Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paisa Nagarathu Gopurangal
Paisa Nagarathu Gopurangal
Paisa Nagarathu Gopurangal
Ebook159 pages45 minutes

Paisa Nagarathu Gopurangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123903181
Paisa Nagarathu Gopurangal

Read more from Indhumathi

Related to Paisa Nagarathu Gopurangal

Related ebooks

Related categories

Reviews for Paisa Nagarathu Gopurangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paisa Nagarathu Gopurangal - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பைசா நகரத்துக் கோபுரங்கள்

    Paisa Nagarathu Gopurangal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    தெரு தெளிக்கிற ஓசையில்தான் அன்றைக்கு சௌதாமினிக்கு விழிப்பு வந்தது. மணி என்ன இருக்கும் என்பதை யோசித்தாள். அறையில் இரவு விளக்கு அணைக்கப்பட்டுவிட்டதால் அவனின் கைக்கடிகாரத்தில்கூட மணி பார்க்க முடியாது. ராத்திரி அவள்தான் அவனிடம் கெஞ்சி விளக்கை அணைத்துவிடச்

    சொன்னாள்.

    அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் விளக்கை அணைக்க அவனுக்குப் பிடிக்காது. லேசான அந்த மங்கல் வெளிச்சத்தின் துணை அல்லது உதவி அவனுக்கு நிச்சயமாய் வேண்டும். அதில் அவளது தாழம்பூ நிற மேனி பளபளப்பதை அவனுக்குப் பார்க்க வேண்டும். அவளின் தேக வாகுகூட நீளமாய்த் தாழம்பூ வாகுதான். சில சமயங்களில் அவளிடமிருந்து தாழம்பூ வாசனை வீசுவதாகக்கூட அவனுக்குள் ஒரு பிரமை ஏற்பட்டதுண்டு. அந்த அழகைக் கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்காமல் மை இருட்டில் கரிக் கறுப்பில் ஒட்டு மொத்தமாக அனுபவித்துவிட்டுப் போய்விடுவதில் அவனுக்குப் பிரியமில்லை.

    ஆனால் அவள் அதற்கு அவனை அனுமதித்ததே இல்லை. விளக்கை அணைக்காமல் கட்டிலில் உட்காரக்கூடச் சம்மதிக்க மாட்டாள்.

    ‘முதல்ல நீங்க விளக்கை அணைச்சிட்டு வாங்க. அப்புறம்தான்...’ என்பாள்.

    ‘இது என்ன பிரகாசமான விளக்கா மினி...? கைவிளக்கு மாதிரி லேசான சின்ன வெளிச்சம்தானே...?’ என்று கெஞ்சுவான் அவன்.

    ‘ம்ஹும். முடியாது. விளக்கை அணைச்சாத்தான்.’

    ராத்திரியும் அவனின் முயற்சிகள் தோற்றுப்போய், விளக்கை அணைத்த பின், ‘ஆனாலும் உனக்கு ரொம்பப் பிடிவாதம்...’ என்று முணுமுணுத்த குற்றச்சாட்டுடனே அவளை நெருங்கினான்.

    தினமும் அந்த விஷயத்தில் தான் ஜெயிப்பதைச் சற்றுப் பெருமையுடன் நினைத்து மல்லாந்து படுத்திருந்தவள் உதட்டில் ஓடிய சிரிப்புடன். ஒருக்களித்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு இருட்டிலும் ஆகர்ஷண சக்தி இருந்திருக்க வேண்டும். அவன் கண்களைத் திறக்காமலே வலது கையை அவள்மீது போட்டுத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டதும் அவள் மெதுவாக அந்தக் கையை விலக்கி எழுந்துக்கொள்ள முயற்சித்தாள். அவன் அத்தனை சுலபமாக அவளை விடுவித்துவிட மனமில்லாதவனாக இன்னும் சற்று வலிமையுடன் அணைத்துக் காதருகில் முகத்தைக் கொண்டுபோய் ரகசியம் பேசுகிற குரலில்,

    வெளிய ரொம்பக் குளிருது மினி. சும்மா படுத்துக்க... என்றான்.

    வெளியதானே குளிர். உள்ள இல்லையே... என்று குறும்புச் சிரிப்பாகச் சிரித்து அவன் கேசத்தில் விரல்களால் அளைந்தாள் அவள்.

    ஐயயோ... வெளியவிட உள்ளதான் ரொம்பக் குளிரு.

    உள்ளன்னா...?

    உள்ளதான்... என்று அந்த வார்த்தைக்குத் தனி அழுத்தம் கொடுத்து முற்றிலும் தூக்கம் கலைந்து அவள் முகத்தைக் கைகளால் வருட ஆரம்பித்த அந்தக் கை, முகத்தை விட்டுக் கழுத்திற்கு இறங்கத் தொடங்கினதும்,

    அவள் அவனை உதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

    ராத்திரி முழுதும் தூங்கவிடலை. விடியற்காலையிலயும் ஆரம்பிச்சுட்டீங்களா...? சமையற்கட்டுல பாத்திரச் சத்தம் கேட்குது. அத்தை எழுந்துட்டாங்கபோல இருக்குது.

    எழுந்தா எழுந்திருக்கட்டுமே... என்று அவள் கையைப் பற்றி உடம்பை இழுத்துத் தன் மீது சரித்துக் கொண்டு கேட்டான்.

    ஏன் மினி, அம்மா மட்டும் என்ன, மாமியாராகவேவா பிறந்துட்டாங்க...? அவங்களும் உன்னை மாதிரி புதுக் கல்யாணப் பொண்ணா இருந்தவங்கதானே...?

    அவன் கைகள் இடையை இறுக்கினதும் அவளும் சற்று உணர்ச்சிவசப்பட்டுப்போனாள். இந்தக் கரங்களின் ஸ்பரிசத்திற்கு மட்டும் எங்கிருந்து இப்படி ஒரு காந்த சக்தி வருகிறது என்று ஆச்சரியப்பட்டாள். வீணையின் தந்தியை மீட்டினாற்போல் நரம்புகளின் இயக்கத்தில் மனதிற்குள் மெலிதான ராகங்களும், சிலிர்ப்பும் எவ்வாறு ஏற்படுகிறது...? மூன்று மாதங்களுக்கு முன்பு இதே குளிருக்கு ஒடுங்கித் தங்கையின் கை இதுபோலத் தன்னைக் கட்டிக் கொண்டு படுத்தபோது ஏற்படாத உணர்வுகளும் நெகிழ்வுகளும் இப்போது மட்டும் ஏன் ஏற்படுகின்றன...?

    அவள் குனிந்து அவன் முகத்துடன் தன் முகத்தைப் பதித்து மென்மையாய் மிகுந்த கொஞ்சலுடன் சொன்னாள்.

    இன்னும்கூட என்ன புதுக் கல்யாணப் பொண்ணு? கல்யாணமாகி மூணு மாசமாகப் போவுது, தெரியுமில்லே...?

    மூணு வருஷந்தான் ஆகட்டுமே. ஒரு குழந்தை பிறக்கற வரைக்கும் புதுக் கல்யாணப் பொண்ணுன்னுதான் சொல்லுவாங்க...

    அதைக் கேட்டு அவள் தீவிரமான யோசனையுடன் சற்றுப் பேசாமல் இருந்தாள். ராத்திரி படுக்கையறைக்கு வருவதற்கு முன்புகூட ‘வியாழனோடு வியாழன் எட்டு, வெள்ளி ஒன்பது, சனி பத்து’ என்று கைவிரல்களை மடக்கி எண்ணி இந்த மாதம் எத்தனை நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது என்பதைக் கணக்கிட்டாள். இருபத்தெட்டு நாட்களில் வருவது முப்பத்தைந்து நாட்களாகியிருந்தன. அதை அப்போது அவனிடம் பகிர்ந்து கொள்ளலாமா என்று யோசித்துப் பின் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தாள். இப்படி அவசரமாகச் சொல்லிவிட்டுப் போய்விட வேண்டிய விஷயமில்லை அது என்றும் தோன்றியது.

    ராத்திரி நேரத்தின் நிதானத்தில் அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு அடர்த்தியான கேசத்தில் விரல்களை அலையவிட்டு மெதுவாகக் குனிந்து முன் நெற்றியில் முத்தமிட்டு அவனைச் சீண்டி விடுகிற தொனியில், ‘இனிமேல் இதெல்லாம் இவருக்கில்லையாம்...’ என்று ஆரம்பித்து,

    ‘பின்னே, யாருக்காம்...?’ என்று அவன் கோபப்படுவதை ரசித்து...

    ‘வேறு யாருக்கோதானாம்...’ என்று இன்னமும் கோபத்தை அதிகப் படுத்துகிறாற்போல் பேசி, அப்புறம் மெதுவாய்...

    அதைக் கேட்டு அவன் என்ன செய்வான்...?

    தன்னைக் குழந்தையாக்கித் தட்டாமாலை சுற்றுவான்?

    ‘நீயே குழந்தை. உனக்கு ஒரு குழந்தையா...?’ என்று வெள்ளை வெளேரென்றிருக்கும் தன் வயிற்றைத் தடவிக் கொடுப்பான்...?

    இல்லாவிட்டால், ‘மூணு மாசம்கூட ஆகலை. அதுக்குள்ளேயா...?’ என்று பொய்க் கோபப்படுவான்.

    அதுவும் இல்லாது போனால் ‘மூணே மாசம்தான். ஐயா எத்தனை சாமர்த்தியசாலி பார்த்தியா...!’ என்று, தானே தன் வீர்யத்தைச் சொல்லிக் கொள்வான்...

    அத்தனை கொஞ்சல்களுக்கும் விளையாட்டுகளுக்கும் இடம் கொடுத்துச் சாவதானமாகச் சொல்ல வேண்டிய விஷயத்தை இப்படி வேகமாகவும், அவசரமாகவும், அழகில்லாமலும் சொல்லிவிட்டுப் போய்விடக் கூடாது...

    தீர்மானப்படுத்திக் கொண்ட பின்பு தன் உணர்வு பெற்றவளாக அவனைவிட்டு விலகிப் புடவையையும், தலையையும், கழுத்தோரம் ஒதுங்கின சங்கிலியையும், விரல் பருமனுக்குப் புதிதான மஞ்சளில் பளபளத்த மாங்கல்யக் கயிற்றையும் சரிபண்ணிக் கொண்டு இயல்பான தன் குழந்தைச் சிரிப்போடு அவசரமாகக் கட்டிலைவிட்டு இறங்க எத்தனித்து பின் சற்று நிதானித்து ஏமாற்றமும் கோபமும் நிறைந்திருந்த அவனின் முகத்தைப் பார்த்தாள்.

    என்ன கோபமா என் ராசாவுக்கு...? என்று கன்னங்களை வருடினாள்.

    அவன் பதில் சொல்லவில்லை. திரும்ப இன்னி ராத்திரிக்கு... என்ன...? என்றாள்.

    அப்போதும் அவனிடமிருந்து பதில் வராமற் போகவே, அவளின் குரலில் வருத்தம் மிகுந்தது.,

    பேசாமல் இருந்தால் கோபம்னுதான் அர்த்தம். நான்கூட கொஞ்ச நாழி இல்லைன்னு நீங்க கோவிச்சுக்கறீங்க. இருந்தால் அத்தை கோவிச்சுக்கறாங்க. தினமும் காலைல அறையைவிட்டு வெளியில் போனதும் என்ன சொல்றாங்க தெரியுமா...?

    என்ன சொல்றாங்க...?

    நாலு குடித்தனத்துக்கு நடுவில் இருக்கோமாம். யாரும் சிரிக்காம நடந்துக்கணுமாம். உங்க தங்கச்சி கோகிலாவும் விவரம் தெரிஞ்ச பொண்ணாயிடிச்சாம், அவளைக் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் கொஞ்சம் இலை மறைவு காய் மறைவா நடந்துக்கம்மா. ராத்திரி அது படுக்கப்போனப்புறம் நீ படுக்கப்போம்மா. காலையில் அது முளிச்சுக்கறதுக்குள்ள எழுந்திருச்சு வந்துடுங்கறாங்க...

    அப்ப கோகிலாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டு எனக்குக் கல்யாணம் பண்ணியிருக்கலாமில்ல...?

    சரிங்க. அத்தை சொல்றதில என்ன தப்பு இருக்கு. எதுக்கும் வேளை வரணுமில்ல? கோகிலாவுக்கும் பார்த்துக்கிட்டேதானே இருக்காங்க. அதுவரைக்கும் நாம் கொஞ்சம் கட்டுப்பாடா நடந்துக்கிட்டாத்தான் என்ன...?

    அது சரி. உன்னை மாதிரி அழகான பொண்ணாப் பார்த்துக் கல்யாணத்தையும் பண்ணி வச்சிட்டு, குளிர் காலத்தையும்கூட வரவழைச்சு, சும்மா கட்டுப்பாடா இரு, கட்டுப்பாடா நடந்துக்கன்னா எப்பிடி நடந்துக்கறதாம்...?

    இதோ இப்படித்தான். அவள் அவன் கைகள் இரண்டையும் அவனுடைய மார்பின் குறுக்காக மடக்கி வைத்து, போர்வையை எடுத்துப் போர்த்தி,

    கொஞ்ச நேரம் நிம்மதியாத் தூங்குங்க. நான் அப்புறம் காப்பி கலந்துக்கிட்டு வந்து எழுப்பறேன்.

    சத்தப்படுத்தாமல் அறையின் கதவைச் சாத்திக் கொண்டு வெளியில் வந்தபோது கூடத்தில் கோகிலா தலையிலிருந்து கால்வரை போர்த்திக் கொண்டு தூங்குவது தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியாயிற்று. நல்லவேளையாகக்

    Enjoying the preview?
    Page 1 of 1