Naveena Navarasa Kathaikal
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Ore Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Aathma Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Pudhiya Maykkangal Rating: 0 out of 5 stars0 ratingsVairam Vairam Vairam Rating: 5 out of 5 stars5/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5
Related to Naveena Navarasa Kathaikal
Related ebooks
Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Shshsh… Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Saatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsPoi Mugangal Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNan Ramaseshan Vanthirukkiren Rating: 5 out of 5 stars5/5Naanendrum Neeyendrum...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuyirey Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsImayaga Naan Iruppean Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Sudum! Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Dhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka Neramillai Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsVaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsIrappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Naveena Navarasa Kathaikal
0 ratings0 reviews
Book preview
Naveena Navarasa Kathaikal - Indira Soundarajan
http://www.pustaka.co.in
நவீன நவரசக் கதைகள்
Naveena Navarasa Kathaikal
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நாயக்கர் பங்களா
2. தியாகத்தின் ரூபங்கள்
3. நல்ல நல்ல பேய்களை நம்பி...
4. 2090-ல்...
5. அலாவுதீன்-89!
6. மனதில் ஒரு பிரளயம்
7. ஆண்மை...
8. ஊதியம் உண்டு உயிருக்கு...
9. மனவெளிகள்
10. அன்புள்ள அண்ணாக்கள்
11. லட்சியம் என்பது...
12. வைகையாத்தா
13. மூங்கில் காட்டுப் பெண்
14. சேர தந்திரம்
15. சேர வீரம்
16. இறவாத தர்மங்கள்
17. பட்டுமனசு
18. உயிர்ப் பரிசு
19. ஆரூட நாடி
20. காலு சரியில்லாத பொண்ணு!
21. தூரத்துப் பச்சை
1
நாயக்கர் பங்களா
நாயக்கர் பங்களா விலைக்கு வருது... கைக்கு அடக்கமான விலை, வாங்கிக்கிறீங்களா?
- புரோக்கர் பொன்னுரங்கம் அப்படிக் கேட்டது தான் தாமதம், விசுவுக்கு ஜிவு ஜிவு என்று கோபம் கிளப்பிக் கொண்டு வந்தது.
ஏன்லே... நான் குடும்பம் நடத்த வீடு கேட்டா நீ சுடுகாட்டுக்கு வழியை காட்றியே...
என்று எகிறினான்.
நீங்க எதை வெச்சு இப்படி கோபப்படுதீகன்னு எனக்கு நல்லா வெளங்குது. ஊர்ப்பயலுக பேசற மாதிரி அந்த வீட்ல ஒரு கொறைபாடும் இல்லீக. கொறை உள்ள வீடடை உமக்கு முடிச்சு கொடுத்துபிட்டு நான் நிம்மதியா இருக்க வேணாமா?
பொன்னுரங்கம் விடுவதாக தெரியவில்லை
தோ பார் பொண்ணு... நீ ஆயிரம் சொல்லு எனக்கு அந்த வீடு வேணாம்...
வீடுங்களா அது பங்களா...
அரண்மனைன்னே வை. வேணாம்னா வேணாம். ஒரு பொணமா இரண்டு பொணமாய்யா, பங்களா தோட்டத்துல இது வரை ஒம்பது பொணம் தோண்டி எடுத்துருக்காக. அம்புட்டு பொணமும் கல்யாணமாகாத கன்னிப் பொண்ணுகளோடது நம்ம ஊர் சுடுகாட்ல புதைச்ச பொணங்க... எப்படி அந்த பங்களா தோட்டத்துக்குப் போச்சுன்னே புரியலே... பெரிய மர்மமா இருக்கு... அங்க ஏதோ ஜிகிரிபாஸ் வேலை நடக்குது. நமக்கு கூரையே இல்லாத வீடு கூட பரவால்ல. இது தோதுபடாது...
கண்கள் சிவக்க தன் சின்ன தொந்தியை வருடியபடி அவன் கோபப்பட்டதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. பொன்னுரங்கத்துக்கும் அது புரிந்ததால் அதற்கு மேல் பேச முடியவில்லை. இருந்தாலும் ஒரு நைப்பாசை... பேயாவது பிசாசாவது என்று மீசை நீவி மார் தட்டும் கேஸ் நம்ம விசு. இது தெரிந்து தான் பொன்னுரங்கம் அவனை அணுகினார். ஆனால் அவனே இப்படி மூக்கில் வியர்க்க கத்தினால் யார் தான் அந்த பங்களாவை வாங்குவது?
பங்களாவா அது? அரண்மனை! இருபது சென்டு நிலத்தில் மூவாயிரம் சதுர அடியில் நறுக்கி எடுத்த மைசூர் பாகு துண்டம் போல, உருண்ட தூணும், தேக்கு ஜன்னலுமாய் சுற்றிவர வாதநாராயண மரமும், வேப்ப மரமும் குசலம் விசாரிக்க, தாஜ்மகால் கணக்குக்கு ஜொலிக்கும் அந்த கட்டிடத்துக்கு ஒரு காலத்தில் அசாத்ய கிராக்கி!
நாயக்கர் பங்களா என்றால் எட்டு திக்குக்கு அத்துபடி. அந்த பெயரில் அருகில் ஒரு பஸ் ஸ்டாப் உருவாகி டவுன் பஸ்ஸின் கூரை மேல் உள்ள சதுர லக்கேஜ் தகட்டில் கூட அதை எழுதும் அளவு போய்விட்டது. நூறு அடி சதுரத்தில் பிரபலமான ஆர்.ஆர். மெடிகல் காலேஜ் வேறு!
வாசல்புறம் கன்னங்கரேலென்று ஈட்டியாய் குத்தி நிற்கிற வாசல் கதவு. தாண்டி உள்ளே நுழைந்தால் கார் நிற்கும் போர்ட்டிகோ வரை பவழ மல்லிகை செடிகளின் குபீர் வளர்ச்சி + வாசம்! எங்கும் இல்லாதபடி' நாலு மனோரஞ்சித செடி மரங்கள் அந்த பங்களா பிரசித்தம். பெளர்ணமி ராத்ரியில் கூர்ந்து பார்த்தால் எங்கிருந்தோ வரும் நாகங்கள் அந்த செடி மரத்தில் சன்பாத் ஸ்டைலில் மூன்பாத் எடுப்பதை நன்றாக பார்க்கலாம்.
பின்பக்கம் தோட்டம்! ஜாதிக்கு ஒரு மரம் சத்யமாய் உண்டு. ஆங்கிள் கிராதியில் ஊஞ்சல், இடுப்புயர சிமெண்ட் திட்டில் சின்ன சைஸ் பிள்ளையார், என்று அந்த தோட்டம் கூட அட்டகாச ரகம்.
ராவ்பகதூர் பரம நாயக்கர் என்றால் பாஞ்சாலங்குறிச்சி வரை பிரசித்தம். இப்போது அவர் பேரன் தயாளன் வசம் பங்களா வம்சாவளி சொத்தாக வந்து நிற்கிறது.
தயாளன் ஒரு வித்யாசமான டைப். பாவம் புண்ணியம் பற்றியெல்லாம் நினைத்து பார்க்க அவகாசமேயில்லாத வியாபார மூளை அவனுடையது.
'புத்திதான் சாமி. சிந்தனை தான் பூஜை' என்று பேசுபவன். உலகத்தில் எதற்கும் ஒரு விலை உண்டு என்று நம்புபவன். அதை கொடுக்கத் தெரிய வேண்டும் என்பான்.
யானை போல் தும்ச நடை நடந்து வேகமாக வளர்ந்து விட்டவன். நாலு கையேந்தி பவன் ஹோட்டல் உள்ள இடத்தில் ஒரு பளிச் ஓட்டலை கட்டி அதே விலைக்கு அங்கே சரக்கு சப்ளை செய்து அந்த கையேந்தி பவன் முதலாளிகள் வயிற்றில் அடித்துவிட்டு கேட்டால் இது வியாபார தர்மம் என்று ஆதம்ஸ் விதி மாதிரி அவன் சொல்வதை கேட்க அழகாக இருக்கும்.
இப்படியாகப்பட்டவனுக்கு எதற்கு அவ்வளவு பெரிய பங்களா? நல்ல விலைக்கு தள்ளி விட்டு விட்டு அழகாக ஒரு அண்ணா நகரிலோ, காமராஜ் நகரிலோ ஆயிரம் சதுர அடி பிளாட்டில் வசிப்பது தான் காலத்துக்கழகாய் கருதுபவன். அதேபோல் வசித்து வருபவன்.
ஏனோ எதையும் முடிப்பவனால் இந்த பங்களாவை விலைக்கு தள்ள முடியவில்லை... கஜகர்ணமடித்து தலையாலே தண்ணீர் குடித்து பார்த்துவிட்டான்,
ஊஹூம்...! ஊர் சுடுகாட்டில் புதைக்கப்படும் கன்னிப் பெண்களின் பிணங்கள் திரும்ப பங்களாவிலிருந்து தோண்டி எடுக்கப்படுவது பங்களாவின் பிரதான மர்மங்களில் ஒன்றாகிவிட்டது.
பூட்டி வைத்து வாட்ச்மேன் போட்டு சுற்றி வந்து காவல் இருந்தாலும் ஏதாவது ஒரு சிக்கல்.
ஒரு பார்ட்டி துணிந்து வீட்டை பார்க்க வந்தது. சுற்றிப் பார்த்து வியந்து நின்று விலை படியப் போகும் சமயம் திரைச் சீலைக்கு பின்னாலே இரண்டு கால்கள் தெரிந்தன. 'யார் அது ஒளிந்து கொண்டு?'- திரைச்சீலையை விலக்கிவிட்டு பார்த்தால் இதயத்தை தீக்குச்சியால் உரசின மாதிரி ஒரு வலி. அங்கே யாருமில்லை... வெட்டியெடுத்த இரண்டே இரண்டு கால்கள் மட்டும் தனியாக!
தயாளனுக்கே கிர்ராகி விட்டது.
சாமி இது யாரோ வேண்டாதவங்க பண்ற சதி...
எவண்டாவன் பொட்டைப்பய, என்கிட்ட நேருக்கு நேர் மோத துப்பில்லாம இப்படி செத்த உடம்புங்களை வெச்சு டபரா அடிச்சுகிட்டு...
கத்தி பிரயோஜனமில்லீங்க... யாருங்கறதை கண்டுபிடிச்சு பட்டை வெளுக்கணும்.
கண்டுபிடிக்கறேன். போலீஸ் என் பாக்கெட்ல இருக்கும்போது யார் என்ன செஞ்சுட முடியும். பங்களாவையும் பதினஞ்சு லட்சத்துக்கு பழுதில்லாம வித்து காட்டறேன்
இப்படியெல்லாம் சவால் விட்டு வீட்டைச் சுற்றி காவல் போட்டு கண்கொத்தி பாம்பாக கவனமாக இருந்ததில் இப்பொழுது அந்த உபத்திரவங்கள் இல்லை. பளீரென்று ஆயிரம் வாட்ஸ் பல்பு நான்கு, பங்களாவை சுற்றி எரிந்து யார் நடமாடினாலும் காட்டிக் கொடுத்து விடுகிறது.
இதோ அதோ என்று ஒருவர் கூட துணிந்து வாங்க முன்வந்துவிட்ட நிலை...
இனி...?
"தோ பாரு தயாளா... இந்த பங்களா இனி என்னோடது. ஆயிரம் பேய், பிசாசு டான்ஸ் ஆடுனாலும் ஆடாட்டியும் இனி இது என் பங்களா. பாவம் இதை விக்க நீ பட்ட பாட்டை நான் அறிவேன்.
எனக்கு இந்த 'உல்டா மால்டா' வேலைலல்லாம் நம்பிக்கை கிடையாது. பேயோட கட்டிப் பிடிச்சு படுத்து தூங்கறதுக்கும் நான் தயார். ஆனா ஒரு இக்கு."
என்னா இக்கு...?
"அப்படி கேளு.. நான் மட்டும் தான் அப்பிடி. என் வீட்ல அப்படி இல்லை. அவளை பாத்தாலே கோவில் அம்மன் மாதிரி. கே. ஆர். விஜயான்னே வெச்சுக்கையேன். என் பசங்களும் அப்படி தான். ஆகையால மொதல்ல நான் தில்லா இங்க தங்கி வாழ்ந்து காட்டி அப்புறம்தான் அவங்களை கூப்டுக்க முடியும். ஆக அந்த தில்லுக்கு நீ எனக்கு ஒரு விலை கொடுக்கத் தான் வேணும். பதினைஞ்சு லட்சம்கற அந்த குபேர பிசினஸ் பேச்சு நமக்கு வேணாம். அதுல பாதி தான் கட்டுப்படியாகும் என்ன சொல்றே?
காலம் பூரா பொணத்தை பாத்துகிட்டு அவஸ்தைப் படப் போறியா... இல்லை வந்த வரைக்கும் லாபம்னு நினைக்கப் போறியா?"
இப்படி கெத்தாக பேசுபவர் ஊர்ப் பெரியவர் ராஜரத்னம். தயாளனை போலவே பக்கா பிசினஸ்மேன்.
தயாளனும் யோசிக்கிறான்...
காலமெல்லாம் காபந்து பண்ணி பராமரித்து எலெக்ட்ரிக் பில் கட்டி எழவெடுப்பதைவிட ஏதோ வந்த மட்டுக்கும் வரவு என்று முடிப்பது மேல் என்று மூளையின் சமயோசிதம் அவனை நிரடுகிறது.
சரி என்று தலை ஆட்ட அடுத்த கணமே பத்திரம் பதியப்பட்டது.
உங்களுக்கு எப்பவும் பாதி விலைக்கு வாங்கித்தானே பழக்கம். கொடுத்து பழக்கமில்லையே...
- வீட்டில் தயாளனை அவன் மனைவி துவட்டியபோது தயாளன் அவளை முறைத்து பார்த்தான்.
பிசினஸ்னா ஏற்ற இறக்கம் சகஜம்
என்றான்.
அதெல்லாம் பத்தாம் பசலிங்களுக்கு. மூளை உள்ளவனுக்கு எப்பவும் எற்றம்தான்னு பேசுவீங்களே...
ரூவாய்ல பாதின்னா எட்டணாதாங்க. ஆனா இது லட்சத்துல கூட பாதி இல்ல, பதினைஞ்சு லட்சத்துல பாதி...
"தெரியும்டி. எனக்கு இப்பவும் லாபம் தான். நான் சனியனை தொலைச்சிருக்கேன், சும்மா இருக்கியா? அதை வாங்குன ராஜரத்னத்துக்குதான் இனி சிக்கல்.
கன்னிப் பொண்ணு, கட்டுன வீடு, காய்ச்சுன பால் இதையெல்லாம் கவனமா பாத்துக்கறதைவிட முக்கியம் பல இருக்கு. ஒரு பொண்ணு நல்லவளாவே இருந்தாலும் அவ ஒரு மாதிரின்னு கிளப்பி விட்டுட்டா இப்ப இருக்கற சமூகத்துல அவளால எப்பவும் உத்தமி ஆக முடியாது. வீடும் அப்படிதான். பாலும் கெட்டுட்டா அவ்ளோ தான். தயிருக்கு கூட மிஞ்சாது."
மகா அனுபவசாலி மாதிரி பேசினான். பிசினஸ்ல இதை எல்லாம் நான் பண்ணித்தான் பெரிய ஆள் ஆகியிருக்கேன்
என்றான். அவள் வாயை மூடிக் கொண்டாள்.
அவன் சிந்தனை பின்னே ஓடியது.
அப்பளம் போடுபவனிலிருந்து யமஹாவை விற்பவன் வரை எவ்வளவோ பேரை இப்படிச் சாய்த்தாகி விட்டது.
அந்த அப்பளத்துல மரத்தூள் மாவு கலந்துருக்கு. லிவருக்கு ஆபத்து...
- என்று கிளப்பிவிட்ட கதைகள் நூறு தேறுமே...
அந்த யமஹாவா... அது பன்னி அடிச்ச வண்டிங்க. வாங்கினா தொலைஞ்சீங்க...
- இப்படி முடக்கிப் போட்ட எதிரிகள் பட்டியலும் உண்டு.
ஊரோடு விளையாடிய அதே தினுசில் ஒருவன் தன்னோடு விளையாடி விட்டான். புத்திசாலிதான்! ஆனால் காலம் முழுவதும் அவனால் அதை காசாக்க முடியாது. அங்கே குந்தி வாழவும் முடியாது.
தூக்குப் போட்டுக் கொண்டாலே அந்த வீட்டுக்கு குடிபோக அஞ்சும் உலகில் ஒன்பது பிணம் தோண்டி எடுத்த இடத்தை ஏதோ இந்த மட்டுக்கும் தள்ள முடிந்ததே...
தயாளன் தன்னை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான்.
வா விசு...
என்னண்ணே பிசினஸ் முடிஞ்சிச்சா?
முடிஞ்சிச்சுப்பா. பய ஏழரைக்கே படிஞ்சிட்டான்
ஏழரை ஒண்ணும் குறைச்சல் இல்லையேண்ண.
"வாஸ்தவம்தான். ஆனா நான் கை காசை கொடுத்து வாங்கலைப்பா. ஏழரை லட்ச ரூவாக்கு
ஒத்திக்கு விட்டுருக்கேன். பத்து வருஷத்துக்கு அது இனிமே ஒத்தி எடுத்தவன் பாடு. மூணாவது மனுஷன் காசை வாங்கி பங்களாவை என் பெயருக்கு பதிஞ்சு முடிச்சாச்சி. அது இனி காலத்துக்கும் நம்ப சொந்தம்."
அது சரிண்ணே.. ஏழரை லட்சத்துக்கு அதை ஒத்திக்கு எடுக்க எந்த மாக்கான் அண்ணே அம்புட்டான். ஆச்சரியமா இருக்கே...
நாளைக்கு பங்களா பக்கம் போகையில பாரு. யாருன்னு தெரிஞ்சுடும்...
ஆச்சர்யமா இருக்கே...
இருக்காதா பின்னே... வியாபாரம்னா ஒரு நேர்மை வேண்டாம். வேட்டியை அவுத்துட்டு கூட நான் நிப்பேன் காசுக்காகன்னு மார் தட்டுனான் தயாளன். அதான் இப்ப மண்ணை கவ்விட்டான்.
"சுடுகாட்ல கன்னிப் பொண்ணுக பொணமா தோண்டி எடுத்து வந்து அந்த பங்களாவுல நான் புதைக்கப்பட்ட பாடும், பொணம் இருக்கு அங்கேன்னு கிளப்பிவிட்ட பாடும் எனக்குல்லே தெரியும்.
போலீஸ் ரொம்ப மோப்பம் பிடிச்சிருந்தா டவுசர் அவுந்துல்ல போயிருக்கும். அவங்களையும் அப்படி சைட்ல கவனிச்சு பாத்து பாத்து காரியம் பண்ணுனேன். சாதிச் சுட்டேன். நீ கூட ரொம்ப ஒத்தாசை பண்ணுனே. எப்படியோ நமக்கு இருந்த ஒரு பொது எதிரி ஒழிஞ்சான். பய இனி ஆடமாட்டான். ஏழரை லட்சமே ஜாஸ்தி தான். போகட்டும்னு விட்டேன். பங்களாவை கொஞ்சம் அலங்காரம் பண்ணி வித்தா முப்பது லட்சம் போகும் தெரியுமா?"
அது சரிண்ணே. வாங்குன பார்ட்டி யாருண்ணே. விளையாட்டுக்கு பண்ணாலும் நெஜத்துக்கு பண்ணாலும் பல பொணம் பார்த்த வீடு விளங்காதுண்ணே... இத தெரிஞ்சி யார் வாங்கியிருப்பா?
போய்ப் பாரு...
காரை கிளப்பிக் கொண்டு பிரதான சாலையில் போன தயாளனை வழிமறித்தான் விசு.
என்ன சார் பங்களாவை ஒரு வழியா முடிச்சிட்டாப்ல இருக்கு...
ஆமாமா... ஒரு விஷயத்தை எடுத்தா நெட்டையோ குட்டையோ முடிச்சித்தான் பழக்கம். அப்படியே தூக்கி போட்ற மாட்டேன்...
ராஜரத்னம் பெரிய ஆளு சார்...
என்ன சொல்றீங்க... கைல இருந்து காலணா செலவு பண்ணாம அங்க பங்களாவை வாங்கிட்டார்னா ஆச்சரியமா இல்லே...
நீங்க என்ன சொல்றீங்க...?
பங்களா பக்கம் போய் பாருங்க. புரியும்.
தயாளனை நன்றாக கிளப்பி விட்டுவிட்டு விசு ஐஸ் துண்டம் கடித்த மாதிரி சில்லிட்டுப் போக தயாளன் கார் தன் மாஜி பங்களா நோக்கி பறந்தது.
பங்காளாவை எட்டியபோது பெரிய ஏ. சி. வேன் ஒன்று நின்று கொண்டிருக்க அதிலிருந்து வரிசையாக பிணங்கள் பங்களாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தன.
வெளியே ஆர்.ஆர். மெடிகல் காலேஜ் பிணவறை
என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரிய