kadhal Regai
5/5
()
About this ebook
Read more from Anuradha Ramanan
Velvet Manasu Rating: 5 out of 5 stars5/5Kanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Uravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5Neeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Agini Ambugal Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Oru Nadaipaathai azhugiradhu Rating: 5 out of 5 stars5/5Kadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Kana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Koottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Maalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5
Related to kadhal Regai
Related ebooks
Thaai Paravai Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Thendral Vanthu Ennai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Naalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsImsaigal Rating: 0 out of 5 stars0 ratingsNesamey Narumana Pookkalaai...! Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Poo Parikka Ithanai Naala Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsPallavi Anupallavi Maranam Rating: 0 out of 5 stars0 ratingsNathiyilla Odam Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5Malarukku Thendral Pagaiyaanaal Rating: 0 out of 5 stars0 ratingsMugam Paarkkum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire... Nee Enge! Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaatha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsAntha Nenjam Ennidam Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5
Reviews for kadhal Regai
1 rating1 review
- Rating: 5 out of 5 stars5/5very nice story read with full heart i was really wishing for the authour to compleate the story in this way only . I would have wept if she has made prem to marry shruthi very well ending
Book preview
kadhal Regai - Anuradha Ramanan
8
1
"உன் கையிலே ‘வீனஸ் லைன்’ பிரமாதமா ஓடுதுடா... கவலையே படாம நீ யாரை வேணுமானாலும் காதலிக்கலாம்..."
பிரேமின் உள்ளங்கையில் அடித்துச் சொன்னான் வெங்கட்.
நிஜமாவாடா?
பின்னே பொய்யா சொல்றேன்?
சத்தியமா...?
எங்கே கற்பூரம் கொளுத்தி அணைக்கட்டும்...?
யாருடா இவன்.. எப்பப் பார்த்தாலும், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணியின்னு.. என்கிட்ட சிகரெட்டும், லைட்டரும்தான்டா இருக்கு...
பிரேம் வெங்கட்டின் முதுகில் ஓங்கித் தட்டினான்.
பூஞ்சை உடம்பு வெங்கட்டுக்கு வலித்தது. ஆனாலும் கண்ணில் நீர் மல்கச் சிரித்தான்.
எங்கப்பா சொல்லித்தான் இன்னிக்கு உங்கப்பா ‘ஓஹோ’ன்னு எல்லாராலேயும் பேசப்படற மியூசிக் டைரக்டரா வந்திருக்காரு.. அது ஞாபகமிருக்கில்லே?
அது உங்கப்பாடா.. ஜீனியஸ்.. வச்ச புள்ளி தப்பாது. எத்தனை வருஷம் அனுபவம். நீ என்ன.. நேத்து வரைக்கும் ஃபீடிங் பாட்டில்லே பால் குடிச்சிட்டிருந்த பப்பா...
அதெல்லாம் இல்லே. நான் சொன்னது நடந்ததுன்னா எனக்கு என்ன தர்றே?
அல்பம். கேட்கறதே பிச்சை எடுக்கற மாதிரி இருக்கு. ‘எனக்கு இது வேணும்’னு ஆர்டர் பண்ணி வாங்கிக்கணும் நீ.. சொல்லு. என்ன வேணும்...
பிரேம் இப்படிக் கேட்டதும் ‘சட்’டென எதுவும் சொல்ல முடியவில்லை வெங்கட கிருஷ்ணனால்.
என்னவென்று கேட்பான்?
நேற்று பாண்டி பஜாரில் டீ ஷர்ட் பார்த்துப் பொறுக்கி விட்டு, கையில் சில்லறை குறைந்ததால் ‘கம்’மென்று வந்து விட்டான்.
‘அந்த ‘டீ ஷர்ட்’டுகளை வாங்கித் தரச் சொல்லலாமா’ - என்று ஒரு கணம் நினைத்தான்.
பிரேமின் அப்பா சிவராமன் - வெங்கட்டின் தந்தைக்கு கழுத்துக்குச் சங்கிலி வாங்கிப் போட்டு கௌரவித்தார். பொன்னாடை போர்த்தி, தோளோடு சேர்த்து அணைத்தபடி போஸ் கொடுத்து, புகைப்படம் எடுக்கச் சொல்லி, தினசரிகளில் எல்லாம் வெளியிட்டார்.
இன்னும் கூட எவ்வளவோ செய்வார்தான். ஆனால், பாலுவுக்கு அதெல்லாம் பிடிக்காது.
காசு வாங்கிக் கொண்டு ஜோதிடம் சொல்வது பாவம் என்பது அவர் கருத்து. ஆனாலும் வீட்டு நிதி நிலைமை.. எத்தனை வந்தாலும் போதாத வறுமை.. ஏதோ ஒரு தொத்தல் கம்பெனியில் கணக்கெழுதி, போன வருடத்தோடு ஓய்வு பெற்றவர். மாதச் செலவுக்காக, தன்னிடம் நீளும் கைகளை எல்லாம் உற்று உற்றுப் பார்த்து பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது அப்பாவுக்கு உதவும் சாக்கில் அவனும் இந்தக் கலையைப் படித்திருக்கிறான். ஆனால், அவர் இவனை அதிக நேரம் அங்கே இருக்க விடாமல் விரட்டிக் கொண்டே இருப்பார்.
என்னடா. இங்கேயே ஆணி அடிச்ச மாதிரி நின்னுட்டே? நாளைக்கு எக்ஸாம் இருக்கு இல்லே.. போய்ப் படி...
நீ படிப்பை முடிச்சிட்டு வந்தாத்தான் வெங்கட கிருஷ்ணா... என் சுமை கொஞ்சம் இறங்கும்... புரியறதா?
எப்பவும் அந்தப் பாட்டுக்காரர் பையன் பிரேம் கூடவே சுத்திட்டிருக்கியாமே.. அடேய், அவன் படிக்கலையின்னாலும் அவன் அப்பன் தேடி வச்ச சொத்து ஏழு தலைமுறைக்கு வரும். உனக்கு அப்படியில்லே... பெரியவ கல்யாணம் மட்டும்தான் என் காலத்துல முடிக்க முடிஞ்சது. இன்னும் ப்ரியாவும், சங்கரனும் இருக்காங்க. நீதான் பார்த்துக்கணும்...
‘பிரேம் மகாபலிபுரத்துக்கு கூப்பிட்டான். போயிட்டு வந்தேன்’னு சொல்றியே.. வெட்கமா இல்லையாடா உனக்கு? அவன் பணக்காரன்டா.. அவனோடு சேர்ந்து குதிக்காதே.. ஆமா... சொல்லிட்டேன்.
அப்பாவைப் பற்றி நினைத்ததுமே வரிசையாய் அவர் கூறும் வார்த்தைகளும்...
நீங்க நினைக்கிற மாதிரி பிரேம் ஒண்ணும் கெட்டவனில்லேப்பா. என்ன... கொஞ்சம் வெளிப்படையா பேசுவான். அதுவே மத்தவங்களை மிரள வச்சுடும். அவ்வளவுதான். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்.
இப்படிச் சொல்ல வேண்டும் என்று அடிக்கடி வெங்கட் நினைப்பது உண்டு. ஆனாலும், அப்பாவின் எதிரில் நிற்கும்போது சப்தநாடியும் ஒடுங்கி விடும். ‘எப்படா பேச்சை முடிப்பார். நாம இங்கேயிருந்து கிளம்பி ஓட்டம் பிடிக்கலாம்...’ - இதுவே சிந்தனையாக இருக்கும்.
அப்பாவிடம் இருப்பது போலவே ஒரு வித பயம் கலந்த அன்பு - அப்பாவின் வேலை.. புத்தகச் செலவு, டியூஷன் செலவு - என்று சகலமும் பிரேம்தான்.
அது அவன் குணம்.
தன் ஒருவனுக்காக மட்டும் எதையும் செய்துகொள்ளத் தெரியாத சுபாவம்.
டேய், ஷேக்ஸ்பியர் இன் லவ்... நாலு டிக்கெட் வாங்கியிருக்கேன்... கிளம்புங்கடா...
ஆமா.. என்ன மச்சீ.. நேத்து மவுண்ட் ரோடுல ஒரு ஃபிகரோட உலகையே மறந்து ‘கேட் வாக்’ போயிட்டிருந்தியே.. என்ன சமாச்சாரம்... எங்க கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா.. நாங்களும் சேர்ந்து வந்திருப்போம் இல்லே...
என்னடா இவன்.. ஒரு ஸ்குரூ டிரைவருக்கே சாய்ஞ்சிட்டான். கிரைப்வாட்டர் குடிக்கிற குழந்தைகளை எல்லாம் எதுக்குடா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வர்றீங்க...
டேய் வெங்கி.. பேய் முழி முழிக்காதே.. இப்ப என்ன.. லேட்டானது ஆயிடுச்சு. எப்படியும் வீட்டுக்குப் போனதும் உங்க அப்பனோட அர்ச்சனையைத் தவிர்க்க முடியாது.. மொத்தமா சேர்த்து முதுகுல டின் கட்டிக்க.. உனக்காகப் பரிஞ்சு பேச நாங்க எல்லாரும் வருவோம். ஆனா ‘ஸ்மெல்’ காட்டிக் கொடுத்துடும். அதுவும் இந்த மாமா மல்லிகார்ஜூனன் இருக்கானே... கண் காது தெரியாம விஸ்கிய கழுத்து மட்டும் ரொப்பிட்டிருக்கான்டா.. தண்ணியக் கண்டா இப்படியா பாயறது.. நிலை நீச்சு இல்லே...? இவனை எழுப்பி, குளிப்பாட்டி, தலை சீவி, பவுடர் போட்டு, செண்ட் அடிச்சு வீட்டுக்குக் கொண்டு போய் விடணும்.. நீ பத்திரமாய் போவியா...?
இப்படிக் கேட்டதுடன் நிற்க மாட்டான். வெங்கட், வீடு போய் சேர்ந்து அப்பாவிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டு மரம் மாதிரி நிற்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு தொலைபேசியில் அழைப்பான்.
வெங்கட் அண்ணா.. உனக்கு போன் வந்திருக்காம்.
நடு நிசி பன்னெண்டு மணிக்கு எவன்டா போன்.. அந்தத் தடியனா?
அப்பாவின் கேள்விக்கு பொடியன் சங்கரனின் மிகச் சாமர்த்தியமான பதில்:
இல்லேப்பா. இவன் கிளாஸ் புரபசராம்.. அவரோட புஸ்தகம் ஏதோ ஒண்ணு இவன் கிட்ட இருக்காம். அதான் கூப்பிடறார். டேய் அண்ணா.. சீக்கிரம் போடா.
இவன் தட்டுத் தடுமாறி, கூடத்தில் போட்டிருக்கும் பாயில் தடுக்கி விழுந்து எழுந்து, பக்கத்து வீட்டுக்கு ஓடி...
டேய் மடையா.. நான்தான்டா.. பிரேம். பத்திரமாப் போய் சேர்ந்தியா.. ரொம்ப நேரம் அப்பா முன்னாடி நிற்காதே.. உள்ளே போய் ஒரு துண்டு எலுமிச்சம்பழத்தை எடுத்து நாக்குல தேய்.. போதை தெளிஞ்சிடும். காலையில் பார்க்கலாம்... குட் மார்னிங்... என்ன முழிக்கறே.. மணி இப்ப பன்னெண்டு பத்து...
யார் எப்படி சொன்னாலும் வெங்கட்டுக்குப் பிரேமைப் பிடிக்கும். படிப்பில் மட்டும் ஏனோ தானோவென்றிருக்கும் பிரேம் மற்ற எல்லா விஷயங்களிலும் படு சூட்டிகை...
கல்லூரியில் எப்போதுமே இவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.
பிரபல இசையமைப்பாளர் சிவராமன் இல்லே.. அவரோட ஒரே மகன்...
பய பிற்காலத்துல அப்பனை மிஞ்சிடுவான் சார்.. பார்த்துட்டே இருங்க.. காலேஜ் ஹீரோ இவன்தான்.
இந்தத் தடவை இன்டர் காலேஜ் காம்படிஷன்லே லைட் மியூசிக்லே இவன்தான் ரோலிங் கப்பை வாங்கினானாம். பிரமாதமாப் பாடறான்யா...
"அது மட்டுமில்லே...