Nimishathukku Nimisham
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nimishathukku Nimisham
Related ebooks
Uyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsFebuary - 30 Rating: 3 out of 5 stars3/5Sinnaj Siru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Sila Pulligal and Sivappu kavithai Rating: 5 out of 5 stars5/5Saththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Maandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Parappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Last Bullet Rating: 0 out of 5 stars0 ratingsKannimaika Neramillai! Rating: 5 out of 5 stars5/5Roja Mul Kireedam Rating: 4 out of 5 stars4/5Astami Ratthirigal Rating: 4 out of 5 stars4/5Iruttai Thedi Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5Ratthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Thurogam Rating: 5 out of 5 stars5/5Ootha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20 Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsAnthamaan Abaayam Rating: 0 out of 5 stars0 ratingsKashmeeril Oru Karuppu Naal Rating: 5 out of 5 stars5/5Muththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Oru Chinna Missdeath Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Nimishathukku Nimisham
0 ratings0 reviews
Book preview
Nimishathukku Nimisham - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
ஏராளமான புகையோடும், அழுக்கோடும் வந்து நின்ற கூடலூர் பஸ்ஸிலிருந்து சோர்வாய் இறங்கினார்கள் வெங்கடேஷம் பத்மாவும்.
அந்த மத்தியான நேரத்திலும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சுறுசுறுப்பாய் இருந்தது. ஜனங்கள் மூட்டை முடிச்சுகளோடு விதவிதமான பஸ்களில் அடைபட்டுக் கொண்டிருந்தார்கள். டேப் ரிக்கார்டர் வைத்த திருப்பூர் பஸ்ஸிலிருந்து மன்மதராசா... மன்மதராசா...
என்று பாட்டு பீறிக் கொண்டிருக்க... பஸ் ஓரமாய் நின்றிருந்த கண்டக்டர் தோல் பையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு - வாயில் பீடியை வைத்துக் கொண்டு சோமனூர்... அய்யற்கோயில்... திருப்பூர்...
என்று கத்திக் கொண்டிருந்தார். டிரைவர் ஷெல்டர்க்கு கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பக்கத்து புஸ்தகக் கடையிலிருந்து ஓசி வாங்கிய ‘பக்கத்து வீட்டு பைங்கிளி' என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலிருந்து அப்ஸரா தியேட்டரில் ஹவுஸ் புல் போர்டு தொங்க டிக்கட் கிடைக்காதவர்கள் சந்தோஷமாய் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
வெங்கடேஷும், பத்மாவும் பஸ் ஸ்டாண்டை தாண்டினார்கள்.
அண்ணா...
பத்மா கூப்பிட்டாள்.
என்ன பத்மா...?
நாலு மணிநேரம் அந்த ஓட்டை பஸ்ஸுல வந்தது... ஒரே தலைவலி... கெளரி சங்கர்ல காபி சாப்பிட்டு போலாமேண்ணா...
"உனக்கு காப்பி சாப்பிடணும் அவ்வளவுதானே... வா... போலாம்... வெங்கடேஷ் ரோட்டின் பக்கவாட்டில் தெரிந்த கெளரி சங்கர் கட்டிடத்தை நோக்கிப் போனான். பத்மா தொடர்ந்தாள். அவளுடைய நெற்றிப் பொட்டின் இரண்டு பக்கங்களிலும் முக்கியமான நரம்புகள் வலியில் பம்மிக் கொண்டிருந்தன. ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். சுவரோர மேஜையை தேர்ந்தெடுத்து - போய் உட்கார்ந்தார்கள்.
ஏதாச்சும் சாப்ட்றியா பத்மா...?
வேண்டாண்ணா... காப்பி மட்டும் போதும்... வந்து நின்ற வெயிட்டரிடம்
இரண்டு காப்பி..." என்றான் வெங்கடேஷ்.
வெயிட்டர் காப்பி கொண்டு வருவதற்குள் வெங்கடேஷ் பத்மாவைப் பற்றி சொல்ல வேண்டும்.
வெங்கடேஷுக்கு வருகிற பிப்ரவரி ஏழாந்தேதி வந்தால் முப்பது வயது முடிகிறது. வயசுக்கேற்ற உடம்பு வாகு இல்லாமல் கெச்சலாக இருந்தான். மாநிறம். அந்த முப்பது வயசிலே தலை முன்பக்கம் மயிர் மெலிந்து வழுக்கையை வாங்கியிருந்தான். அப்பா, அம்மா இறந்த பிறகு அவர்கள் விட்டுச் சென்ற பத்மாவை வளர்த்து கோயமுத்தூர் காலேஜ் ஒன்றில் பி.எஸ்.ஸி. வரைக்கும் அவளைப் படிக்க வைப்பதற்குள் திணறிப்போனான்.
வெங்கடேஷுக்கு உத்தியோகம் கூடலூர் டீ எஸ்டேட்டில் சூபர்வைஸர், எஸ்டேட் ஓனர் அற்புதராஜ், அடிமாட்டுத்தனமாய் அவனிடம் வேலைகளை வாங்கிக் கொண்டு மாசம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். கார்குடி போகும் ரோட்டில் - ஐந்நூறு ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியிருந்து நாட்களை தள்ளிக் கொண்டிருந்தான். படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் உட்கார்ந்திருக்கும் பத்மாவுக்கு சீக்கிரமே ஒரு கல்யாணத்தையும் முடிக்க வேண்டுமென்று ஆசைப்பட ஆரம்பித்திருந்தான். வாரத்தில் ஏதாவது ஒரு நாள் கோயமுத்தூர் வந்து தேயிலை வியாபாரிகளிடம் பணத்தை கலெக்ட் பண்ணிக் கொண்டுபோவது வெங்கடேஷின் உத்யோகத்தில் ஒரு அங்கம்.
பத்மாவுக்கு ஓட்டுப் போடும் வயது. செத்துப்போன அம்மாவின் தாழம்பூ நிறம் அவளுக்கு. எந்தக் கோணத்தில் உட்கார்த்தி வைத்துப் பார்த்தாலும் அழகாகத் தெரிவாள். அண்ணன் வெங்கடேஷின் மேல் அபார பாசம். பி.எஸ்.ஸி. டிகிரியை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழிப்பவள். சில சமயங்களில் கோபம் வந்து என்னை ஏண்ணா... பி.எஸ்.ஸி. படிக்க வெச்சே... படிக்க வெக்காம இருந்திருந்தாவது தலையில கூடையை கவுத்துக்கிட்டு தேயிலை பறிப்புக்கு போயிருப்பேன்... இப்போ படிச்சுட்டு அதுக்கும் போக முடியலை. வேலையும் கிடைக்கலை என்று புலம்புவாள். அண்ணன் வெங்கடேஷ் கோயமுத்தூர் வரும்போதெல்லாம்
நானும் உன் கூட வர்றேண்ணா. நீ கலெக்ஷனை முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே நான் என்னோட ப்ரெண்ட் சுசீயைப் பார்த்துட்டு வந்துடறேன்" என்று சொல்லிக் கிளம்புவாள்.
சர்வர் காப்பியோடு வந்தான். ஒரு காப்பியை தன் பக்கமாக நகர்த்தி வைத்துக் கொண்ட வெங்கடேஷ் டபராவை டம்ளரினின்றும் பிரித்து காப்பியை ஆற்றிக் கொண்டே கேட்டான்.
பத்மா... உன்னோட ப்ரெண்ட் சுசீயைப் பார்த்துட்டு எத்தனை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வருவே...? போனவாட்டி மாதிரி லேட் பண்ணிடக் கூடாது.
பத்மா தன் மணிக்கட்டிலிருந்த வாட்சைப் பார்த்துவிட்டு புன்னகையோடு சொன்னாள்.
அண்ணா... இப்போ மணி பதினொன்னு பத்து... சரியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடறேன்.
அதுக்கு மேல லேட் பண்ணிடமாட்டியே?
மாட்டேண்ணா
வெங்கடேஷ் சிரித்தான்.
ஏம்மா, பத்மா... நீ ஒவ்வொரு வாரமும் என் கூட வர்றப்போ அந்த தோழி சுசீயைப் பார்க்கப் போறே... ஆனா அந்தப் பொண்ணு ஒரு தடவை கூட நம்ம ஊருக்கு வந்ததில்லையே... ஏம்மா...?
பத்மா காப்பியை ஒரு வாய் உறிஞ்சிவிட்டு சொன்னாள்.
நான்தான் ஏற்கெனவே உனக்கு சொல்லியிருக்கேனே அண்ணா... அவ வேலை செய்யற கம்பெனி ஒரு தனியார் கம்பெனி... ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேர வேலை... அத்யாவசியமான தேவைகளுக்குத் தவிர மத்ததுக்கு லீவு தர மாட்டாங்களாம்...
ஞாயித்துக்கிழமையில நம்ம ஊர்க்கு வரலாமே...?
ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான் எனக்கு ரெஸ்ட்... அன்னிக்கு நான் பஸ்ஸுல வந்து அலையணுமா பத்மா... நீதான் எப்படியும் வாரத்துல ஒருநாள் வந்துடறியே...? நீ வந்து பார்த்தா என்ன... நா வந்து பார்த்தா என்னன்னு சொல்றா...
அந்த சுசீ ரொம்ப கெட்டிக்கார பொண்ணுதான்...
இருவரும் காப்பியைக் குடித்து முடித்து - வெளியே வந்தார்கள். வெய்யில் கண்களைச் சுருக்கியது. க்ராஸ்கட் ரோட்டில் போக்குவரத்து உச்சத்தில் இருந்தது.
"சரியா ரெண்டு மணிக்கு வந்துடு