Kanavodu Sila Naal
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Sumai Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsAnna Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Nee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Megathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsMogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Poisugam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavodu Sila Naal
Related ebooks
Maaruthalukku Oru Hemalatha Rating: 0 out of 5 stars0 ratingsAasai Paravai Koondukkulle Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Mudhal Poo Rating: 3 out of 5 stars3/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Kadaisiyai Oru Muthaliravu Rating: 5 out of 5 stars5/5Vazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Irandu Manam Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5Kavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsYerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5Kolathai Maatravaa Rating: 5 out of 5 stars5/5Saharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Naalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsYaaradhu? Rating: 0 out of 5 stars0 ratingsKathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsSandhippu Thodarum Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kanavodu Sila Naal
0 ratings0 reviews
Book preview
Kanavodu Sila Naal - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
கனவோடு சில நாள்
குறுநாவல்கள்
Kanavodu Sila Naal
Kurunavalgal
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கனவோடு சில நாள்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
2. அறியாப் பருவத்திலே
3. வாசகன்
4. பெண்ணுக்குள் இருக்குது பிரபஞ்சம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
6. காலச் சுமை தாங்கி
7. குற்றால அருவியிலே
1. கனவோடு சில நாள்
1
அந்திப் பொழுது அநாவசியமாக வீணாகிக் கொண்டிருந்தது. விதுலா வாசற்புறத்துக்கும் அறைக்குமாய் நட ந்து நடந்து சலித்து விட்டாள்.
இன்னும் பிரபு வரவில்லை. இன்றோடு வெற்றிகரமான அறுபத்தி நாலாவது மாலைப்பொழுது.
இவர்களுக்குத் திருமணமாகி சரியாய் இரண்டு மாதங்களும் மூன்று நாட்களும்.
தினசரி இதே கதைதான். பிரபு இரவு பத்து மணிக்குக் குறைந்து வீடு திரும்பியதில்லை.
என்னடா வீட்டுல ஒருத்தி காத்துக்கிட்டிருக்காங்கற நினைப்பாவது இருக்கா அதுவும் இல்லையா.
-மகன் வரும் வரையில் தூக்கம் வராமல்- வாசல் வெராந்தாவில், பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருக்கும் நடே சன் கேட்கிற கேள்விக்கு-
‘த்சு’ என்கிற படு அலட்சியமான முகச்சுளிப்புதான் பதில்.
உடை மாற்றிக் கொண்டு - சாப்பாட்டு மேசைக்கு வருபவனுக்கு ஆசார உபசாரங்கள் காத்துக் கிடக்கும்.
இமைகள் அழுத்தும் உரக்கத்தை, பலவந்தமாய் தூரத் தள்ளியபடி புன்னகைப்பாள் விதுலா.
இன்னும் கொஞ்சம் பொரியல் போடவா?
ரசம் தனியா தம்ளர்லே தரட்டுமா?
அவளின் கேள்விகள் சுவற்றில் அடித்த பந்தாய் அவளிடமே திரும்பிவர வெறும் தலையசைப்புதான் பதில் மெளனமாய். சாப்பிடும் அவனையே எத்தனை நேரம் தான் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பாள் இவள்.
சுபாவமே இப்படித் தானோ? இல்லே கல்யாணமானதிலேருந்து தான் இப்படியா? அது என்னமா புதுசா சக ல்யாணமான பொண்டாட்டிகிட்ட இப்படி சிடு சிடுன்னு மூஞ்சியை காமிக்கத் தோணறது? ஒருக்கால் என்னைப் பிடிக்கலையோ அப்படி ஏதாவது இருந்தா முன்னாடியே சொல்லித் தொவைச்சிருக்கலாமே.
விதுலா, மனசுக்குள் மாய்ந்து மாய்ந்து போனாள். யாரிடமாவது நெஞ்சிலிருப்பதைக் கொட்டி ஆற்றிக் கொண்டால் தேவலை தான். யாரிடம் சொல்வாள்.
பெண்கள் இல்லாத வீடு. பிரபுவின் தாய் இறந்து எவ்வளவோ வருடங்களாகறது. நடேசன், பெற்ற செல்வங்கள் மூன்று. மூத்தவன் லட்சுமி திருமணமாகி, குழந்தை குட்டிகளுடன் பூனாவில் இருக்கிறாள். அடுத்தவன் ராஜா பிரபுவை விடவும் நாலு வயது மூத்தவன், திருமணமாகாமல் வீட்டோடு இருக்கிறான். அவன் தான் அப்பாவுக்கு வலதுகை. பிரபுவின் உயிர் சினேகிதனும் அவன் தான் தொழிற்சாலையை கவனித்துக் கொண்டு- அதே சமயத்தில் வீட்டுப் பொறுப்பையும் முதுகில் சுமந்து கொண்டிருப்பவன்.
நாலு வருஷங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த சிறு விபத்தினால் இல்லற வாழ்க்கைக்குத் தகுதியற்ரவனாய் ஒதுக்கப்பட்டவன். இருந்தாலும் அதைப் பெரிய குறையாகப் பொருட்படுத்தாமல் அக்கா குடும்பத் துக்கும் தம்பி குடும்பத்துமாகவே உழைப்பவன்.
பிரபுவுக்கு அண்ணனிடம் பாசம் அதிகம், பயம் அதிகம், நட்பு இதெல்லாவற்ரையும் விட அதிகம்.
ஏண்டா இத்தனை நேரம்?
கம்பெனியில ஆடிட்டிங் டயம்டா.
சரி சரி. போய்ப் படு. உனக்காக அவ எத்தனை நேரமா காத்துகிட்டிருக்கா.
யார் காத்துட்டிருக்க சொன்னது? தூக்கம் வந்தா தூங்குறது தானே.
சட், புதுசா கல்யாணமானவன் பேசறப் பேச்சா இது.
சகோதரர்களுக்குள் நடக்கும் பேச்சை படுக்கையறையில் அமர்ந்திருக்கும் விதுலா கேட்டுக் கொண்டு தானிருப்பாள்.
அவன் அறைக்குள் வந்ததும் விளக்கை அணைத்து விட்டு அவளையும் அணைப்பான்!
இது என்ன வாழ்க்கை.
பகலெல்லாம் ஒரு விதம் இரவு இன்னொரு விதமாய்.
அன்பாய், ஆதரவாய், காதலாய், கனிவாய் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாதா இவருக்கு.
வெறும் கட்டில் சுகத்துக்கு மட்டும் பொண்டாட்டி இநந்தா போதும்னு நினைக்கறாரா?
விதுலா ரோஷத்தில் துடித்துப் போவாள். அவ மானத்தில் குன்றிப்போவாள்.
இதுக்கு மட்டும் ஏன் கிட்ட வறீங்க... எனக்கும் மானம் ரோஷம் இருக்கு.
இப்படிக் கத்த வேண்டும்போல.
இடயைச் சுற்றி, மலைப் பாம்பு போல் வளைந்த கரத்தை நெம்பித் தள்ள வேண்டும் போல...
கன்னத்தினருகே- அனல் மூச்சுக்களை வாரியிறைக்கும் அவனின் முகத்தை, முஷ்டியால் குத்த வேண்டும் போல...
இது எதையுமே செய்ய இயலாமல் அவனது கட்டளைக்குக் கீழ்படியும் அடிமையாய்... அவன் ஆட்டு வித்தபடி ஆடும் பதுமையாய்…
பொழுது விடிந்து-இரவு படுக்கும் வரையில் அவள் அவனுக்காக எத்தனை செய்கிறாள்...
விடிகாலையிலேயே குளித்து, பளிச்சென்று பார்க்கப் பதவிசாய் உடுத்து இவன் ஏழு மணிக்கு எழுந்திருக்கும் முன் சமையலில் கவனித்து... புதுசாய் அறுபது நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட உறவுக்காக பிரபு இவளது கழுத்தில் கட்டிய ஒரு மஞ்சள் கயிற்றுக்காக இவனுடைய அண்ணா, அப்பா இவர்களது தேவைகளையும் அவ்வப் பொழுது கவனித்து, பல் துலக்க பிரஷ்ஷில் பற்பசையைத் தயாராக எடுத்து வைத்து, காபியுடன் இந்து நாளிதழையும் சேர்த்து எடுத்துக் கொண் டு லொங்கு லொங்கென்று மாடிக்கு ஓடி, இவன் குளிக்க வெந்நீர் எடுத்து வைத்து, குளித்து முடித்தவனுக்கு பாத்ரூம் வாசலில் டவலுடன் தயாராகக் காத்திருந்து, உடைகளை எடுத்துக் கொடுத்து, அறுந்து போனப் பொத்தானைப் பரக்கப் பரக்க தைத்து, சாப்பிட உட்காந்தவனுக்குப் பார்த்துப் பார்த்துப் பறிமாறி, வாசல் வரையில் அவனுடன் ஓடிப்போய் காரிலேறும் வரையில் வைத்த விழி வாங்காமல் பார்த்திருந்து, இத்தனைக்கும் பதிலாக அவனிடமிருந்து சின்னப் புன்னகையோ கையசைப்போ கிடைக்காதா என ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து மாலை முழுதும் புத்தம் புதுசாய் பூத்த மலர் போல அவனது வருகைக்காகக் காத்திருந்து, இரவல் வீடு திரும்புபவனை ‘ஏன் இத்தனை நேரம்’ என ஒரு வார்த்தைக் கூட கேட்காது, அவன் படுக்கைக்கு வரும் வரையில் கண் விழித்துக் காத்திருந்து, அவனது யந்திரத் தனமான அணைப்பில் ஜடமாய் அடங்கி…
இது என்ன…
வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்குமா?
தனக்கு மட்டும்தான் இப்படியா - இல்லை எல்லாப் பெண்களுமே இது மாதிரித்தான் வாழ்கிறார்களா…
'என்னிடம் பேச வார்த்தைகளா இல்லை?'
காபி நல்லா இருக்கு...
ராத்திரி நான் வர லேட்டாகும்...
சமையல் பிரமாதம்...
இன்னிக்கு நீ ரொம்ப அழகா டிரஸ் பண்ணிகிட்டிருக்கே.
இது போன்ற வார்த்தைகளுக்கா பஞ்சம்?
அம்மா… அம்மா இருந்தா அவகிட்டயாவது கேட்கலாம். பொண்ணு இப்படிக் கஷ்டப்படுவான்னு தெரியாமலேயே போயிட்டாளே.
அம்மா கிட்ட அப்பாவும் இது மாதிரி தான் நடந்து கிட்டிருப்பாரா ச்சீ. இல்லையே. என் நினைவு தெரிஞ்சு அப்பாவும் அம்மாவும் சிரிச்சுப் பேசி நான் பார்த்திருக்கேனே.
வீதுலா-தன் தாய் உயிரோடிருந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாள்.
ஆறு வயது சிறுமியாய் அவள் அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க.
மொட்டை மாடியின் திறந்த வெளியில் ஈஸி சேரில் படுத்தபடி, ஆகாயத்தைப் பார்த்து இரைந்த குரலில் பேசிச் சிரிக்கும் அப்பா.
அம்மா மடித்துக் கொடுக்கும் வெற்றிலைகளை வாய் கொள்ளாமல் குதப்பியபடி.
போறும் கமலி. வாய் கிழிஞ்சுடும் போல இருக்கு.
போறும் போறும்னு சொல்லிகிட்டு கையையும் நீட்டினா எப்படி.
அம்மா சிரிப்பாள். புரிந்ததோ இல்லையோ விதுலாவும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பாள்.
அவர்களிடையே அன்றைய செலவு அலசப்படும் அம்மாவின் உடம்பு விவரம் பற்றி காரசாரமான விவாதம் நடைபெ றும்புதுசாய் வெளிவந்துள்ள சினிமாவில் சிவாஜி கணேசனின் நடிப்பு எப்படி என்கிற விமரிசனம் இருக்கும் பக்கத்து வீட்டு செட்டியார் மனைவி காலங் கடந்து முழுகாமல் இருக்கும் செய்தி ரகசியமாய் ஒலிபரப்பப்படும். விதுலாவுக்கு என்னென்ன நகைகள் செய்து எப்படியெல்லாம் திருமணத்தை விமரிசையாய் நடத்த வேண்டும் என்கிற ஆசைகள் பரிமாறப்படும்.
இன்னும், இன்னும்... அந்த வயசில் அவளுக்கும் புரியா த சங்கேத வார்த்தைகள் அம்மாவின் போலிச் சிணுங்கல்கள், பெண் தூங்கிவிட்டாள் என்றே நினைப்பில் பெற்றவர்-தன் ஆசைமனைவியை, ‘கிட்ட வாடா’ என அழைக்கும் கொஞ்சல்கள்.
இதெல்லாம், அரை குறையாய் விதுலாவின் நெஞ்சில் இடம் பிடித்திருக்கிறதே எப்படி மறக்கும்?
இவர்கள் விஷயம் ஒழியட்டும். எத்தனை சினிமா பார்த்திருக்கிறாள் அவள் புது மணத்தம்பதியர், காதலர் இப்படியா உம்மண மூஞ்சிகளாய் இருக்கிறார்கள்.
இந்த சின்னக் கொஞ்சல்கள், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்துப் போகும் இயல்புகள் இருவருக்கும் பிடிட்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றிய பரஸ்பர வார்த்தைப் பறிமாறல்கள்…
இவைகளில் எதுவுமேயில்லாமல்... தேகத்தை மட்டும், அதுவும் அவனுக்குத் தேவையான போது மட்டும் தேடும் பிரபுவை ஒருவித பயத்துடன், உள்ளூரப் பொங்கும் கசப் புடன் நினைத்துப் பார்க்கிறாள் அவள்.
கல்யாண த்தில் ஏதாவது கோளாறோ. என் வீட்டு சம்பந்தம் பிடிக்கலையோ.
திருமண நாளை-அன்று நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மீண்டும் மீண்டும் மனக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி எங்காவது குறை இருக்கிறதா எனத் தூண் டி துருவி, மூளையைக் கசக்கிக் கொண்டு.
கல்யாணம் விமரிசையாய்தான் நடந்தது. ஒரு குறையில்லை விதுளாவின் தந்தை விசுவம் தாயில்லாப் பொண்ணாயிற்றே என்று எல்லாமே ஒரு படிக் கூடுதலாகத்தான் செய்திருந்தார். போதாக்குறைக்கு சம்பந்திகள் இருவரும் ஆத்ம சினேகிதர்கள் வேறு பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஆளுக்கு ஒரு மூலையாய் பிரிந்தவர்கள் சில வருடங்களுக்கு முன்புதான் சந்தித்தார்கள்.
விதுலா அப்பொழுது பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தாள். விசுவத்துக்கு ஊர் ஊராய் சுற்றும் வேலை. வளர்த்த பெண்ணை வைத்துக் கொள்ள உறவினர்கள் அஞ்சினார்கள் அவருக்கும் பொண்ணை- இன்னொருவர் வீட்டில் விட மனசில்லை பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்த்து விட்டார்.
பள்ளிப் படிப்பு முடிந்ததுமே திருமணத்தை முடித்து விட வேண்டுமென்பதுதான் அவரது ஆசை.
மாப்பிள்ளையெல்லாம் ரெடிம்மா, என் பால்ய சினேகிதன் நடேசன்னு ஒருத்தன். இப்பத்தான் சேலத்துல யதேச்சையா சந்திச்சேன், வீட்டுக்கு அழைச்சுட்டுப் போனான், வீடாவது வீடு அடேங்கப்பா! ‘ஏன் டா பொம்பளையில்லாத வீட்டுக்கு இத்தனை சாமானும் செட்டும் எதுக்குன்னு கேட்டேன். மருமக வந்தா வேணுமில்லே-அவ பொறந்த வீட்டுல இருந்து கொண்டு வரணுமின்னு நான் எதிர்பார்க்கவையப்பா-அவ வந்து விளக்கேத்தினாப்போறும்’னான்-
நீங்க உடனே எம் பொண்ணை-ஒரு வத்திப்பெட்டிய சீதனமாகக் கொடுத்து அனுப்பறேன், விளக்கேத்தன்னு சொன்னீங்களாக்கும்-
அட, கரெக்டா சொல்லிட்டியே... இதைத்தான் சொன்னேன். சரி தான்டா முடிச்சுடுவோம் உம் மக போட்டோ இருந்தா கொடுத்திட்டுப் போன்னு சொன்னான் பர்சுல இருந்த உன் போட்டோவை எடுத்துக் கொடுத்திட்டு வர்றேன். படிப்பு முடிஞ்ச கையோட முகூர்த்தத்தை வச்சுக்காம ஆறப் போடறது நல்லதில்லே...
அதெல்லாம் முடியாது. நான் காலேஜுக்குப் படிக்கப் போறேன்... என் சினேகிதிங்க எல்லாரும் மேல படிக்கப் போறாங்க. எனக்கு மட்டும் அதுக்குள்ள கல்யாணமா.-
விதுலா முரண்டு பிடித்தாள். பிடிவாதமாய் கல்லுரரிப் படிப்பு முடிந்தபின் தான் திருமணம் என்றாள். விசுவும், நண்பருக்கு கடிதம் எழுதிக் கேட்டார்.
இப்ப அதனால என்ன என் பிள்ளைக்கும் ஜாதக ரீதியா இப்ப கிரக நிலை சரியில்லை மேலும் இப்பத் தான் தொழில்லே இறங்கியிருக்கான், பிசினஸ் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும், அது வரைக்கும் என் மருமக படிக்கட்டும் ஒரு பொண்ணுக்கு பட்டப்படிப்பு ரொம்ப ரொம்ப அவசியம்-
நடேசனின் பதில் இது.
இதற்குப் பிறகு விதுலா கல்லூரியில் சேர்த்து படிக்க விசுவம் எந்த விதத் தடையும் சொல்லவில்லை.
கல்லூரிப் படிப்பும், ஹாஸ்டல் வாழ்க்கையும் தான் எத்தனை மகிழ்ச்சிகரமாக இருந்தது.
பண்டிகை நாட்களில் விதுலாவின் பிறந்து நாட்களில் விசுவத்தின் பரிசுப் பொருள் வருகிறதோ இல்லையோ நடேசனிடமிருந்து தவறாமல் வாழ்த்தும், பரிசும் வந்துவிடும்.
‘என் பிரிய மருமகளுக்கு'
இப்படி அவர் எழுதியிருக்கும் முதல் வரியே-அவளது சக மாணவிகளின் சிரிப்புக்கும், கேலிக்கும் ஆதாரம்.
பரவாயில்லை விதுவுக்கு மாமனார் ரொம்ப நல்ல படியாக அமைஞ்சுட்டார்.
"ஏண்டி, ஒரு பண்டிகை விடாம, இந்தக் கிழவரே பரிசும், வாழ்த்தும் அனுப்பறாரே உன் வருங்காலக் கணவர் ஒரு