Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suzhal Narkaali
Suzhal Narkaali
Suzhal Narkaali
Ebook92 pages51 minutes

Suzhal Narkaali

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903792
Suzhal Narkaali

Read more from Pattukottai Prabakar

Related to Suzhal Narkaali

Related ebooks

Related categories

Reviews for Suzhal Narkaali

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suzhal Narkaali - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    சுழல் நாற்காலி

    Suzhal Narkaali

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அலாரம் அடித்து விழித்த போது, நித்யா சுந்தரம் நைட்டியில் இருந்தாள். ‘இன்னும் கொஞ்சம் ஓய்வு ப்ளீஸ்' என்று அவள் விழிகள் கெஞ்சின. அந்தக் கோரிக்கையை இரக்கமில்லாமல் நிராகரித்து எழுந்தாள். கைகளை உதறிக் கொண்டாள்.

    விடியத் தயங்கிக் கொண்டிருந்தது வானம். விளம்பரப் படத்தில் வாளிக்குள் முக்கிய துணியிலிருந்து விலகும் அழுக்காக, இருட்டு பூமியை விட்டு மெதுவாக விலகிக் கொண்டிருந்தது. பின்னிரவு மழை எழுதிய பன்னீர் கவிதைகளின் கடைசி வரிகளை ஏந்திய மரங்கள் காற்றின் நேயர் விருப்பத்திற்காக ஈரமாக உதிர்த்துக் கொண்டிருந்தன. அலாரம் இல்லாம லேயே எழுந்துவிட் டப் பறவைகள் குதூகலக் குரல்களோடு பறந்தன. மூன்றாவது வீட்டுக் கொட்டகையில் பசுவின் விழிப்பை அதன் கழுத்துப் பட்டையின் மணிகள் உணர்த்திக் கொண்டிருந்தன.

    படுக்கையில் இரவு கவிழ்த்து வைத்தப் புத்தகத்தை எடுத்து மடக்கி வைத்துவிட்டு நித்யா பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

    நித்யா. வயது இருபத்தி எட்டு. சுந்தரம் அப்பா. வயது ஐம்பத்தெட்டு. நித்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இனியும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை.

    காரணத்தின் பின்னணியில் ஷெனாய் இருக்கிறது. கண்ணீர் இருக்கிறது. உங்கள் யூகம் சரி தான். காதல் தோல்வி. இனிமையாகத் துவங்கி சோகத்தில் முடிந்த கசப்பான அனுபவம். அது பதித்த நிரந்தர தழும்பு அவள் மனதில்.

    தன் கண்ணெதிரில் காதலனை விபத்தில் பறி கொடுத்தால், எந்தப் பெண்ணுக்கும் மனதில் நிரந்தர அதிர்ச்சி தங்கும்.

    வேண்டாம். கொடூரம். அவளே மறுபடி நினைத்துப் பார்க்க விரும்பாத அந்தக் காதலைப் பற்றி நாம் நினைக்க வேண்டாம்.

    நித்யா படித்தவள். எம்.ஏ.பட்ட தாரி. இங்கிலீஷ் லிட்ரெட்ச்சர். வேலை பார்ப்பவள். அரசாங்க வேலை. அந்தஸ்த்தான வேலை.

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறையில் உயர் அதிகாரி, அமைச்சருக்கு அடுத்த ஸ்தானம். சுற்றுலாத் துறை அமைச்சர் கலந்து கொள்கிற பெரும்பாலான அரசு விழாக்களில் கண்டிப்பாக நித்யாவும் உண்டு. எனவே டெலிவிஷனில் உங்களில் பலர் பார்த்திருக்கலாம்.

    அரசாங்கம் நித்யாவுக்கு குடியிருக்க அழகான வீடு கொடுத்திருக்கிறது. கார் கொடுத்திருக்கிறது. டெலிபோன் கொடுத்திருக்கிறது. பர்சனல் செகரெட்டரி கொடுத்திருக்கிறது.

    பெரிய மட்டங்களில் நட்பு உண்டு. விருந்துகள் உண்டு. தூத்துக்கு டியில் நித்யாவின் அண்ணன் மகள் திருமணம் தமிழக முதலமைச்சர் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றிருக்கிறது.

    அரசு அதிகாரிகளில் நேர்மையும், கண்ணியமும் மிக்க ஒரு செயல்வீராங்கனையாக குமாரி நித்யா சுந்தரத்தை நான் பார்க்கிறேன். ஒரு புதிய திட்டத்தை அரசு அறிவித்துவிட்டுக் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தால் போதும். அந்தத் திட்டத்திற்கு முழு வேகத்தோடு, முனைப்போடு செயல் வடிவம் கொடுத்து அதை அரசின் ஒரு சாதனையாக மாற்றிக் காட்டுபவர் நித்யா. நிர்வாகத் திறமை அவருடைய பலம்.

    - என்று முதல்வரே மனதார பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

    நித்யா சுந்தரத்திற்கு இன்னொரு முகம் உண்டு.

    இலக்கிய முகம். அந்த முகத்திற்குப் பெயர் 'மனுஷி'. மனுஷி என்ற புனைப்பெயரில் தரமான சிறுகதைகளும், கவிதைகளும் பத்திரிகைகளில் எழுதி வருபவள் நித்யாதான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.

    அரசாங்கத்திடம் அனுமதி பெற்று இலக்கியப் படைப்புகள் எழுதிக் கொண்டிருந்தாலும், அரசு அதிகாரி என்கிற காரணத்தால் சில வேண்டாத தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக கூடியவரை தன் புகைப்படங்கள் அதிகம் வராமல் பார்த்துக் கொள்வாள்.

    பொது இடங்களிலும் தன்னை ஒரு எழுத்தாளராக அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. தவிர்க்க முடியாமல் சில கவியரங்கங்களுக்கு தலைமை தாங்கியிருக்கிறாள். அவள் எழுதிய கவிதைகளில் பிரசுரமான கவிதைகளை விட பிரசுரத்திற்கு அனுப்பாமல் தன் நோட்டுப் புத்தகத்திலும் டைரியிலும் சேமித்த கவிதைகளே அதிகம்.

    பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் வந்த நித்யா பூத்துண்டால் ஈரமான தன் முகத்தை ஒற்றியபடி வந்து டிரெஸ்சிங் மேஜை முன்பாக நின்றாள்.

    ஸ்ட்ரெட்ச் பாண்ட்டை எடுத்து கலைந்த தலையை லேசாக சீவி மீண்டும் போட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1