Iraval Minminigal!
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAdichuvadugal Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsIravu Sooriyan Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Iniyaa Rating: 0 out of 5 stars0 ratingsVaasalil Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKannil Minnum Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Eppothu Oyum? Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsKandu Kondren Kandu Kondren Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsAvar Enakku Mattumalla Rating: 0 out of 5 stars0 ratings
Related to Iraval Minminigal!
Related ebooks
Paathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Thaalattum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikku Vantha Malarae Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5தாலாட்டும் உறவுகள்... Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidivelli Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsMagizha Malaiya? Marma Malaiya? Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Mullai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Nilavey Vaa... Nillathey Vaa... Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5சிறுகதைகள் - I Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Aathma Logam Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bothai Rating: 0 out of 5 stars0 ratingsThaalam Thappiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKukgramathu Kuyil Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Iraval Minminigal!
0 ratings0 reviews
Book preview
Iraval Minminigal! - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
இரவல் மின்மினிகள்!
Iraval Minminigal!
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
காஞ்சனா, அங்கே என்ன பண்றே? எந்தனை முறை அழைக்கறது. சுடர் என்ன பண்ணிட்டிருக்கா?
தொலைத் தொடர்பகத்தில் பெரிய பணியில் இருக்கும் லீலா தன் புடவையை சரிபடுத்திக் கொண்டே குரல் கொடுக்க... சுடர் என்று அழைக்கப்பட்ட சுடர் கொடி, அந்த வீட்டு எசமானி லீலாம்பாவின் இரண்டாவது மகள். அந்த வீட்டை நிர்வகிக்கும் காஞ்சானவிற்கு லீலாம்மாவின் அழைப்பு கேட்கிறது. ஆனால் அவர் விசாரித்த சுடர் கொடியைப் பற்றித்தான் செல்ல முடியவில்லை.
லீலாவின் மகள் சுடர் கொடி தன் அறையை லேசாக மூடிக் கொண்டு கட்டிலில் சாய்ந்தபடி, மடிக்கணினியை இயக்கி, தனக்குத்தானே சிரித்துக் கொண்டு இருக்கிறாள். அடிக்கடி அவள் விரல்கள் புறா கொத்துவது போல மடிக்கணினியின் எழுத்துக்களில் உட்கார்ந்து போகிறது. அவள் அடிக்க... அடிக்க... அவளுக்கு உரிய பதில்கள் கணினித் திரையில் தோன்ற... அவளுக்கு ஒரே சிரிப்பு...
மெலிதான குரலில், சுடரு... சுடரு கண்ணு... வெளியே வரியா
காஞ்சனாவின் குரல் காற்றில் கரைகிறது.
சமையல் அறையிலிருந்து வெளியே வரும் காஞ்சனாவின் கால்களை கட்டிக்கொண்டு எழுந்து நிற்கப்பார்க்கும் லீலாவின் பேத்தியைக் கையில் ஏந்திக் கொண்டு, மின்னிக் கண்ணு பசிக்குதா...
கொஞ்ச, பொம்மை போலிருக்கும் அந்த எட்டுமாதக் குழந்தை அவளைக் கன்னத்தில் தட்டி சிரிக்கிறது.
காஞ்சனாவின் வயதிற்கும் அவள் தோற்றத்திற்கும் சம்பந்தம் இருக்காது. வயது நாற்பத்தி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும், பார்க்க முப்பது முப்பத்தி இரண்டு வயது போலத்தான் இருக்கிறாள். நீண்ட கூந்தலைப்பின்னலாகப் பின்னி அப்படியே சுருட்டி கொண்டையிட்டு... மாநிறத்திற்கும் கீழாக... வரிசையில் மின்னும் பற்கள். அளவான உடல் வாகு. இரண்டாம் முறை பார்க்கத்தாண்டும் தோற்றம்.
அலுவலகம் புறப்படும் லீலா, வெளியே வந்து ஏய் சுடர் என்ன பண்றே...
குரல் உயர்த்துகிறாள்.
மடிக்கணினியை கட்டிலில் கிடத்திவிட்டு... டைட் பனியனும், டைட் ஜீன்ஸும் அணிந்து... தோளில் புரளும் கூந்தலுடன் தற்கால நவநாகரீக மங்கையாய்... தன் கூந்தலை தள்ளிவிட்டு சுடர்கொடி அறையிலிருந்து வெளிவர குபீரென விலையுயர்ந்த செண்ட் மணம் ஹால் முற்றிலும்
சுடர், எத்தனை முறை உன்னை அழைக்கிறது. உன் அப்பா போனதிலிருந்து உன் போக்கே சரியிலே. உன்னையும் மேரேஜ் செய்து அனுப்பிட்டா எனக்கு நிம்மதியாய் இருக்கும். நெருப்பை மடியிலே கட்டிகிட்டு இருக்க வேண்டியிருக்கு
லீலா ஸ்தலமான சரீரத்துடன் தளர்வாய் தலை பின்னி மடிப்பாய் சேலை உடுத்தி கறுத்த மேனியாய்... சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டு வைத்து... கழுத்தில் தடிமனான தங்கச் சங்கலி... கைகளில் தங்க வனளயல்கள்...
அம்மா, நெருப்பு அடுப்பிலே மட்டும் இருக்கணும். வயத்தில் இருக்கக் கூடாது. உன் பொண்ணு என்ன சின்னபாப்பாவா. கம்ப்யூட்டர் சைன்ஸ்ல எம்.எஸ்.ஸி. கோல்ட் மெடலிஸ்ட். ஒரு பெரிய ஐ.டி. நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கற பொண்ணு. சுயமாய் சிந்திக்கிற வயசில போய்... என்னைப்பத்தி தேவையில்லாம கவலைப்பட்டு... நீ ஆபீஸ் போகிற வேலையைப்பாரு. இந்த டிராபிகல கார் ஓட்டாதேன்னா கேட்க மாட்டேங்கற. நீயே செல்ப் டிரைவ் பண்ணிட்டு போறே. நான் இங்க, உன்னனப்பத்தி கவலைப்படறேன். நீ என்னைப்பத்தி கவலைப்படறே?
ஒண்ணு சொன்னா ஒன்பது சொல்லி என் வாய அடைச்சிடுவே சரி... சரி... ரெஸ்ட் எடு உனக்கு நைட் டியூட்டி
என்றவாறே காஞ்சனாவிடம்,
காஞ்சனா, மின்னிபத்திரம்... நேரா நேரத்துக்கு டயட்ட பார்த்துக்குடு. டானிக்கும் குடு... நம்மள நம்பிதான் பொற்கொடி மின்னிய நம்மகிட்ட ஒப்படைச்சிருக்கா. அசந்து மறந்து பாத்ரூம் பக்கம் விட்டுராதே. பக்கெட்ல தண்ணி இருக்கும். நாம ஜாக்கிரதையா பார்த்துக்கணும்.
அம்மா, நீங்க புறப்படுங்க. நான் ரொம்ப ஜாக்கிரதையா உங்க பேத்திய பார்த்துக்குவேன், அதைவிட்டா எனக்கு வேறு என்ன வேலை, மின்னி என் உயிர் போல...
மின்னியின் தாய் பொற்கொடி, லீலாவின் மூத்தமகள் இங்கிலாந்து வாசி. தன் கணவனுடன் லண்டனில் வேலை பார்க்கிறாள். பவுண்டுகளின் பின்னால் பெற்றோர்கள் ஓட, மூன்று மாதக் குழந்தையிலிருந்தே மின்ணி சென்னை வாசி.
லீலா ஒரு வழியாய் சாப்பாட்டுப்பை தன் தோள் பை ஆகியவற்னற எடுத்துக் கொண்டு புறப்படும் முன்னர் கிசு கிசு குரலில் சுடர் மேல ஒரு கண்ணுவை. நான் சொன்னது தெரிய வேண்டாம்
என காஞ்சனாவின் தோள் தொட்டு நேசமுடன் சொல்லி, பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டு புறப்படுகிறாள்.
சின்ன சிரிப்புடன்,
நீங்க சொல்ல வேண்டாம். எனக்கு அந்த வேலை தான்" காஞ்சனா சற்று உரக்கச் சொல்லிவிட...
லீலா வெளியேறியதும் ஆட்டோமேடிக் லாக் கதவு தானாக மூடிக் கொள்கிறது.
என்ன காஞ்சனா, என்னைப் பத்தியா பேசறிங்க
என சிடு சிடுக்கிறாள் சுடர் கொடி.
அவள் முகம் கறுத்து சுருங்சா...
ஏங்கண்ணு உன்னைப் பத்தி என்ன பேச போறோம். மின்னிய பத்திரமா பார்த்துகோன்னாங்க. எனக்கு அந்த வேலைதான்னு சொன்னேன் கண்ணு
சரி... சரி...
சலிப்புடன் சுடர்கொடி சொல்லிக்கொண்டே மீண்டும் தன் அறையினுள் புகுந்து தாளிட்டுக் கொள்ள...
லீலா அம்மாளின் அனுமானம் சரிதான் எனப் புரிகிறது காஞ்சனாவிற்கு. குழந்தை மின்னி கொட்டாவி விட புட்டிப்பால் புகட்டுகிறாள் காஞ்சனா. புட்டிபாலை அணைத்தபடி குழந்தை கட்டிலின் நடுவே அயர்ந்து விட...
பிரிட்டிஷ் அரசின் சலுகைகளுக்காகவும் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவதற்காகவும் இலண்டனில் பிறந்தவள் மின்னி. எதிர்காலத்தில் விண்ணப்பங்களின் பெயரைப் பதியும் போது சிறிய பெயராய் இருக்க வேண்டும் என்றே 'மின்னி' என நாமகரணமிட்டு... இப்போதெல்லாம் ஊர்... தேதி... காவம் என முன்கூட்டியே திட்டமிட்டு தான் பிள்ளைப்பேறு நடக்கிறது. இல்லை நடத்தப்படுகிறது. அதற்கு உதாரணம் மின்னி,
குழந்தை தூங்கியதும், தன் சேலை தலைப்பை எடுத்து தோளில் விசி சுடரின் அறைக் கதவைத் தள்ளிப் பார்க்கிறாள் காஞ்சனா. அழுத்தமாய் தாளிடப்பட்டிருந்தது. சாவி துவாரத்தின் வழியே... லீலாம்மா சொன்ன கடமையை செய்ய வேண்டும் அல்லவா, சுடர் இன்னமும் மடிக்கணினி ஏந்தி... என்னதான் அப்படி அதில் இருக்கும். லீலாம்மா சந்தேகப்படுவதும் சரியோ...?
சுடர் எழுந்து கொள்வது தெரிய... காஞ்சனா ஓடிப்போய் சமையல் வேலை செய்வதாய் பாவனை செய்ய...
ஆயிரம் சதுர அடிக்குக் கொஞ்சம் குறைச்சலான மாடி குடியிருப்பு மூன்று படுக்கையறைகள். எல்லாம் திட்டமிடப்பட்டு... இதுவே ஒரு கோடிக்கு மேல் போய் விட பழைய தன் வீட்டை விற்று வந்த பானம் சேமிப்பு எல்லாவற்றையும் போட்டு லீலா இதை வாங்கினாள். மாடுலர் கிச்சன்... பிரெஞ்ச் ஜன்னல் என எல்லாமே நாவீனம்.