Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanthaiyumaagi Thayumaagi
Thanthaiyumaagi Thayumaagi
Thanthaiyumaagi Thayumaagi
Ebook80 pages26 minutes

Thanthaiyumaagi Thayumaagi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115703995
Thanthaiyumaagi Thayumaagi

Read more from Lakshmi Rajarathnam

Related to Thanthaiyumaagi Thayumaagi

Related ebooks

Related categories

Reviews for Thanthaiyumaagi Thayumaagi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanthaiyumaagi Thayumaagi - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    தந்தையுமாகி தாயுமாகி

    Thanthaiyumaagi Thayumaagi

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    லஞ்ச் கூடையை கார் டிரைவரிடமிருந்து வாங்கிக் கொண்டாள் நிர்மலா. அவளைச் சுற்றி நீலா, வேணி, சம்பா, கமலா, சாந்தா என்று மாணவிகள் நின்று கொண்டிருந்தார்கள். அந்த லஞ்ச் கேரியரில் அவர்களுக்கும் பொரியல், கூட்டு, சாம்பார், அப்பளம் என்று சேர்த்தே சமையல்கார அம்மாள் பங்கஜம் வைத்திருப்பாள். தாயில்லாத நிர்மலாவுக்கு பங்கஜம்மாள்தான் உற்ற தோழி.

    கல்லூரி விட்டு பங்களாவில் நுழைந்ததுமே பங்கஜம்மாள்தான் எதிர்ப்பட வேண்டும்.

    இன்னிக்கு என்ன டிபன் பங்கஜம்மா?

    பங்கஜம்மா உதட்டை பிதுக்குவாள்...

    ஐய்ய... டிபன் ஒண்ணும் இல்லையா! ஏன்... அப்ப டிரைவரை அனுப்பி ஏதாவது வாங்கிவரச் சொல்லுங்க.

    அவள் முடிக்கும் முன்னரே தட்டில் அவல் உப்புமாவும் மெதுவடை சட்னியும் என்று அவளுக்குப் பிடித்த டிபன் ஏதாவது இருக்கும்.

    பொய்தானே சொன்னீங்க?

    ஆமாம்...

    அப்ப எனக்கு டிபன் வேண்டாம்...

    என் கண்ணு இல்ல? உங்கிட்ட விளையாடாம வேற யார்கிட்ட விளையாடறது... சொல்லு என்று பங்கஜம்மா அவள் முகவாயைப் பிடித்துக் கொஞ்சுவாள்.

    அவளும், அவள் தந்தையும் மட்டுமே உள்ள பெரிய பங்களாவில் பங்கஜம்மாள் மட்டும் இல்லையென்றால் தனிமை அவளைக் கொன்று போட்டிருக்கும். பங்கஜம்மாளின் சமையல் நிர்மலாவுக்கும், அவள் தந்தை குருநாதனுக்கும் மட்டும் பிடித்திருக்கிறது என்பது இல்லை. நிர்மலாவின் தோழிகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

    நீலாவுக்கு தேங்காய் பால், சித்ராவுக்கு அவியல், பாலாவுக்கு நெய் சாம்பார்ல ஊறும் இட்லி... நிர்மலாவின் தோழிகளையும் கவர்ந்து கொண்டிருந்தாள் பங்கஜம்மா...

    கல்லூரியின் லஞ்ச் நேரத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

    பங்கஜம்மா இன்னைக்கு என்ன செய்து அனுப்பியிருப்பாங்க? என்று சம்பா வினவினாள்.

    அவள் குடும்பத்தினர் பரம வைதீக வைஷ்ணவர்கள். இந்தக் காலத்திலும் நெற்றியில் பெரிதாக நாமம் தீட்டிக்கொண்டு, பஞ்ச கச்சம் அணிந்து சதா அரங்கனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு...

    வீட்டில் சமையல் சாப்பாடு கூட கட்டுப்பாடுதான். பூண்டு, வெங்காயம், மசாலா இதெல்லாம் கிட்டவே வரக்கூடாது அதனால் பங்கஜம்மாவின் வெங்காய மசாலா- பூண்டு சமையலுக்கு கொஞ்சம் பறந்து பெற்றுக் கொள்வாள்.

    பதிலுக்கு தங்கள் வீட்டிலிருந்து எண்ணெய் கசியும் புளியஞ்சாதத்தையும், சுக்காரவடிசலையும் கொண்டு வருவாள்.

    ஒரு விடுமுறை நாளில் புளியோதரையை பங்கஜம்மாவுக்கே கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள்.

    நீலாவுக்கு பங்கஜம்மாவின் தேங்காய் சாதம் பிடிக்கும். முழுசாக முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துக் கொட்ட குருநாதனின் செல்வத்தால் மட்டும்தானே முடியும்.

    நகரத்தில் பெரிய தொழிலதிபர் குருநாதன். மரம், துணிகள், மசாலா பொருட்கள் போல பல வகைகளில் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர். பணம் ஒரு பொருட்டல்ல அவரது குடும்பத்திற்கு. உதவி செய்யும் தாராள மனம் இருந்தது குருநாதனுக்கு.

    இவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்களே... என்ன கைமாறு திரும்ப செய்யப் போகிறேன் என்று உதவி பெற்றவர்கள் கண் கலங்குவது வழக்கம்.

    உங்க வீட்டுக்குப் பக்கத்துல கோயில் இருக்குல்ல?

    இருக்குதுங்க...

    என் ஒரே வாரிசு... என் மக நல்லாயிருக்கணும்னு கற்பூரம் கொளுத்தி வேண்டிகிட்டு போப்பா என்பார் குருநாதன்.

    பங்கஜத்தாவுக்கும் சொந்த பந்தம்னு எதுவுமில்லை. குருநாதனின் குடும்பத்தை நம்பி வந்தவள். அந்தக் குடும்பமே சாசுவதம் என்று அரச மரத்தடி விநாயகரைப் போல் அமர்ந்து கொண்டுவிட்டாள்.

    "நேத்து கல்யாணத்துக்குப் போனேனா... அதனால் இன்னிக்கு மிளகுக் குழம்பு வச்சுட்டேன். கருவேப்பிலைப்

    Enjoying the preview?
    Page 1 of 1