Thirumagal Thedi Vandhaal…
5/5
()
About this ebook
Read more from Lakshmi Praba
Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Ennalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Devan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Chithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsSooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Kaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Dinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Sollathey Yarum Kettal Rating: 5 out of 5 stars5/5Unnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Vaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5
Related to Thirumagal Thedi Vandhaal…
Related ebooks
Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Thendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsChithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5En Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Engey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Kaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Nee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsEnnithunithal Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Sila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsPennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Netru Partha Nilavu Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Thirumagal Thedi Vandhaal…
1 rating0 reviews
Book preview
Thirumagal Thedi Vandhaal… - Lakshmi Praba
http://www.pustaka.co.in
‘திருமகள் தேடி வந்தாள்...’
‘Thirumagal Thedi Vandhaal…’
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
வானம் மேகமெனும் தூரிகை கொண்டு மழையெனும் ஓவியத்தை பூமியின் மீது அழகாக வரைய ஆரம்பித்தது. மரம் செடி கொடிகளும் மலர்களும்... அந்த ஓவியத்திற்கு வித விதமாய் வண்ணம் சேர்த்து பொலிவூட்டின.
பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரி வாசலருகே... தடதடத்து வந்த அந்த ஸ்கூட்டர் ஒரு கணம் தயங்கி மூச்சை நிறுத்தியது.
அப்பா நடேசனின் பின்னால் அமர்ந்திருந்த யமுனா... பதினெட்டு வயது பருவச்சிட்டு... மெல்ல இறங்கியபடி தனது பார்வையால் கல்லூரி வளாகத்தை வருடிக் கொடுத்தாள்.
மழையின் வேகம் குறைந்து வானம் இலேசாய் பூத்தூவிக் கொண்டிருந்தது. நீல வண்ணச் சுடிதாரை முழுவதுமாக மறைத்திருந்த ரெயின் கோட்டை கழட்ட யத்தனித்த யமுனாவை... அப்பாவின் குரல் பதற்றமாய் தடை செய்தது.
யமுனா! கோட்டை கழட்டாதே... இன்னும் மழை நிக்கலை பாரு... கிளாசுக்குள்ளே போயி கழட்டிக்கோ... பத்து நாளா டைபாயிட் காய்ச்சல்லே படுத்துட்டு இன்னிக்குத்தான் முதமுதல்லா காலேஜுக்கே வர்றே... பார்த்து... பத்திரமா இரும்மா.
சரிப்பா... சாயந்தரம் நான் பஸ் புடிச்சு வீட்டுக்கு வந்துடறேன். இங்கிருந்து மூணே ஸ்டாப் தானப்பா? நீங்க எனக்காக வந்து சிரமப்படாதீங்கப்பா... ப்ளீஸ்.
சரி... சரி யமுனா... செலவுக்கு காசு வச்சிருக்கே இல்ல? பஸ் வர லேட்டாச்சுன்னா... ஆட்டோ புடிச்சு வந்திடு என்ன? பாத்து... ஜாக்கிரதை வரட்டா?
யமுனாவின் அழகிய இதழ்களில் ஒரு குட்டி முறுவல் பூத்தது.
வெற்றிகரமா அரை சதம் அடிச்சுட்டீங்கப்பா
புன்னகைத்த மகளை நெற்றி சுருங்க ஏறிட்டார் நடேசன்.
என்னப்பா புரியலையா? கார்த்தால எழுந்ததிலேர்ந்து... 'பாத்து பத்திரம்... ஜாக்கிரதை... பஸ்சுக்காக வெயிட் பண்ணாம ஆட்டோவுல நேரத்தோட வந்திடு’ன்னு... அம்பது தடவை சொல்லீட்டீங்களே?
நான் என்ன சின்னக் குழந்தையா? பதட்டப் படாம போயிட்டு வாங்கப்பா... வர வர வீட்டுல இருக்கற தாத்தா மாதிரியே புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க... தங்கச்சியும் தம்பியும் வர்றதுக்குள்ளே... நான் வீட்டுலே இருப்பேன். போதுமாப்பா?
சரியா... வயசுக்கு மீறின பொறுப்புணர்ச்சியோட நீ இருக்கிறதைப் பார்த்துட்டு எத்தனையோ வாட்டி நா பெருமிதப் பட்டிருக்கேன் யமுனா... ஆனாலும் பெத்த மனசு பரிதவிச்சுப் போகுது. அதான்...
உணர்ச்சி வசத்தில் நடேசனின் குரலுடைந்து பிசிறு தட்ட... இலேசாய் தலையாட்டி ஸ்கூட்டரை உயிர்ப்பித்து, அரைமனதாய் விருட்டென்று கிளம்பினார்.
குடும்பத்திற்காக தன்னை மெழுகாய் உருக்கிக் கொண்ட உத்தமர் அவர். தன்னலமற்ற தந்தைக்கு மகளாய் பிறக்கதான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்... வழக்கம் போல் யமுனாவுக்குள் இன்றும் தலை தூக்கியது.
தூரத்தில் அவரது உருவம் ஒரு புள்ளியாய் மறையும் வரை... அவர் சென்ற திக்கையே வெறித்துக் கொண்டு நின்றாள். கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்து இமைக்கரைகளைத் தாண்டி வழிந்து செல்லட்டுமா? என்று வினவியது.
ஹாய் யமுனா! என்னடி இங்கேயே நின்னுட்டே?
தோழி சஹானாவின் இனிய குரல் அவளது சிந்தனையைக் கலைத்தது.
சட்டென்று திரும்பிப் பார்த்தாள் யமுனா. நாலைந்து மாணவிகள் புடை சூழ, வாத நாராயண மரத்தடியில் புன்னகைத்தபடி நின்றிருந்தாள் சஹானா. நாலைந்து கார்களில் மாறி மாறி வலம் வரும் பணக்காரயுவதி.
கலகலப்பிற்கும், பரபரப்பிற்கும் மறு பெயர் உண்டென்றால்... அது சஹானாவாகத் தான் இருக்கும். இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் சேர்ந்து படித்து வந்த இணை பிரியாத் தோழிகள்.
குணாதிசயத்தைப் பொறுத்தவரையில் இருவரும் வெவ்வேறு துருவங்கள்தான் என்றாலும்... நட்பு என்ற நேச வலைக்குள் சிக்கி இருவருமே கட்டுண்டு கிடந்தனர் என்பது நிஜம்.
சஹானா அசரவைக்கும் அழகுக்கு சொந்தக்காரி. கவர்ச்சி ததும்பும் கட்டுடலுடன் காண்போரை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைப்பாள்.
சஹானாவைப் போன்று யமுனாவிடம் கவர்ச்சி இல்லை... கண்ணியம் இருந்தது. அசர வைக்கும் அழகுக்கு பதிலாக... அமைதியான மனதிற்கு இதம் தரும் அழகு இருந்தது.
அவள் சலசலத்து ஓடும் காட்டருவி என்றால்... இவள் தெளிந்த சலனமற்ற ஜீவ நதியாக இருந்தாள்.
தோழியைக் கண்டதும் யமுனாவின் முகத்தில் முன்பிருந்த இறுக்கம் தளர்ந்து முறுவல் முளைத்தது... மரத்தடியை நோக்கி நடந்தாள்.
ஃபிரண்ட்ஸ்! இவ யமுனா... நாங்க ரெண்டு பேரும் நகமும் சதையுமா இருப்போம். படிப்புல இவளை யாரும் அடிச்சுக்கவே முடியாது. ஸ்கூல்ல மட்டுமில்ல... மாவட்ட அளவில் முதலாவதா வந்தவ... இனி நம்ம கல்லூரி பேராசிரியர்கள் எல்லாருக்கும் இவ 'பெட்' ஆயிடுவா.
சஹி... சும்மா இரேன்
என்ற யமுனா மற்ற மாணவிகளைப் பார்த்து ஹாய்
என்று சினேகமாய் சிரித்தாள்.
சஹி... பத்து நாள்லே தியரி நிறைய நடத்திப் போட்டுட்டாங்களா? நீ நோட்ஸ் எடுத்து வச்சிரக்கேல்ல?
அவளது குரலில் ஆர்வமும் அக்கறையும் ததும்பி வழிந்தன.
"காலேஜ் ரீ ஓபன் ஆகி பத்து நாள் தானே ஆகுது. இன்னும் இவ கிளாசுக்கே அடியெடுத்து வைக்கலை. பாத்தீங்களா ஃபிரண்ட்ஸ்? சரியான புத்தகப் புழு இவ... கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், அமைதி, நேர்மை இதையெல்லாம் மொத்தமா கலந்து பிசைஞ்சு... பிரம்மன் இவளை உருவாக்கி இருப்பார்னு நா நினைக்கிறேன்.
காதல்ங்கிற வார்த்தையை மட்டும் இவகிட்ட தப்பித்தவறி உளறிடாதீங்க. ஏதோ கெட்ட வார்த்தையைக் கேட்டுட்ட மாதிரி... காத தூரம் ஓடிப் போயிடுவா."
மற்ற மாணவிகள் 'கொல்' என்று சிரித்ததும்... புன்னகை மாறாமல் ரெயின் கோட்டை மெதுவாகக் கழற்றியபடி சஹானாவை ஏறிட்டாள் யமுனா.
கலாய்ச்சு முடிச்சுட்டியா? வா... கிளாசுக்குப் போகலாம்.
அதுக்கு முன்னாடி ஒரு அதிசயத்தைக் காட்டறேன். பாத்துட்டு அப்புறமா கிளாசுக்குப் போகலாம். வாங்க ஃபிரண்ட்ஸ்
என்று யமுனாவின் கையைப் பிடித்துக் கொண்டு விடுவிடுவென்று நடந்தாள் சஹானா.
கல்லூரி வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள்... சோலை போல் நிழல் பரப்பி 'பசேல்' என்று குளிர்ச்சியாய் கண்களைக் கட்டிப் போட்டன.
முப்பது அடி தூரத்தில்... புன்னை மரத்தடியிலிருந்த நீளமான சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட பத்து மாணவர்கள் அமர்ந்து பேசிக் கலகலத்துக் கொண்டிருந்தனர்.
சஹானா அவர்களது கண்களில் பட்டதுதான் தாமதம்...
சஹா...னா... சாரல் தூவுதோ... சஹானா பூக்கள் பூத்ததோ?
என்று ராகத்தோடு ஒருவன் பாடினான்.
யமுனாவிற்கு திக்கென்றிருந்தது. ஏய் சஹி கிளாசுக்குப் போகாம இதென்ன வெட்டி வேலை? வம்பை வீணா விலை கொடுத்து வாங்கற மாதிரி இருக்கு?
அடிக் குரலில் அதட்டினாள். சஹானா எதையும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
குட்மார்னிங் சீனியர்ஸ் இவ என்னோட ஃபிரண்ட் யமுனா. படிப்புலே சுட்டி... எங்க ஸ்கூலுக்கே பெருமை தேடித்தந்தவ... ஆங்... யமுனா! இவங்க எம்.ஈ. ஃபைனல் இயர் பண்றாங்க... நம்ம சீனியர்ஸ் எல்லாருமே ரொம்ப டீசண்ட்... ராகிங் நம்ம காலேஜுலே கிடையாது. இன்டர் காலேஜ் காம்படிசன்லே... பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி பாட்டு, டான்ஸ் எல்லாத்துலேயும் நம்ம காலேஜ் தான் வின் பண்ணிருக்கு... இதுக்கு யார் காரணம் தெரியுமா? நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் மிஸ்டர் முரளி... இதோ இவர் தான்
சுட்டு விரலை நீட்டினாள்.
சரேலென்று நிமிர்ந்து பார்த்தான் முரளி. கிளாட் டூ மீட் யூ
மரியாதை நிமித்தமாக வார்த்தைகளை உதிர்த்த யமுனாவின் இதயக் கூட்டிற்குள் புறா சிறகடித்தது.
*****
2
யமுனாவுக்கு உள்ளூர எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது.
'வந்ததும் வராததுமாக இவள் எதற்கு இந்த வாலிபர்களிடம் நம்மை வம்பில் மாட்டிவிடுகின்றாள்?' என்ற கேள்வி கொக்கியாய் முளைத்து மனதைப் பிறாண்டியது.
சஹானா முகம் கொள்ளாப் பூரிப்புடன் முரளியை அறிமுகப் படுத்தியது வேறு வழியின்றி வணக்கம் தெரிவித்து 'கிளாட் டூ மீட் யூ' என்று முணுமுணுத்தாள்.
யமுனாவை ஏறிட்டுப் பார்த்து ‘ஹேப்பி டூ மீட் யூ' என்ற முரளி, மறுகணமே கையிலிருந்த ரெக்கார்ட் நோட்டை மும்முரமாகப் புரட்டத் தொடங்கினான்.
யமுனாவிற்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. தணல் மேல் நின்று கொண்டிருப்பதைப் போன்று தர்மசங்கடமாக இருந்தது.
வாவ் இந்த வானவில்லோட மறுபெயர் யமுனாவா? சூப்பர்டா
அந்த கும்பலில் ஒல்லியாய் ஒடிசலாய் இருந்த மாணவன் வயிற்றை எக்கி கமெண்ட் அடித்தான்.
மழையே... மழையே... இளமை முழுதும் நனையும் வரையில் வா...
ரோடு ரோலர் சைஸில் குண்டாய் இருந்தவன் கர்ணகடூரமாய் பாடத் தொடங்கினாள்.
"டேய்... சும்மாயிரு... நேரம் காலம் தெரியாம பாடிக்கிட்டு? புதுசா காலேஜுக்கு வந்திருக்கிறவங்க நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க சாரிங்க... மிஸ். சஹானா! எங்க