Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marakkuma Nenjam
Marakkuma Nenjam
Marakkuma Nenjam
Ebook99 pages42 minutes

Marakkuma Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115703120
Marakkuma Nenjam

Read more from Lakshmi Rajarathnam

Related to Marakkuma Nenjam

Related ebooks

Related categories

Reviews for Marakkuma Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marakkuma Nenjam - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    மறக்குமா நெஞ்சம்

    Marakkuma Nenjam

    Author:

    லட்சுமி ராஜரத்தினம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சாப்பிட வரீங்களா?

    உணவு மேஜை மேல் எடுத்து வைத்த பார்வதி கேட்டாள். சோபாவில் சோம்பலாய் அமர்ந்திருந்த ரமேசன் சோம்பலாகவே கையைத் தூக்கினார்.

    நேரமாகல்லையா! ஆபீஸ் போக வேண்டாமா?

    பத்து நாட்களுக்கு முன்னால்தான் மகளின் கல்யாணத்தைக் குருவாயூரில் முடித்து விட்டு முதல் நாள்தான் மும்பை திரும்பி இருந்தனர். மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.

    ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். அவருக்கு நாற்பத்தி ஐந்துதானே ஆகிறது. துள்ளுவதோ இளமை என்று உடம்பு ஆட்டம் போடுவதில் தவறில்லையே கணவனின் ஒவ்வொரு துடிப்பையும் உணருபவள்தானே மனைவி. கணவனோடு இருபத்திரெண்டு வருடங்கள் குடித்தனம் நடத்தியவளுக்குப் பார்வையின் துள்ளல்கள் அத்துப்படிதானே?

    புரிந்து கொள்ளாமல் நடிப்பதில் மனைவிமார்கள் கில்லாடிகள். கணவருக்குத் தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரித்தாள்.

    பசிக்கலையா! சாப்பிட வாங்களேன். சமையல் சூடு ஆறிப்போயிடும்

    மெல்ல எழுந்தவர் மனைவியின் அருகில் வந்து தோளை இருபுறமாகப் பற்றிப் பெரிய கண்ணாடியின் அருகில் நகர்த்திக் கொண்டு போய் நிறுத்தினார்.

    என்ன விளையாட்டு இது?

    உங்கிட்ட விளையாடாம நான் வேற யார்கிட்ட விளையாடறது?

    பிள்ளை இல்லா வீட்ல கிழவன் துள்ளி விளையாடுறாரு

    யாரோ, ஒரு கிழவனுக்கு மரியாதை தரே. ஆனா நான் கிழவன் இல்ல. கல்யாணம் ஆன முத வருஷத்திலேயே நம்ம சாதனா பிறந்துடல்ல?

    அதனால

    ஆமா, நீ எப்படி இத்தனை அழகா இருக்கே?

    பொண்ணுக்குக் கல்யாணமாகி, ஆச்சு பேரன் பொறக்கணும்"

    நீயும் சாதனாவும் போனா அக்கா தங்கைனுதான் சொல்லுவா

    அவள் முகம் குங்குமச் சிவப்பாகியது.

    பாருக்குட்டி

    அவளை மலையாளத்தின் வழக்கப்படி பாருக்குட்டி என்றே அழைப்பார். ஊர் ஊராகச் சுற்றி தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று அத்துப்படி. சொந்த ஊர் கேரளா. தேங்காய் எண்ணெய் மணம் வீசுவது போல பேச்சில் மலையாள உச்சரிப்பும் தொனிக்கும்.

    பார்வதிக்கு நாகர் கோயில். பேச்சில் தமிழோடு மலையாளம் கலந்து பேசுவார். அவர்கள் இருந்த பகுதியில் நிறையத் தமிழ் மக்கள் இருந்ததால் தமிழில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.

    இங்க பாருங்க. இன்னிக்கு நிறைய பேர்களுக்கு கல்யாண பட்சணம் கொடுத்தாகணும். கல்யாணகளேபரத்தோட கிளம்பினதுனால வீடு வீடா இல்லை. தோய்க்க, அயர்ன் பண்ணனு எக்கச்சக்க வேலை இருக்கு. இப்ப ஒண்னும் பாருக்குட்டினு கொஞ்ச வேண்டாம்.

    புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதிகள் போல ஊடலும், கூடலுமாக இருவரும் சாப்பிடப் போனார்கள்.

    கல்யாணமாகி இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் இல்லறம் சுகமாகத்தான் இருந்தது. அப்பொழுது தான் கல்யாணம் ஆனவர்கள் போலக் கிண்டலும், கேலியுமாகச் சீண்டிக் கொள்வார்கள். நண்பர்கள் வட்டாரத்தில் மேட்ஃபார் ஈச் அதர் என்ற பட்டத்தை வாங்கி இருந்தார்கள். மனமொத்த தம்பதியர்.

    ரமேசன் - பார்வதி தம்பதிகள் போல இருக்கணும் என்று அக்கம் பக்கத்தினர் பேசிக் கொள்வார்கள்.

    ஒரே மகள் சாதனா. படிப்பு, பாட்டு, டான்ஸ், ஓவியம் என்று சகல கலைகளிலும் வல்லவளாகத் திகழ்ந்தாள். ரமேசன் பெரிய கம்பெனி ஒன்றில் உயர்ந்த உத்யோகத்தில் இருந்தார், நல்ல சம்பளம்.

    பார்வதியைக் கல்யாணம் பண்ணிய பொழுது பம்பாயில் இரண்டு மூன்று நண்பர்களுடன் ஓர் அறையில் தங்கி இருந்தார். கையில் கொஞ்சம் பணம் சேர்த்திருந்தார். பார்வதி மும்பை வந்ததும் சிறு வீடு ஒன்றில் குடியேறினார். ஓராண்டில் சாதனா பிறந்தாள்.

    பார்வதி அக்கா, தங்கையுடன், பிறந்தவள். நடுத்தரக் குடும்பம். அதே சிக்கனப் பழக்கத்தை கணவனுடன் வந்ததும் கடைபிடித்தாள். குழந்தையுடன் சிறு வீட்டில் இருப்பது கஷ்டமாக இருந்தது. கணவன் கை நிறையச் சம்பாதிக்கிறானே... செலவு செய்வோம் என்று இல்லாத சிக்கனம்.

    சொந்த வீடு வாங்கிடலாம் என்று கணவனைத் துளைத்தெடுத்தாள், நல்ல மனைவி!

    ரமேசனும் யோசித்தார். கையிருப்பை சரி பார்த்தார். குழந்தை சாதானாவின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் ஒருவரிடம் வீடு வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நண்பரின் நண்பர் கலிபோர்னியா யுனிவர்ஸிடியில் இருந்தார். மும்பையில் இருந்த அவரின் பெற்றோர் மகனுடன் போய் தங்கப் போவதாகவும், வீட்டை விற்கப் போவதாகவும் அந்த நண்பர் சொன்னார்.

    பெரிய வீடு, நீங்க வாங்கிக்கோங்களேன் என்று ரமேசனிடம் சொன்னார்.

    விலை கொஞ்சம் அதிகம்தான். அப்படி இப்படி என்று அதே நண்பரின் உதவியுடன் பணத்தைப் புரட்டி வாங்கினார்.

    கண்ணாடியில் மனைவியின் தோள்களைப் பற்றியபடியே பழைய கதையில் மூழ்கிவிட்டார் ரமேசன்.

    கண்ணாடியிலேயே பார்த்துட்டு நிக்கிறீங்க? என்று அவரின் அணைப்பான கரங்களை விலக்கினாள்.

    உன்னைப் பார்த்ததும் ஒரு பாட்டு ஞாபகம் வருது பாரு குட்டி

    "என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1