ஸர்வ் பண்ணியிருக்கீங்க...

    ஆமா உங்களைப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலையே... உங்க பேரு...?"

    வித்யா ஷங்கர்...

    என்ன பண்ணிட்டிருக்கீங்க..?

    டைம் கில்லிஸ் டிபார்ட்மெண்ட்ல ஸிம்பிள் ஸிட்டிங் ஆபீஸர்... அந்த வயித்தெரிச்சலை ஏன் கிளர்றீங்க...? மிஸ் வகுளா... பி.எஸ்ஸி. டிகிரி வாங்கி எட்டு வருஷமாச்சு... இந்த இந்திய அரசாங்கம் எனக்கு வேலையைத்தரலை...

    அப்போ சும்மாதான் இருக்கீங்களா...?

    ஆமா...

    மெட்ராஸ்தான் சொந்த ஊரா...?

    உம்....

    பி.எஸ்ஸி.யில் என்ன சப்ஜெக்ட் எடுத்துப் படிச்சீங்க...?

    மேத்ஸ்...

    கோயமுத்தூரிலிருந்து வர்றீங்க... அங்கே ஏதாவது இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணப் போயிருந்தீங்களா...?

    நோ... நோ... ஊட்டியிலே ஒரு பிரெண்ட் இருக்கான். அவனைப் பார்த்துட்டு வர்றேன். இப்படி வாங்க... எக்ஸிட் கேட் இந்தப் பக்கம்தான்... சொல்லிக் கொண்டே கும்பலின் வழியே அவளை நடத்திக் கூட்டிப் போனான்.

    மயிலாப்பூர் சென்ட்ரல்ல இருந்து ரொம்பத்தூரமா...?

    தூரம்தான்...

    ஆட்டோவில் போனா என்ன சார்ஜாகும்...?

    அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க... நானும் மயிலாப்பூர் வழியாத்தான் போகணும்... ஒரு டாக்ஸி பிடிச்சு ரெண்டு பேருமே போயிடலாம்...

    வேண்டாம்... உங்களுக்குச் சிரமம்.

    எனக்குச் சிரமம்னா ரொம்பவும் பிடிக்கும்... சொல்லிவிட்டு அவன் சிரித்தபோது, கீழ்ப் பல்வரிசை அழகாய்ச் சரம் கோத்த மாதிரித் தெரிந்தது.

    எக்ஸிட் கேட்டை நெருங்க, கேட்டில் நின்றிருந்தவரிடம் டிக்கெட்களைக் கொடுத்துவிட்டு, கபேடேரியாவைத் தாண்டும்போது, வித்யா ஷங்கர் நின்றான்.

    ஏன் நின்னுட்டீங்க...? - வகுளா கேட்டாள்.

    கபேடோரியாவில் காப்பி நல்லாயிருக்கும்... சாப்பிடுவோமா...?

    ஸாரி... நான் காப்பி சாப்பிடறதில்லை...

    ஈஸிட்... குட் ஹாபிட்...

    நீங்க வேணுமானால் சாப்பிடுங்க...

    வேண்டாம்... நீங்க சாப்பிடுவீங்களோன்னுதான் கேட்டேன். எனக்கும் காப்பி இந்நேரத்துக்கு அவசியமில்லை வாங்க போகலாம்...

    நோ பார்மாலிட்டி... நீங்க சாப்பிடுங்க...

    வேண்டாம்...

    வகுளாவோடு நடந்த வித்யா ஷங்கர், சட்டென்று நின்றான்.

    "மறுபடியும் ஏன் நின்னுட்டீங்க...?

    அங்கே பாருங்க.

    அவன் கைகாட்டிய பக்கமாய்ப் பார்வையைப் போட்ட வகுளா, லேசான ஒரு ஆச்சரியத்திற்குப் போனாள்.

    'மிஸ் வகுளா' என்று எழுதப்பட்ட ஒரு அட்டையைத் தாங்கிப் பிடித்தபடி நின்றிருந்தான் அந்த இளைஞன். உயரமான இளைஞன், சுருண்ட கிராப். சதைப்பிடிப்பாய், முகத்தில் கண்கள் பரபரவென்று அலைந்து கொண்டிருந்தன. கேட் தாண்டுகிற ஒவ்வொரு பெண்களின் முகத்துக்கு நேரே வலுக்கட்டாயமாய் அட்டையைக் காட்டி நகர்த்தினான்.

    வித்யா ஷங்கர் சொன்னான், உங்களுக்காக யாரோ காத்திருக்கிறார்.

    அவர் யார்னு எனக்கே தெரியலையே...?

    வாங்க விசாரிப்போம்... இருவரும் அந்த இளைஞனை நெருங்கினார்கள்.

    வகுளா

    Enjoying the preview?
    Page 1 of 1