Moodu Pani Nilavu
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Moodu Pani Nilavu
Related ebooks
Raavana Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsEthuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Sooriyagandhigal Rating: 5 out of 5 stars5/5Ini Illai Ilaiyuthirkaalam Rating: 5 out of 5 stars5/5Maandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsMella Varum Boogambam Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsMudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingsAndre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsUn Kannil Nooru Nila Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsJannal Seethaikal Rating: 0 out of 5 stars0 ratingsCyanide punnagai Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Sorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Siraiyil Oru Paravai Rating: 0 out of 5 stars0 ratingsIraththam Illatha Yuththam Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Pattaampoochikal Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naal Andha Nimidam Andha Nodi Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Illatha Nanthavanam Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsUyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Iravukal! Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Moodu Pani Nilavu
0 ratings0 reviews
Book preview
Moodu Pani Nilavu - Rajeshkumar
18
போர்: ஹைடாஸ்பஸ் போர்,
நடந்த இடம்: ஜீலம் நதிக்கரை,
வருடம்: கி.மு. 326,
ஈடுபட்டவர்கள்: அலெக்சாண்டர் - போரஸ்,
வெற்றி: அலெக்சாண்டர்,
விளைவு: இந்தியாவில் கிரேக்கர் ஆதிக்கம்.
1
கிழக்குத் திசை ரங்கோலி கோலம் போட்டுப் பழகிக் கொண்டிருக்க, பாதி நறுக்கிய சிம்லா ஆப்பிளாய் அந்த வெள்ளிக் கிழமை சூரியன்.
வைகறை இருட்டு இன்னமும் ஒரு இருபது சதவீதம் பாக்கியிருந்தது. ஐஸ்வர்யா காலனியில் இருந்த எல்லா மரங்களிலும் பறவைகள் சம்பாஷித்துக் கொண்டிருக்க, பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் யமுனா. ஈரக் கூந்தலில் சுற்றியிருந்த டவலும், நெற்றிக்கு இட்டிருந்த குங்குமமும் அவளுடைய வழக்கமான அழகை அதிகப்படுத்தியிருந்தது.
ஹாலைக் கடக்கும்போது பக்கத்து அறையிலிருந்து ஹரிதா வெளிப்பட்டாள். ஹரிதா யமுனாவின் கணவன் அகிலின் இரண்டாவது தங்கை. பி.எஸ்.ஸி.கணக்கில் முதல் வருடம்.
அண்ணி...
யமுனா புன்னகையோடு நின்றாள்.
என்ன...?
ஏதோ ஒரு ஸ்லோகத்தை ஒன்பது தடவை சொல்லிட்டுப் பாடத்தைப் படிச்சா படிச்சதெல்லாம் மனசுக்குள்ள அச்சுவெல்லம் மாதிரி பதியும்னு சொன்னீங்களே...! அது என்ன ஸ்லோகம்...?
போன வாரம்தானே சொல்லிக் கொடுத்தேன்
ஸாரி அண்ணி! மறந்துட்டேன்...
எந்த சினிமா பாட்டையாவது இப்படி மறந்திருக்கியா? தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் வரி பிசகாமே பாடுவியே!
இந்த ஒரு தடவை மட்டும்... சொல்லிக் குடுங்க அண்ணி. இனி மறக்கவே மாட்டேன்...
தன் இடதுகையின் ஆட்காட்டி விரலை உயர்த்தினாள் யமுனா.
"நல்லா கேட்டுக்கோ. இன்னொரு தடவை கேட்டா சொல்ல மாட்டேன்.
யாதேவீ ஸர்வ பூதேஷு வித்யா ரூபணே ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை... நமஸ்தஸ்யை... நமஸ்தஸ்யை
நமோ நம..."
ஹரிதா மலர்ந்தாள். இப்ப ஞாபகம் வந்திடுச்சு... சொல்லிக் காட்டட்டுமா அண்ணி...
குளிச்சியா...?
இல்ல...
குளிக்காமே ஸ்லோகம் சொல்லக் கூடாது. ஹீட்டர்ல வெந்நீர் பாய்லிங் ஸ்டேஜ்ல இருக்கு. போய்க்குளி. சௌம்யா எந்திரிச்சுட்டாளா...?
இல்லேண்ணி. எழுப்பி விட்டேன். அடிக்க வர்றா. குளிருதாம். என்னோட போர்வையையும் இழுத்துப் போர்த்திக்கிட்டுத் தூங்குறா.
சரி... நீ போய்க்குளி. அவளை நான் ஹேண்டில் பண்ணிக்கறேன்.
யமுனா சமையலறைக்குப் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு சௌம்யாவின் அறையை நோக்கிப் போனாள்.
சௌம்யா ஹரிதாவுக்கு அக்கா. போன வருடம் பி.எஸ்.ஸி.ஹோம் சயின்ஸை முடித்தவள். அடுத்த மாதம் இருபத்திமூணாம் தேதி ராணி மெய்யம்மை ஹாலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு கணவனோடு ஒஹையோ பறக்கக் காத்து இருப்பவள். கொஞ்சம் சோம்பேறி.
போர்வைக்குள் ஒரு புஷ்ப மூட்டையைப் போல் தூங்கிக் கொண்டிருந்த சௌம்யாவுக்கு முன்பாய் வந்து நின்றாள் யமுனா.
சௌம்யா...
.. .. ..
சௌ... ம்...யா...
ம்...
என்ன வுட்பியோடு டூயட் பாடிக்கிட்டு இருக்கியா...? எல்லாம் அடுத்த மாசம் ஒஹையோவுக்குப் போய்ப் பாடலாம். எந்திரி...
போர்வைக்குள்ளிருந்து குரல் வந்தது.
ப்ளீஸ் அண்ணி. இன்னும் பத்தே நிமிஷம்...
நோ... நோ... ஆறுமணிக்கு மேல் ஒரு பெண் படுக்கையில் இருக்கக் கூடாது. எந்திரி... எந்திரி...
அஞ்சே அஞ்சு நிமிஷம் அண்ணி...
சரி...! அஞ்சு நிமிஷம் டயம் தர்றேன். அதுக்குள்ளே நீ எந்திரிச்சு உட்கார்ந்திருக்கணும். இல்லேன்னா ஃப்ரிஜ்ஜிலிருந்து ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரைக் கொண்டு வந்து உன் தலையில்...
அய்யோ... வேண்டாம் அண்ணி... நான் இப்பவே எந்திரிச்சு உட்கார்ந்துடறேன்
. போர்வை தாறுமாறாக விலக, அந்த அழகான சௌம்யா எழுந்து உட்கார்ந்து கொட்டாவியைப் புறங்கையால் அடக்கினாள். மருதாணியில் குளித்த நுனி விரல்கள் தீப்பற்றிக் கொண்ட மாதிரி ஜொலித்தன.
அண்ணி! காப்பி...
போய்ப் பல்லைத் தேய்...
நீங்க எனக்கு அண்ணி இல்லை. மாமியார்.
அப்படியே இருக்கட்டும். பல்லைத் தேய்க்காமே இந்த வீட்ல யாருக்கும் காப்பி கிடையாது.
பொய்க் கோபத்தோடு தரையை உதைத்துக் கொண்டு எழுந்த சௌம்யா அட்டாச்சுடு பாத்ரூமை நோக்கிப் போக, யமுனா குரல் கொடுத்தாள்.
நில்லு...!
சலிப்போடு திரும்பினாள் சௌம்யா.
என்னண்ணி...?
போர்வையை மடிச்சு வெச்சுட்டுப் போ! இதை மடிக்கிறதுக்காக ஒஹையோவிலிருந்து மாப்பிள்ளையை வரவழைக்க முடியுமா என்ன...?
சௌம்யா தன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முறைக்க, கண்ணைச் சிமிட்டி விட்டு அறையினின்றும் வெளிப்பட்டாள் யமுனா.
ஹால் சோபாவில் மாமனார் சிவப்பிரகாசம் தெரிந்தார். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, தோளில் மினுமினுப்பாய்ப் புரளும் அங்கவஸ்திரம்.
குரல் கொடுத்தார்.
அம்மா... யமுனா...
மாமா...
சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு பவ்யமாய் பக்கத்தில் போய் நின்றாள். அவர் புன்னகையோடு ஏறிட்டார்.
இன்னிக்கு பகுளதசமி சித்தயோகம். ரொம்ப நல்ல நாள்ன்னு ஜெகத்நாத ஸ்வாமிகள் எனக்கு ஃபோன் பண்ணிச் சொன்னார். சௌம்யாவோட கல்யாணப் பத்திரிகைகளை லலிதாம்பிகை கோயிலுக்குக் கொண்டு போய் அம்மன் பாதத்துல வெச்சு பூஜை பண்ணிட்டு வந்துட்டா இன்னிக்குப் பன்னிரெண்டு மணிக்குமேல இன்விடேஷன் கொடுக்க ஆரம்பிச்சுடலாம்.
நேத்திக்கு ராத்திரியே நீங்க சொன்னீங்க மாமா...
நானும் அத்தையும் இப்ப கிளம்பறோம். கார் டிரைவர் மாணிக்கம் வந்தாச்சாம்மா...?
அஞ்சரை மணிக்கே வந்து காரைக் குளிப்பாட்டி துடைச்சும் வெச்சாச்சு...
அந்த இன்விடேஷன் பண்டலை எங்கேம்மா வெச்சிருக்கே...?
பூஜை ரூம்ல...
நீயே எடுத்துட்டுப் போய் கார்ல வையம்மா...
சரிங்க மாமா...
தலையாட்டிய யமுனா பூஜையறைக்குப் போய் இன்விடேஷன் பண்டலை எடுத்துக் கொண்டு வெளியே வர அத்தை திலகவதி பூக்கூடையோடு வெளிப்பட்டாள். திலகவதியின் நோஞ்சலான உடம்பை, ஜரிகை தகதகக்கும் ஒரு கனமான பட்டுப்புடவை போர்த்தியிருந்தது. மஞ்சள் பூசிக் குளித்த முகத்தில் காலைச் சூரியனாய் பிசிறடிக்காத குங்குமப் பொட்டு.
யமுனா...
தோளில் கை வைத்தாள்.
என்ன அத்தே...?
இன்விடேஷன் பண்டலை கார்க்குள்ளே வெச்சுட்டு வெளியே போய் காம்பவுண்ட் கேட் பக்கமா நில்லு. கார் புறப்படும்போது எதிர்ல வா...
சரிங்கத்தே...
வாசல்ல கோலம் போட்டிருக்கியா?
பெரிய மாக்கோலமாவே போட்டிருக்கேன். திருவிளக்குக் கோலம்...
பார்த்தீங்களா என் மருமகளை...!
நம்ம மருமகளைன்னு சொல்லு...
சிவப்பிரகாசம் சொல்லிவிட்டுச் சிரிக்க, பூரிப்பில் இலேசாகிப் போன மனத்தோடு வாசலை நோக்கிப் போனாள். போர்டிகோவில் மில்க் ஒயிட் அம்பாஸிடர் கார் பளபளப்பாய் நின்று கொண்டிருக்க அதை இன்னமும் தன் கையில் வைத்திருந்த மஞ்சள் பாலீஷ் துணியால் தேய்த்துக் கொண்டிருந்தார் ஐம்பத்தைந்து வயது டிரைவர் மாணிக்கம். இந்த வீட்டின் ஒரு அங்கமான அவருக்கு முப்பது வருஷ சர்வீஸ்.
மாணிக்கம்! காரோட பேக் டோரை ஓப்பன் பண்ணுங்க...
அவர் பாலீஷ் துணியைத் தோளில் போட்டுக் கொண்டு காரின் பின்பக்கக் கதவைத் திறந்து வைக்க, யமுனா இன்விடேஷன் பண்டலை காருக்குள் வைத்துவிட்டு ஐம்பதடி தூரத்தில் இருந்த காம்பவுண்ட் கேட்டை நோக்கிப் போனாள்.
கிழக்கில் சூரியன் முழுவதுமாய் எழுந்து மரத்துக்குப் பின்னால் மறைந்திருக்க, எல்லாப் பக்கமும் காரட் நிற வெளிச்சம். காற்றுக்குள் ஏ.ஸி. குளிர் ஊடுருவியிருக்க சுவாசிக்கும் போது ஒரு சுகம் தெரிந்தது.
குட் மார்னிங் மகாலட்சுமி...
தன் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தாள் யமுனா.
ஜாக்கிங் சூட்டோடு அவள் கணவன் அகில். முகத்தில் எண்ணெய் பூசியது போல் வியர்வை. காற்றில் அடர்த்தியான கேசம் சிலும்பியிருந்தது.
கணவனைச் சிரிப்போடு பார்த்தாள் யமுனா. இன்னிக்கு என்ன திடீர்னு மகாலட்சுமி?
உன்னைப் பார்த்ததும் காலண்டர்ல எப்பவோ பார்த்த மகாலட்சுமியோட ஞாபகம் வந்துட்டது. இந்தச் சேலையில நீ எப்படி இருக்க தெரியுமா...?
வழியாமே உள்ளே போங்க! மாமாவும் அத்தையும் லலிதாம்பிகை கோயிலுக்கு புறப்பட்டுப் போக வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்க போர்டிகோவிலிருந்து கார்ல வரும்போது நான் எதிர்ல போகணும்...
போற போக்கைப் பார்த்தா உனக்கு கோயிலே கட்டிடுவாங்க போலிருக்கே
நோகாமல் தலையில் அடித்து சிரித்துக் கொண்டே உள்ளே போனான் அகில்.
போர்டிகோவிலிருந்து மெள்ள ஊர்ந்த கார் காம்பவுண்ட் கேட்டை நோக்கி வர, எதிரே போனாள் யமுனா. திலகவதி வெளியே தலைநீட்டிச் சொன்னாள்.
ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடுவோம். கேட்டைச் சாத்திக்கோம்மா...
கார் கேட்டைக் கடந்து போக்குவரத்து இல்லாத சாலையில் வேகம் எடுத்ததும் காரையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கேட்டைச் சாத்த முயன்றாள்.
பக்கவாட்டில் ஒரு குரல் கேட்டது.
ஒரு நிமிஷம்...
திரும்பினாள்.
அந்த நபர் நின்றிருந்தார். நாற்பது வயது. ஒட்ட வெட்டிய கிராப். வெள்ளை பேண்ட்; வெள்ளை சர்ட். மேலுதட்டில் கெட்டியான மீசை.
அவரைக் குழப்பமாய்ப் பார்த்தாள் யமுனா.
என்ன...?
உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்.
எ... என்ன வி... விஷயமா?
நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். பேர் பால்பாண்டியன்...! இதோ... என் உத்யோக அட்டை.
அவர் காட்டிய அடையாள அட்டையைப் பயமாய்ப் பார்த்த யமுனா உலர்ந்து போன குரலில் கேட்டாள்.
எ... என்கிட்ட என்ன பேசணும்...?
மொதல்ல இந்த போட்டோவைப் பாருங்க...
பால்பாண்டியன் கையில் வைத்திருந்த பாலிதீன் கவர் ஒன்றைப் பிரித்து உள்ளேயிருந்த அந்த போட்டோவை உருவி யமுனாவிடம் கொடுத்தார்.
இந்த போட்டோவில் இருக்கிறது நீங்கதானே?
யமுனா அந்த போட்டோவை வாங்கினாள். போட்டோவின் முன்னாலும் பின்னாலும் தீற்றல் தீற்றலாய் ரத்தக் கறைகள். அந்த ரத்தக் கறைகளுக்கு நடுவில் யமுனாவின் முகம்!
யமுனா மறுபடியும் தன் கையில் இருந்த போட்டோவைப் பார்த்தாள்.
போட்டோவின் முன்னாலும் பின்னாலும் ரத்தக் கறைகள் தீற்றல் தீற்றலாய்த் தெரிய அந்தக் கறைகளுக்கு நடுவே இருப்பது தன் முகம்தானா...?
யமுனா உற்றுப் பார்த்தாள்.
அவளேதான்.
காமிராவை நேருக்கு நேர் பார்த்து உதடு பிரியாமல் சிரித்திருந்தாள்.
இன்ஸ்பெக்டர் பால்பாண்டியனின் குரல் மறுபடியும் காதுகளை உரசியது.
இந்த போட்டோவில் இருக்கிறது நீங்கதானே?
ஆ...ஆமா...
இந்த போட்டோ எப்போ எடுத்ததுன்னு தெரியுமா?
கொ... கொஞ்சம் பழைய போட்டோ மாதிரி தெரியுது. எப்போ எடுத்ததுன்னு ஞாபகம் வரலை...
சரி.... இதை யாருக்குக் கொடுத்தீங்க...?
அதுவும் ஞாபகத்துக்கு வரலை... இந்த போட்டோவை உங்களுக்கு யார் கொடுத்தது...?
உங்களோட இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றதுக்கு முந்தி இன்னும் ஒரு போட்டைவையும் பார்த்துடுங்க...
சொன்ன பால்பாண்டியன் தன் சட்டையின் பாக்கெட்டினுள்ளிலிருந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை எடுத்து யமுனாவின் முகத்துக்கு நேரே காட்டினார்.
யமுனா அந்த போட்டோவைப் பார்த்தாள்.
இளைஞன். கொஞ்சம் பெண்மைத்தனமான முகம். கெட்டியான மீசை. கண்களில் குறும்பு. உதட்டில் வெடிக்கக் காத்திருக்கும் சிரிப்பு.,
யமுனா கேட்டாள்.
யார் இவரு...?
இவர் யார்ன்னு உங்களுக்குத் தெரியாதா...?
தெரியாது...
போலீஸ்காரன்கிட்ட பொய் பேசக்கூடாது...
"நான் எதுக்காகப் பொய் சொல்லணும்? தெரிஞ்சா தெரியும்ன்னு