Paarvai Ondre Podhume
By R.Geetharani
4/5
()
About this ebook
Read more from R.Geetharani
Pichipoove Mella Vanthu Killi Po Rating: 4 out of 5 stars4/5Kannaththil Muththamittaal Rating: 0 out of 5 stars0 ratingsMuththangal Theernthu Vidumo Rating: 5 out of 5 stars5/5Ini Ellaam Sugame Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Unnai Kanatha Kannum Kannala Rating: 4 out of 5 stars4/5Anbil Vantha Raagame Rating: 5 out of 5 stars5/5Seer Kondu Vaa Venmagame Rating: 4 out of 5 stars4/5Vanna Poochchudava Vennila Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Puthithanathu Rating: 4 out of 5 stars4/5Nettruvarai Nee Yaro GR Rating: 0 out of 5 stars0 ratingsUnai Paarththa Kangal Rating: 0 out of 5 stars0 ratingsVaanamazhai Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsMalarnthum Malaraatha Rating: 0 out of 5 stars0 ratingsManasaiththadi Manikkuyile Rating: 4 out of 5 stars4/5Panthaya Kuthiraikal Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kiligal Tholodu Rating: 4 out of 5 stars4/5Sella Kiliye Mella Pesu Rating: 4 out of 5 stars4/5Mevum Viral Naanunakku Rating: 0 out of 5 stars0 ratings
Related to Paarvai Ondre Podhume
Related ebooks
Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Amutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsVannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratingsVishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Nee Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Kandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Poove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Kaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Vaasamillaa Malarithu Rating: 5 out of 5 stars5/5Sirithenum Nesithirukkalam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nappinnai Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsபேராசை! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paarvai Ondre Podhume
1 rating0 reviews
Book preview
Paarvai Ondre Podhume - R.Geetharani
16
1
கறுத்த கம்பளிப் போர்வை விரிப்பாய் படர்ந்திருந்த கொன்றை மரத்தின் கீழாக ரத்னமாலா தன் அருகில் அமர்ந்திருந்த ஆகாஷை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். இவன்தான் எத்தனை அழகு! செவ்வரியோடிய வெள்ளை விழிகளின் கருநிற பாப்பா அசைவுறும் காந்தத் தன்மை ஒன்றே காதலாய் இவன் காலடியில் தன்னை கட்டி வீழ்த்தியிருக்கிறதோ என்று அவனின் விழியசைவைக் காணும் பொழுதெல்லாம் தோன்றும். இன்று... ஏனோ அந்த விழியசைவில் ஒரு சலனம். அதை அவளிடம் எப்படித் தெரிவிப்பது என்ற மனப்போராட்டமாக அமர்ந்திருந்தவனின் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள்.
ஆகா...ஷ்... என்ன சிந்தனை? என்னை வரச் சொல்லிட்டு இப்படி வெறுமே ஆகாசத்தைப் பார்த்துட்டிருந்தா என்ன அர்த்தம்? ம்...?
மென்மையாய் வினவினவளாய் அவனது சிவந்த விரல்களை தன் மடி மீது எடுத்து வைத்துக் கொண்டு மெல்ல வருடி விட்டாள்.
ம்... சாதாரணமான ஒருத்தனை உன் தகுதிக்கு மீறி காதலிக்கிறியோன்னு என் சிந்தனை..!
இந்த சிந்தனை மூணு வருஷத்துக்கு முன்னமே வந்திருக்கணும். இப்போ வந்து என்ன புண்ணியம்? வானத்தை வில்லா வளைச்சுடுவேன், கயித்தை மணலா திரிச்சுடுவேன்னெல்லாம் காதல் வசனம் பேசினீங்களே... உருப்படியாய் ஒரு வேலை தேடிக்க முடியுதா..?
ம்... வேலை தேடிக்க முடியாதவன்தான் நான். ஒப்புக்கறேன். நீ உன் வழியிலே போய்க்கோ. நான் என் வழியிலே போய்க்கிறேன்...
இதைச் சொல்லத்தான் வரச் சொன்னீங்களா ஆகாஷ்..?
ம்ஹ்... தெரிஞ்சோ தெரியாமலோ விரும்பிட்டேன். ஆனால் வாழ்க்கையை அமைச்சுக்கிற அளவுக்கு என்கிட்டே பொருளாதார பலம் இல்லை. போதுமான அளவு படிப்பறிவு இல்லாததால ஆயிரத்தெட்டு படி ஏறி ஏறி இறங்கறதா இருக்கு.
முயற்சி செய்துதான் முன்னேறணும். அதுக்காக வாழ்க்கையை குறை சொல்லிட முடியுமா?
வெறுங்கைய வெச்சு முழம் போடச் சொல்றியா ரத்னா? இது பதினாறாம் நூற்றாண்டோ, பதினெட்டாம் நூற்றாண்டோ இல்லை. இருபத்தியோராம் நூற்றாண்டு. மனுஷனையோ, மனசையோ பார்க்கிற மனசு மிகக் குறைவு. பணம்! பணம்தான் பெரிய ஆதார சுருதியா ஒவ்வொரு நிமிஷமும் மனுஷனை இயக்கிட்டிருக்கு. உள்ளே இருக்கிறது எதுவோ, அதுவே வெளியேன்னு எந்த மனுஷனையும் பார்க்க முடியலை. வயித்துப் பாட்டுக்கே அலைமோதலா இருக்கிற வாழ்க்கைச் சுழற்சியில உன்னையும் என் வாழ்க்கையோட பிணைச்சுக்கிறதுங்கறது என்னால முடியாத காரியமாப் படுது. அதனாலதான் சொல்றேன்... நீ உன்னோட தகுதிக்கு ஏற்ற இடமா, உங்கம்மா பார்த்திருக்கிற வரனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட எதிர்காலத்துக்கு நல்லது..!
ம்... இதை சொல்லத்தான் வந்தீங்களா..?
விழிகளில் நீர் திரண்டு விட்டிருந்தது ரத்னமாலாவிற்கு. புறங்கையால் துடைத்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள்.
வாழ்க்கையை போராடி ஜெயிக்கணும்ன்ற ஒரு எண்ணம் ஏன் வரலை ஆகாஷ் உங்களுக்கு? என்னை என் வழியில போகச் சொல்றதுக்கா இத்தனை நாள் விரும்பினீங்க? உங்க மனசுல முழுமையா நானில்லை. அதான் எப்படியாவது உதறிட்டுப் போகணும்னு இப்படி எல்லாம் பேசறீங்க..!
முழுமையா நீ நிறைஞ்சிருக்கிற ஒரே காரணத்தினாலதான் ரத்னா இப்படிப் பேசறேன். மேல்தட்டு வர்க்கத்துல பிறந்து வளர்ந்துட்ட உன்னால வானமே கூரையாகவும், வாய்ச்சதே வயித்துக்குப் பிரசாதமாவும் வாழ்ந்துட்டு இருக்கிற என் வாழ்க்கைத் தரத்தோட இணைஞ்சு போறது இப்போதைக்கு சரியா இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில ஜீரணிக்க முடியாத அளவு ஒரு துயரத்துல போராட்டமா கொண்டு நிறுத்திடும் ரத்னா..! எல்லாத்தையுமே நான் தீர யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு நான் வந்ததே...
ம்... இதுதான் உங்க முடிவுன்னா... என் முடிவு விபரீதமாத்தான் இருக்கும் ஆகாஷ்! நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. பணம்தானே உங்களையும் என்னையும் பிரிக்கக் கூடிய பெரிய ஆயுதமா குறுக்கே நிக்குது. நான் எங்கம்மா கிட்டே இன்னைக்கே பேசறேன்...
பேசி...? ம்ஹ்... நடக்கிற காரியமா ரத்னா? தி கிரேட் ஒன் டாக்டர் வசுந்தரா தன் பொண்ணை ஒண்ணுமத்துப் போன ஒருத்தனுக்கு காசைக் கொட்டி வழியனுப்பி வெச்சு காதல் வாழ்க்கையின் வாசற்கதவைத் திறந்துவிட... வசுந்தரான்ற பெயரை உச்சரிக்கவே எனக்கு அச்சமாக் கூட இருக்குது. சொல்லப் போனா...
அப்போ... காதலிக்கவே நீங்க லாயக்கில்லை..!
வெறுப்பாய் சட்டென்று வார்த்தைகளை உமிழ்ந்தன ரத்னாவின் உதடுகள்.
சரியா நீ சொல்றதை என் மனசும் ஒப்புக்கிட்டதாலதான் சொல்றேன் ரத்னா... நாம பிரிஞ்சுடுவோம்!
என் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியும். நான் பேசறேன். வீட்டோட மாப்பிள்ளையா வந்து இருங்க. விஷயம் முடிக்கிறதுக்கு நானாச்சு. இந்த பேச்சை இத்தோட நிறுத்துங்க. முதல்ல இடத்தை விட்டு எழுந்திருங்க... போகலாம்..!
வலுக் கட்டாயமாக அவனின் கையைப் பற்றித் தூக்கினாள்.
ஆகாஷ் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. விரக்தியோ, சலனமோ தொனிக்கும் ஒரு புன்னகை இதழ்க்கடையில் ஓடி நழுவிற்று.
ரத்னமாலாவும் ஒட்டினாற்போல் நடந்தாள்.
நாளைக்கு இதே இடத்துல இதே நேரத்துக்கு வர்றேன். பேசுவோம். மனசைப் போட்டுக் குழப்பிக்காமல் போய் சாப்பிட்டுட்டு தூங்கற வழியைப் பாருங்க ஆகாஷ்..!
கையசைத்து, வந்த பஸ்ஸில் தொற்றிக் கொண்டாள்.
ஆகாஷ் ஏனோதானோவென்று கையசைத்து விட்டு கால்போன போக்கில் நடந்தான். வால்டாக்ஸ் ரோடின் பரபரப்பான நெரிசலில் உள் நுழைந்து ஸ்ரீ பாலாஜி லாரி புக்கிங் சர்வீஸஸின் மேல் மாடியிலிருந்த தனது அறைக்குள் நுழைந்து படுத்துக் கொண்டான்.
மனக்கண்ணில் வாழ்க்கைச் சித்திரம் வந்து போனது. ரத்னாவை வைத்து வாழ்க்கையை நகர்த்த முடியாது என்ற ஒன்றே அழுத்தமாய் பதிந்து மேலே ஓங்கி நின்றது. வெறும் எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாத ஆகாஷ் அத்தை வீட்டில் வளர்ந்து மாமாவின் கடையில் எடுபிடியாய் ஆயிரத்தெட்டு வசவு வாங்கிக் கொண்டு வன்கொலையாய் வதைபட்டு வெறுத்துப் போய் சென்னைக்கு ரயிலேறினபோது முழுதாய் பத்தொன்பது வயது. வந்த ஒரு வாரத்தில் ரயில்வே பிளாட்பாரம், பஸ் நிலையம் என வாழ்க்கை கழிந்தது. ஒரு வழியாய் யானைகவுனியின் லாரி புக்கிங் ஏஜெண்ட்டாக இருந்த செந்தூரன் இவனுக்கு மனமிரங்கி ஒண்டிக் கொள்ள ஒரு இடம் கொடுத்து ஒருவேளைக் கஞ்சிக்காவது உதவும் விதமாக சரக்குகளை லாரியில் இறக்க, ஏற்ற என கொடுத்த வேலை பெண்டு நிமிர்த்திற்று. இரண்டு வருடங்கள் கூலித் தொழிலாளியாய் இருந்தவனின் விசுவாசம் கண்டோ, இல்லை கடை குமாஸ்தா கணிசமாய் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விட்டதன் காரணத்தாலோ என்னவோ எந்தப் பயலையும் இனி நம்பி கணக்கெழுத உட்கார வைக்கக் கூடாது என்ற செந்தூரனின் தீர்மானத்தில் ஒரு புள்ளியாய் ஆகாஷ் வந்து நின்றான்.
வாலிப வயதிற்கு வறுமையிலும் வனப்பாய், வாட்டசாட்டமாய் தனித்த அழகுடன் தெரிந்த ஆகாஷின் தோற்றப் பொலிவு ‘இவனை குமாஸ்தாவாக்கி உட்கார வைத்துப் பார்த்தாலென்ன..? பொறுப்புக்கு ஏற்ற தோற்றம் - நிச்சயம் வந்தவர்களை வாடிக்கையாளர்களாக்கி விடும்’ என்று மனக்கணக்கு போட்டார்.
"தம்பி... ஆகாஷ்! நீ இனி சரக்கு ஏற்றி இறக்கற வேலைகளைப் பார்த்தது