Nilalin Kural and Naan Thedum RojaPoo
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Nilalin Kural and Naan Thedum RojaPoo
Related ebooks
Nenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Neela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsJamuna Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsNovember Raththirigal Rating: 0 out of 5 stars0 ratingsNenjellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsOru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol! Rating: 0 out of 5 stars0 ratingsDecember Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Mugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsAndre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthaan Vilaiyaduven Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsTheera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Nathi Oru Pournami Oru Pen Rating: 4 out of 5 stars4/5Red Rose! Guest House! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsMoodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsBambaiku Pathavathu Mailil Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsMathangalil Aval Margazhi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Nilalin Kural and Naan Thedum RojaPoo
0 ratings0 reviews
Book preview
Nilalin Kural and Naan Thedum RojaPoo - Rajeshkumar
16
1
நிழலின் குரல்...! & நான் தேடும் ரோஜாப் பூ
ராஜேஷ்குமார்
இண்டர்காம் ரிஸீவர் அடித்தது.
இடது கை விரல்களில் சிகரெட் புகைய – ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்த சேகர் கிருஷ்ணா இண்டர்காம் கூப்பிடுவதை உணர்ந்ததும் சிகரெட்டின் உடம்பை ஆஷ்ட்ரேயில் இட்டு நசுக்கிவிட்டு ரிஸீவரை எடுத்தான்.
ஹலோ...
ரிசப்ஷனிஸ்ட் பேசினாள்.
ஸார்... ஒன் மினிட் சுகன்யா வான்டஸ் டூ ஸீ யூ... ஷி ஈஸ் நாட் இன் த அப்பாயிண்ட்மெண்ட் லிஸ்ட்...
உடனடியா என்னோட ரூமுக்கு அனுப்பு...
ரிஸீவரை வைத்து விட்டு கழுத்திலிருந்த டையை இறுக்கிக் கொண்டு காத்திருந்தான் சேகர் கிருஷ்ணா.
அரை நிமிட அவகாசத்திற்குப் பிறகு -
சுகன்யா உள்ளே நுழைந்தாள். அழகாய் புன்னகைத்து குட்மார்னிங்...
என்றாள்.
சேகர் கிருஷ்ணா சிரித்தான்.
குட்மார்னிங்...! இந்தக் காலை நேரம் இவ்வளவு அழகான ஆச்சர்யத்தோடு அமையும்ன்னு நான் நினைக்கலை...
'எதுக்கு ஆச்சர்யம்...?"
கல்யாணத்துக்கு முன்னாடிப் பெண்ணே மாப்பிள்ளையைத் தேடி வர்றது ஆச்சர்யமில்லையா?
இதுல ஆச்சர்யப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை. அரை மணி நேரத்துக்கு முன்னாடி கோயில்ல இருந்தேன். முதல் பத்திரிகையை அம்மனுக்கு வெச்சு அர்ச்சனை பண்ணினேன். அப்ப குருக்கள் ரெண்டாவது பத்திரிகையை உனக்குப் பிரியமான ஒருத்தர்க்கு கொடுன்னு, சொன்னார். போன வாரத்திலிருந்து எனக்குப் பிரியமானவர் நீங்கதான். அதான் பத்திரிகையைக் குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.
மாப்பிள்ளைக்கே பத்திரிகையா? அதுவும் கல்யாணப் பெண்ணோட கையாலே? இந்த மாதிரி திரில்லான அனுபவம் எத்தனை மாப்பிள்ளைக்குக் கிடைக்கும்?
சுகன்யா வெட்கத்தோடு முறுவலித்தாள். பத்திரிகையை வாங்கிக்கறீங்களா?
ம்... குடு...
கொடுத்தாள்.
தாங்க் யூ...
சொல்லிவிட்டு உறையைப் பிரித்தவன் கண்களை விரித்தான். ஃபெண்டாஸ்டிக். பத்தரிகையை உங்கப்பா எங்கே பிரிண்ட் பண்ணினார்.
சிவகாசியில்.
எங்க வீட்டுப் பத்திரிகை சாயந்திரந்தான் பிரிண்டர்ஸிடமிருந்து வரும். ஆனா இவ்வளவு ஆர்ப்பாட்டமா இருக்காது. பை... த... பை... என்னோட ஆபீஸுக்கு முதல் தடவையா வந்திருக்கே. என்ன சாப்பிடறே?
ஒண்ணும் வேண்டாம்.
ஒண்ணும் வேண்டாமா? ஐ வோண்ட் அக்ரி.
சொன்னவன் இண்டர்காம் ரிஸீவரை எடுத்து பட்டனைத் தட்டிவிட்டுப் பேசினான். கேட்ரிங் செக்ஷனா? ரெண்டு மில்க் ஸ்வீட், கொஞ்சம் கேஸ்யூநட்ஸ்... ரெண்டு காப்பி... பத்து நிமிஷத்துக்குள்ளே என்னோட ரூமுக்கு வரணும்.
பேசிவிட்டு ரிஸீவரை வைத்தான்.
ஆபீஸ் பிடிச்சிருக்கா சுகன்யா...
ரொம்ப...
நீ இவ்வளவு ஜோவியலா இருப்பேன்னு நினைக்கவேயில்லை. அன்னிக்குப் பெண் பார்க்க வந்தப்ப... மூடி டைப் மாதிரித் தெரிஞ்சது...
"அன்னிக்கு பெரியவங்களெல்லாம் இருந்தாங்க... அடக்க ஒடுக்கத்தைக் காட்ட வேண்டாமா...?'
நீ இவ்வளவு ஜோவியலா இருக்கிறதுனால... ஒரு ரெக்வஸ்ட்.
என்ன...?
நாளைக்கு என்னோட பிறந்த நாள். காலையில ஏழு மணிக்கு வீட்ல சின்னதா ஒரு ஃபங்கஷன். எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல நீயும் உன்னோட அப்பாவும் வரணும்...
சுகன்யா நெற்றியைக் கீறினாள். அப்பா என்ன... சொல்வார்ன்னு தெரியலையே...?
நான் வேணும்ன்னா... அவர்க்குப் போன் பண்ணி...
வேண்டாம் நானே சொல்லிக்கிறேன்.
நாளைக்கு கண்டிப்பா வரணும்.
வர்றேன்.
நீ வந்தாதான் கேக்கையே வெட்டுவேன்.
மறுநாள் காலை ஆறு மணி முப்பது நிமிடம்.
சுகன்யா தன்னுடைய அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.
என்னம்மா... ரெடியா...?
தலைக்கு மப்ளரைச் சுற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி மகளை ஏறிட்டார். கல்யாணம் முடியறதுக்கு முந்தி... மாப்பிள்ளை வீட்டுக்கு இப்படியெல்லாம் அனாவசியமாப் போகக் கூடாதம்மா...! நேத்திக்கு நீ பத்திரிகையைக் கொடுக்கப் போனதே தப்பு... மாப்பிள்ளையோட வீட்ல என்ன நினைப்பாங்க...?
ஒண்ணும் நினைக்க மாட்டாங்க... அவங்க கல்ச்சர்ட் ஃபேமிலி. நாம ஃபங்ஷனுக்கு போனா சந்தோஷப்படுவாங்க...
அம்மா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?
நீங்க ஒண்ணையும் சொல்ல வேண்டாம்... கால் மணி நேரத்துக்குள்ளே ரெடியாகி... நீங்க ஃபோர்டிகோவுக்கு வரணும். வரலை... நான் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பேன்...
சொல்லிவிட்டு வெளியே வந்தாள் சுகன்யா. போர்டிகோ படிகளில் அன்றைய காலை பேப்பர் விழுந்திருந்தது.
எடுத்தாள். தலைப்புச் செய்தியின் மேல் பார்வை படிந்தது.
ஆறு எம்.பிக்குகளுக்கு மனநிலை பாதிப்பு.
எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதைத் தீவிரமாக யோசித்ததே காரணம்.
சுகன்யா சிரித்துக் கொண்டே பார்வையை - பத்திரிகையின் வலது பக்கக் கார்னருக்கு கொண்டு போனாள். விழிகள் சட்டென்று நிலைத்துப் போக அதிர்ந்தாள்.
காலமானார் என்று அடிக்கோடிட்ட வாசகத்துக்குக் கீழே சேகர் கிருஷ்ணாவின் போட்டோ.
2
அறையை விட்டு வெளியே வந்த ராமமூர்த்தி மகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போய் வேகவேகமாய் அவளை நெருங்கினார்.
என்னம்மா... சுகன்யா... பேப்பரையே வெறிச்சுப் பார்த்துட்டு என்னவோ மாதிரி உட்கார்ந்திருக்கே...? ஏதாவது ஷாக் நியூஸா...?
அ... அப்பா...! இ... இதைப் பாருங்க...
சுகன்யா உலர்ந்து போன குரலில் சொல்ல - ராமமூர்த்தி பத்திரிகையை வாங்கிக் கண்ணாடியைச் சரியாய்ப் பொருத்திக் கொண்டு பார்த்தார். பார்த்தவர் ஸதம்பித்தார்.
எ... என்னம்மா... இது...?
பதட்டமாய்க் கத்தியவர் காலமானார் தலைப்புக்குக் கீழே இருந்த அறிவிப்பு வாசகத்தைப் படித்தார்.
பிரபல 'மம்மி' குழந்தை உணவுத் தயாரிப்பாளர் ஐராவதம் அவர்களின் மூத்த குமாரர் சேகர் கிருஷ்ணா நேற்று இரவு அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம் - இப்படிக்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மம்மி குழந்தை உணவுத் தொழிற்சாலை ஊழியர்கள்.
ராமமூர்த்தியின் கையிலிருந்த செய்தித்தாள் உதிர்ந்தது. என்னம்மா... இது நம்பவே முடியலையே. நேத்திக்கு ராத்திரி சம்பவம் நடந்திருக்கு... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க... நமக்குத் தகவலே தெரிவிக்கலையே...
சுகன்யா இன்னமும் அதிர்ச்சியிலேயே இருக்க - ராமமூர்த்தி டெலிபோனை நோக்கி ஓடினார். ரிஸீவரை எடுத்து சேகர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு டயலைச் சுழற்றினார்.
மறுமுனையில் என்கேஜ்ட் டோன்.
மீண்டும் டயலைச் சுயலாற்றினார்.
அதே என்கேஜ்ட் டோன்.
ஒரு ஐந்து நிமிட நேரம் டயலைச் சுழற்றிச் சுழற்றி - அலுத்துப் போனவர் - எக்சேஞ்சைத் தொடர்பு கொண்டார். நெம்பரைக் குறிப்பிட்டு விட்டுச் சொன்னார்.
இந்த நெம்பர் கிடைக்கலை. கொஞ்சம் ட்ரை பண்ணிக் குடுங்க...
எக்சேஞ்சில் முயற்சி செய்து விட்டு - அந்தப் பெண் சொன்னாள்.
போன் அவுட் ஆஃப் ஆர்டர்...
ராமமூர்த்தி ரிஸீவரை வைத்துவிட்டு சுகன்யாவிடம் வந்தார். புறப்படம்மா... நேர்லேயே போய்ட்டு வந்துடலாம்...
அ... அப்பா...
"என்னம்மா...?'
எனக்கு நெஞ்சு 'திக் திக்'ன்னு இருக்கு... இந்த முடிவு அவர்க்கு எப்படிப்பா... வந்திருக்க முடியும்...?
சுகன்யா அழுத குரலில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே டெலிபோன் அடித்தது. ராமமூர்த்தி வேகமாய் ரிஸீவரை எடுத்தார்.
ஹலோ...?
ராமமூர்த்தி வீடுங்களா...?
ஆமா...
"நான் சேகர் கிருஷ்ணாவோட குடும்ப லாயர் பேசறேன்...! உங்களுக்கு விஷயம் தெரியுமா... தெரியாதா...?'
இப்பத்தான் பேப்பர்ல பார்த்தோம்... ஒரே அதிர்ச்சியா இருந்தது. மாப்பிள்ளைக்கு என்னாச்சு...?
ஹார்ட் அட்டாக்தான்...
இவ்வளவு சின்ன வயசுல ஹார்ட் அட்டாக்கா...?
சேகர் கிஷ்ணாவுக்கு ஏற்கனவே... ஹார்ட் ட்ரபுள் இருந்தது, ஸ்விஸ் வரைக்கும் போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்தாங்க...
இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதே...?
ஹார்ட் ட்ரபுள் சரியாயிரும்ன்னு நினைச்சு... உங்ககிட்ட சொல்லாமே இருந்திருக்கலாம்... இப்ப நடக்கக் கூடாதது நடந்து போச்சு... உங்களுக்குத் தகவல் கொடுக்கக்கூடிய நிலைமையில் சேகர் கிஷ்ணா வீட்டில் யாருமில்லை. அதான் நானே உங்களுக்குத் போன் பண்ணினேன்... உங்க பெண்ணோடு வந்து பார்த்துட்டு போயிருங்க நீங்க, இப்ப பண்ணக்கூடிய காரியம் அது ஒண்ணுதான்... புறப்பட்டு... வர்றீங்களா?
ரிஸீவரை வைத்துவிட்டு - சுகன்யாவை நோக்கிப் போனார் ராமமூர்த்தி.
எந்திரிம்மா...
"அ... அப்பா...
ஒரு மாலையைக் கொண்டு போய் சாத்தி இறுதி மரியாதை பண்ணிட்டு வந்துடலாம்...
கார் போய்க் கொண்டிருந்தது.
ஸ்டீயரிங்கைக் கையாண்டு கொண்டிருந்த ராமமூர்த்தி கோபத்தில் படபடவென பொரிந்துக் கொண்டிருந்தார்.
ஆண்டவன் அந்த ஐராவதத்துக்கு சரியான தண்டனையைத் தான் கொடுத்திருக்கான். இருதய கோளாறு இருக்கிற பையனுக்குக் கல்யாணம் பேச எவ்வளவு தைரியமா நம்ம வீட்டுப் படியேறி வந்திருக்கான்...? கல்யாணத்துக்கு அப்புறம் இது மாதிரி நடந்திருந்தா... உன்னோட கதி என்னாயிருக்கும் சுகன்யா...?"
சுகன்யா சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு மௌனமாய் அழுதபடி வந்தாள்.
நீ ஏம்மா அழறே...
அந்த சேகர் கிருஷ்ணாவோட மரணத்துக்காக நீ வாய் விட்டுச் சிரிக்கணும். பாழும் கிணத்துல விழ இருந்த நீ தப்பிச்சுட்டேம்மா."
அ...அப்பா...
என்னம்மா...?
அங்கே போய் ஒண்ணும் பேசிடாதீங்க...
நான் எதுக்கம்மா பேசப்போறேன்...? ஆண்டவனே அவர்களுக்குத் தண்டனையைக் குடுத்துட்டான்.
கார் ஆர்.எஸ். புரம் ஏரியாவுக்குள் நுழைந்து மெக்ரிகர் ரோட்டில் திரும்பியது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் - மஞ்சளாய்ப் பூத்துக் கொட்டும் கோல் மெஹர் மரங்கள். காலை நேர பங்களாக்கள் அமைதியாய் இருந்தன.
ராமமூர்த்தி மறுபடியும் பொறுமினார். 'ஃபோன் எடுத்ததுமே அந்த ஐராவதம் நமக்கு ஏன் தகவல் கொடுக்கலை தெரியுமாம்மா...? அவனோட மனசாட்சி அவனைக் கத்தி முனை மாதிரி உறுத்தியிருக்கும் ... அதான் குடும்ப வக்கீலை விட்டு போன் பண்ணச் சொல்லியிருக்கான்..."
கார் மெக்ரிகர் ரோட்டின் ஐந்தாவது குறுக்குத் தெருவுக்குள் நுழைந்து - கடைசியில் இருந்தா சேகர் கிருஷ்ணாவின் பங்களாவை நெருங்கியது.
பங்களாவுக்கு வெளியே -
சில மாருதிகளும், கண்டசாக்களும், ஸ்கூட்டர்களும் நிறைந்து தெரிந்தன. ராமமூர்த்தி தன்னுடைய காரை ஓரமாய் ஒதுக்கி நிறுத்தி விட்டு - பெரிய லில்லி மாலையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார். சுகன்யா கலங்கிய விழிகளோடு அப்பாவைத் தொடர்ந்து இறங்கினாள்.
சுகன்யா...
ம்...
அங்கே போய்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே... அந்த மோசக்காரன் குடும்பத்துக்குக் கண்ணீர் சிந்தறது கூடப் பாவம்... போய் மாலையைச் சாத்திட்டு ஒரு அஞ்சு நிமிடம் மௌனமா உட்கார்ந்துட்டு - உடனே எந்திரிச்சு வந்துடப் போறோம்...
நின்றிருந்த கார்களைக் கடந்து - பங்களாவுக்குள் நுழைந்தார்கள்.
போர்டிகோவிலேயே அந்தக் கும்பல் தெரிந்தது. பணக்கார வழுக்கைகள், தொப்பைகளுக்கு நடுவே - ஐராவதம் தெரிந்தார்.
பக்கத்தில் -
சேகர் கிருஷ்ணா.
ராமமூர்த்தியும், சுகன்யாவும் அதிர்ந்துபோய் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். கையிலிருந்த லில்லி மாலை தன்னிச்சையாய் கீழே உதிர்ந்தது.
அதற்குள் சேகர் கிருஷ்ணா சுகன்யாவையும், ராமமூர்த்தியையும் பார்த்து விட்டு பதட்டமாய் அவர்களை நோக்கி வந்தான்.
நீங்களும் பத்திரிகை அறிவிப்பைப் பார்த்துட்டுத் தான் வர்றீங்களா...?
புன்னகையோடு சொல்லி வேதனையோடு சிரித்தான். என்னோட பிறந்த நாளும் அதுவுமா... யார் இந்த விஷமத்தனமான காரியத்தைப் பண்ணினதுன்னு தெரியலை... இவர்களெல்லாம்... அந்தப் பத்திரிகை அறிவிப்பைப் பார்த்துட்டு வந்தவங்கதான்..."
ஐராவதம் கண்ணீர் மல்கும் கண்களோடு வந்து ராமமூர்த்தியின் கைகைப் பற்றிக் கொண்டார்.
"வாங்க சம்மந்தி... நானே உங்களுக்குப் போன் பண்ணி உண்மையைச் சொல்லலாம்ன்னு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க... யாரோ பொறாமை பிடிச்சவங்க... இந்த காரியத்தைப் பண்ணியிருக்காங்க...
ராமமூர்த்தி திணறலான குரலோடு ஐராவத்தை ஏறிட்டார்.
உங்க குடும்ப லாயர் வேற... போன் பண்ணி மாப்பிள்ளை ஹார்ட் அட்டாக்கில் போயிட்டதா சொன்னாரே...?
என்னோட குடும்ப லாயரா...?
ஆமா...
எப்பப் பேசினார்...?
பத்து நிமிடத்துக்கு முந்தி...
அவர் அரை மணி நேரமா இங்கதானே இருக்கார்...
சொன்ன ஐராவதம் போர்டிகோவுக்குக் கீழே நின்றிருந்த கும்பலைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.