Manam Kavarndhavan
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Bhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Parisu Rating: 0 out of 5 stars0 ratingsTharangini Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsIlaiuthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Kelvikuri Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsOru Devathaiyin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Kozhi Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Pugai Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsPanju Bommai Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Sellum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munai Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsPoo Potta Thaavani Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Unnoduthan... Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsAdharam Madhuram Rating: 0 out of 5 stars0 ratingsEera Pudavai Rating: 3 out of 5 stars3/5Kanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsVaanathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVizhakolam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manam Kavarndhavan
Related ebooks
Badrinath Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Manmathan Vanthaanadi Rating: 5 out of 5 stars5/5Andhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhalala Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vanam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pidiyil... Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Bhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsBommai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Malarnthapothu Rating: 5 out of 5 stars5/5என் உயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Nala Charitham Rating: 0 out of 5 stars0 ratingsSudar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsசுடர் விளக்கு Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Yengiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsகேட்கும் வரம் கிடைக்கும் வரை... Rating: 0 out of 5 stars0 ratingsMudindhuvitta Aasai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Manam Kavarndhavan
0 ratings0 reviews
Book preview
Manam Kavarndhavan - Maharishi
http://www.pustaka.co.in
மனம் கவர்ந்தவன்
Manam Kavarndhavan
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
வாசலில் ஜோஸ்யர் வெங்கடேசன் என்கிற சின்னதான பெயர்ப்பலகை.
அகலமான காம்பௌண்டுக்குள் சிறியதான தார்சு கட்டிடம். அண்மையில்தான் வெளிர் நீல வர்ணம் பூசப்பட்டதால் அதன் புது மெருகு பளபளப்பாக இருந்தது.
வாசலில் நிறைய வெள்ளை மற்றும் சிகப்பு அரளிச் செடிகள். இரண்டு உயரமான மரவல்லி மரங்கள்.
உள்ளேயிருந்து மெல்லியதாக வீணையின் ஒலிவந்தது. அதை மீட்ட அந்த வீட்டில் யாருமில்லையென்று காமாட்ஷிக்குத் தெரியும். அந்த மீட்டலின் லாவகத்திலிருந்து அது வீணை காயத்ரியின் டேப் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
வராண்டாவில் ஏறும்போதே மூக்கில் வந்து மோதும் தசாங்கத்தின் வாசனை.
வாசலிலேயே ஸ்லிப்பரைக் கழற்றி காலால் ஓரமாக தள்ளிவிட்டு உள்ளே வந்தாள்.
வயது ஐம்பத்திரெண்டுக்குமேல் இருக்கலாம். உடம்பு பூராவையும் இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தாள். நல்ல சிவந்த உடம்பு.
உள்ளே நுழையும்போதே வாசலில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த பரமாச்சாரியார், ஜெயேந்திரர் மற்றும் இளவல் ஆகியோரின் படத்தைப் பார்த்து நின்று வணங்கிவிட்டுத்தான் நுழைந்தாள்.
வெங்கடேசா..
குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தவள் இடப்புறமுள்ள அரை வாசலில் வந்து நின்றாள்.
தரையெங்கும், வெண்மைநிற மொசைக் தன்னைச் சுற்றி நிறைய புத்தகங்களையும் சஞ்சிகைகளையம் பரப்பிப்போட்டுக் கொண்டிருந்த வெங்கடேசன் சௌகரியமாக தரையில் உட்கார்ந்து சின்னதான சாய்வு மஸ்கில் குனிந்து எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தான்.
சிவப்பான உடம்பு, அரைக்கை பனியன், அரையில் காவி நிறத்தில் சோமன். கிராப்புத்தலை. சிவந்த நெற்றியில் பளிச்சென குங்குமம் இரண்டு கால்களையும் ஒரே மாதிரியாக மடக்கி தன் முன்னே இருந்த சாய்வு மேஜைமேல் கை ஊன்றி வேகமாக எழுதிக் கொண்டிருந்தான்.
வயது முப்பது இருக்கலாம். இளமையான தோற்றம். முகத்தில் ஓர் அபூர்வமான மினுமினுப்பு. ஒரு வாரத்து ரோமம் முகத்தில் கரிபூசின மாதிரி.
அவன் கவனம் பூராவும் எழுத்தில் இருந்ததால் காமாட்ஷி அதற்குமேல் அவனைக் கூப்பிடவில்லை. நிலைவாயிற்படிக்கு அப்பால் வெளியிலேயே உட்கார்ந்து விட்டாள். நடுவில் அவனைக் கூப்பிட்டு அவன் கவனத்தைத் திருப்ப அவளுக்கு இஷ்டமில்லை.
அவன் பக்கத்தில் நிறைய எழுதிய வெள்ளைத் தாள்கள் கிடந்தன.
கிரகங்களையும், எண்ணங்களையும் அலசி ஆராய்ந்து அம்மாத இதழுக்கு எழுதவேண்டிய ராசி பலனை எழுதிக் கொண்டிருந்தான்.
யாரோ வந்து உட்காருகிறார்கள் என்பதை உணர்ந்தவன் எழுதிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.
காமாட்ஷியைப் பார்த்தான். மின்னல் கீற்றென ஒரு புன்னகை வாங்கோ உட்காருங்கோ என்கிற சமிக்ஞை....
மீண்டும் எழுத்து...
எண் கணிதத்தின் கடைசி எண்ணான ஒன்பதுக்கு உண்டான குண நலன்களை எழுத ஆரம்பித்தான்.
ஒன்பதின் கிரகம் செவ்வாய்.ஹிப்ரு நாட்டின் சித்தாந்தப்படி ஆண்டவன் பூமிக்கு ஒன்பது முறை வந்ததாக அந்த நாட்டு பைபிள் கூறுகிறது. சிவப்பு இவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம். இவர்கள் பேச்சில் அதிகாரம் தொனிக்கும். முகத்தில் பாவபேதங்கள் தெள்ளத்தெளிவாகத் தெரியும். எதன் பேரிலும் தீர்க்கமாக முடிவெடுக்கக்கூடியவர்கள்.
எழுதவேண்டியவைகளை எழுதி முடித்து ஒழுங்கு படுத்திவிட்டு கைவிரல்களை ஒன்றுக்குள் ஒன்றை கோர்த்து சொடுக்கிக்கொண்டான்.
இன்னிக்கு இதை முடித்து அனுப்பியாக வேண்டும். விடியற்காலமே எழுந்தேன். குளியல் பூஜை எல்லாவற்றையும் முடித்துவிட்டு உட்கார்ந்தேன்
.
சாப்பிட்டியா இல்லையா!
"இது எழுதற அன்னிக்கு மட்டும் இதை எழுதி முடிக்கறவரையிலே. பச்சதண்ணிகூட குடிக்கமாட்டேன். மாமி. இது வெறும் எழுத்துமட்டுமில்லே. யோகம்... இத எழுதறதுக்கு மனம், வாக்கு, காயம் எல்லாமே சுத்தமா இருக்கணும். போகட்டும் உங்கள ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டேன். இப்ப உங்களுக்காக நான் என்ன செய்யணும்?
சொர்ணம் எப்படியிருக்கா?
அவ விஷயமாத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்
"உள்ளே வாங்கோ இப்படி வந்து உட்காருங்கோ காமாட்ஷி உள்ளே வந்து உட்கார்ந்தாள்.
அருகில் இருந்த இரண்டு ஜாதகங்களை எடுத்து மேலெழுந்தவாரியாக அதை கண்ணோட்டம் விட்டுக் கொண்டே காமாட்ஷி பேசுவதைக் கேட்டான்.
சொர்ணத்துக்கு ஒரு புது வரன் பத்தி போன மாசம் சொன்னியே அதைப்பற்றி விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.
பொருத்தம் பார்த்து குறிப்பெடுத்தவைகளை ஓரமாக ஒதுக்கினான்.
அந்த ஓமலூர் வரன்தானே? அது ரொம்ப நல்ல இடம். பையனுக்கு சொந்தவீடு இருக்கு. காமலாபுரத்திலே அஞ்சு ஏக்கர் நிலம். அதிலே ரெண்டு கிணறு. கிணறு இருக்கறது பெரிய விஷயமில்லே இரண்டிலும் வருஷம் பூரா வத்தாம தண்ணீர் இருக்கே அதுதான் சேலம் ஜில்லாவிலே விசேஷம்.
பையனுக்கு மேட்டூர் கெமிக்கல்ல வேலை. இதை விட வேறென்ன தகுதிகள் எதிர்பார்க்கறேள்.
அப்படியானா இந்த இடத்தையே பெண்பார்க்க ஏற்பாடு செய்துவிடலாமே
நீங்க சொன்னால் போறாது. உங்க பெண் சொர்ணமும் சொன்னாத்தான். நான் பெண் பார்க்க ஏற்பாடு செய்வேன்.
'அவளைக்கேட்க வேண்டாம்டா வெங்கடேசா... ஆத்திரமிருக்கே தவிர கொஞ்சங்கூட அறிவே கிடையாது. அவள் நினைக்கிற மாதிரி வரனைத் தேட என்னிடம் ஐவேஜு இல்லை.
"அது எனக்கும் தெரிகிறது. ஏற்கனவே இரண்டு ஜாதகங்களைக் கொடுத்தேன் அந்த இரண்டையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
இதை அவ இஷ்டப்படி விட்டுவிட முடியுமா அவ சம்மதம் சொல்லும் வரையில் வருஷமும் வயசும் நிற்குமா?
உங்களுக்கு இருக்கற அவசரம் அவளிடம் இல்லையே.
அவளவிடு இந்த ஓமலூர் வரன் சரியா அமையுங்கறயா?
பையனுக்கு படிப்பு கொஞ்சம் கம்மிதான், நல்ல பின்னனி இருக்கு. சொத்துக்களோட வரன் அமையறது இந்த காலத்திலே விசேஷமில்லையா?
'வாஸ்தவம்தான் இந்த வரனைப்பற்றி அவளிடம் முன்னாடியே ஒன்றும் பிரஸ்தாபிக்க வேண்டாம் அவர்களை பெண்பார்க்க வாழப்பாடிக்கு வரச் சொல்லிடு. நீயும் அவங்களோட கூடவா. அவளிடம் எப்படியாவது சொல்லி சம்மதம் வாங்கி விடுகிறேன்.
நீங்க சொல்றதுனால... வரும் புதன்கிழமை அவர்களை மத்தியானம் மூணு மணிக்கு மேலே அங்கே அழைத்துக்கொண்டுவரேன். அன்று மூன்று மணிக்கு மேலே யோகம் நன்றாக இருக்கு. பையனைப் பாருங்கோ. அவளும் பார்க்கட்டும். பரஸ்பரம் பிடித்து விட்டால் மற்றவைகளை அப்புறமா பேசிக்கலாம். ஏற்கனவே கொண்டு வந்து கொடுத்த இரண்டு ஜாதகங்களின் பேரில் என்மேல் அவளுக்கு அசாத்திய கோபம். தாறுமாறா பேசியிருக்கா. இருந்தாலும் நீங்க என்மேல் வச்சு இருக்கற விஸ்வாசத்தினாலேயும் அன்புனாலேயும் இதை செய்கிறேன்.
அவள் பேசினதையெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்காதே. அவளுக்கு மனுஷாள புரிஞ்சுக்கற அனுபவம் போறாது.
நானும் நிறைய படித்த பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஆனா உங்க பெண் சொர்ணம் போல்... வேண்டாம் நான் சொன்னால் உங்கமனம் கஷ்டப்படும். இப்ப அது நமக்கு முக்கியமில்லே ஆகவேண்டியதைப் பார்ப்போம்.
காமாட்ஷி