Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paathi Rajyam
Paathi Rajyam
Paathi Rajyam
Ebook160 pages49 minutes

Paathi Rajyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Paathi Rajyam

Read more from Rajeshkumar

Related to Paathi Rajyam

Related ebooks

Related categories

Reviews for Paathi Rajyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paathi Rajyam - Rajeshkumar

    27

    1

    கல்யாணி!

    ம்...

    எனக்கு ஊருக்குப் போக மனசேயில்லை. மானேஜர் வீட்டுக்கு போன் பண்ணி அந்த அஃபிஷியல் டூர்க்கு வேற யாரையாவது அனுப்பும்படியா சொல்லட்டுமா...?

    கல்யாணி, கணவன் ஸ்ரீராமின் ட்ரஸ் செட்டை சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

    என்ன சொன்னீங்க... அஃபிஷியல் டூரை கான்சல் பண்றீங்களா...?

    ஆமா...

    எதுக்கு...?

    உனக்கு உடம்பு முடியாம இருக்கும்போது நான் பக்கத்துல இருக்க வேண்டாமா...?

    கல்யாணி சோகையாய் சிரித்தாள். இன்னைக்கு நேத்தா எனக்கு உடம்பு சரியில்லாமே இருக்கு... நாலைஞ்சு வருஷமா ரிப்பேரான டைம்பீஸை வைச்சுகிட்டு மாரடிக்கிற மாதிரி தகராறு பண்ணிட்டிருக்கிற இதயத்தோடு நாட்களை ஓட்டிக்கிட்டிருக்கேன்...

    கல்யாணி...

    நீங்க எனக்காக உங்க அஃபீஷியல் டூரை கான்ஸல் பண்ண வேண்டாம்... ரெண்டு நாள்தானே! சமாளிச்சுக்கிறேன்...

    வேளா வேளைக்கு மாத்திரைகளை மறக்காமே சாப்பிடணும்...

    பக்கத்து வீட்டு அபிராமி மாமி உள்ளே வந்தாள். இதோ பார்... ஸ்ரீராம், கல்யாணியைப் பத்தி கவலைப்படாமே நீ போய்ட்டு வா... அவ எம் பொண்ணு மாதிரி... வேளா வேளைக்கு மாத்திரை சாப்பிட்டாளா.. டானிக் சாப்பிட்டாளா... சாப்பாடு சாப்பிட்டாளான்னு பார்த்துக்க வேண்டியது என்னோட வேலை...

    தாங்க்ஸ் மாமி... நீங்களும் பக்கத்து வீட்டு நாயுடு அங்கிளும் இருக்கிற தைரியத்துலதான் கல்யாணியை விட்டுட்டு அஃபீஷியல் டூர் போறேன்...

    நீ போய்ட்டு வாப்பா... அக்கம் பக்கத்துல மனுஷாள் இருக்கிறது எதுக்காக... அஞ்சும் பத்தும் கடன் வாங்கறதுக்காக மட்டும் இல்ல.. சமயத்துல ஒத்தாசை பண்ணவும் தான்...

    மாமி...

    சொல்லு...

    கொஞ்சம் சிரமம் பார்க்காமே... ஒத்தாசையோடு ஒத்தாசையா...

    என்ன பண்ணனும் சொல்லு...

    நாளைக்குக் காலையில எட்டு மணி சுமார்க்கு டாக்டர் பெரியசாமிகிட்டே கல்யாணியை கூட்டிகிட்டு போகணும். அஞ்சு நிமிஷ வேலைதான்... அவர் கல்யாணிக்கு ஒரு இஞ்செக்ஷனைப் போடுவார்...

    அவ்வளவுதானே.. நான் கூட்டிட்டு போய்ட்டு வந்துடறேன்...

    ரொம்பவும் தாங்க்ஸ் மாமி...

    தாங்க்ஸெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்தாதே... கல்யாணி என் வயித்துல பொறக்காத பொண்ணு... உனக்கு பஸ் எத்தினி மணிக்கு...?

    பத்தரை மணிக்கு...

    மணி ஒன்பதரை ஆயிடுச்சே.. இப்பவே நீ கிளம்பிப் போனாத்தானே சரியா இருக்கும்...

    போகவே மனசில்லை மாமி...

    புலம்பாதே. கிளம்பு.. பெங்களூர்தானே?

    ஆமா...

    பத்தரைக்கு பஸ் ஏறினா நாளைக்குக் காலையிலே எத்தனை மணிக்கு பெங்களூர் போய் சேரலாம்...

    விடிகாலையிலே அஞ்சுமணிக்கெல்லாம் போயிடலாம்.

    ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவியோல்லியோ?

    பின்னே வராமே.. ஆபீஸ் சம்பந்தமா ரெண்டே ரெண்டு முக்கியமான வேலைதான்... முடிச்சதுமே பஸ் ஏறிடுவேன்...

    சூட்கேஸை அறைந்து சாத்தி லாக் செய்த ஸ்ரீராம் கல்யாணியின் கன்னத்தை மெள்ளத் தட்டினான்.

    அப்படீன்னா நான் தைரியமா பெங்களூர் போகலாம்?

    கல்யாணி சிரித்தாள்.

    தாராளமா...

    சரி. எனக்கு விபூதி வெச்சு விடு...

    கல்யாணி பக்கத்தில் இருந்த பூஜையறைக்குப் போய் விபூதி பொட்டலத்தைக் கொண்டு வந்து ஆட்காட்டி விரலில் தொட்டு நெற்றிக்கு இட்டாள்.

    என்னைப் பத்தி கவலைப்படாமே போய்ட்டு வாங்க. வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க...

    ம்.. ம்...

    ஸ்ரீராம் சூட்கேஸை எடுத்துக் கொண்டான். ஸ்ட்ரீட் கார்னர்க்குப் போய் ஆட்டோ பிடிச்சு போயிடறேன்...

    கல்யாணியின் கன்னத்தை மறுபடியும் மெள்ள தட்டிவிட்டு மாமியிடம் சொல்லிக் கொண்டு வாசற்படி இறங்கினான்.

    நான்கைந்து குடித்தனங்கள் கொண்ட குடியிருப்பு பகுதி அது.

    அவனுடைய தலை மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்த அபிராமி மாமி கல்யாணியிடம் திரும்பினாள்.

    ஸ்ரீராம் மாதிரி ஒரு நல்ல புள்ளையாண்டான் உனக்கு புருஷனா அமைந்தது போன ஜென்மத்துல நீ பண்ணின புண்ணியம்.

    கல்யாணியின் கண்களில் நீர் பளபளத்தது.

    சந்தேகமேயில்லை மாமி... நோயாளியாயிட்ட என்னால அவர்க்கு எந்த சுகமும் இல்லாமே போனாலும், ஒரு நாள் கூட அதுக்காக அவர் வருத்தப்பட்டது கிடையாது. ஒரு குழந்தையைப் பார்த்துக்கற மாதிரி என்னைப் பார்த்துக்குவார்... கோபமே வராத அவர்க்கு எப்போ கோபம் வரும் தெரியுமா மாமி... நான் மாத்திரை சாப்பிட மறந்துட்டாத்தான் அந்த கோபம் வரும்...

    மாமி சிரித்தாள்.

    எனக்கு தெரியாதா என்ன... நான்தான் அனுதினமும் பார்த்துட்டிருக்கேனே...!

    பெத்த அம்மா அப்பா கூட இவ்வளவு அனுசரணையா என்னைப் பார்த்துக்க மாட்டாங்க...

    எனக்கு தெரியாதா என்ன?

    நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க மாமி... நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு கரண்ட் திடீர்ன்னு போயிடுச்சி. உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?

    ம்... இருக்கு...

    கரண்ட் திடீர்ன்னு போனதுமே ஃபேன் காத்து இல்லாமே புழுக்கத்தாலே என்னோட உடம்பு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சுடுச்சி. அவர் என்ன பண்ணினார் தெரியுமா மாமி..!

    சொல்லு...

    ஒரு அட்டையை எடுத்துட்டு வந்து எனக்கு வீச ஆரம்பிச்சுட்டார். காத்து பட்டதுமே நான் தூங்க ஆரம்பிச்சுட்டேன். வீசறதை நிறுத்திட்டா... என்னோட தூக்கம் எங்கே கலைஞ்சிடுமோன்னு நினைச்சு ராத்திரி ஒரு மணி வரைக்கும்... அதாவது மறுபடியும் கரண்ட் வர்ற வரைக்கும் எனக்குப் பக்கத்துல உட்கார்ந்துட்டு வீசிட்டே இருந்திருக்கார்...

    அடப்பாவமே! தோள்பட்டை என்னாறது?

    ரத்தம் கட்டிகிட்டு கஷ்டப்பட்டாரே.. வெந்நீர் ஒத்தடம் கொடுத்ததும்தான் சரியாச்சு...

    எல்லாப் பொண்களுக்கும் இப்படி அமையணுமே... அபிராமி மாமி சொல்லிக் கொண்டே சேலை மடிப்பில் மறைத்து வைத்திருந்த டம்ளரை வெளியே எடுத்தாள் மெள்ள.

    கல்யாணி...

    என்ன மாமி...?

    "வீட்ல பால் ஆய்டுச்சி.. ஒரு டம்ளர் பால் கிடைக்குமா...? மாமாவுக்கு பூண்டு போட்டு காய்ச்சித்

    Enjoying the preview?
    Page 1 of 1