Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sippikkul Muthu
Sippikkul Muthu
Sippikkul Muthu
Ebook124 pages57 minutes

Sippikkul Muthu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704035
Sippikkul Muthu

Read more from Vidya Subramaniam

Related to Sippikkul Muthu

Related ebooks

Related categories

Reviews for Sippikkul Muthu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Really sippikkul muthu dhan ethanai parattinalum you deserve it and evlo per parattinalum

Book preview

Sippikkul Muthu - Vidya Subramaniam

http://www.pustaka.co.in

சிப்பிக்குள் முத்து

Sippikkul Muthu

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

1

கலா இன்னிக்கு என்ன விசேஷம் உங்க வீட்ல? பிரதான வாசலில் நுழைந்த உடனேயே கேட்டான் பாலு. ஆறு குடித்தனங்கள் கொண்ட காலனியின் முதல் போர்ஷன் ராமசுப்புவினுடையது. அவருடைய கடைசி பெண் தான் மேற்சொன்ன கலா.

ராதாக்காவை பொண்ணு பார்க்க வராங்க பாலு அண்ணா.

அட அப்படியா? பேஷ் பேஷ்! பார்த்துட்டு போனப் புறம் எனக்கும் ஒரு பங்கு பஜ்ஜியும், ஜொஜ்ஜியும் வரணும் என்ன?

தந்துட்டா போச்சு! சொல்லிக் கொண்டே கலா ஓடி விட்டாள்.

பாலு தங்கள் வீட்டிற்கு விரைந்தான்.

விசாலமான ரேழியின் இரு பக்கமும் எதிரும், புதிருமாய் மும்மூன்று வீடுகள் அமைந்திருந்தன. அதில் வலது பக்க கடைசி போர்ஷன்தான் பாலுவுடையது.

அவன் உள்ளே நுழையும் போது தோசை வார்க்கும் சப்தம் ஸ்ஸ் என்று கேட்டது. ஷர்ட்டை கழட்டி ஆணியில் மாட்டி விட்டு, பின்பக்கம் சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தான்.

வந்தாச்சா நீ என்றாள் சவுந்தரம் உள்ளிருந்து எட்டிப் பார்த்து.

என்னம்மா டிபன் ரெடியா? நா வெளில போகணும். சீக்கிரம் குடு என்றான். மீண்டும் ஷர்ட்டை அணிந்து கொண்டு சீப்பை எடுத்து தலை வாரிக் கொள்ள கண்ணாடியை நோக்கிச் சென்றான்.

எதுக்கு பறக்கற? சினிமாக்குதான் போகப் போற? என்னமோ செமினார்க்கு போறா மாதிரி குதிக்கறயே.

சொல்லமாட்ட? நானும் எம்.ஏ.வை ஒழுங்கா முடிச்சிருந்தா பெரிய வேலையில் சேர்ந்து நீ சொல்ற மாதிரி செமினார்க்கெல்லாம் போயிருந்திருப்பேன். படிப்பை பாதிலயே நிறுத்திட்டா அப்பா மண்டையைப் போட்டுட்டார்னு. ரஞ்சினிக்கு கல்யாணம் பண்ணனுண்டா பாலு. அவர் உத்யோகம் உனக்கு கிடைக்கும். வேலைக்காகத் தான் படிப்பு. உனக்குதான் வேலை கிடைச்சுடுமே, அப்புறம் எதுக்கு படிப்புன்னு கேட்டா சரின்னு நானும் படிப்பை நிறுத்திட்டு அரசாங்க ஆபீஸ்ல் பைலைக் கட்டிட்டு அழறேன். உன் இஷ்டப்படி. ரஞ்சினிக்கு கல்யாணமும் பண்ணி அனுப்பியாச்சு! பேச மாட்டே நீ?

அதன் பிறகு சவுந்தரம் பேசவில்லை. பாலு சொல்வதெல்லாம் உண்மைதான், தான் அப்படி கிண்டலாய் சொல்லியிருக்கக் கூடாது என்று தோன்ற, லேசாய் வருத்தமும் ஏற்பட்டது அவளுக்கு. உள்ளே போய் தட்டில் மூன்று தோசைகளைப் போட்டு, சட்னி ஊற்றி எடுத்து வந்தாள்.

என்னது அடையா? பருப்பு போட மனசு வரலையா? மாழுக்கலா இருக்கு!

அடையில்லடா, தோசை தான், உளுத்தம் பருப்போட ரெண்டு கடலைப் பருப்பும், பயத்தம் பருப்பும் போட்டேன், ஒரு சேஞ்சுக்கு. வர வர உனக்கு நா பண்ணிப் போடறது பிடிக்காம போகத் தொடங்கியாச்சு. உன் கை சமையல் அலுத்துப் போச்சு. கல்யாணம் பண்ணி வைன்னு சொல்லாம சொல்ற அப்படித்தான்?

புரிஞ்சுண்டா சரி என்ற பாலு, சரி சரி நா வரேன் என்றபடி தட்டிலேயே கையலம்பிக் கொண்டு எழுந்து கொடியில் தொங்கிய துண்டினால் கையையும், வாயையும் துடைத்துக் கொண்டு புறப்பட்டான்.

என்ன சினிமாவோ எழவோ? எப்படித்தான் பாக்கறேளோ இந்தக் கால சினிமாவை என்று அலுத்துக் கொண்ட சவுந்தரம், அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போனாள்.

பாலு வெளியில் வந்தான்.

கலா பட்டுப் பாவாடை சகிதம் எதிரில் வந்தாள்.

கலா இங்க வா.

என்ன பாலு அண்ணா?

போய் உங்கக்கா கிட்ட என்னுடைய வாழ்த்துக்களை சொல்லு.

எதுக்கு?

கல்யாணமாகப் போறதில்ல! அதுக்குத்தான்.

கலா சிரித்தாள். அது சரி! இப்பதான் பொண்ணூ பார்க்க வராங்க. முடிஞ்சாதான் கல்யாணம் வெடுக்கென்று சொன்னாள், பாலு ஒரு நிமிடம் திகைத்து நின்றவன், பிறகு நிதானமாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

எட்டு வயசு கலா என்னமாய் பேசுகிறது என்று வியந்து போனான். இதுவரை எத்தனையோ பேர் வந்து பெண் பார்த்துப் போயும் நிச்சயமாகாததால், இப்படி பேசுகிறதோ அல்லது மற்றவர்களைப் போலவே இதுவும் ராதாவின் அழகை கிண்டல் செய்கிறதா? புரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ராதாவின் மீது இரக்கம், தோன்றியது.

2

ரமதா நல்ல பெண் தான், ஆனால் துர திருஷ்டவசமாய் கொஞ்சம் குறையோடு பிறந்து விட்டாள். குறை ஒன்றும் சொல்லப் போனாள் பெரிசில்லை, கொஞ்சம் கறுப்பாய் இருப்பாள். மூக்கு சப்பையாகவே இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு மிக நீளமாய், கூர்மையாய் இருக்கும், அதோடு உள்ளே இடமில்லாதது போய் வெளியே நீண்டிருக்கும் நான்கு முன் பற்கள்.

மற்றபடி குணம் மிக அழகு தான். படிப்பு அதிகமில்லை என்றாலும் வீட்டு வேலைகளில் அவளை மிஞ்ச ஆளில்லை, அவள் சமையலுக்கு டாக்டரேட்டே குடுக்கலாம்.

அந்தப் பகுதி பெண்கள் பூராவுக்கும் இவள் தான் குடும்ப டைலர். கிழிசல் துணியிலிருந்து, கட் பிளவுஸ் வரை மிக அழகாக தைத்து கொடுப்பாள்.

பந்து பந்தாக பிளாஸ்டிக் ஒயர்கள் அவள் கைப்பட்டதும், அழகழகான பூச்சாடிகளாகவும், பொம்மைகளாகவும், கூடைகளாகவும் மாறி விடும், நிமிடத்தில், முகம் அழகில்லையே தவிர, அதையும் சேர்த்து வைத்து அவள் குரலை மிக அழகாய் படைத்திருந்தான், கடவுள்.

கர்நாடக சங்கீதம் ஓரளவுக்கு பயின்றவள். துணி துவைக்கும்போது சிங்கார வேலனே தேவாவை ஜானகியும் வியக்கும் வண்ணம் ஸ்வரம் பிசகாமல் அவள் பாடிக் கேட்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறான், பாலு. அவளைப் பெண் பார்க்க வந்த எந்த ஆணுக்கும் அவளுடைய இத்தனை தகுதிகளும் கண்ணிலும், புத்தியிலும் பட வில்லை; நீண்ட மூக்கும், கறுப்பும், நீட்டின பல்லும் பார்த்து விட்டு போய்ட்டு லெட்டர் போடறோம் என்று மழுப்பி விட்டு விட்டால் போதும் என்று ஓடி விடத்தான் தெரிந்தது.

ஒருமுறை இவளைப் பெண் பார்க்க வந்த ஒருத்தன், அடுத்தவள் சரளாவை வேண்டுமானால் பண்ணிக் கொள்ளத் தயார் என்றான். தயங்காமல் தயங்கின அப்பாவை ராதா உள்ளே கூப்பிட்டு "பரவால்லையப்ப, என்னப் பத்தி

Enjoying the preview?
Page 1 of 1