Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

White Nights - Venmayamana Iravugal
White Nights - Venmayamana Iravugal
White Nights - Venmayamana Iravugal
Ebook73 pages26 minutes

White Nights - Venmayamana Iravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருளின் ஒளி

பியாதர் தாஸ்தாவெஸ்கி எழுதிய கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைக்கதை காதலின் மொழிபெயர்ப்பாய், இலக்கணமாய், அர்த்தமாய் திரைமொழியின் நுட்பத்துடன் காட்சி வடிவம் கொண்டு இங்கே இப்போது அதுவே மீண்டும் இலக்கிய வடிவம் சூடியிருக்கிறது.

பார்க்கும் அனுபவமும், படிக்கும் அனுபவமும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. வெவ்வேறு பரவசிப்புகள் கொண்டவை என்பது இந்த வாசிப்புகளில் புலப்படும்.

தாஸ்தாவெஸ்கி மாறாத புகழ் கொண்ட ரஷ்ய எழுத்தாளர். இவரின் குற்றமும் தண்டனையும், கரமசேவ் சகோதரர்கள், சூதாடி ஆகிய படைப்புகள் காலத்தை வென்றவை.

மரணத்தின் நுனி வரை சென்று திரும்பியவர். தன் வாழ்நாளிலேயே இறப்பு பிறப்பு இரண்டையும் பிரக்ஞையோடு தரிசனம் கொள்ளும் அனுபவம் வாய்த்தவர். மனோதத்துவ, தத்துவார்த்த பார்வை இயல்பாய் இவரது படைப்பில் இருப்பது வாழ்வியல் அனுபவம் அவருக்கு தந்த வலிகளின் நுட்பமான பதிவுகளிலிருந்து உற்பத்தியானவை.

வாழ்வின் துன்பவியலை உணர்வு ததும்ப இவரது படைப்புகள் எழுத்தில் உறைவுகொள்ளச் செய்திருப்பவை.

இவரின் இந்த படைப்பு வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றுள்ளது. இனி அந்த உயிரோவியத்திற்குள் பிரவேசித்து அதன் திரைமொழி, இலக்கியநுட்பம் செழிக்கும் இந்த காவியத்திற்கு மனதில் நீங்காத இடம் தந்து பதித்துக்கொள்ளலாம்.

இதில் காதலாய் வருகிறவனுக்கு இருள் மிகவும் பிடிக்கும். இரவை ஆராதிப்பவன் அவன். இருள் சொல்லும் அமைதியை வாசித்தறிய தெரிந்தவன். மனிதர்கள் உறங்கும் அப்பொழுதுகளின் பெரும்பகுதி விழித்திருப்பவன். இயற்கையோடு இயற்கையாய் இசைந்துபோன அவனின் உலகம் கனவுகளால் நிரப்பப்பட்டவை. அவன் ஒரு கனவுகளின் இளவரசன். கனவுப் பட்டறையை இயக்கிக்கொண்டே இருப்பவன். கனவுப் படைப்பாளன். அவனின் சாசுவதமான கனவுகளுக்கு அந்த இருளின் ஒளி எப்போதும் இதம் சேர்த்த வண்ணம் இருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003594
White Nights - Venmayamana Iravugal

Read more from Kulashekar T

Related to White Nights - Venmayamana Iravugal

Related ebooks

Reviews for White Nights - Venmayamana Iravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    White Nights - Venmayamana Iravugal - Kulashekar T

    http://www.pustaka.co.in

    வொய்ட் நைட்ஸ் - வெண்மயமான இரவுகள்

    White Nights - Venmayamana Iravugal

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar
    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    ஒர் அறிமுகம்

    இவரின் சிறுகதை தொகுப்பு நூல்களை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மீராவை தன்னை பெறாத தந்தை என்று நினைவு கூறுகிறார். இவரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரோடு சேர்ந்து பயணித்த காலம் சிலிர்ப்பானவை என்கிறார். திரைப்படத்துறையை இவர் தேர்ந்தெடுத்ததும் இவரை கவிக்கோ அப்துல் ரகுமான் மூலம் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டதும் கவிஞர் மீரா தான். பிரபல இதழ்களில் ஏழு நாவல் வெளி வந்திருக்கிறது. இவரின் படைப்புகளை அன்னம், சந்தியா, ஆழி, ப்ளாக்ஹோல் மீடியா, வருண் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

    இவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி முக்கியமானவர். தனது முதல் புத்தகம் ஒரு சிநேகிதிக்காக வெளியீட்டில் அறிமுகமான நாளில் இருந்து நினைவின் கடைசித்துளி வரை துளியும் குறையாத நட்போடும், வாஞ்சையோடும் ஆழ்மனதிற்கு நெருக்கமாக இயைந்துகொண்ட மனிதம் அவர் என்கிறார். அதேபோல பூர்ணம் விசுவநாதனின் நட்பும் அபாரமானது என்கிறார். இவரின் வானம்பாடி புத்தகத்தை தனக்கு பிடித்த புத்தகம் என ஒரு கட்டுரையில் பூர்ணம் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கதைகளில் உள்ள உயிர்ப்பு பற்றி சுஜாதா, கமல்ஹாசன் போன்றவர்களிடம் சிலாகித்து கூறியிருக்கிறார். இயக்குநர் வசந்த்திடம் துணை இயக்குநராக சேர்த்து விட்டதும் இவர் தான். இந்த மூவரின் நட்பை குலசேகர் தன் வாழ்வின் அர்த்தங்கள் என்கிறார்.

    இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார். தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை. இவரின் வருண் பதிப்பகம் வெளியீட்டில் சமூகநீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திர பாண்டியன்" என்கிற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்.

    இவரது ஒரு சிநேகிதிக்காக தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பேராசிரியர் டாக்டர் முத்தையா அவர்களால் வங்கமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில் தினமணிக்கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது மனதில் ஒரு பிரார்த்தனை" சிறுகதை காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நு£லில் இடம் பெற்றிருக்கிறது.

    புதிய பார்வை - நீலமலை தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார், ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.

    அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கே இருந்த காலங்களில் உலக திரைப்படங்கள் மற்றும் இலக்கிய பரிட்சயமேற்பட்டு, படித்தும், எழுதியும்

    Enjoying the preview?
    Page 1 of 1