Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoonkatha Kan Ondru
Thoonkatha Kan Ondru
Thoonkatha Kan Ondru
Ebook158 pages1 hour

Thoonkatha Kan Ondru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thoonkatha Kan Ondru

Read more from Rajeshkumar

Related to Thoonkatha Kan Ondru

Related ebooks

Related categories

Reviews for Thoonkatha Kan Ondru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoonkatha Kan Ondru - Rajeshkumar

    23

    இந்து மஹா சமுத்திரத்தில் ஒரு மாங்காயின் வடிவத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா என்னும் இலங்கையின் இன்னொரு பெயர் சிலோன். 440 கிலோ மீட்டர் நீளமும் 220 கி.மீ. அகலமும் கொண்ட இலங்கையின் மொத்த சதுர கிலோ மீட்டர் 65,610. இந்தியா - இலங்கை இடையே அனுமார் பாலம் கட்டினார் என்று ஒரு புராண தகவல் உண்டு. உயரப் பறக்கும் விமானத்தில் இருந்து இந்தியா - இலங்கை இடையே குட்டி குட்டி தீவுகளாகக் காணப்படும் மணல் திட்டுக்களைப் பார்க்கும்போது அனுமார் பாலம் கட்டிய கதை கற்பனை அல்ல; நிஜம்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

    1

    "ந்த இடம்தான் ஸார்..."

    வரதன் சொல்லவும் அந்த ஹைவேஸ் ரோட்டில் கிட்டத்தட்ட ஒரு ராக்கெட்டைப் போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த போலீஸ் ஜீப் வேகத்தை சட்டென்று குறைத்துக் கொண்டு இருட்டில் தெரிந்த அந்த மரத்துக்கு கீழே ஒதுங்கி நின்று முகப்பு விளக்குகளை அணைத்துக் கொண்டது.

    இன்ஸ்பெக்டர் சேதுமாதவன் ஜீப்பின் பின் பக்கம் திரும்பி, கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டியபடி பவ்யமாய் உட்கார்ந்திருந்த அந்த வரதனையும் அவனுடைய மனைவியையும் ஒரு தீப்பார்வை பார்த்தார்.

    டேய்... இந்த இடம்தானா... நல்லாப் பார்த்து சொல்லு.

    இந்த இடம்தான் ஸார்...

    சரி... ரெண்டு பேரும் இறங்குங்க... சேதுமாதவன் சொல்லிக் கொண்டே ஜீப்பினின்றும் குதித்தார்.

    வரதனும் மனைவியும் இறங்கினார்கள். வானத்தில் நிலா ஆப்சென்ட். பக்கத்து புதர்களில் சில்வண்டுகள் இரைய - சுற்றிலும் இருட்டு. சேதுமாதவன் தன் மணிக்கட்டில் ஒளிர்ந்த ரேடியம் டைட்டன் வாட்ச்சைப் பார்த்தார்.

    நேரம் 11.55.

    நான்கு கான்ஸ்டபிள்கள் வரதனையும் அவனுடைய மனைவி சரசாவையும் இருட்டில் தள்ளிக் கொண்டு வந்து சேது மாதவனுக்கு முன்பாய் நிறுத்தினார்கள். தன் கையில் வைத்திருந்த லாட்டியால் வரதனின் முகத்தை நிமிர்த்தினார் சேது மாதவன். அடித் தொண்டையில் உறுமினார்.

    ரெண்டு பேரும் இந்த இருட்டைக் காரணமா வெச்சு தப்பிச்சுப் போக முயற்சி பண்ணினா... நான் என்னுடய... இடுப்பில் இருக்கிற ரிவால்வர்க்கு வேலை கொடுக்க வேண்டியிருக்கும்... என்ன புரியுதா...?

    வரதன் கும்பிட்டான். அப்படியெல்லாம் ஓடிட மாட்டோம் ஸார்...

    இந்த இடம் தானா...?

    ஆமா... ஸார்...

    இந்த இடத்துக்கு என்ன பேரு...?

    இருட்டுப் பள்ளம் ஸார்...

    ஹைவேஸ் ரோட்டிலிருந்து எவ்வளவு தூரம் போகணும்?

    வரதன் திரும்பி நின்று இரண்டு புளிய மரங்களுக்கு நடுவில் கோணலாய் வளைந்து போன ஒரு ஒற்றையடிப் பாதையைக் காட்டினான். இதுல கெஞ்ச நேரம் நடக்கணும்... ஸார்.

    கொஞ்ச நேரம்ன்னா... எவ்வளவு...?

    ஒரு அஞ்சு நிமிஷம் நடக்கணும் ஸார்.

    மொத்தம் எத்தனை லிட்டர்...?

    ஆயிரம் லிட்டர்க்கு மேல இருக்கும் ஸார்.

    பானையா... ட்யூப்பா...?

    ட்யூப் ஸார்...

    எரி சாராயத்தை தவிர வேற ஏதாவது போதை சமாச்சாரங்களைப் புதைச்சிருந்தா இப்பவே சொல்லிடு... பின்னாடி நாங்களே கண்டு பிடிச்சோம்னு வைய்யி... உன்னோட உடம்புல ஒரு எலும்பு கூட முழுசா இருக்காது... இரண்டு பேரையும் லாக்கப்புக்குள்ளே வெச்சு தட்டி எடுத்துடுவோம்...

    மிரண்டு போன வரதனின் மனைவி சரசா மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாய் பேசினாள்.

    அய்யா...! ஆறு மாசத்துக்கு முந்தி வரை எங்க தொழிலு விவசாயம்தான்... கடந்த மூணு வருஷமா மழை பெய்யாததினால விவசாயம் பாக்க முடியலை. நிலத்து பேர்லேயும் வீட்டு பேர்லேயும் வாங்கியிருந்த கடனுக்கு வட்டியும் அசலும் கட்ட முடியலை... ரெண்டு சொத்தும் கைவிட்டு போயிடக்கூடாதுங்கிற பயத்துலதான் இந்த கள்ளச் சாராயத் தொழிலுக்கு வந்தோம்... எங்களுக்கு வேற போதைப் பொருள்களைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாதுங்கய்யா...

    சரி... சரி... நீ மண் வெட்டியை எடுத்துக்க... உம் புருஷன் கடப்பாரையை எடுத்துக்கட்டும்... ஒரு மணி நேரத்துக்குள்ளே எல்லாத்தையும் தோண்டி வெளியே எடுத்து வைக்கணும். ஒரு ட்யூப் கூட பூமிக்குள்ளே இருக்கக்கூடாது...

    சரசா மண் வெட்டியையும் வரதன் கடப்பாரையையும் எடுத்துக் கொள்ள முன்னாலும் பின்னாலும் கான்ஸ்டபிள்கள் நடந்தார்கள். ஒரு கான்ஸ்டபிளின் கையில் இடம் பிடித்திருந்த பெரிய டார்ச் ஒன்று வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு போயிற்று. ஒற்றையடிப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் கோரைப்புற்கள் காய்ந்து போய் தெரிய அதற்குள் ஒளிந்திருந்த முயல்கள் பூட்ஸ் சத்தங்களைக் கேட்டு ‘திடும் திடும்’ என்று ஓடி மறைந்தன.

    சரியாய் ஏழு நிமிஷ நடை.

    நடந்து கொண்டிருந்த வரதன் நின்றான்.

    இந்த இடம்தான் ஸார்...

    எல்லோரும் நின்றார்கள். இன்ஸ்பெக்டர் சேதுமாதவன் சுற்றும் முற்றும் பார்த்தார்.

    எந்த திசையிலும் ஒரு பொட்டு வெளிச்சம் இல்லை. ஹைவேஸ் ரோட்டில் மட்டும் வாகனங்களின் ‘ஹெட்லைட்கள்’ மின்மினி பூச்சிகள் போல் நகர்ந்தன. ஏதோ ஒரு வகையான செடிகள் இடுப்பு உயரத்துக்கு வளர்ந்திருக்க கொஞ்சம் தள்ளி ஒரு மொட்டைக் கிணறு தெரிந்தது.

    இந்த இடம் தானா...?

    ஆமா... ஸார்...

    சரி... தோண்டு...! எல்லா சாராய ட்யூப்பும் வெளியே வந்துடணும். ஒண்ணை மறைச்சாலும் சரி என் கையில் இருக்கிற லாட்டி ரெண்டா உடைஞ்சுடும்...

    வரதனும் சரசாவும் குற்றுச் செடிகளுக்கு மத்தியில் புகுந்து கடப்பாரையையும் மணவெட்டியையும் உபயோகப்படுத்தி பரபரவென்று குழிகளைத் தோண்டினார்கள். அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்திலிருந்து சாராயம் நிரம்பிய ட்யூப்புகள் மாலை மாலையாய் வெளியே வந்தன.

    சேதுமாதவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அங்கிருந்த பாறைத்திட்டு ஒன்றின் மேல் உட்கார்ந்தார். கான்ஸ்டபிள்கள் மேற் பார்வையில் இருந்தனர்.

    ஒரு மணி நேரம் கரைந்து போயிருக்க ஹெட் கான்ஸ்டபிள் பக்கத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1