Kolathai Maatravaa
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Nee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Megathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsUnnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsPoisugam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Sumai Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsKarkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kolathai Maatravaa
Related ebooks
Eppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Kuyil Vettai Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsKathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsKaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Kaadhaliye Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethaney Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5Sandhippu Thodarum Rating: 0 out of 5 stars0 ratingsMaaruthalukku Oru Hemalatha Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsIthazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Nitham Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Amma Rating: 5 out of 5 stars5/5Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kolathai Maatravaa
1 rating0 reviews
Book preview
Kolathai Maatravaa - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
கோலத்தை மாற்றவா
சிறுகதைகள்
Kolathai Maatravaa
Siru Kathaigal
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கோலத்தை மாற்றவா!
2. வாழத்தெரிந்தால்வாழலாம்!
3. வசுமதிக்கு ஒரு துணை
4. என்ன எழுத...
5.அம்மா சொன்னா - சரி, சரி...
6. தன்னைத்தானே...
7. அப்பா ஊரில் இல்லை...
8. குரு பலன்
9. பிரியாவுக்கு தெரியாத அப்பா
10. டென்ஷன்
11. லல்லு காத்திருக்கிறாள்
12. அம்மா
13. மோக ஞானம்
14. வாசலுக்கு வெளியே...
15. 'அ' என்றால் அகிலா
16. மறந்துவிடேன் மோகனா....
17. தாட்சா
18. பெண் புத்தி
19. வேணுவும் ஐந்தாறு பெண்களும்
1. கோலத்தை மாற்றவா!
டேய் குண்டுமணி... அந்தக் கிடுக்கிய இப்படி தாடா... இந்த மாதிரி தரையில் உட்கார்ந்து தொழில் செஞ்சு ரொம்ப நாளாச்சு...
சிவா, புரளும் லேட்டியை ஒரு விதமாய் மடித்துக் கட்டிக் கொண்டு, அனற் பூவாய் கனன்று கொண்டிருக்கும் குமடடி அடுப்பின் எதிரில் உட்காருகிறான்.
ஆயிரம் தான் சொல்லு - அமெரிக்காவுலப் போய் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாலும், நம்ம ஊருப் பொண்ணுங்களுக்கு வித விதமா கம்மலும், கொலுசும், வளையலும் செய்யற பரம்பரைத் தொழில் மாதிரி வராதுடா...
'அய்யே... எந்திரிங்க அண்ணே... இப்ப உங்க அப்பா கடைக்கு வர்ற நேரம்... உங்களை இந்தக் கோலத்துலப் பார்த்தா என்னைத்தான் திட்டுவாரு..."
குண்டுமணி பதறுகிறான்.
அப்பா இன்னிக்கு வர மாட்டாரு... நான் படிச்சு முடிச்சு திரும்பி வந்துட்டேனில்லே.... அதுவும் ஒண்டியாவே போய் நல்ல பிள்ளையா ஒண்டியாவே திரும்பி வந்திருக்கேன்.... அதுக்காக ஊருல இருக்கற கோவிலுக்கெல்லாம் அர்ச்சனை செய்யப் போயிருக்காரு - இன்னிக்கு அய்யா தான் கடை இன்சார்ஜ்...
சிவா சிரித்துக் கொண்டே சொல்ல, அந்த பதினாலு வயசு சிறுவன், மெள்ள அவனருகில் ஒட்டி உட்கார்ந்து கொள்கிறான்.
சிவா, தன் கையிலெடுத்த தங்கத் தகட்டைப் புரட்டிப் பார்க்கிறான்.
'அரைப் பவுனாடா?'
ஆமாண்ணே...
தாலியா....
ஆமாண்ணே...
யாருக்கு...
மேலத் தெரு விசுவநாத வாத்தியார் மகளுக்கு...
உம்... அப்ப அம்மனும், சிவலிங்கமும் தான் பொறிக்கணும்... ஆமா, அந்தப் பொண்ணு யாரையோ லவ் பண்ணிட்டிருந்தாளேடா....
'அதெல்லாம் இல்லே... லவ்வு ஊத்திகிடுச்சு... இப்ப, அப்பா பார்த்து வைக்கற பிள்ளைதான்...'
குண்டுமணி பெரிய மனித தோரணையுடன் சொல்கிறான்.
அது சரி... நம்ம நாதமுனி சம்சாரத்துக்கு வயித்துல ஏதேனும் புழு பூச்சி வந்துச்சா இல்லையா...
இன்னும் இல்லேண்ணே... நாதமுனி ரெண்டாங்கல்யாணம் செஞ்சுக்கலாமான்னு யோசிக்கிறாரு...
போடா மடையா... புள்ள இல்லைங்கறதுக்காக யாராவது பெண்டாட்டிய மாத்துவாங்களா... பேசாம டாக்டரை மாத்திப் பார்க்கச்
'உக்கும்...'
குண்டுமணி தொண்டையைச் சேரும், சிவா தணலில் பதித்திருந்த விழிகளை உயர்த்துகிறான்.
ஒரு கணத்தில் அவன் முகத்தில் கோடி சூரியன் உதித்தாற் போல....
ஹாய் நந்தினி... வா. வா... நான் நேத்திக்கே உன் வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன்.... எப்படியிருக்கே.... இது தான் முதல் வெளியீடா.... செகண்ட் எடிஷன் கொண்டு வர உத்தேசமில்லையா...
அவன் உற்சாகமாய், நந்தினியின் இடுப்பில் தொங்கிய இரண்டு வயசுப் பெண் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாய் தட்டுகிறான்....
பார்வை மட்டும் தனது பழைய சினேகிதியின் மீதே நிலைத்திருக்கிறது.
எப்படி இருந்தாள் நந்தினி... மின்னலுக்கு பாவாடை தாவணி கட்டினாற் போல... அதிக வசதியில்லாதக் குடும்பம் தான் என்றாலும் அவள் வரையில் வறுமை, அவளது எழிலைத் தொட்டது கூட இல்லையே....
என்ன இப்படி மெலிந்து விட்டாள்.... வாய் விட்டு கேட்டே விட்டான் அவன்...
இளைச்சு, டிரிம்மா இருந்தாத்தான் என் கூட வெளில் வரலாம்னு உன் வீட்டுக்காரர் ஏதாவது கண்டிஷன் போட்டிருக்காரா நந்தினி... டயட்லே இருக்கியா?
அவள் சின்னதாய் சிரிக்க, குண்டுமணி அவசரமாய் குரல் கொடுக்கிறான்.
அண்ணே...
இருடா... பேசிட்டு வர்றேன்.... பாப்பா பேரென்ன நந்தினி...
அவள் சுற்றும் முற்றும் தயக்கத்துடன் பார்த்து விட்டுச் சொல்கிறாள்.
பாப்பாதான். இன்னும் பேரே வைக்கலே...
சரிதான் போ... சோம்பேறித்தனத்துல மட்டும் அப்ப மாதிரியேதான் இருக்கே...
சிவா சிரித்துக் கொள்கிறான்....
அண்னே...
'தாலிதானேடா. நீயே தட்டு... இதோ வர்றேன்.....’
மூன்று வருடங்களுக்கு முன்பு... சிவா, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க, எதிர் வீட்டு நந்தினி ப்ளஸ்-டூவில் அடியெடுத்து வைத்திருந்தாள்.
பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு, மாவு மிஷினுக்கு, லெண்டிங் லைப்ரரிக்கு - இப்படி எங்கே போவதானாலும் அவள், சிவாவைத்தான் விரட்டுவாள்....
ஏய், சைக்கிள் வச்சிருக்கே இல்லே.... போயிட்டு வாயேன்...
ஏன், நீ என்ன வெட்டி முறிக்கறே...
இப்படிக் கேட்டாலும் சிவா, அவளுக்காக ஓடாமல் இருந்ததில்லை.
மார்கழி மாசம்... பொண் குழந்தைங்க விடிகாலையில் எழுந்து, வாசலைப் பெருக்கி, தண்ணி தெளிச்சு, முத்து முத்தாக் கோலம் போட்டா - ஆண்டாளுக்கு கண்ணன் கிடைச்சாப்பல கண் நிறைஞ்ச புருஷன் கிடைப்பான்... கோவில்லே பாட்டு சத்தம் கேட்குது... எழுந்திருடீ....
நந்தினியின் தாய், மகளை அடித்து எழுப்பி உட்கார வைக்க அவள் முனகிக் கொண்டே கோலப்பொடிக் கிண்ணத்துடன் வாசலுக்கு வந்து, திண்ணையிலேயே உட்கார்ந்து ஒரு குட்டித் தூக்கம் போடுவாள்....
குட்மார்னிங்...
சிவா, அவள் தூக்கக் கலக்கத்தில் விழுந்து விடாதிருக்க சுவர் மூலையில் சாய்த்து உட்கார வைப்பான்.
கோலப் பொடியைத் தர்றியா... நான் போடறேன்...
தாங்க்ஸ்... பிடி... விடிகாலையில் எழுந்து ஆண்டாள் புள்ளி வச்சுக் கோலம் போட்டாளாம்... அதனாலத்தான் கிருஷ்ணன் புருஷனாக் கிடைச்சானாம்.... எங்கம்மாவுக்குன்னு எங்கேயிருந்துதான் இப்படிப்பட்ட கதையெல்லாம்... சிவா உனக்கு கோலம் போட வருமா?....
சிவா 'பரபரவென கோலப்பொடியால் பூவும் கொடியும், மானும் மயிலுமாய் வாசலையே நிரப்பி விடுவான். சாண உருண்டையில் பூசணிப் பூக்கள் வேறு ஆங்காங்கு...
'ஏய்... எங்கம்மா, 'யாருடீ போட்டான்னு கேட்டா, என்னடா சொல்ல...'
‘உம் கிருஷ்ணனுக்காக வேண்டி ஆண்டாள் கோலம் போட்டதா சொல்றாங்க இல்லே உங்கம்மா... நீ சொல்லு - எனக்காக கிருஷ்ணனே வந்து கோலம் போட்டான்னு...'
புரிந்து கொண்டாளோ... இல்லையோ...
பிளஸ் டூ முடித்தவுடனேயே நந்தினியின் தந்தை பெண்ணுக்கு வரன் பார்த்து முடித்து விட்டார்....
பெயர் கூட கோபாலகிருஷ்ணனோ என்னவோ...
சிவா, நந்தினியின் இடுப்பிலிருந்த பெரிய சாக்லேட் ஒன்றை எடுத்து தருகிறான்.
"புது மோஸ்தர் ஜிமிக்கி இருக்கு... பார்க்கறியா..’
அண்ணே...
குண்டுமணி வேறு இடையிடையில்...
என்னடா உன் கூட பெரிய ரோதனையாப் போச்சு, இந்தா உனக்கொரு சாக்லேட்...
அவன் பக்கம் ஒரு சாக்லேட்டை நகர்த்திய சிவா, மறுபடியும் இவளை விசாரிக்கிறான்.
பாப்பாவுக்கு கொலுசு பார்க்க வந்தியா?
உம் ஹும்... அப்பா இல்லையா...
அவர் இன்னிக்கு வரமாட்டாரு. நான் தான் இன்னிக்கு முதலாளி... என்ன வேணும் சொல்லு...
அவள் ஒருகணம் யோசித்து, தன் பையிலிருந்து ஒரு பட்டுப் புடவையை எடுத்து அவன் முன் போடுகிறாள்.
'என்னது.... உன் கூறைப் புடவை இல்லே ?'
ம்... நிறைய கிழிஞ்சு போச்சு. ஜரிகை மட்டும் அப்படியே இருக்கு. ஜரிகைய உருக்கி வெள்ளிய எடுத்து தரணும்...
அவன் பதட்டத்துடன் புடவையைப் பிரித்துப் பார்க்கிறான்....
மூன்று வருஷத்துக்குள் தகடு மாதிரி உள்ள காஞ்சீபுரம் பட்டுப் புடவை இப்படி நார் நாராகக் கிழியுமோ...
"எங்கம்மாவுக்கு கல்யாணமாகி முப்பது வருஷமாறாது. இன்னும் புதுக்கருக்கு அழியாமக் கூறைப் புடவைய அப்படியே வச்சிருக்காங்க. வேணும்னே பல்லாலக் கடிச்சு கிழிச்சியோ....'
…….
அண்ணே...
குண்டுமணி எழுந்தே வர, சிவா.... அவனை அடிக்காதக் குறையாய் விரட்டுகிறான்.
எங்கேயிருந்துடா உன்னைப் பிடிச்சாரு எங்க அப்பா... சித்த நேரம் 'கம்முனு இரேன்...
அவன் ஆதங்கத்துடன் மறுபடியும் புடவையைப் புரட்டிப் பார்க்கிறான்.
உன் இடுப்புல என்ன அரிவாள் வச்சிருக்கியா?" அவள் பேசாது நிற்கிறாள். பாப்பா முழுச் சாக்லேட்டையும் தின்று முடித்துவிட்டு, விரலில் மிச்சமிருந்த இனிப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறாள்.
உருக்கி வெள்ளி எடுக்கனும்னா ரெண்டு மணி நேரமாகும்...
இருக்கேன்...
இந்தா கூறைச் சேலையப் பொசுக்கறது பாவம்.... அப்படியே பார்டரை எடுத்து, பாப்பாவுக்குப் பாவாடையாத் தச்சுடேன்...
நந்தினி, சிவாவை 'சடக்' கென நிமிர்ந்து பார்த்து சொல்கிறாள்.
இப்ப இந்த ஜரிகைய உருக்கின வெள்ளி அவசியம் வேணும் சிவா...
ஏன், உன் வீட்டுக்காரருக்கு உங்கம்மா, உன் கல்யாணத்தும் போது சீரா வச்ச வெள்ளித் தட்டு போதாதாமா? சரி, சரி... முறைக்காதே... அப்படி உட்காரு...
அவன் சரசரவெனப் புடவையிலிருந்த ஜரிகையைக் கத்தரித்து, நெருப்பில் காட்டிப் பொசுக்கி, பின் அந்தக் கரித்தூளை ஒரு சட்டியில் பொடித்துப் போட்டு அமிலத்தை ஊற்றி மீண்டும் காய்ச்சுகிறான்.... அடுத்த சில நிமிடங்களில் நீண்ட இருப்பு அகப்பை வழியே பள பள வென வெள்ளிக் கம்பி வந்து விழுகிறது....
கை தன் பாட்டுக்கு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், மனசுக்குள் மூன்று வருடங்களுக்கு முன் இதே கூறைச் சேலையும் மாலையுமாய் மணக்கோலத்தில் நின்ற நந்தினியையும், அவள் கணவனையும் தான் விழுந்து விழுந்து போட்டோ எடுத்ததும் - மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் - அனைவரும் பார்த்து வியக்கும்படியாக அந்த ஜோடியை, வண்ணக் கோலமாய் தரையில் வரைந்ததும் தான் படமாய் விரிகிறது...
இந்தா...
எவ்வளவு கிராம் இருக்கும்?
நூறு கிராம் இருக்கும்...
என்ன விலை தேறும்...
இன்னி தேதிக்கு விற்கிறதானா அறுநூறு ரூபா...
சரி... எடுத்திட்டு காசைக் கொடுங்க...
அவன் திகைத்துப்போய் அவளையே பார்க்கிறான்.
இந்தக் காசுக்காகவா இத்தனை அவசரமா கூறைப் புடவைய....
நான் அப்புறம் வந்து நிதானமாப் பேசறேன்... காசை கொடு சிவா...
அவன் இன்னமும் பிரமிப்பு கலையாமலேயே கல்லாப் பெட்டியிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்துத் தர - அவள் இதற்காகவே காத்திருந்தது போல, சிட்டாய் பறக்கிறாள்.
அண்ணே...
குண்டுமணி இப்பொழுது தைரியம் வந்தவனாய் அதட்டுகிறான்.
என்ன டா...
என்னண்ணே... நானும் அப்பலேயிருந்து கூப்பிட்டுகிட்டே இருக்கேன்... நீங்க என்னடான்னா திரும்பிப் பார்க்காம அந்த அக்காவைப் பேசியே வதைச்சிட்டீங்ககளே...
சிவா இப்பொழுதுதான் முழுசாய் அவன் பக்கம் திரும்புகிறான்.
அந்த அக்காவுக்கு கல்யாணமான மறுவாரமே நீங்க அமெரிக்காவுக்கு கிளம்பிட்டீங்க... நடுவுல நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாது... கல்யாணமான அடுத்த மாசமே மாப்பிள்ளை செத்துட்டாரு. ஏற்கனவே ஏதோ வியாதியாம். மறைச்சு வச்சுக் கல்யாணம் செஞ்சது மட்டுமல்லாம, அக்காவுக்கு கொடுத்த சீருல ஒண்ணைக் கூட, பிள்ளை வீட்டுல திருப்பித்தரல்லே.... இந்தக் குழந்தை ஒண்ணுதான் - அந்தாள் போய் பத்தாம் மாசத்துல.... அவன் நினைவா...
சிவா விக்கித்து உட்கார்ந்திருக்கிறான்.
நிஜமாவா... நம்ம நந்தினிக்காடா இது மாதிரி.... எனக்கு ஏண்டா யாருமே எழுதலே...
உங்கப்பா தான் எழுத வேண்டாம்னுட்டாரு... நீங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ்' இல்லே...
'...........'
'நந்தினியக்காவுக்கு மறுபடியும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு அவங்க அம்மா எவ்வளவோ முயற்சி செஞ்சாங்க... எங்கே... நம்ம நாட்டுல முதல் கல்யாணமே ஆகாம எத்தனையோ அக்காங்க இருக்காங்க. கையில் பொண் குழந்தையோட நிக்கற இந்த அக்காவை எவன் கட்டுவான்..."
'..........’
ஆனா, இத்தனைக் கஷ்டத்துலேயும். ஒவ்வொரு வருஷமும் இதே மார்கழி மாசத்துல - செத்துப் போன தன் புருஷனோட திதிய, அக்கா மறக்காம செஞ்சுடறாங்க... நேத்திக்கே என் கிட்ட சொல்லியிருந்தாங்க.... 'நாளை மறுநாள், பாப்பாவோட அப்பாவுக்கு திதிடா குண்டுமணி.... அம்மா வேற படுத்த படுக்கையா இருக்கா..... கையில் நயா பைசா இல்லே.... அடகு வைக்கவும் எதுவுமில்லே... கூறைச் சேலைய கொண்டு வர்றேன்... உருக்கி வெள்ளி எடுத்து, முதலாளி கிட்ட கொடுத்து பணம் வாங்கித் தா... அதை வச்சுட்டுத்தான் காய்கறி, அரிசி எல்லாம் வாங்கணும்னு...
...........
அண்ணே... அண்ணே...
சிவா அசையாமல் உட்கார்ந்திருக்கிறான். மாலை மங்கி, கடையைப் பூட்டும் வரையில்
இரவு வீடு திரும்புகையில் அவனது நடையில் ஒரு தீர்மானம் இருந்தது....
'இது தான் என் முடிவு - என்கிற கம்பீரம் இருந்தது.... மறுநாள் விடிகாலையில்’
வாசல் கதவு திறந்து, துடைப்பமும், தண்ணீர் பக்கெட்டுமாய் வெளியே வந்த நந்தினிதிகைத்துப் போனாள். வண்ணமயமான பொடிகளால் வரையப் பட்டிருந்த கோலம் இவளுக்கு வந்தனம் சொல்லியது. மத்தியில் உட்கார்ந்திருந்த சாண உருண்டையின் மேல், பூசணிப் பூக்களுக்குப் பதிலாய் பளீரென்று மார்கழிப் பனிக் காற்றின் தீண்டலோடு மென்மையாய் சிரித்தது அழகிய சிவப்பு ரோஜா.
2. வாழத் தெரிந்தால் வாழலாம்!
முன்பை விட, இப்ப ரொம்ப வேகமா உங்க உடம்பு குணமாயிட்டு வர்றது யமுனா...
டாக்டரின் முகத்தில் சந்தோஷம் பளீரிடுகிறது. யமுனா, டாக்டரை நன்றி ததும்பப் பார்க்கிறாள்.
இதே டாக்டர் - போன வருடம் இந்த தேதியில் சொன்னதும் அவளுக்கு மறக்கவில்லை.
"யமுனா, துணைக்கு யாரையும் அழைச்சிட்டு வராம வந்திருக்கீங்களே... உங்க உடம்பு என்ன கன்டிஷன்லே இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
தெரியும் டாக்டர் கேன்ஸர்... செகன்டரி ஸ்டேஜ்...
உங்க வீட்டுக்காரர்... இல்லே பேரண்ட்ஸ்...