Agalyavin Ayulregai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Agalyavin Ayulregai
Related ebooks
Oru Thoomaiyaana Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Ethuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratings2000 Sathura Adi Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsThoonkatha Kan Ondru Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsAny Time Murder! Rating: 0 out of 5 stars0 ratingsPistal Mutham Rating: 5 out of 5 stars5/5Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsJamuna Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Neeye Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyuthir Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsOndrum+Ondrum=Ondru Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsThaniyaaga Oru Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nizhal Illadhavan Rating: 0 out of 5 stars0 ratingsIntha Rojavukku Niramillai and Uyirin Uyire! Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Pesum Rojakkal! Rating: 0 out of 5 stars0 ratingsKaraikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsThadangalukku Varunthukirom Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Thigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Ootha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Agalyavin Ayulregai
0 ratings0 reviews
Book preview
Agalyavin Ayulregai - Rajeshkumar
27
1
கோவை.
போலீஸ் கமிஷனர் அலுவலகம். ‘இன்-காமிரா’ என்று அழைக்கப்படும் ரகசிய செல்லில், உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
போலீஸ் கமிஷனர் லட்சுமிபதி, தனக்கு முன்பாய் அரை வட்டம் போட்டு உட்கார்ந்திருந்த போலீஸ் அதிகாரிகளின் இறுக்கமான முகங்களை கொஞ்சம் கவலையோடு பார்த்தபடி கேட்டார்.
மொத்தம் எத்தனை போஸ்டர்?
டி.எஸ்.பி. சரவணன் தன் கையில் வைத்திருந்த துண்டு பேப்பரைப் பார்த்தபடி சொன்னார்.
மொத்தம் 537 போஸ்டர்ஸ் ஸார். காந்திபுரத்தில் மட்டும் 107 போஸ்டர், ஆர்.எஸ்.புரத்தில் 87 போஸ்டர், சாயிபாபா காலனியில் 34 போஸ்டர், ராம்நகர்ல 47, மீதி போஸ்டர்களை சிட்டிக்குள்ளே பரவலா ஒட்டியிருக்காங்க ஸார்...
"எல்லா போஸ்டர்களையும்
கிழிச்சுட்டீங்களா?"
முக்கால்வாசி கிழிச்சுட்டோம் ஸார்...
சாயந்தரத்துக்குள்ளே எல்லா போஸ்டர்களையும் கிழிச்சுடணும். நான் வெளியே போகும்போது ஒரு போஸ்டர்கூட என் பார்வையில் படக் கூடாது...
எஸ் ஸார்...
முழுசா கிழிக்கப்பட்ட ஒரு போஸ்டரை எடுத்து இந்த மேஜை மேல் பரப்பி வையுங்க மிஸ்டர் சரவணன்!
சரவணன் எழுந்து போய், சுவரோரமாய் கட்டி வைத்திருந்த போஸ்டர்களைப் பிரித்து ஒரு போஸ்டரை எடுத்து வந்து மேஜையின் மீது பரப்பினார். பார்வை அந்த போஸ்டரின் மேல் பதிந்தது.
அகல்யாவின்
ஆயுள் ரேகை
இனி வளருமா?
இல்லை...
தேயுமா?
போஸ்டரின் இடது பக்க ஓரத்தில் வளையல் அணிந்த ஒரு பெண்ணின் கை வரையப்பட்டு அந்த உள்ளங்கையில் ஒரு கத்தி சொருகப்பட்டிருந்தது. போஸ்டரின் கீழ்ப்பகுதி முழுவதும் ரத்தத் துளிகள்.
லட்சுமிபதி நிமிர்ந்தார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த எஸ்.பி.யிடம் கேட்டார்.
மிஸ்டர் குணசீலன்...! இந்த போஸ்டரைப் பத்தி உங்க கணிப்பு என்ன?
எஸ்.பி.குணசீலன், தனக்கு முன்பாய் இருந்த சிறிய உருண்டை மைக்கில் பேசினார்.
ஸார்... இது ஒரு ‘புள்ளிராஜா’ விளம்பரம் பாணியில் உருவாக்கப்பட்ட போஸ்டர். ஒரே ராத்திரியில் 537 போஸ்டர்ஸ் ஒட்டியிருக்காங்க. ஒட்டினவங்க யார்ன்னு தெரியலை. என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஏதோ காதல் சம்பந்தப்பட்ட விவகாரம். அகல்யா என்கிற பெண்ணை எந்த இளைஞனாவது காதலிச்சு காதலில் தோல்வி ஏற்பட்டு, அந்தத் தோல்வி தந்த மன விரக்தியின் காரணமாய் காதலி மேல் தன்னுடைய வெறுப்பையும், கோபத்தையும் காட்ட இப்படி போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கலாம். முழுக்க முழுக்க இது ஒரு காதல் தோல்வியின் வெளிப்பாடே...
எக்ஸ்க்யூஸ் மீ ஸார்...
அஸிஸ்டன்ட் கமிஷனர் பூவராகன் குறுக்கிட்டார்.
நான் அப்படி நினைக்கலை ஸார்...
ஓ.கே. வாட் ஈஸ் யுவர் கெஸ் ஒர்க்...?
இது ஒரு சைக்கோ பேஷண்ட், ஐ மீன்... மன நோயாளியோட வேலையாக இருக்கலாம் ஸார். போஸ்டரைப் பார்த்தாலே ஒரு விபரீதம் தெரியுது. பெண்ணோட உள்ளங்கையில் கத்தியை குத்தி வைக்கிற ஒரு கொடூர எண்ணம் சைக்கோ பேஷண்ட்டுகளுக்குத்தான் வரும்...
சரி... யார் இந்த அகல்யா?
அரசியல், சினிமா, டி.வி., விளையாட்டு இப்படி எல்லாத் துறைகளிலும் உள்ள வி.ஐ.பி.க்களோட லிஸ்ட்டைப் பார்த்துட்டோம் ஸார். அகல்யான்னு யாருமே இல்லை...
கமிஷனர் லட்சுமிபதி அந்த ஏ.ஸி. அறையிலும் வியர்த்து விட்ட தன் வழுக்கைத் தலையை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே அவஸ்வதையான குரலில் சொன்னார்.
இந்த அகல்யா ஆயுள் ரேகை போஸ்டரை விளையாட்டாகவும் எடுத்துக்க முடியலை. விபரீதமாகவும் எடுத்துக்க முடியலை. பத்திரிகை நிருபர்களும், டி.வி. நிருபர்களும் நாம சொல்லப் போகிற பதிலுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க. அவங்களுக்கு நாம என்ன பதிலைச் சொல்லலாம்?
லட்சுமிபதி கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அறையின் பக்கவாட்டில் ஒரு சிறிய கதவைத் திறந்து கொண்டு டெப்டி கமிஷனர் ருத்ரமூர்த்தி உள்ளே வந்தார்.
ஸார்... அகல்யா ஆயுள்ரேகை போஸ்டர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ள நம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்க்வாடிலிருந்து ஒரு மெஸேஜ் வந்தது...
சொல்லுங்க... என்ன மெஸேஜ்?
போஸ்டர்களை ஒட்டியது உக்கடம் பகுதியைச் சேர்ந்த ‘மின்னல்’ பொன்ராஜ்ன்னு ஒருத்தன் ஸார்...
எப்படித் தெரிஞ்சது?
போஸ்டர் ஒட்ற வேலையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சிலர்தான் ஈடுபட்டு வந்திருக்காங்க ஸார். நம்ம ஸ்க்வாட் போய் அவங்களைப் பிடிச்சு விசாரிச்சதும்,‘போஸ்டர்களை மின்னல் பொன்ராஜ்தான் ஒட்டியிருக்கணும். ஒரே ராத்திரியில் அவன் ஒருத்தனாலதான் இவ்வளவு போஸ்டர்களை ஒட்ட முடியும்’ன்னு சொல்லியிருக்காங்க... ஸார்...
உடனே ‘மின்னல்’ பொன்ராஜைப் போய் மடக்க வேண்டியதுதானே?
போயிருக்காங்க ஸார்... ஆனா... அவனோட வீடு பூட்டிக் கிடந்திருக்கு. குடிச்சுட்டு ஏதாவது ஒரு சாராயக் கடையில விழுந்து கிடப்பான்னு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க சொல்லியிருக்காங்க. ஸ்க்வாட் இப்போ சாராயக் கடைகளை தேடிப் போயிருக்கு. அரை மணி நேரத்துக்குள்ளே தகவல் அனுப்புவதாக ஸ்க்வாட் லீடர் ஸ்டீபன் சொல்லியிருக்கார் ஸார்...
கமிஷனர் லட்சுமிபதியின் முகத்தில் இப்போது சின்னதாய் ஒரு வெளிச்சம் அடித்தது. தனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த உயரதிகாரிகளிடம் திரும்பினார்.
போஸ்டர்களை ஒட்டிய ‘மின்னல்’ பொன்ராஜ் கைக்கு கிடைச்சதும் அந்த போஸ்டருக்குப் பின்னாடி இருக்கிற நபர் யார்ன்னு தெரிஞ்சுடும். அவன் கிடைக்கிற வரை வெயிட் பண்ணுவோம்...
கமிஷனர் லட்சுமிபதி கூட்டத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய அறைக்குத் திரும்பியபோது, அவருடைய பி.ஏ. சல்யூட் அடித்துவிட்டு, மெல்லிய குரலில் சொன்னார்.
ஸார்... டாக்டர் பன்னீர்செல்வம் ஒரு தடவையும், ஆடிட்டர் லீலாகிருஷ்ணன் ஒரு தடவையும் உங்களுக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. நீங்க கூட்டத்தில் இருக்கிறதாக சொன்னேன். வந்தவுடனே ஃபோன் பண்ணச் சொன்னாங்க...
லட்சுமிபதி தன் இருக்கைக்கு சாய்ந்து கொண்டே செல்போனை உயிர்ப்பித்து எண்களைத் தட்டிவிட்டு காதுக்கு கொடுத்தார்.
ஹலோ...
மறுமுனையில் டாக்டர் பன்னீர்செல்வம் பேசினார்.
என்ன லட்சுமிபதி... கூட்டத்துல போய் உட்கார்ந்துட்டீங்க...? காயத்ரியை பொண்ணு பார்க்க இன்னிக்கு வர்றாங்க. மறந்துட்டீங்களா?
மறப்பேனா? இதோ புறப்பட்டுக்கிட்டே இருக்கேன். புறப்படற நேரத்துல ஒரு முக்கியமான பிரச்னை விஷயமா கூட்டத்துல போய் உட்கார வேண்டியதாயிடுச்சு...
என்ன... அந்த ‘அகல்யாவின் ஆயுள் ரேகை’ போஸ்டர் விஷயமா?
அதேதான்...
ஊர் பூராவும் அதே பேச்சாய் இருக்கு. என்ன, அந்த அகல்யா யாருன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா?
இல்லை... ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஸ்க்வாட் அந்த போஸ்டருக்குப் பின்னாடி இருக்கிற அந்த நபர் யாருன்னு கண்டுபிடிக்கற முயற்சியில் மும்முரமாய் இயங்கிட்டிருக்கு. எப்படியும் இன்னிக்கு ராத்திரிக்குள்ளே கண்டுபிடிச்சுடுவோம்... காயத்ரியைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?
சரியா அஞ்சு மணிக்கு. இப்போ மணி நாலே முக்கால். நீங்க உடனே புறப்பட்டு வந்தா, கரெக்டா இருக்கும்...
இதோ புறப்பட்டேன்..
லட்சுமிபதி செல்போனை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு, தன் உதவியாளரைக் கூப்பிட்டார்.
ஜெகதீசன்...
ஸார்...
நான் காயத்ரி வீட்ல இருப்பேன். ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா மட்டும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. இல்லேன்னா வேண்டாம்...
சரி... ஸார்...
கத்திரிப்பூ வண்ண பட்டுப் புடவையில் அமர்க்களம் பண்ணிய காயத்ரியை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் லட்சுமிபதி.
காயத்ரியின் ரோஸ் மில்க் நிற முகம் வெட்கத்தில் குங்குமம் பூசிக் கொண்டது.
என்ன அங்கிள்! அப்படிப் பார்க்கறீங்க?
நீ மட்டும் ஒரு பெரிய தாமரைப் பூவில் உட்கார்ந்தேன்னு வைய்யி... சாட்சாத் மகாலட்சுமிதான்!
போங்க அங்கிள்! இந்த கிண்டல்தானே வேண்டாம்கிறது...
பக்கத்தில் நின்றிருந்த டாக்டர் பன்னீர்செல்வமும், ஆடிட்டர் லீலாகிருஷ்ணனும் சிரித்தார்கள்.
அங்கிள் சொன்னதுல தப்பே இல்லம்மா. எங்க கண்ணே பட்டுடும் போலிருக்கு. இந்தக் கோலத்துல உன்னைப் பார்க்கத்தான் உங்கப்பாவுக்கும், உங்கம்மாவுக்கும் கொடுத்து வைக்கலை. பாழாப்போன அந்த ஆக்ஸிடென்ட்...
அங்கிள்!
சோபாவில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியின் அண்ணன் ஆனந்தும், தம்பி லோகுவும், கடைசித் தங்கை யாமினியும் கோபமாய் எழுந்து வந்தார்கள். ஆனந்த் பொரிந்தான்.
என்ன அங்கிள் நீங்க? காயத்ரி காலையில் இருந்தே அப்பா அம்மாவை நினைச்சு ஒரே அழுகை. காயத்ரியை சமாதானப்படுத்தறதுக்குள்ளே எங்களுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. ஒரு மணி நேரமாத்தான் அவ சிரிச்சுட்டிருக்கா...
லட்சுமிபதி, காயத்ரியைப் பார்க்க, அவளுடைய தேன் நிறக் கண்களில் நீர் பளபளத்தது.
அவளுடைய கன்னத்தைத் தட்டினார் லட்சுமிபதி.
இதோ பாரம்மா... அப்பா அம்மாவைப் பத்தி நீ நினைக்கலாம். ஆனா... அழக் கூடாது. எதுக்காக அழணும்? உன்னோட அப்பாவுக்கு நானும், டாக்டர் அங்கிளும், ஆடிட்டர் அங்கிளும் நெருங்கின ஃப்ரண்ட்ஸ் மட்டும் இல்லை... ஒரே தாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள். உன்னோட அப்பா, அம்மா ஸ்தானத்திலிருந்து நாங்க மூணு பேரும் உங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வோம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம். நீ கண்ணை கசக்கிக்கிட்டு இருந்தா நல்லாயிருக்காது...
லட்சுமிபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, போர்டிகோவில் அந்த மொபட் வந்து நிற்க, ஒரு தந்தி ஊழியர் படியேறி வந்தார்.
ஸார்! டெலிகிராம்...
ஆனந்த் போய் ஃபாரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, தந்தியை வாங்கி வந்து பிரித்தான். காயத்ரி பெயருக்கு வந்திருந்தது.
தந்தியின் வாசகம் தமிழில் இருந்தது. டைப் செய்த எழுத்துக்கள்.
‘காயத்ரி!
உன்னுடைய பெண் பார்க்கும் வைபவம் வெற்றிகரமாக நடைபெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
அகல்யா’
2
போலீஸ் கமிஷனர் லட்சுமிபதி தந்தியில் இருந்த வாசகத்தை மறுபடியும் ஒரு தடவை படித்துப் பார்த்தார்.
‘உன்னுடைய பெண் பார்க்கும் வைபவம் வெற்றிகரமாக நடைபெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு, அகல்யா.’
லட்சுமிபதி, காயத்ரியை ஏறிட்டார்.
யாரம்மா... இந்த அகல்யா?
தெரியலை அங்கிள். என்னோட ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளில் அகல்யான்னு யாரும் இல்லை...
யாரும் இல்லைன்னு நிச்சயமா தெரியுமா?
காயத்ரி சில விநாடிகள் தீர்க்கமாய் யோசனை செய்து பார்த்துவிட்டு தலையாட்டினாள்.
அகல்யான்னு யாரும் இல்லை அங்கிள்!
பக்கத்தில் நின்றிருந்த டாக்டர் பன்னீர்செல்வமும், ஆடிட்டர் லீலாகிருஷ்ணனும் லட்சுமிபதியை வியப்பாய்