Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai
Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai
Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai
Ebook385 pages2 hours

Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai

Read more from Rajeshkumar

Related to Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai

Related ebooks

Related categories

Reviews for Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai - Rajeshkumar

    14

    1

    அன்பான உங்களுக்கு

    இந்தப் பெண்களின்

    முகமெல்லாம்

    என்னைப் போலவே

    இருக்கிறதாமே?

    இந்தக் கவிஞர்கள்

    ஏன்தான் இப்படி

    பொய் சொல்கிறார்களோ?

    -அன்புடன் நிலா.

    காலை 5.45

    சென்னை, காரட் நிற விடியலில் இருந்தது.

    பேசின் பிரிட்ஜ் சந்திப்பிலிருந்து மெதுவாய் ஊர்ந்து வந்த நீலகிரி எக்ஸ்பிரெஸ் சென்ட்ரலுக்குள் நுழைந்து ஒரு நீளமான க்ரீச்சிடலோடு நின்றது. போர்டர்கள் பெட்டிப் பெட்டியாய் தாவி உள்ளே கிராக்கிகளை தேடிக் கொண்டிருக்க வகுளா ஒரு சூட்கேஸோடு அந்த இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பரிலிருந்து பிளாட்பாரத்திற்கு கால் பரவினாள்.

    இருபத்தி மூன்று வயதான வகுளாவுக்கு ஐந்தரையடி உயரம். மாநிறம் என்று சொல்ல முடியாத புதுநிறம். அழகான மூக்கில் வலதுபுறம் ஒரு புஷ்பராகம் மூக்குத்தி ஒயிலாய் ஒளிர்ந்தது. பார்க்கிறவர்களை ஈர்க்கின்ற மாதிரியான உடல் கட்டு. ராத்திரி முழுவதும் சரியாக தூங்காத காரணத்தினால் அகலமான பெரிய கண்களில் வெள்ளை படலத்தில் சிவப்பு உறைந்து போயிருந்தது. உடம்பின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மெலிதான நீல நிற க்ரிமப் சேலை விசுவாசமாய் பிடித்திருந்தது.

    அம்மா, போர்ட்டர்... எதிர்ப்பட்ட ஒரு செவப்பு முண்டாசு கேட்க, வேண்டாம்பா... என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவளுக்கு முன்னாலும் பின்னாலும் மனித கும்பல் பெட்டி படுக்கைகளோடு சலசலப்போடு நடந்துக் கொண்டிருந்தது ஸ்டேஷனின் உட்புற காற்று மண்டலம் மனிதர்கள் விட்ட மூச்சால் வெப்பமாய் இருந்தது.

    வகுளா தான் போக வேண்டிய இடத்தின் அட்ரஸை மனசுக்குள் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

    எம்.நல்லசிவம், நெம்பர் 320 முத்துகிருஷ்ணன் தெரு, மயிலாப்பூர் சென்னை-4

    வகுளா சென்னை சென்ட்ரலில் பிரும்மாண்டத்தைப் பார்த்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தாள்.

    அவள் நடந்து கொண்டிருந்த அதே விநாடி—

    முதுகுக்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது.

    "எக்ஸ்க்யூஸ் மீ...

    வகுளா திரும்பினாள்.

    தோளில் தொங்க போட்ட ஏர் பேக்கோடு அந்த இளைஞன் தெரிந்தான், களைந்த தலை, கலையான முகம், சரத்பாபு சிரிப்பு.

    வகுளா அவனை ஏறிட்டாள்,எஸ்...

    நீங்க மொதல் தடவையா மெட்ராஸ் வர்றீங்களா?

    ஆமா...

    நீங்க மைலாப்பூர்தானே போகணும்?

    ஆமா... என்று தலையசைத்தவள் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்...?

    அந்த இளைஞன் சிரித்தான்.

    நீங்க பிரயாணம் பண்ணின அதே கம்பார்ட்மெண்ட்ல தான் நானும் வந்தேன். கோயமுத்தூர்ல ட்ரெயின் புறப்படறதுக்கு முந்தி ஸ்டேஷன்ல ரயில் ஜன்னல் கம்பியை பிடிச்சுக்கிட்டு உங்க மாமாதான் நாலு பேர்க்கு தெரியும்படி சத்தம் போட்டு பேசிட்டிருந்தாரே, அப்போ கேட்டேன்...

    மாமாவுக்கு எப்பவுமே தொன்டை பெரிசு...

    இருக்கட்டும் அதுக்காக தனியா, மெட்ராஸ் போறதைப் பத்தி மத்தவங்களுக்கு கேக்கும்படியா சொல்லலாமா? இது எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொல்ற மாதிரி. எவனாவது ரௌடிப் பையன் கேட்டான்னா உங்க பாடு ஆபத்துதான்...

    நான் கொஞ்சம் துணிச்சலானவ, அதனால மாமாவுக்கு எம்பேர்ல நம்பிக்கை. எவனும் என்கிட்டே வாலாட்ட முடியாது.

    நடந்துக்கிட்டே பேசலாமா?

    ம்...

    இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்தார்கள். சோடியம் வேப்பரைஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜனங்கள், பௌடர் பூசின மாதிரி தெரிந்தார்கள்.

    மெட்ராஸுக்கு என்ன காரியமா வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அவன் கேட்டுவிட்டு, இது எனக்கு தேவையில்லாத - அதிகப்பிரசாங்கத்தினமா கேள்வின்னு நீங்க நினைச்சா இதை இக்னோர் பண்ணிடலாம் என்றான்.

    வகுளா அவனைத் தயக்கமாய் பார்த்தாள்.

    அவன் மறுபடியும் சொன்னான்.

    நோ... ப்ராப்ளம் உங்களுக்கு இஷ்டமிலேன்னா சொல்ல வேண்டாம். அவன் புன்னகைத்துக் கேட்டாள். நான் எதுக்காக மெட்ராஸ் வந்திருப்பேன்னு நீங்க ‘கெஸ்’ பண்ணுங்க பார்க்கலாம்.

    சொந்தக்காரங்களா பார்க்க...

    நோ...

    ஏதாவது இன்டெர்வியூ?

    ராங்...

    காலேஜ்ல சேர்ந்து படிக்க...

    முதல் பாதி கரெக்ட், ரெண்டாவது பாதி தப்பு...

    எனக்குப் புரியலை..."

    நான் ஒரு காலேஜுக்குத்தான் வந்திருக்கேன். சேர்ந்து படிக்கச் இல்லே...

    பின்னே...

    பாடனி லெக்சரர் போஸ்டுக்கு எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு நாளைக்குள்ளே நான் ட்யூட்டில ஜாயின் பண்ணனும்...

    அவன் கண்களில் வியப்பு வட்டம் அடித்தது, நீங்க லெக்க்சரரா? பார்த்தா காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி இருக்கீங்க...

    எம்.எஸ்ஸி. பாடனியை போன வருஷம்தான் முடிச்சேன் கோயமுத்தூர்ல டெம்ப்ரரியா ஒரு காலேஜ்ல ஆறு மாசம் ஒர்க் பண்ணினேன், ஆறு மாசம் முடிஞ்சதும் டெர்மினேட் பண்ணிட்டாங்க. மெட்ராஸ்ல இருக்கிற இந்த காலேஜுக்கு அப்பளை பண்ணினேன். இன்டெர்வியூ கூட இல்லாமே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டாரே அனுப்பிச்சிட்டாங்க...

    மெட்ராஸ்ல எந்த காலேஜ்?

    அவள் கல்லூரியின் பெயரைச் சொன்னாள்.

    அது தனியார் கல்லூரியாச்சே கரெஸ்பாண்டெண்ட் கஸ்டெடியில்தான் கல்லூரி நிர்வாகமே நடக்கும்.

    நடந்திட்டு போகட்டும்...

    அது கோ எஜுகேஷன் காலேஜ்.

    ஐ கேன் மேனேஜ்...

    அப்போ முன்னேற்பாடுடன்தான் வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க மிஸ் வகுளா.

    எம்பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்?

    உங்க மாமாவின் வெண்கல குரல் உபயம்.

    வகுளா சிரித்தாள். "நீங்க ஒருத்தர்தான் எங்க மாமாவை உன்னிப்பாய் அப்சர்வ் பண்ணியிருக்கீங்க, ஆமா உங்களை பத்தி நீங்க ஒன்னும் சொல்லலையே உங்க பேரு...?

    வித்யாஷங்கர்.

    என்ன பன்னிட்டிருக்கீங்க?

    டைம் கில்லிங் டிபார்ட்மெண்ட்ல சிம்பிள் சிட்டிங் ஆபீஸர். அந்த வயித்தெரிச்சலை ஏன் கிளறீங்க மிஸ் வகுளா? பி.எஸ்ஸி டிகிரி வாங்கி எட்டு வருஷமாச்சு. இந்த இந்திய அரசாங்கம் எனக்கு வேலைத் தரலை.

    அப்போ சும்மாதான் இருக்கீங்களா?

    ஆமா.

    மெட்ராஸ்தான் சொந்த ஊரா?

    உம்.

    பி.எஸ்ஸி’யில் என்ன சப்ஜெக்ட் எடுத்துப் படிச்சீங்க?

    மாக்ஸ்.

    கோயமுத்தூரிலிருந்து வர்றீங்க. அங்க ஏதாவது இன்டேவியூ அட்டென்ட் பண்ண போயிருந்தீங்களா?

    நோ...நோ... ஊட்டியில் ஒரு பிரென்ட் இருக்கான், அவனைப் பார்த்துட்டு வர்றேன். இப்படி வாங்க. எக்ஸிட் கேட் இந்தப் பக்கம்தான் சொல்லிக் கொண்டே கும்பலின் வழியே அவளை நடத்திக் கூட்டிப் போனான்.

    மையிலாப்பூர் சென்ட்ரலிலிருந்து ரொம்ப தூரமா?

    தூரம்தான்.

    ஆட்டோவில் போன என்ன சார்ஜாகும்?

    அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க. நானும் மைலாப்பூர் வழியாத்தான் போகணும். ஒரு டாக்ஸி பிடிச்சு ரெண்டு பேருமே போயிடலாம்.

    வேண்டாம் உங்களுக்கு எதுக்கு சிரமம்?

    எனக்கு சிரமம்னா ரொம்பவும் பிடிக்கும். சொல்லிவிட்டு அவன் சிரித்தபோது கீழ்ப் பல்வரிசை அழகாய் சாரம் கோர்த்த மாதிரி தெரிந்தது.

    எக்ஸிட் கேட்டை நெருங்கி கேட்டில் நின்றிருந்தவரிடம் டிக்கெட்களை கொடுத்துவிட்டு - கபேடரியாவைத் தாண்டுமபோது - வித்யாஷங்கர் நின்றான்.

    "ஏன் நின்னுடீங்க? வகுளா கேட்டாள்.

    கபேடரியால காப்பி நல்லாயிருக்கும்... சாப்பிடுவோமா?

    சாரி... நான் காப்பி, டீ சாப்பிடறதில்லை.

    ஈஸீட்... குட் ஹாபிட்...

    நீங்க வேணும்னா சாப்பிடுங்க...

    வேண்டாம்... நீங்க சாப்பிடுவீங்களேன்னுதான் கேட்டேன், எனக்கும் காப்பி இந்த நேரத்துக்கு அவசியமில்லை, வாங்க போலாம்.

    நோ, பார்மாலிடி, நீங்க சாப்பிடுங்க.

    வேண்டாம்.

    வகுளாவோடு நடந்த வித்யாஷங்கர் சட்டென்று நின்றான்.

    மறுபடியும் ஏன் நின்னுடீங்க?

    அங்கே பாருங்க.

    அவன் கை காட்டிய பக்கமாய் பார்வையை போட்டாள் வகுளா. லேசான ஒரு ஆச்சர்யத்துக்குப் போனாள்.

    மிஸ் வகுளா என்று எழுதப்பட்ட ஒரு அட்டையை தாங்கி பிடித்தபடி நின்றிருந்தான் அந்த இளைஞன், உயரமான இளைஞன். சுருண்ட கிராப். சதைப்பிடிப்பான முகத்தில் கண்கள் பரபரவென்று பெண்ணின் முகத்துக்கு நேரே வலுக்கட்டாயமாய் அட்டையைக் காட்டி நகர்த்தினான்.

    வித்யாஷங்கர் சொன்னான். உங்களுக்காக யாரோ காத்திட்டிருக்கார்.

    அவர் யாருன்னு எனக்கு தெரியலையே?

    வாங்க விசாரிப்போம்.

    இருவரும் அந்த இளைஞனை நெருங்கினார்கள். வகுளா ஒரு புன்னகையை உதிர்த்துக் கொண்டே சொன்னாள். ஐயாம் வகுளா...

    அவன் போர்டை கீழே தாழ்த்தி, அப்பாடா என்று பெருமூச்சு விட்டான். "உங்களை கண்டுபிடிக்கிற மகத்தான பனி முடிஞ்சது.

    எம்பேர் சுகந்தன். நல்லசிவத்தோட சன். உங்களைக் கூட்டிட்டு வரும்படி அப்பா சொல்லிட்டார். சொல்லிட்டு அவர் பாட்டுக்கு காஞ்சிபுரத்துல கல்யாணம்னு கிளம்பிப் போயிட்டார். முன்னே பின்னே பார்த்திருக்காத உங்களை எப்படி அடையாளம் கண்டுக்கிறது? அதான் அட்டையைத் தூக்கிக்கிட்டேன். தப்பில்லையே?"

    நோ...நோ... நீங்க என்னைக் கூப்பிட வந்ததுக்காக ரொம்பவும் நன்றி புறப்படலாமா? வகுளா சொல்ல - வித்யாஷங்கர் குறுக்கிட்டான்.

    ஒரு நிமிஷம், மிஸ்டர் சுகந்தன்.

    சுகந்தன் அவனை ஏறிட்டான். எஸ்.

    நான் ஒண்ணு கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?

    கேளுங்க...

    மிஸ் வகுளா மெட்ராஸ் வர்றது இதுதான் முதல் தடவை. நீங்க நல்லசிவத்தோட சன் சுகந்தன்னு சொல்லி அவங்களை கூப்பிடறீங்க. நீங்கதான் சுகந்தன்னு நான் எப்படி நம்ப முடியும்?

    சுகந்தன் சிரிப்போடு நிமிர்ந்தான்.

    நியாயமான கேள்விதான். நீங்க யார்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    தாராளமாக, எம்பேர் வித்யாஷங்கர். மிஸ் வகுளாவும், நானும் ஒரே கம்பார்ட்மெண்ட்ல வந்தோம். மிஸ் வகுளாவுக்கு மெட்ராஸ் புதுசு. அவங்க கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல கத்தி கத்தி பேசறதை யாராவது கேட்டிருந்தாலும் கூட இப்படி அட்டையோடுதான் வந்து நிப்பாங்க.

    உங்களுக்கு இப்போ என்ன வேணும் வித்யாஷங்கர்?

    உங்க மேலே எனக்கு நம்பிக்கை வரணும். அதர்வைஸ். மிஸ் வகுளாவை உங்க கூட அனுப்ப மாட்டேன்.

    ஒரு கோ- பாசஞ்சர்க்கு இவ்வளவு பொறுப்புணர்ச்சியா? இந்திய நாடே நீ திருந்திக் கொண்டு வருகிறாய் சொன்ன சுகந்தன் சுற்றும் முற்றும் பார்த்து தொலைவில் நின்று கும்பலை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிளை கையசைத்துக் கூப்பிட்டான்.

    கான்ஸ்டபிள் ஓடி வந்தார்.

    அருகே வந்ததும் —

    அட்டென்ஷனில் நின்று நெற்றியில் நான்கு விரல்களைப் பதித்து விறைப்பாய் ஒரு சல்யூட்டை போட்டார். சுகந்தனின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைக்காக பவ்யமாய் காத்திருக்க ஆரம்பித்தார்.

    2

    அன்பான உங்களுக்கு

    பகல் ட்யூட்டி

    பார்க்க

    ஆசையை இருக்கிறது

    இன்னும்

    எத்தனை நாளைக்குத்தான்

    நான் மட்டுமே

    நைட் ட்யூட்டிக்கு.

    - அன்புடன் நிலா.

    வகுளாவும், வித்யாஷங்கரும் ஆச்சரியம் பொங்கிய முகங்களோடு சுகந்தனை ஏறிட்டார்கள். வித்யாஷங்கர் அவசரக் குரலில் கேட்டான். நீங்க...?

    இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் சந்தேகம் இருந்தா இந்த கான்ஸ்டபிளைக் கேட்டு நீங்க கன்பர்ம் பண்ணிக்கலாம்.

    ஸாரி மிஸ்டர் சுகந்தன். நீங்க வகுளாவைக் கூட்டிக் கொண்டு போகலாம். உங்களை யாருன்னு தெரியாம பேசிட்டேன். நான் வர்றேன். ஸீ... யூ... மிஸ் வகுளா.

    சொல்லிக் கொண்டே நகர முயன்ற வித்யாஷங்கரை கையமர்த்தி நிறுத்தினான் சுகந்தன். உங்க பொறுப்புணர்ச்சியை நான் பாராட்டறேன் மிஸ்டர் வித்யாஷங்கர். மெட்ராஸுக்கு முதல் தடவையா வர ஒரு பொண்ணுக்கு அவ கொஞ்சம் ஏமாந்தா என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். தாங்க்யூ வெரிமச் ஃபார் யுவர் கைன்ட் கோவாப்ரேஷன்.

    வித்யாஷங்கர் இருவரிடமும் தலையாட்டிவிட்டு புன்னகையோடு விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான். அவன் நகர்ந்ததும் சுகந்தன் வகுளாவை ஏறிட்டான்.

    என்ன வகுளா, நாம கிளம்பலாமா?

    ம்... நடந்து கொண்டே சொன்னாள். மெட்ராஸுக்கு வந்ததும் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்திட்டீங்க. என்னோட மாமா உங்க ஃபாதரைப் பத்தித்தான் சொன்னாரே தவிர - உங்களைப் பத்தி சொல்லவேயில்லை. நீங்க ஸ்டேஷனுக்கு வந்து என்னை ரிஸீவ் பண்ணினது ஒரு ப்ளஸண்ட் சர்ப்ரைஸ். தேங்க் யூ எ லாட்.

    இன்னிக்கு எனக்கு ட்யூட்டி கிடையாது. காஞ்சிபுரம் கல்யாணத்துக்கு புறப்பட்டுப் போய்ட்டிருந்த அப்பா என்னை எழுப்பி விஷயத்தைப் சொன்னார். வெறுமனே படுத்து தூங்கிக்கிட்டிருக்கிறதுக்கு உங்களை ரிஸீவ் பண்ண வரலாமேன்னு புறப்பட்டேன். வந்த அவசரத்துல என்னோட அடையாள அட்டையைக் கொண்டு வர மறந்துட்டேன். என்மேலே உங்களுக்கு பூரணமான நம்பிக்கை வந்ததா இல்லையா?

    வந்தாச்சு...

    சுகந்தன் ஸ்டேஷன் வாசலில் நின்று, வரிசையில் நின்றிருந்த ஒரு ஆட்டோவைப் பார்த்து கையசைத்தான். அது அருகே வந்தது. டிரைவர் இறங்கி ‘குட்மார்னிங்’ போட்டார்.

    மயிலாப்பூர் போகணும்...

    நம்ம வீட்டுக்குத்தானே ஸார்?

    ஆமா.

    ஏறி உட்கார்ங்க ஸார்.

    சுகந்தனும், வகுளாவும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார்கள். ஆட்டோ பீறிட்டு வேகம் பிடித்ததும் சுகந்தன் கேட்டான். உங்க முழு பேரே வகுளாதானா?

    "நோ... நோ... என்னோட முழுப்பேர் வகுளாம்பிகேஸ்வரி.

    அம்மாவுக்கு ரொம்பவும் பிடிச்ச பேர். ஆனா அவ்வளவு நீளமா யாரும் எம்பேரைச் சொல்லி கூப்பிட மாட்டாங்க. காலேஜிலேயும் சரி, வெளியிலேயும் சரி. என்னை வகுளான்னுதான் கூப்பிடுவாங்க.

    உங்களுக்கு அம்மாவும் அப்பாவும் இல்லேன்னு சொன்னாங்க அப்பா அவங்க எப்போ காலமானாங்க?

    எனக்கு பத்து வயசாயிருக்கும்போதே அம்மாவும், அப்பாவும் ஆறு மாச வித்தியாசத்துல ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் போயிட்டாங்க. பத்து வயசிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு எல்லாமே மாமாதான். என்னோட அம்மாவும், அப்பாவும் உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு நல்ல நிலைமைக்கு என்னை கொண்டு வந்திருக்க மாட்டாங்க.

    நீங்க என்ன படிச்சிருக்கீங்க?

    எம்.எஸ்ஸி. பாடனி.

    லெக்சரர் போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

    ரொம்ப பிடிச்சிருக்கு.

    காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸோட அமளி துமளியை எப்படி சமாளிக்கிறீங்க.

    சில சமயம் அன்பாலே, சில சமயம் அதட்டலாலே.

    கோயமுத்தூர்ல எந்த காலேஜ்ல ஒர்க் பண்ணினீங்க?

    லோட்டஸ் ஆர்ட்ஸ் காலேஜ்.

    அங்கிருந்து ஏன் மெட்ராஸ் காலேஜீக்கு வர்றீங்க?

    அந்த காலேஜ்ல டெம்பரரி போஸ்ட் ஆறு மாசம் இருந்தேன் அப்புறம் டெர்மினேட் பண்ணிட்டாங்க.

    நான் விஷயத்தை வேறு மாதிரி கேள்விப்பட்டேனே?

    எப்படி கேள்விப்பட்டீங்க?

    மயிலாப்பூர் வந்துட்டோம் வீட்டுக்குப் போனதும் காப்பி சாப்பிட்டுக்கிட்டே நான் கேள்விப்பட்டதை சொல்றேன்.

    வகுளா முகம் மாறினாள்

    அவசர அவரசரமாய் நெற்றியில் வியர்த்தாள்.

    ஆட்டோ வீட்டுக்கு முன்னால் நின்றது. ஆட்டோவினின்றும் இறங்கிய சுகந்தன் மீட்டர் பார்த்து சார்ஜைக் கொடுத்துவிட்டு வீட்டின் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனான். வகுளா அவனை தயக்கமாய் பின் தொடர்ந்தாள்.

    பழைய காலத்து வீடானாலும் அதை நவீன மோஸ்தர்க்கு கொண்டு வந்திருந்தார்கள். சுவர்களில் சமீபத்திய டிஸ்டெம்பர் பூச்சு. அதற்கு கரை கட்டின மாதிரி பெயிண்ட் வார்னிஷ் பூசப்பட்ட ஈட்டி மரத் துண்டுகள். ஹாலில் போட்டிருந்த நாற்காலியைக் காட்டினான். சுகந்தன்.

    Enjoying the preview?
    Page 1 of 1