Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moongil Pookkal
Moongil Pookkal
Moongil Pookkal
Ebook117 pages1 hour

Moongil Pookkal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘மூங்கில் பூக்கள்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.

இதில் வரும் ‘மூங்கில் பூக்கள்', வடகிழக்கின், தென்கோடியில் இருக்கும் மிஜோராம்மைக் களமாகக் கொண்டது. மிஜோ பழங்குடி மக்கள் வாழும் அந்த மாநிலம், நாகாலாந்துபோல அரசியல் கொந்தளிப்பு மிக்க மாநிலம். வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நீறு பூத்த நெருப்பாகக் கொந்தளிப்புகள் இருப்பதற்கு அரசியல் தத்துவார்த்த காரணங்கள் உண்டு. சுபாவமாக மாணவ பருவத்திலிருந்தே அரசியலிலும் சமூகவியலிலும் தீவிர ஆர்வம் கொண்ட நான் என் கணவருக்கு மிஜோராமுக்கு மாற்றல் என்றவுடன் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றின புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, வெரியர் எல்வினின் “ஃபிலாஸ்ஃபி ஃபார் நீஃபா” ஜவஹர்லால் நேருவின் நண்பரான அவரது பார்வை விசாலமானது. பழங்குடி மக்களின் கலாச்சாரம் அலாதியானது, வளமானது, அதை அலட்சியப்படுத்தி, மத்திய நீரோட்டத்துடன் அந்த ஜனங்களை இணைக்கப்பார்ப்பது விவேகம் இல்லை என்கிறார் எல்வின்.

அந்த மாநிலங்களில் மக்கள் மத்திய அரசிடம் விரோதம் கொண்டதே அரசு நிர்வாகத்தில் இருந்தவர் (வெளியிலிருந்து வந்தவர்கள்) மாநில பழங்குடியினரை 'ஜங்க்லீ' காட்டுமிராண்டி என்று பரிகசிப்பதும், அவர்களது பெண்களை உபயோகப்படுத்தி கேவலப்படுத்தும் தான் காரணம் என்று எல்வின் சொல்வதில் உண்மை இருப்பதை நான் என் அனுபவத்தில் கண்டு உணர்ந்தேன். மூங்கில் பூக்களில் வரும் விபத்து ஒரு உண்மை சம்பவம். அது நாங்கள் மிஜோராம் தலைநகரான அய்ஜலில் இருந்தபோது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நடந்தது. என்னை மிகப் பெரிய விசனத்தில் ஆழ்த்தியது. ஆனால் மூங்கில் பூக்களை நான் டில்லிக்கு வந்த பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் எழுதினேன். அப்படியும் அந்த விபத்தை நினைவு கூறுகையில் என் கண்களில் நீர் பெறுகியது இப்பவும் நினைவிருக்கிறது.

மூங்கில் பூக்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் வெளிவந்து பெறும் பாராட்டைப் பெற்றது. அதைப் படித்து உடனடியாக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பட இயக்குனர் பத்மராஜன், 'கூடெவிடே' என்றுரைக்க தலைப்பிட்டுப் படமாக்கினார். அது தேசிய, மாநில விருது பெற்றது.

- வாஸந்தி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403562
Moongil Pookkal

Read more from Vaasanthi

Related to Moongil Pookkal

Related ebooks

Related categories

Reviews for Moongil Pookkal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moongil Pookkal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    மூங்கில் பூக்கள்

    Moongil Pookkal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    உங்களுடன் ஒரு வார்த்தை

    இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘மூங்கில் பூக்கள்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.

    இதில் வரும் ‘மூங்கில் பூக்கள்', வடகிழக்கின், தென்கோடியில் இருக்கும் மிஜோராம்மைக் களமாகக் கொண்டது. மிஜோ பழங்குடி மக்கள் வாழும் அந்த மாநிலம், நாகாலாந்துபோல அரசியல் கொந்தளிப்பு மிக்க மாநிலம். வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நீறு பூத்த நெருப்பாகக் கொந்தளிப்புகள் இருப்பதற்கு அரசியல் தத்துவார்த்த காரணங்கள் உண்டு. சுபாவமாக மாணவ பருவத்திலிருந்தே அரசியலிலும் சமூகவியலிலும் தீவிர ஆர்வம் கொண்ட நான் என் கணவருக்கு மிஜோராமுக்கு மாற்றல் என்றவுடன் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றின புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, வெரியர் எல்வினின் ஃபிலாஸ்ஃபிஃபார் நீஃபா. ஜவஹர்லால் நேருவின் நண்பரான அவரது பார்வை விசாலமானது. பழங்குடி மக்களின் கலாச்சாரம் அலாதியானது, வளமானது, அதை அலட்சியப்படுத்தி, மத்திய நீரோட்டத்துடன் அந்த ஜனங்களை இணைக்கப்பார்ப்பது விவேகம் இல்லை என்கிறார் எல்வின். அந்த மாநிலங்களில் மக்கள் மத்திய அரசிடம் விரோதம் கொண்டதே அரசு நிர்வாகத்தில் இருந்தவர் (வெளியிலிருந்து வந்தவர்கள்) மாநில பழங்குடியினரை 'ஜங்க்லீ' காட்டுமிராண்டி என்று பரிகசிப்பதும், அவர்களது பெண்களை உபயோகப்படுத்தி கேவலப்படுத்தும் தான் காரணம் என்று எல்வின் சொல்வதில் உண்மை இருப்பதை நான் என் அனுபவத்தில் கண்டு உணர்ந்தேன். மூங்கில் பூக்களில் வரும் விபத்து ஒரு உண்மை சம்பவம். அது நாங்கள் மிஜோராம் தலைநகரான அய்ஜலில் இருந்தபோது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நடந்தது. என்னை மிகப் பெரிய விசனத்தில் ஆழ்த்தியது. ஆனால் மூங்கில் பூக்களை நான் டில்லிக்கு வந்த பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் எழுதினேன். அப்படியும் அந்த விபத்தை நினைவு கூறுகையில் என் கண்களில் நீர் பெறுகியது இப்பவும் நினைவிருக்கிறது. மூங்கில் பூக்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் வெளிவந்து பெறும் பாராட்டைப் பெற்றது. அதைப் படித்து உடனடியாக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பட இயக்குனர் பத்மராஜன், 'கூடெவிடே' என்றுரைக்க தலைப்பிட்டுப் படமாக்கினார். அது தேசிய, மாநில விருது பெற்றது. மூங்கில் பூக்கள்

    *****

    1

    வரவேற்பறையை அவசரம் அவசரமாகச் சுத்தம் செய்கையில் ஷீலா எதேச்சையாகக் கவனித்தாள். அறையின் நடு மையத்தில் இருந்த அந்த 9X6 கார்ப்பெட், ஓரத்தில் லேசாகக் கிழிந்திருந்தது. அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. பாரஸீகக் கார்ப்பெட் அண்ணா காபூலிலிருந்து வாங்கிக் கொண்டு வந்தது. அவனுடைய ஞாபகார்த்தமாக அவளிடம் தங்கியிருந்த ஒரே ஒரு வஸ்து! எப்படிக் கிழிந்தது? இந்த ஊரில் இதைச் சரி செய்ய யாரிடம் கொடுக்க முடியும்?

    அவள் இதே சிந்தனையுடன் அவசரம் அவசரமாக வேலை முடித்து ஸ்கூலுக்குப் போகத் தன்னைத் தயார் செய்து கொண்டாள். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கையில் எதிர்த்த மலையில் வளைந்து வளைந்து, நெளிந்த மண் பாதையில் ஒரு ஜீப் வருவது தெரிந்தது.

    அவள் மணியைப் பார்த்தாள். 8-50. அவள் அதரங்களில் லேசான ஒரு புன்னகை அரும்பிற்று. எப்படி இவன், ஒருநாள் தவறாமல் இப்படி வந்து நிற்கிறான்? ராணுவத்தில் இருப்பதாலா?

    அவள் சட்டென்று தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.

    ரோஜா வண்ண ஷிஃபான் புடைவை. தலையில் ஒற்றை ரோஜா. இன்றைக்கு என்ன சொல்லப் போகிறான்? எதிர்பார்ப்பில் அவள் கன்னங்கள் லேசாகச் சிவந்தன.

    அவள் வீடு இருந்த மலைப்பாதையில் ஜீப் ஏறிவரும் சப்தம் கேட்டது. சில விநாடிகளில் அவன் படிகளைக் கடக்கும் ஓசை. அவன் அழைப்பு மணி அடிக்கும் முன் அவள் கதவைத் திறந்தாள்.

    கரும்பச்சை நிறத்தில் அஸ்ஸாம் ரைஃபில்ஸ் யூனிஃபார்மில் பளிச்சென்று நிற்கும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் மனசில் பொங்கி எழும் வேகமும், தாபமும் இப்பவும் எழுந்தன.

    அவன், தனது வரிசைப்பற்கள், அடர்ந்த மீசைக்கடியில் பளீரென்று சிரிப்பில் மின்ன, வழக்கம்போல் தொப்பியை லேசாகத் தூக்கி, ராணுவ ஸ்டைலில் குட்மார்னிங் மேடம் என்றான்.

    மார்னிங்!

    அவன் சட்டென்று உள்ளே நுழைந்து அவளுடைய இடுப்பில் கையைக் கோத்து உடலை லேசாகத் தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றி அவளுடைய அதரங்களில் தனது அதரங்களைப் பதித்தான்.

    ஸ்கூலுக்கு நாழியாகி விட்டது. ஸோனார் பார்த்துக் கொண்டிருப்பான், ஓ, எத்தனை முரட்டுப்பிடி இவனுடையது என்கிற எண்ணங்களுக்கிடையில் அவனுடைய அணைப்பு தந்த சுகத்தில் ஒரு கிறக்கம் ஏற்பட்டது.

    அவனுடைய யூனிஃபார்மின் பட்டன், மார்பைக் குத்திற்று.

    பட்டன் குத்தறது...

    எங்கே...?

    அவள் அவன் கையை விலக்கினாள். ஸோனார் இருக்கான் ராஜீவ்.

    இந்த ஸோனார் எல்லாம் இல்லாமல் உன்னால் மானேஜ் பண்ண முடியாதா...?

    அவள் சிரித்தாள்.

    ரொம்ப அசட்டுத்தனமான கேள்வி. இதோடு நீ நூறு தடவை கேட்டாச்சு.

    பின்னெ எப்ப கிட்ட வந்தாலும் ஸோனார் பேரைச் சொல்லி ஒரு சுவரை எழுப்பறியே!

    இல்லேன்னா என்னாலே இப்போ ஸ்கூலுக்கு டயத்துக்கு போக முடியாது...

    அவன் மறுபடி குனிந்தான்.

    அவள் சட்டென்று தன்னை விடுவித்துக்கொண்டு உள்ளே சென்று தன் கைப்பையை எடுத்து வந்தாள்.

    ஸோனார் தர்வாஜா பந்த் கரோ!

    ஸோனாரின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1