Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Children of Heaven
Children of Heaven
Children of Heaven
Ebook98 pages33 minutes

Children of Heaven

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது மஜித் மஜிதி எழுதிய “நீலீவீறீபீக்ஷீமீஸீ ஷீயீ லீமீணீஸ்மீஸீ” என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக்கூடிய அதிசயம் நினைவுபடுத்தல் மூலமாக சாத்தியமாகி விடுகிறது.

அந்த ஏழ்மையில் உலழும் அற்புதமான அந்த இரண்டு குழந்தைகளின் வாழ்வில் இருபது ரூபாய் மதிக்கத்தக்க காலணி, எத்தனை பெரிய துயரத்தை, திருப்பத்தை, மகிழ்ச்சியை உணர்ந்து கொள்ளக் காரணமாகி விடுகிறது என்கிறதை யதார்த்தமான நிகழ்வுகளின் மூலம் இந்த நாவல் ஸ்தாபிக்கிறது. ஒரு அற்புதமான குழந்தைகளின் மனவுலகைக் காட்சிப்படிமமாய் இந்நாவல் பதிவு செய்கிறது. அதன் மூலம் உங்கள் நினைவுகளில் அவர்களுக்கு ஓர் நிரந்தர இடம் ஒதுக்கிக் கொடுக்கச் செய்து விடுகிறது.

குழந்தைகள் குழந்தைகளாகத் துல்லியமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கிற விசயமே இந்த நாவலின் தனிச்சிறப்பு. இரண்டு குழந்தைகளை மையமாக வைத்துக் கொண்டு இத்தனை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் ஒரு நாவல் இருக்க முடியுமா என்று நினைத்தால் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். எனது வார்த்தை எத்தனை சத்தியம் என்று.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003578
Children of Heaven

Read more from Kulashekar T

Related to Children of Heaven

Related ebooks

Reviews for Children of Heaven

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Children of Heaven - Kulashekar T

    http://www.pustaka.co.in

    சில்ரன் ஆஃப் ஹெவன்

    Children of Heaven

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar
    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    ஒர் அறிமுகம்

    இவரின் சிறுகதை தொகுப்பு நூல்களை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மீராவை தன்னை பெறாத தந்தை என்று நினைவு கூறுகிறார். இவரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரோடு சேர்ந்து பயணித்த காலம் சிலிர்ப்பானவை என்கிறார். திரைப்படத்துறையை இவர் தேர்ந்தெடுத்ததும் இவரை கவிக்கோ அப்துல் ரகுமான் மூலம் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டதும் கவிஞர் மீரா தான். பிரபல இதழ்களில் ஏழு நாவல் வெளி வந்திருக்கிறது. இவரின் படைப்புகளை அன்னம், சந்தியா, ஆழி, ப்ளாக்ஹோல் மீடியா, வருண் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

    இவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி முக்கியமானவர். தனது முதல் புத்தகம் ஒரு சிநேகிதிக்காக வெளியீட்டில் அறிமுகமான நாளில் இருந்து நினைவின் கடைசித்துளி வரை துளியும் குறையாத நட்போடும், வாஞ்சையோடும் ஆழ்மனதிற்கு நெருக்கமாக இயைந்துகொண்ட மனிதம் அவர் என்கிறார். அதேபோல பூர்ணம் விசுவநாதனின் நட்பும் அபாரமானது என்கிறார். இவரின் வானம்பாடி புத்தகத்தை தனக்கு பிடித்த புத்தகம் என ஒரு கட்டுரையில் பூர்ணம் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கதைகளில் உள்ள உயிர்ப்பு பற்றி சுஜாதா, கமல்ஹாசன் போன்றவர்களிடம் சிலாகித்து கூறியிருக்கிறார். இயக்குநர் வசந்த்திடம் துணை இயக்குநராக சேர்த்து விட்டதும் இவர் தான். இந்த மூவரின் நட்பை குலசேகர் தன் வாழ்வின் அர்த்தங்கள் என்கிறார்.

    இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார். தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை. இவரின் வருண் பதிப்பகம் வெளியீட்டில் சமூகநீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திர பாண்டியன்" என்கிற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்.

    இவரது ஒரு சிநேகிதிக்காக தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பேராசிரியர் டாக்டர் முத்தையா அவர்களால் வங்கமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில் தினமணிக்கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது மனதில் ஒரு பிரார்த்தனை" சிறுகதை காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது.

    புதிய பார்வை - நீலமலை தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார், ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.

    அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கே இருந்த காலங்களில் உலக திரைப்படங்கள் மற்றும் இலக்கிய பரிட்சயமேற்பட்டு, படித்தும், எழுதியும் கொண்டிருந்தவர், பின் திட்டமிட்டபடி திரைப்படத்துறைக்கு வந்து தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதழியலில் முதுகலை பட்டயப்படிப்பும் அஞ்சல் வழியில் படித்திருக்கிறார்.

    விளம்பரப் படம், டெலிஃபில்ம், நெடுந்தொடர்களில் திரைக்கதை, வசனம் மற்றும் எபிசோட் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் கவிஞர் லீனாமணிமேகலையோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார். குமுதம் டாட் காம் இணையதள தொலைக்காட்சிக்காக பல துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் நேர்காணலை இயக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். இவர்

    Enjoying the preview?
    Page 1 of 1