En Chellangal
By Sivasankari
()
About this ebook
அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம்!!
"என் செல்லங்கள்" கற்பனைக் கதை அல்ல. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இன்று வரை எங்கள் இல்லத்தின் செல்வங்களாய், வளர்ப்புக் குழந்தைகளாய்த் திகழும் நாய்களைப் பற்றின சம்பவங்களின் தொகுப்பே இக் கட்டுரைத் தொடர் ஆகும்.
நாய் என்றால் நன்றியின் மறு உருவம் என்று மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும் - இல்லை, இல்லை. நன்றி, அன்பு, விளையாட்டு, குறும்பு, புத்திசாலித்தனம், நேர்மை, கண்டிப்பு இன்னும் எத்தனையோ அருமையான குணாதிசயங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஜீவன் ஒரு நாய் என்பதை நம்மில் எத்தனை பேர்கள் அனுபவித்திருக்கிறார்கள்?
நாங்கள் - எங்கள் குடும்பத்தினர் - இதையெல்லாம் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு இந்தப் புத்தகம் சாட்சி.
என் அப்பா, அம்மா, பெரியண்ணா, சின்ன அண்ணா, அக்காவுக்கும், இந்தக் கட்டுரைத் தொடரின் கதாநாயக, நாயகிகளான என் செல்லங்களுக்கும் இந்தப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன், சிவசங்கரி
Read more from Sivasankari
Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsNappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsMookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Aayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Suriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Ariyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsThulla Mudiyatha Pulliman Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsRushi Kanda Poonai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Chellangal
Related ebooks
Thalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsThoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Aabathukku Vandhanam...! Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/5Ninaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Kana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Keralathil Engo... Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Pillai Prayathiley Rating: 0 out of 5 stars0 ratingsKalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Kollathey Yaarum Paarthal! Rating: 5 out of 5 stars5/5Chutti Poonaiyum Kutti Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsசிந்தனை சிறுகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Kutty Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Avargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Mathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Amutherdru Per Rating: 0 out of 5 stars0 ratingsYaanaikku Uthaviya Erumbugal Rating: 0 out of 5 stars0 ratingsParvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Mannai Pasanthiyin Pappa Paattu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for En Chellangal
0 ratings0 reviews
Book preview
En Chellangal - Sivasankari
http://www.pustaka.co.in
என் செல்லங்கள்
En Chellangal
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சுக்லாம்பரதரம்
2.மறுபடியும் மணியா?
3. கல்லுக்குள் ஈரம்
4. பல்லா? ரம்பமா?
5. தோசைப் பாட்டி
6. அன்பா, பக்தியா?
7.ஏய்ப்பும் தண்டனையும்
8.மன மாற்றம்
9. என் முதல் இழப்பு
10. எனக்கு ராசி இல்லையா?
11. பட்ட காலிலே படும்
12. சியாமா
முன்னுரை
அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம்
என் செல்லங்கள்
கற்பனைக் கதை அல்ல. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இன்று வரை எங்கள் இல்லத்தின் செல்வங்களாய், வளர்ப்புக் குழந்தைகளாய்த் திகழும் நாய்களைப் பற்றின சம்பவங்களின் தொகுப்பே இக் கட்டுரைத் தொடர் ஆகும்.
நாய் என்றால் நன்றியின் மறு உருவம் என்று மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும் - இல்லை, இல்லை. நன்றி, அன்பு, விளையாட்டு, குறும்பு, புத்திசாலித்தனம், நேர்மை, கண்டிப்பு இன்னும் எத்தனையோ அருமையான குணாதிசயங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஜீவன் ஒரு நாய் என்பதை நம்மில் எத்தனை பேர்கள் அனுபவித்திருக்கிறார்கள்?
நாங்கள் - எங்கள் குடும்பத்தினர் - இதையெல்லாம் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு இந்தப் புத்தகம் சாட்சி.
'என் செல்லங்களையும்', 'சியாமாவையும் சிறந்த முறையில் கதிரில் வெளியிட்ட ஆசிரியர் திரு. சாவி அவர்களுக்கும் அழகான புத்தகமாய் உருவாக்கியுள்ள திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றியைபச் சொல்லிக் கொள்ளுகிறேன்.
என் அப்பா, அம்மா, பெரியண்ணா, சின்ன அண்ணா, அக்காவுக்கும், இந்தக் கட்டுரைத் தொடரின் கதாநாயக, நாயகிகளான என் செல்லங்களுக்கும் இந்தப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்
சிவசங்கரி
1. சுக்லாம்பரதரம்
நாளைக்கு, நான் நாயுடுவுடன் அவர் எஸ்டேட்டுக்குப் போகிறேன். விடியற் காலையிலேயே நாலு பேருக்கு டிபன் ரெடியாயிடணும்...
என்று, அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.
அப்பாவின் பின் பக்கமாகச் சென்று அவர் கழுத்தைக் கட்டிக் கொள்கிறேன் நான்.
நானும் வரேன்ப்பா...
கழுத்தைச் சுற்றியிருந்த கைகளைப் பற்றி இழுத்துத் தன் மடியில் என்னை இருத்திக்கொள்கிறார் அப்பா.
வேண்டாம்மா...... நாங்கள் வேட்டைக்குப் போகிறோம். சின்னக் குழந்தைகள் வரக் கூடாதும்மா…
என் முகம் சிணுங்கிப் போகிறது.
உனக்கு என்ன வேணும் சொல்லு... எதுவானாலும் வாங்கிக் கொண்டு வருகிறேன்.
அப்பா அணைத்துக் கொண்டு கேட்கிறார்.
நான் யோசிக்கிறேன்,
எதுவானாலும் கேட்கலாமா?
ஓ.. யெஸ்-கேளும்மா...
எனக்கு ஒரு மான் குட்டி வேணும்பா.
அப்பா சரி என்று சொல்லுவாரோ மாட்டாரோ என்ற ஆதங்கத்தில் நிமிர்ந்து பார்க்கிறேன்.
பூ! மான் குட்டிதானேம்மா... கொண்டு வந்தால் போச்சு…
மான் குட்டி வேணுமென்றால் சரி என்கிறீர்களே?... அதையெல்லாம் வீட்டிலே வளர்க்க முடியுமா, என்ன?
அம்மா குறுக்கிடுகிறாள்.
அப்பா மறுத்து விடுவாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
ஆனால், நீ கவலைப்படாதேம்மா… உனக்கு நான் மான்குட்டி கொண்டுவருகிறேன்
என்று அப்பா திரும்பச் சொன்னதும் என்னும் சந்தோஷம் பீரிடுகிறது. எட்டி அப்பாவின் முகத்தை இழுத்துக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு, மடியிலிருந்து இறங்கி ஓடுகிறேன்.
அப்போது எனக்கு வயது ஐந்து. அந்தத் தினம் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
மறுநாள், அப்பாவிடம் மான் குட்டி கேட்டதை நான் மறந்தவளாய், பள்ளிக்குச் சென்று திரும்பி வந்து விளையாடி, களைத்து, உண்டு உறங்கிவிட்டேன்.
நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்தவளின் தலை முடியைப் பற்றி யாரோ பலமாய் இழுத்தது வலித்ததால், அழுது கொண்டே கண் விழித்தேன்.
என் அருகில் ஒரு சின்ன புள்ளிமான் குட்டி! கண்களைக் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு, என் தலையில் இருந்த பூவைப் பற்றி இழுத்துக்கொண்டிருந்தது.
பக்கத்தில் அப்பா, அம்மா, பெரியண்ணா, சின்னண்ணா, அக்கா எல்லோரும்.
வைர - மான் குட்டியா? எனக்கே எனக்காப்பா?
என்று கத்திக்கொண்டு, அந்த சின்னஞ்சிறு பிராணியை ஆரத்தழுவிக்கொண்டது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
மறுநாள் காலையில் முதல் வேலையாய் மான்குட்டிக்குப் பெயர் வைத்தோம் -ஆண் மான், சுலைமான், என்ன பெயர் வைக்கலாம்?
மணி
என்று கூப்பிடலாம் என்று ஒருவர் சொல்ல அதுவே ஏகமனதாய் ஒப்புக்கொள்ளப்பட்டது. அது என்ன மணி? என்ன அபத்தமான பெயர் ஒரு மான்குட்டிக்கு? என்று கேட்கலாம்-ஒப்புக் கொள்கிறேன் -அன்றைக்கு ஏனோ யாருக்குமே அதைவிடச் சிறந்த பெயர் தோன்றவில்லை என்றே நினைக்கிறேன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மணி வளர்ந்தது. நாங்கள் நால்வரும் பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, மான் குட்டியிடமே பழி கிடந்தோம்.
எனக்குப் பெருமையான பெருமை.
பள்ளியில் சதா சர்வகாலமும் சக மாணவிகளிடம் எங்கள் மான் பிரதாபத்தை அளப்பேன், 'ஆ' வென்று திறந்த வாயுடன் கேட்பார்கள்.
அப்போதெல்லாம்... அதாவது கிட்டத்தட்ட இருபத்தியேழு வருஷங்களுக்கு முன்னால், திருமலைப் பிள்ளை ரோடில் ரொம்ப வீடுகளே கிடையாது. தற்சமயம் திரு. காமராஜர் அவர்களின் இல்லம் இருக்கிறதே அதற்கு நேர் எதிரில் இருந்த வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம் -சாலையிலிருந்து ரொம்பத் தள்ளி, எங்கள் இல்லம், பெரி...ய மைதானத்தின் நடுவில், ஒரே ஒரு தனி வீடாய் நின்று கொண்டிருக்கும், தோட்டம் கீட்டம் என்று ஒன்றும் கிடையாதாகையால் இடது, வலது, முன் பக்கங்களில் பொட்டை வெளி பின்னால் மட்டும் குடிசைகள் நிறைந்து
மணி ஓடி ஆட இந்த வெற்றுமைதானம் ரொம்ப செளகரியமாய் இருந்தது. அன்றாடம் மாலை நேரங்களில், முப்பதடிகளுக்கும் நீளமான தாம்புக் கயிற்றால் மணியை மைதானத்து மையத்திலிருந்த