Nazhuvum Nerangal
By Vaasanthi
5/5
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Nizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Kadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyellam Shenbaga Poo Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Suriyargal Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsPoi Mugam Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaigalum Pathivugalum Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsVeedu Varai Uravu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nazhuvum Nerangal
Related ebooks
Shurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsMalargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsYugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsPadigal Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Theruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsVaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaan Rating: 0 out of 5 stars0 ratingsKopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5Aval Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsPoi Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsChitrerumbugalin Kalam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Nazhuvum Nerangal
2 ratings0 reviews
Book preview
Nazhuvum Nerangal - Vaasanthi
http://www.pustaka.co.in
நழுவும் நேரங்கள்
Nazhuvum Nerangal
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
அக்கார்டிங் டு மிஸ்டர் ஆட்லர்...
லெக்சரர் சீதாலட்சுமி மேஜைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள், இரண்டு கைகளையும் கட்டியபடி. பங்களூரின் ஜனவரி மாதக் குளிருக்காக லேசான ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். உயர்ந்த காலணிகளை மறைத்தபடி தழைய இருந்தது கோட்டா புடைவை. வாயிலிருந்து சரளமாக வார்த்தைகள் கொட்டுகையில், எந்த மாணவி கவனமில்லாமல் உட்கார்ந்திருக்கிறாள் என்று விழாவுகிற மாதிரி கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
ஷீலா கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
ஷீலா!
அவள் எழுந்தாள்.
யெஸ் மிஸ்?
வாட் ஆர் யு ரைட்டிங்?
ஐ ஆம் டேக்கிங் நோட்ஸ் மிஸ்.
சீதாலட்சுமியின் முகத்தில் இருந்த இறுக்கம் லேசாக இளகிற்று. இருந்தும் விறைப்பாகச் சொன்னாள்.
நாட் நெஸஸ்ஸரி. நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டால் போதும். ஸிட்டெளன்.
லேசான ஒருவித எரிச்சலுடன் ஷீலா உட்கார்ந்தாள்.
இவளுக்கு சந்தேகப்படுவதே வழக்கமாகப் போய் விட்டது என்று தோன்றிற்று.
மாணவிகள் பொதுவாக கவனக்குறைவாக இருப்பார்களோ என்கிற சந்தேகம். தன் லெக்சரைக் கேட்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருப்பார்களோ என்கிற சந்தேகம்.
இந்த சந்தேகத்துக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?
ஸைக்காலஜியைப் பாடமாக எடுத்துக் கொண்டதிலிருந்து மற்றவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே வழக்கமாகிப் போய்விட்டது.
அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். லெக்சர் முடிய இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த லீலா, சீதாலட்சுமி பார்க்காத சமயத்தில் 'BORE' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிக் காண்பித்தாள்.
ஷீலா சிரிக்காமல் உட்கார்ந்திருந்தாள்.
லீலாவின் மெல்லிய புத்தகங்களுக்கு நடுவில் கனமாக லியான் யூரிஸ்ஸின் 'ட்ரினிடி' உட்கார்ந்திருந்தது.
ஷீலா சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். இந்தப் பாடத்தை நாம் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று தோன்றிற்று. மனத்தத்துவத்தைப் படித்து எதை சாதிக்கப் போகிறோம்? இலக்கியம் எடுத்துக் கொண்டிருக்கலாம். கீட்ஸின், ஷெல்லியின் கவிதை தரும் போதையில் தப்பித்துக் கொண்டிருக்கலாம். நமக்கு வேண்டியது எஸ்கேப்பிஸம் - நிகழும் யதார்த்தமான நிஜங்களிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்...?
அவளது மனத்தின் அந்தரங்கத்தில் புகுந்த அந்த வார்த்தைகள் எதையோ கிளறிவிட்ட மாதிரி பிரமை யேற்பட்டது.
அவளின் பார்வை அந்தப் பெரிய ஜன்னல்களுக்கு வெளியே சென்றது.
பெரிய குல்மொஹர் மரம் ரத்தச் சிவப்பாகப் பூக்களைக் காட்டியபடி சிரித்தது. மரக்கிளைகள் சூரிய வெப்பத்தைத் தடுத்து நிறுத்துகிற மாதிரி பரவலாகப் படர்ந்து வகுப்புக்குள் ஒரு ஜில்லிப்பை ஏற்படுத்தியிருந்தது.
லேசான குளிர். லஞ்ச் ப்ரேக்குக்காக மணியடித்தது. மாணவிகள் வகுப்புக்கு வெளியில் வந்தார்கள்.
ஷீலாவுடன் லீலா, ராதா, உமா, சேர்ந்து கொண்டார்கள். மாணவிகள் மரங்களின் நிழலில் சின்னச் சின்னக் கும்பலாக உட்கார்ந்தார்கள். 'பாக்கெட் மணி' உள்ளவர்கள் கான்டீனுக்குச் சென்றார்கள்.
ஷீலாவுக்கும் அவளுடைய சினேகிதிகளுக்கும் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருந்தது.
தேங்காய் சாதம், சப்பாத்தி குருமா, சாம்பார் சாதம் ஒவ்வொன்றாய் கை மாறி இடம் மாறி வலம் வந்தன.
இந்த சீதாலட்சுமி ஒரு பெரிய போர்
என்றாள் லீலா.
பதில் எதுவும் சொல்லாமல் ஷீலா ஒரு புன்னகையுடன் தன் சாப்பாட்டில் கவனமாக இருந்தாள்.
ராதா அவளைப் பார்த்துக் கேட்டாள்:
ஷீலா, நீ ஒரு யோசனை சொல்லேன். எங்கம்மா அப்பாவுக்குக் கல்யாணமாகி இருபத்தி அஞ்சு வருஷம் ஆகப் போறது. அதுக்கு ஏதாவது ப்ரஸென்ட் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என்ன வாங்கலாம்னு சொல்லேன்!
ஷீலாவுக்கு லேசாக மனசு குலுங்கிற்று. தனக்கும் அந்த மாதிரி ஒரு விஷயத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று தோன்றிற்று.
அவள் லேசாகச் சிரித்தாள்.
உங்கப்பா அம்மாவுக்கு என்ன பிடிக்குமோ, எனக்கு எப்படித் தெரியும்?
சாதாரணமா என்ன வாங்கலாம்?
ஏதாவது நல்ல 'புக்ஸ்' வாங்கிக் கொடேன்!
என்றாள் ஷீலா மெதுவாக.
எங்கம்மாவுக்கு அவ்வளவா 'புக்ஸ்' படிக்கறதுலே ஆர்வமில்லே. அப்பாதான் படிப்பார்.
உமா சிரித்துக்கொண்டே கேட்டாள்: இரண்டு பேருக்கும் ஏதாவது பொதுவான டேஸ்ட் இருக்கா?
ஓ! ரெண்டு பேருக்கும் கர்னாடிக் ம்யூஸிக் ரொம்பப் பிடிக்கும்!
அப்போ நல்லதா ஒரு எல். பி. வாங்கிக் கொடேன்!
ரெக்கார்ட் ப்ளேயர் நீ வாங்கித் தரயா?
இந்தப் பேச்சிலெல்லாம் தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஷீலா உட்கார்ந்திருந்தாள்.
அவளால் இவர்களது பேச்சில் கலந்து கொள்ள முடியாது. இவர்களை மாதிரி வாய்விட்டு உள்ளத் தெளிவோடு சிரிக்க முடியாது. அவர்களது உள்ளத்து உணர்ச்சிகளைக் கூட முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது.
அவளுடைய மனத்தில் புதைந்திருக்கும் சின்னச் சின்ன ஏக்கங்களை இவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
உங்கப்பா அம்மாவுக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷமாறது ஷீலா?
-உமா கேட்டாள்.
அவளுக்கு லேசாக முகம் சிவந்தது. எங்க வீட்டிலே வெட்டிங் டே கொண்டாடி வழக்கமில்லே. அதனாலே சரியா ஞாபகம் இல்லே.
அவள் ஏதோ அடிபட்டுப் போன மாதிரி, எதற்கோ வருத்தப்படுகிற மாதிரி உடைந்த குரலில் சொல்கையில் அதில் ஏதோ உணர்ந்து கொண்டது போல் மற்றவர்கள் பேசாமல் இருந்தார்கள். தன்னை எதற்குமே தூண்டித் துருவிக் கேட்கக்கூடாது என்று நினைத்த மாதிரி இவர்கள் தன்னிடமிருந்து சட்டென்று விலகிக் கொள்வதை அவள் உணர்ந்தாள்.
மாலையில் அவளுக்காகக் காத்திருந்த காரில் ஏறி அவள் வீட்டுக்குச் செல்லும்போது பாதை ஓரத்தில் புல் வெளியில் உட்கார்ந்திருந்த பெண்கள் அவளைப் பார்ப்பது தெரிந்தது. - காரில் போவதாலேயே அவள் மிகவும் அதிர்ஷ்டசாலியா?
பொருளாதார நிலையினால் ஒருத்தருடைய அதிர்ஷ்டத்தைக் கணக்கிட முடிந்தால் இந்த உலகத்தில் அதிர்ஷ்டக் கட்டைகள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றிற்று.
தெரு முனை திரும்பியதும் வீடு தெரிந்தது. பிரம்மாண்டமான வீடு..
அந்தத் தெருவில் நடந்து போகிறவர்களை நின்று நிதானித்துப் பார்க்க வைக்கும் வீடு. வீடு தெரிந்ததுமே அதன் பிரம்மாண்டமும், அதன் அசிங்கங்களும் அவலங்களும் அவள் மனத்தில் விசுவரூபமாக எழுந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் மனத்தில் எழும் சூன்யம் இப்பவும் எழுந்தது. கார் ஒரு குலுக்கலுடன் நின்றது.
ஒருவித ஆயாசத்துடன் புத்தகங்களைச் சுமந்தபடி படிகளில் ஏறி உள்ளே நுழைந்தாள்.
பின்பக்கத்து வராண்டாவில் சாயும் வெய்யிலில் ஒரு நாற்காலியில் அம்மா உட்கார்ந்திருந்தாள், ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடி. அவள் உள்ளே நுழைந்ததும் ஒரே ஒரு விநாடி புத்தகத்திலிருந்த பார்வையை விலக்கி அவளைப் பார்த்தாள். பிறகு மறுபடியும் புத்தகத்தில் பார்வையைச் செலுத்தினாள்.
ஷீலா தன் அறைக்குச் சென்று புத்தகத்தை மேஜைமேல் விசிறிவிட்டுப் புடைவையை அவிழ்த்து காஷுவலாக ஒரு ஜீன்ஸையும் ஸ்வெட்டரையும் போட்டுக்கொண்டு வந்தாள்.
பசித்தது.
டைனிங் டேபிளில் சமையல்காரன் சங்கரன் அவளுக்குத் தயாராக டிபனை வைத்திருந்தான். அவள் அதைச் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது மனது சற்று லேசாகிப் போனாற்போல் இருந்தது.
அவளைப் பார்த்ததும் அம்மா தனது வழக்கமான கேள்வியைக் கேட்டாள்:
டிபன் சாப்பிட்டியா?
உம்.
அவள் உட்கார்ந்து கொள்வாள் என்ற எதிர்பார்ப்புடன் அம்மா தன்னருகில் இருந்த நாற்காலியைச் சற்று நகர்த்திப் போட்டாள்.
அவள் அதைக் கவனிக்காத மாதிரி ரெக்கார்ட் ப்ளேயர் இருந்த அறைக்குச் சென்றாள். தான் அம்மாவிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள்.
ஷீலா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அப்பா காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். முகத்தில் சோர்வு தெரிந்தது. அவர் இறங்கி ஒரு நிமிடம் நிதானித்து வீட்டைப் பார்த்தார். அதிலிருந்த சூன்யம் அவரையும் தாக்குகிறது என்று அவள் நினைத்துக் கொண்டாள். அவர் உழைத்துச் சம்பாதித்து பிரம்மாண்டமாக எழுப்பிய சூன்யம்.
அவர் தலையைக் குனிந்தபடி பாண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்தபடி ஒருவித யோசனையுடன் படி ஏறினார். அவளுக்கு நினைவு தெரிந்த நாளாய் அப்பா இப்படித்தான் வீட்டுக்குள் நுழைகிறார்.
அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். அப்பா சோபாவில் கழுத்து டையைத் தளர்த்தியவாறு உட்கார்ந்திருந்தார்.
என்னம்மா, எப்ப வந்தே காலேஜிலிருந்து?
இப்பத்தான், கொஞ்ச நேரமாச்சுப்பா. நீங்க என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்திருக்கேளே?
ஷீலா தோழமையுடன் கேட்டுக் கொண்டே அவர் அருகில் வந்தாள்.
ஆமாம்மா. கொஞ்சம் தலையை வலிச்சுது, ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு வந்தேன். அப்புறம் மறுபடி ஆறரை மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு, போகணும்.
இதோ சூடா ஒரு கப் காப்பி கொண்டு வரச் சொல்றேன் சங்கரன் கிட்டே. ஏதாவது மாத்திரை வேணுமாப்பா?
வேண்டாம்மா. என் கோட் பாக்கெட்லே எப்பவும் வெச்சிருப்பேன். நீ காப்பி மட்டும் கொண்டுவரச் சொல்லு.
அவள் சங்கரனிடம் சொல்வதற்காகப் போகையில், அப்பாவுக்கு இந்தத் தலைவலி தினமும் வருகிற ஒரு உபத்திரவமாக இருக்கவேண்டும் என்று தோன்றிற்று.
இந்த வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது சுமையை மற்றவர்களுக்குத் தெரியாமல் சுமக்கிற மாதிரி இருந்தது.
அவள் காப்பியுடன் திரும்பி வரும்போது அப்பா சோபாவில் சாய்ந்து எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். அவரை அந்த மாதிரி ஒரு முகபாவத்தில் பார்க்கையில், அத்தனைப் பணத்துக்கு நடுவில் அவர் ஓர் அனாதையாகவே அவளுக்குப்பட்டது.
தன்னால் இயன்ற அளவு இவர் மனத்துக்கு இதத்தை அளிக்க வேண்டும் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனத்தில் தோன்றும் தீவிரம் இப்பவும் எழுந்தது. அவள் காப்பியை அவரிடம் நீட்டினாள்.
தாங்க்யூ
என்றார் அவர்.
ஜூரமோ என்னவோ, தொட்டுப் பார்க்கலாமா என்று நினைத்தாள். கூச்சமாயிருந்தது.
ஜூரமிருக்காப்பா?
அதெல்லாம் இல்லேம்மா. இது எனக்கு எப்பவும் வர்ற தலைவலிதான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடும். எனக்கு ஏதாவது போன் வந்தா, நா ரெஸ்ட் எடுத்துக்கறேன், டிஸ்டர்ப் பண்ண முடியாதுன்னு சொல்லு.
ஓ.கே.
எழுந்து அவர் மாடிக்குப் போகையில், என்னம்மா, ரெக்கார்ட் ப்ளேயர் போட்டியா, ஸைடை மாத்தல்லியா, வெறுமனே சுத்தறது பாரு
என்றார்.
அவள் சட்டென்று நினைவு வந்தவளாய் ஓடினாள்.
அம்மா தன் அறைக்குள் சென்றவள் வெளியிலே வரவில்லை என்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று அம்மாவிடம் சொல்லலாமா என்று ஒரு விநாடி அவள் யோசித்தாள். சொன்னால் ஏதும் லாபமிருக்காது. –
ஓ! இதென்ன வீடு என்று ஒரு அலுப்பு ஏற்பட்டது அவளுள்.
தோட்டத்துக்குப் போய் உட்கார்ந்துகொள்ளலாம் என்று தோன்றிற்று. சங்கரனிடம் சொல்லிவிட்டு அவள் தோட்டத்துக்கு வந்தாள்.
தினமும் மாலை வேளையில் அங்கே நான்கு நாற்காலிகள் யாருடைய வரவையோ எதிர்பார்த்த மாதிரி வந்து உட்காரும். அப்பா வரும் வரையில் அம்மா க்ளப்புக்குப் போகாத நாட்களில் தெருவைப் பார்த்தபடியோ, கையில் ஒரு புத்தகத்தை வைத்தபடியோ உட்கார்ந்திருப்பாள். அவர் வந்தபிறகு அவள் உள்ளேயோ, இல்லை கடைகளுக்கோ போவாள். அப்பா எவ்வளவோ நாட்கள் இருட்டிய பிறகும் கூட ஒரு சால்வையைப் போர்த்தியபடி பிடிக்க முடியாத ஒரு கோட்டையைப் பிடிக்க முயல்கிற மாதிரி, வானத்து நட்சத்திரங்களை எண்ண முயல்கிற மாதிரி உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்திருக்கிறாள்.
இப்போது ஷீலாவும் தோட்டத்து நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள். ராதாவின் நினைவு வந்தது.
ராதாவின் வீட்டில் எல்லோரும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். இந்த வீடு மாதிரி ஒவ்வொருவரும் ஒரு தீவாக இருக்க மாட்டார்கள். நிச்சயமாய் இது வீடில்லை, இரண்டு வெவ்வேறு அறைகளில் இரண்டு வித்தியாசமான மனிதர்கள் வாழும் இடம்.
இரண்டு தீவுகள்.
அதில் தனித்தனியே வாழும் பிரகிருதிகள். அந்தத் தீவிலிருந்து வெளிவரப் பயப்படும், மற்றவருடன் தொடர்பு கொள்ளப் பயப்படும் கோழைகள்.
அது கோழைத்தனமா, அகம்பாவமா? இதற்கிடையில் எந்தத் தீவு பாதுகாப்பானது என்று புரியாமல் அலைபாயும் இரண்டு இளம் ஜீவன்கள்.
ஷீலாவுக்குக் கண்களில் நீர் நிறைந்தது.
ராதாவின் வீட்டில் இந்த மாதிரிப் பிரச்சினைகள் எல்லாம் இருக்காது. சேர்ந்து சாப்பிடும் குடும்பம். சேர்ந்து சினிமாவுக்குப் போகும் குடும்பம். பெற்றோர்களுக்கு வெட்டிங் டே என்றால் குழந்தைகள் ஆசையாக