Pavala Malli
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
Aasai Veedu Rating: 5 out of 5 stars5/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Vaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pavala Malli
Related ebooks
Kaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Vennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Kankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Mannin Mathagu Rating: 0 out of 5 stars0 ratingsEn Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsNilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsIru Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsMalarey Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Yarum Kettal Rating: 5 out of 5 stars5/5Poo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kodi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNaal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Saatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Pavala Malli
0 ratings0 reviews
Book preview
Pavala Malli - GA Prabha
http://www.pustaka.co.in
பவள மல்லி
Pavala Malli
Author:
ஜீ.ஏ.பிரபா.
GA Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
ஒருவர் வாழ்வில் மலர்ச்சியைக் கொண்டு வர
நீ செல்வந்தனாகவோ,புத்திசாலியாகவோ
இருக்க வேண்டியதில்லை. அவர்கள் மேல்
அக்கறை இருந்தால் போதும்.
வாசல் முழுதும் பவழ மல்லிப் பூக்கள் கும்மென்று உதிர்ந்திருந்தது. பூப் பாவாடை விரித்தது போல் மண்ணில் நிறைந்து அழகாய்க் காட்சி அளித்தது. வெண்ணிறமும் சிவப்பு நிறக் காம்புடன் தனித்து அழகாய்க் காட்சி அளித்த பூக்களை எடுக்க மனம் வரவில்லை சைதன்யாவிற்கு.
மார்கழி அதிகாலைப் பனி முழுதாய் வீட்டை மூடி இருந்தது. வெண்புகை சூழ்ந்தது போல் வீடு, தெருக்கள் எல்லாம் பனி மூடி மங்கிய ஒளி எங்கும் நிரம்பி இருந்தது. அஞ்சரை மணி என்றாலும் நள்ளிரவு போல் இருள்.
வாசல் விளக்கு வெளிச்சம் பூக்களின் மேல் முழுதாக வீழ்ந்திருந்தது. எதிர் வீட்டு பத்மாவும் விளக்கைப் போட்டு கோலம் போட வந்திருந்தாள். அந்த வெளிச்சமும் சேர்ந்து அந்த இடம் பகல் போல் ஒளிர்ந்தது.
பூக்களை மிதிக்காமல் மெல்ல காலை எட்டி வைத்து வேலிப்படலைத் திறந்து வெளியில் வந்தாள் சைதன்யா. இரவே சாணி தெளித்து வாசலைக் கூட்டி விட்டிருந்தாள். தரை காய்ந்து பளிச் என்று இருந்தது.
சைது இன்னைக்கு என்ன கோலம். கலரா, பொடிக்கோலமா?
- பத்மா’
நான் பொடிக் கோலம். நீ?
நான் ரங்கோலி போடலாமான்னு நினைக்கிறேன்.
நான் புள்ளி வச்சு சிக்கல் கோலம். இருபது புள்ளி, நேர் வரிசை. ஒண்ணுல நிறுத்தனும். சைடுல எட்டு, நேர் வரிசை ஒண்ணுல நிறுத்தனும்.
ஸ்டார் மாதிரி வருமா. இரு நானும் வைக்கிறேன்.
பத்மாவும் வந்து புள்ளி வைக்க, அக்கம்பக்கம் பெண்களும் வேடிக்கை பார்க்க வந்து விட்டார்கள்.
சைதன்யாவின் கோலங்கள், சமையல் குறிப்புகள் மிகப் பிரபலம்.
மதியம் ஒருமணி நேரம் சமையல் வகுப்புகள் நடத்துகிறாள். பத்திரிகை ஒன்றில் கலைகள் கற்போம் என்று தொடர் எழுதுகிறாள். சங்கீதம், ஓவியம், சமையல் குறிப்புகள், என்று சகல விஷயங்கள் பற்றியும் எழுதுகிறாள்.
வேணுகோபால் சுவாமி கோவிலில் அவளின் கிருஷ்ண பஜன் மிகப் பிரசித்தம். அவளுடன் சேர்ந்து பத்துபேர் கொண்ட ஒரு குழு சங்கரா டி..வி மற்றும் உள்ளூர் டி.வி. ஒன்றில் வாரம் ஒருநாள் பஜன் செய்வார்கள். அது போக அவள் நெட்டில் தேடி விதம், விதமாய் சமையல் குறிப்புகள், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் என்று வகுப்புகள் நடத்துகிறாள்.
கோவை ராம்நகர் பகுதியில் சைதன்யா மிகப் பிரபலம். சைதன்யாவோட அண்ணா என்றுதான் அவளின் அண்ணாவே அடையாளம் காட்டப் படுவான். அதில் அவனுக்கு மிகப் பெருமை. நான் சைதன்யாவோட அண்ணா என்று பெருமையாக சொல்லிக் கொள்வான். அண்ணிக்கு அவளுடன் வெளியில் வருவதென்றால் சந்தோஷம்.
கோவை முழுதும் அவள் பஜனை வகுப்புகள், ஆயில் பெயிண்டிங் வகுப்புகள் நடத்துவதால் பிரபலம். அத்துடன் உள்ளூர் டி.வி. ஒன்றில் அறிவிப்பாளராக இருக்கிறாள்.
"இருக்கறது இருபத்து நாலு மணி நேரம்தான். உனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பவர்களுக்கு புன்னகை மட்டுமே பதில்.
வாழ்க்கையில் எதையும் செய்வதற்கு ரசனை முக்கியம். எந்தக் காரியம் எடுத்துகிட்டாலும் அதை ரசனையோடு, விருப்பத்துடன் செய்தால் ஒருநாளில் பலமணி நேரம் நமக்கு மிச்சமாகும். டைம் மேனேஜ்மென்ட், ரசனை, செய்யறதை திருந்தச் செய்தல்... போதுமே. எதுவும் வெற்றிதான்.
அடிக்கடி அவள் சொல்வது. அது போலவே தன்னை அமைத்துக் கொள்வாள். முடியாது என்று நினைத்து முடிவு எடுத்து விட்டால் யாராலும் அவளை சம்மதிக்க வைக்க முடியாது.
நம்ம மனசுல ஒரு எண்ணம் எழுவது கடவுள் சித்தம். இது நடக்கும், இது வேணும்னு நினைக்க வைக்கிறது அவன்தான். எல்லையற்ற ஒரு சக்திதான் நம்மை கை பிடித்து அழைத்துச் செல்கிறது. உள்ளுணர்வாய் அது வழி நடத்துகிறது. அதன் குரலைக் கேட்டால் போதும்
என்பவளுக்கு கோவிலே கதி என்று இருப்பதில் நம்பிக்கை கிடையாது.
கோவிலில் சில அதிர்வுகள் இருக்கு. அது நம் உடலையும், மனசையும் சுத்தம் செய்யும். நம்மை புதுப்பிக்கும் பிரபஞ்ச சக்தி அதிகம் இருக்கும் இடம் அது. பேட்டரி சார்ஜ் ஏத்தற மாதிரி அப்பப்போ போய்ட்டு வரலாம். மத்தபடி அங்கதான் இறைவன் இருக்கான்னு இல்லை. எங்கெல்லாம் உன் உதவி, அன்பு தேவைப்படுதோ அங்க போ. நீ திரும்பி வரும்போது கடவுள் உன் பின்னாடி வருவார் என்று கூறுவதை யாராலும் மறுக்க முடியாது.
எந்நேரமும் எதோ ஒரு பாடலைப் பாடியபடிதான் வேலை நடக்கும்.
இப்போதும் மோகன ராகம் முனகியபடி கோலம் போட்டாள்.
"நாராயணா எனும் நாமம்,
நாவிற்கினிய நாராயண என்னும் நாமம்.
பாட்டுன்னா சைதன்யாதான். சைதன்யா இருக்கும் இடத்தில் பாட்டு ஒலிக்கும்
பக்கத்து வீட்டு நவநீதம்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது.
-பத்மா பாடினாள்.
கோலம் போடறதை விட்டு பாட்டா?
மார்கழி