Kadhalai Vittu Vidu...!
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsEngirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kadhalai Vittu Vidu...!
Related ebooks
Priyasagaa Rating: 5 out of 5 stars5/5Ennennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsEn Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsSanthaikku Vantha Kili Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIthazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Uchimeethu Vaanidinthu... Rating: 5 out of 5 stars5/5Kuyil Thottam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Kalyana Thean Nila Rating: 5 out of 5 stars5/5Nalaayini - 94 Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Theertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kakitha Roja Rating: 5 out of 5 stars5/5Jayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Aasai Alaigal Rating: 5 out of 5 stars5/5Thoorathu Nilavu Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kadhalai Vittu Vidu...!
2 ratings0 reviews
Book preview
Kadhalai Vittu Vidu...! - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
காதலை விட்டு விடு...!
Kadhalai Vittu Vidu…!
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
கார் சீரான வேகத்தில் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. மெல்லிய ஏஸி, காருக்குள் நிறைந்திருக்க ஆடியோவில் ஸ்ரீனிவாசன் மாண்டலின் இசை சன்னமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. பிரதீப் அப்பாவை திரும்பிப் பார்த்தான். யமன் கல்யாணி ராகத்தில் கண்மூடி லயித்துப் போயிருந்தார். விரல்கள் மட்டும் தொடையில் தாளமிட்டுக் கொண்டிருந்தன. அவரது இனிமையைக் கலைக்க விரும்பாமல் கை கடிகாரத்தில் மணி பார்த்தான் சரியாய் பத்து மணி இன்னும் அரை மணியானால் ஹோட்டல்களில் ஒன்றும் கிடைக்காது. திருச்சியிலிருந்து புறப்படும்போது சாப்பிட்டதுதான். சென்னை போய் சேரும்போது நள்ளிரவாகிவிடும். அதன் பிறகு திட உணவு சாப்பிட முடியாது. நீண்ட தூர பிரயாணத்தின் போது சும்மா அமர்ந்திருப்பதாலேயே பசி அதிகமாய் எடுக்கும் போலும். - பிரதீப் கார் கண்ணாடி வழியே நல்ல ஹோட்டல் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தான்.
என்னடா பசிக்கறதா?
அப்பாவின் குரல் கேட்க திரும்பினான். பாட்டு முடிந்திருந்தது.
ஆமாம்ப்பா. வயத்தை குடையறது.
டேய் மூர்த்தி ஏதாவது நல்ல ஹோட்டலா பார்த்து நிறுத்துடா.
அப்பா டிரைவருக்கு கட்டளையிட்டு விட்டு சோம்பல் முறித்தார்.
இங்கல்லாம் நல்ல ஹோட்டல்லாம் இருக்காது சார். சுமாரா தான் இருக்கும். அந்த ஹோட்டல்ல சாப்பிடறதை விட பிளாட்பார தள்ளு வண்டி கடைல சாப்டலாம். கண்ணெதிர சுத்தமா சுடச்சுட செய்து கொடுப்பாங்க.
டிரைவர் சொல்ல அப்பா அவனைப் பார்த்தார்.
ஏண்டா ஒரு நாள் இந்த மாதிரி ரோட்டோர கையேந்தி பவன்லயும் சாப்ட்டாதான் என்ன?
உங்க இஷ்டம். பசிக்கு ஏதாவது கிடைச்சா சரி! செங்கல்பட்டு தாண்டினா எனக்குத் தெரிஞ்சு ஒரு அய்யர் கடை இருக்கு சார். சுத்தமா இருக்கும் சுவையாவும் இருக்கும். எல்லாத்தையும் விட சீப்பாவும் இருக்கும்.
சொல்லாத. போய் வண்டியை அந்தக் கடைல நிறுத்து.
பதினைந்து நிமிட பிரயாண தூரத்தில் சாலையின் ஓரமாக இருந்த திண்ணை வீட்டின் முன் டிரைவர் காரை நிறுத்தினான். வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
நாங்க இங்கயே இருக்கோம். நீ போய் வாங்கிட்டு வா. என்ன வாங்கட்டும்? என்ன இருக்கும்? இட்லி, சப்பாத்தி, பரோட்டா, தோசை.
ஆளுக்கு ரெண்டு இட்லி, ரெண்டு சப்பாத்தின்னு வாங்கு. உனக்கு வேணுங்கறதை நீயும் சாப்டு
நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
குருமா மணம் பசியைக் கிளறிவிட்டது. பத்து நிமிடத்தில் வந்தான் மூர்த்தி.
செம பசி! பிரதீப் இரண்டே நிமிடத்தில் இட்லியை முடித்தான்.
நீ சொன்னா மாதிரி டேஸ்ட்டா தாண்டா இருக்கு
அப்பா சிலாகித்தார்.
ஒரு வழியாய்ப் பசியடங்கி காரிலிருந்த மினரல் வாட்டரில் கையலம்பி தாகம் தணித்துக் கொண்டார்கள்.
இருபத்தியேழு ரூபா ஆச்சு.
மூர்த்தி மிச்ச ரூபாயைக் கொடுத்தான்.
அவ்ளோதானா..? அப்பா உண்மையிலேயே வியந்தார். நட்சத்திர ஹோட்டல்ல சாப்ட்டாப்பல இருக்கு
இதையே அங்க சாப்ட்ருந்தா முன்னூறு ரூபா பழுத்திருக்கும். இந்தாடா மூர்த்தி இந்த அம்பது ரூபாய் அந்த அய்யர்கிட்ட கொடுத்துட்டு வா, டிபன் ரொம்ப நல்லார்ந்துதுன்னு சந்தோஷப்பட்டுக் கொடுத்ததா சொல்லு."
அய்யருக்கு ரொம்ப சந்தோஷம் நேஷனல் அவார்டு வாங்கினாப் போல இருக்காம்
மூர்த்தி திரும்பி வந்து காரைக் கிளப்பினான்.
டேய் உனக்கு டயர்டா இருந்தா சொல்லு. பிரதீப் கொஞ்ச நேரம் டிரைவ் பண்ணுவான்.
இல்ல சார் சாப்ட்டதும் டயர்ட்னஸ் போய்டுச்சு இன்னும் ஒரு மணி நேரம் தானே. ஓட்டிடறேன்.
அந்தக் கேஸட்டை எடுத்துட்டு ஹரிஹரனோட கஸல் கேஸட்டைப் போடு.
அப்பா ய்ந்து அமர்ந்கொண்டார். தாம்பரத்தை கார் நெருங்கும் போது மணி பதினொன்னு. ஒவர் பிரிட்ஜுக்கு முன்னால் நடுச்சாலையில் ஒரு ஆட்டோ கவிழ்ந்திருக்க, அதை கவிழ்த்து விட்ட லாரி நிற்காமல் ஓடி மறைந்தது.
மூர்த்தி சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். இடிச்சுட்டு நிறுத்தாம போறான்.
மூவரும் கவிழ்ந்திருந்த ஆட்டோவை நோக்கி ஓடினார்கள். பலமான காயத்தோடு இரத்தம் பெருக்கெடுக்க ஒரு பெண்மணியும் மயங்கிய நிலையில் நெற்றி கிழிந்து ரத்தம் கொட்ட ஒரு இளம் பெண்ணும் உள்ளே ஒருவர் மேல் ஒருவர் விழுந்திருந்தார்கள். டிரைவர் தூக்கியெறியப்பட்டு லேசான காயத்தோடு தட்டுத் தடுமாறி எழுந்து வந்தான். செய்வதறியாது திகைத்து நின்றான்..
யாருப்பா இவங்க தெரியுமா?
தெரியாது சார். தாம்பரம் போணும்னு பெருங்களத்தூர்ல ஏறினாங்க.
என்ன செய்யலாம்ப்பா....?
"எப்டி விட்டுட்டு போறதுடா பிரதிப். நம்ம ஹாஸ்பிடல்க்கு கொண்டு போய் முதல்ல இவங்களைக் காப்பாத்தற வழியப் பார்ப்போம். அப்பறம் போலிஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணுவோம். ரத்தம் நிறைய போயிட்ருக்கு. ஏம்பா ஆட்டோ டிரைவர் உன் வண்டியை விட்டுட்டு நீயும் கார்ல ஏறு. போலீஸ் கேட்டா வாக்கு மூலம் கொடுக்கணும் இவங்களை பத்திரமா கார்ல ஏத்தணும் ஒரு கை கொடுடா மூர்த்தி.
மூன்று பேருமாக சேர்த்து அடிபட்ட பெண்களை காருக்குள் ஏற்றினார்கள். அப்பா தன் முதலுதவிப் பெட்டி எடுத்து ரத்தப் பெருக்கை துடைத்து தற்காலிகமாக கட்டுப் போட்டார். பிரதிப் இருவரது நாடித்துடிப்பையும் பார்த்தான்.
இந்தம்மாவோட பல்ஸ் ரொம்ப வீக்கார்க்குப்பா. மண்டைல பலமா அடிபட்ருக்கு.
சீக்கிரம் காரை எடுடா மூர்த்தி.
அவர்கள் அவசரமாய் ஏறிக் கொள்ள, இரண்டு உயிரைக் காப்பாற்றும் பதட்டத்தோடு கார் விரைந்தது.
திருவான்மியூரில் அவர்களது நர்ஸிங் ஹோமிற்குள் நுழைந்து நின்றது ஏற்கனவே செல்போன் மூலம் தகவல் கொடுத்திருந்ததால் ஊழியர்கள் தயாராக இருந்தார்கள். தியேட்டர் தயாராக இருந்தது.
அடிபட்ட பெண்கள் இருவரையும் ஸ்ட்ரெச்சரில் ஏற்றும்போது பிரதிப்பின் முகம் மாறியது.
அப்பா.... என்றவன் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.
என்னடா...
இந்தம்மா... ஷி இஸ் டெட்
மை காட்... அப்பா பதறினார். கிட்டே வந்து பரிசோதித்தார். மௌனமாய் எழுந்தார். பாவம் அடி பலம் தான். காப்பாத்திடலாம்னு நினைச்சேன்.
இளம்பெண் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டாள் பிரதிப் கை கழுவிக் கொண்டு எமர்ஜென்ஸிக்குள் நுழைந்து அந்த பெண்ணை பரிசோதித்தான். சற்று நேரத்தில் அப்பாவும் வர, இருவருமாய் கலந்தாலோசித்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள். முதலுதவிகள் உடனடியாய் அளிக்கப்பட்டது. கையில் எலும்பு முறிந்திருந்தது.
பிரதிப் டாக்டர் சிவசந்திரனுக்கு போன் பண்ணு. கேஸ் டீ டேய்ல்ஸ் சொல்லி உடனே வரச் சொல்லு.
டாக்டர் வாசுதேவன் டியூட்டி நர்ஸ்களை அழைத்து மளமளவென்று உத்தரவு பிறப்பித்தார்.
சற்று நேரத்தில் போலிஸ் வந்து டாக்டரிடமும், ஆட்டோ டிரைவரிடமும் வாக்கு மூலம் வாங்கிக் கொண்டு