Apple Penne Nee Yaro
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Apple Penne Nee Yaro
Related ebooks
9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Oru Sanikizhamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsIni Nee Irakkalaam Rating: 5 out of 5 stars5/5Yaaro Paadiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsThirakkaaatha Jannalgal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsSangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Matroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Irappatharkku Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsAnge... Inge... Enge...? Rating: 0 out of 5 stars0 ratingsVeebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5Kuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Thalaippu Seithi Rating: 5 out of 5 stars5/5Kaanal Neeril Neenthum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsHaritha Oru AchariyaKuri! Rating: 0 out of 5 stars0 ratingsPistal Mutham Rating: 5 out of 5 stars5/5Vaa Arugil Vaa and Kagitha Ayuthangal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Sei... Thappi Chel! Rating: 0 out of 5 stars0 ratingsOru Melliya Sivappu Kodu Rating: 0 out of 5 stars0 ratingsOru August Maatha Aagaayam Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKashmeeril Oru Karuppu Naal Rating: 5 out of 5 stars5/5Vellai Nizhal! Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsOru Chinna Missdeath Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Apple Penne Nee Yaro
0 ratings0 reviews
Book preview
Apple Penne Nee Yaro - Rajeshkumar
ராஜேஷ்குமார்
செல்போன் கவிதை -1
கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தைக் கண்டதில்லை. பிறந்த பிறகும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன்.
-பார்வையற்ற ஒரு சிறுமியின் கவிதை.
1
இன்ஸ்பெக்டர் நித்தியானந்தன், சப் - இன்ஸ்பெக்டர் தமிழரசனோடும் இரண்டு கான்ஸ்டபிள்களோடும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்து, ஜீப்பில் இறங்கிய போது ராத்திரி மணி 11.45. டிசம்பர் மாத கோவை, எலும்புக்குள் குளிரைப் பாய்ச்சிக் கொண்டிருக்க, ஏதோ ஒரு பொருட்காட்சி மைதானம்போல் வெளிச்சமாய் தெரிந்த ஸ்டேஷனில் நள்ளிரவு ரயில்களைப் பிடிக்க ஒரு கும்பல் டிக்கெட் கௌண்ட்டர்க்கு முன்பாய் காத்திருந்தது. நியான் போர்டுகளில் ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் மக்களை வற்புறுத்தி கூப்பிட்டன. இரண்டு போர்ட்டர்கள் குடிபோதையில் நடைபாதையோரம் உட்கார்ந்து 2011 - ல் ஆட்சியைப் பிடிப்பது யார் என்று தீர்க்க தரிசனத்தோடு பேச, அங்கே ஒரு கைகலப்பு உருவாகும் சூழ்நிலை ஸ்பஷ்டமாய் தெரிந்தது.
ரிசர்வேஷன் ஹாலில் பயணிகள் கிடைத்த இடங்களில் எல்லாம் படுத்து தூங்கிக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் நித்தியானந்தன், தமிழரசனோடு பேசிக் கொண்டே நடந்தார். நடையில் பதட்டம்; பேச்சில் வேகம்.
எத்தனையாவது ப்ளாட்ஃபாரம்?
ரெண்டாவது ஸார்...
போன் பண்ணினது யார்?
ஸ்டேஷன் மாஸ்டர்!
எஸ்.ஐ. சொல்லிக் கொண்டிருக்கும் போதே டீகார்டன் எக்ஸ் பிரஸ்ஸைப் பிடிக்க ஒரு குடும்பம் குழந்தை குட்டிகளோடு ஓடி வந்து கொண்டிருக்க, நித்யானந்தன் அவர்களுக்கு வழிவிட்டு- பிறகு நடையைத் தொடர்ந்தார்.
எந்த கம்பார்ட்மெண்ட்?
டி11 ஸார்
சப்-வே-யில் நடையை முடித்துக் கொண்டு படிகளில் ஏறினார் நித்தியானந்தன்.
அந்த பொண்ணுக்கு எத்தனை வயசு இருக்கும்னு ஸ்டேஷன் மாஸ்டர் ஏதாவது சொன்னாரா?
ஏஜ் க்ரூப் என்னான்னு தெரியலை ஸார்!
சரி... இண்ட்டர்சிட்டி ட்ரெய்ன் இன்னிக்கு ஏன் இவ்வளவு லேட்..?
ஜோலார்பேட்டைக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு கூட்ஸ் ரயில் டீரெய்லட் ஆயிருக்கு ஸார்... அதான் ஒரு மணிநேரம் லேட்...
படிகளை ஏறி முடித்து இரண்டாவது ப்ளாட் பாரத்துக்குள் நுழைந்தார்கள். ஹிக்கின் பாதம்ஸ் அந்த நேரத்திலும் புத்தக விற்பனையில் சூடாய் இருந்தது.
பயணிகளை இறக்கிவிட்ட நிம்மதியோடு இண்ட்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க கடைசியில் இருந்த டி11 கம்பார்மெண்ட்டை நோக்கிப் போனார் நித்தியானந்தன். கம்பார்ட்மெண்ட்டுக்கு வெளியே அந்த வழுக்கைத்தலை ஸ்டேஷன் மாஸ்டர் யூனிபார்மில் நின்றிருக்க, அவரைச் சுற்றி சில பெண்கள் கவலையாய் தெரிந்தார்கள்.
நித்தியானந்தத்தைப் பார்த்ததும் ஸ்டேஷன் மாஸ்டர் அந்தப் பெண்களை விட்டு விலகி வந்தார்.
ஸார்... அ’யாம் சொக்கலிங்கம். ஸ்டேஷன் மாஸ்டர். போன் பண்ணினது நான்தான்...
கைகுலுக்கிக் கொண்டார்கள்.
என்ன பிரச்னை...? சொல்லுங்க...
ஸார்... இந்த டி11 கம்பார்மெண்ட்டில் சென்னையிலிருந்து கோவைக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு ஒரு பொண்ணு ட்ராவல் பண்ணியிருக்கா. பொண்ணோட பேர் முழுமதி. ஈரோட்டிலிருந்து வண்டி புறப்பட்டு திருப்பூரை நோக்கி வந்திட்டிருக்கும்போது முழுமதி டாய்லட்டுக்குப் போறேன்னு போயிருக்கா... போனவ வரவேயில்லை. அவ எங்கே போனா... என்ன ஆனான்னு தெரியலை..
அந்தப் பொண்ணு காணோம்ன்னு உங்களுக்குத் தகவல் கொடுத்தது யாரு?
ஸ்டேஷன் மாஸ்டர் சொக்கலிங்கம், பக்கத்தில் இருந்த பெண்களைக் காட்டினார். தகவல் கொடுத்தது இவங்கதான் ஸார். ஜர்னி டயத்துல அந்த முழுமதி இவங்க கூடத்தான் பேசி சிரிச்சு அரட்டையடிச்சுட்டு வந்திருக்கா.
நித்தியானந்தத்தின் பார்வை அந்தப் பெண்கள் பக்கமாய்ப் போயிற்று. மொத்தம் ஏழு பெண்கள். வயது 25 லிருந்து 30 க்குள் அடங்கி பளிச்சென்று தோற்றம் காட்டினார்கள்.
நித்தியானந்தன் அந்தப் பெண்களை பொதுப்படையாய் ஒரு பார்வை பார்த்தபடி கேட்டார்.
என்ன நடந்தது..?... சொல்லுங்க!
அந்த ஏழு பேரில் ஒரு பெண் முன்னால் வந்தாள். "என் பேர் ராதிகா...ஸார்..! நாங்க ஏழு பேரும் ‘ரெயின்போ’ என்கிற சமூக நல மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவங்க. நாங்க இன்னிக்கு மத்தியானம் சென்னையிலிருந்து கோவைக்கு இண்ட்டர்சிட்டியில் புறப்பட்டோம். எங்க கம்பார்ட்மெண்ட்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நாங்க சிரிச்சுப் பேசி சந்தோஷமாய் ஜர்னி பண்ணிட்டிருந்தோம். ட்ரெய்ன் அரக்கோணத்தை நெருங்கிட்டிருக்கும்போதே ஒரு பொண்ணு பயந்த பார்வையோடும் நடுக்கம் பரவிய உடம்போடும் எங்களுக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தா. ‘கோவை வர்ற வரைக்கும் நான் உங்ககூட சேர்ந்து ட்ராவல் பண்ணலாமா?’ன்னு கேட்டா. ‘தாராளமாய் ட்ராவல் பண்ணலாம்’ன்னு சொல்லிட்டு, ‘உன்னைப் பார்த்தா யார்க்கோ பயப்படற மாதிரி தெரியுது. என்ன விஷயம்?’னு கேட்டேன். அதுக்கு அந்தப் பொண்ணு, ‘டாய்லட் கிட்டே நின்னுட்டிருக்கிற ஒருத்தன் பெரிசா மீசை வெச்சுகிட்டு- என்னையே பார்த்துட்டிருக்கான். அவனால எனக்கு ஏதாவது பிரச்னை வருமோன்னு பயம். அதனாலதான் உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டேன்.’ -அந்தப் பொண்ணு அப்படி சொன்னதும் நாங்க ஏழு பேரும் டாய்லட் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பெரிசா மீசை வெச்ச ஒரு இளைஞன் பார்வைக்குக் கிடைச்சான். டீஸண்டாய் ட்ரஸ் பண்ணியிருந்தான். கையில் புத்தகம் ஒண்ணு இருந்தது. நாங்க அவனை முறைச்சுப் பார்த்ததுமே ஆள் காதுக்கு வாக்மேனை மாட்டிகிட்டு மெல்ல நழுவி அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்குப் போய்ட்டான். அதுக்கப்புறம் அவனை நாங்க பார்க்கலை. அந்தப் பொண்ணும் பயம் தெளிஞ்சவளாய் எங்க கூடவே ட்ராவல் பண்ணினா. ஒண்ணா ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம். ட்ரெய்ன் ஈரோடு ஸ்டேஷனில் ஒரு பத்து நிமிஷம் நின்னுட்டு புறப்பட்டதும் முழுமதி டாய்லெட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பிப் போனா. போனவ ரொம்ப நேரமாய் வரலை. அரைமணி நேரம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு நான் பாத்ரூம் பக்கமாய்ப் போய்ப் பார்த்தேன். உள்ளே யாரும் இருக்கிற மாதிரி தெரியலை. அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்குப் போயிருப்பாளோன்னு நினைச்சு அங்கேயும் போய்ப் பார்த்தேன். முழுமதி இல்லை. அதுக்குள்ளே ட்ரெய்ன் திருப்பூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. நானும் என் கூட வந்தவங்களும் ஒவ்வொரு பெட்டியாய் போய்ப் பார்த்தோம். முழுமதி எங்கேயும் இல்லை. அந்த மீசைக்கார இளைஞனும் பார்வைக்கு கிடைக்கலை."
ட்ரெய்ன் ரன்னிங்கில் இருக்கும்போதுதானே முழுமதி டாய்லட்டுக்குப் போனாள்?
- இன்ஸ்பெக்டர் கேட்க, ராதிகா தலையாட்டினாள்.
ஆமா...ஸார்...
ஈரோட்டுக்கும் திருப்பூர்க்கும் இடையில் உள்ள எந்த ஒரு ஸ்டேஷனிலாவது ட்ரெய்ன் நின்னதா?
இல்ல ஸார்...
முழுமதி லக்கேஜ் கொண்டு வந்தாளா?
ஒரே ஒரு கைப்பை கொண்டு வந்தா. அந்த பைக்குள்ளே கொஞ்சம் பணமும் ஒரு செல்போனும் இருந்தது ஸார்.
எங்கே அந்த செல்போன்?
அந்தப் பெண் ராதிகா கைப்பையில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த செல்போனை எடுத்து நித்தியானந்தத்திடம் கொடுத்தாள்.
அவர் அதை வாங்கிப் பார்த்தார்.
அது ஒரு லேட்டஸ்ட் செல்போன். ‘ஆப்பிள்’ கம்பெனியின்