Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusami Virumbiya Arputha Kattalaigal
Appusami Virumbiya Arputha Kattalaigal
Appusami Virumbiya Arputha Kattalaigal
Ebook177 pages1 hour

Appusami Virumbiya Arputha Kattalaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112304182
Appusami Virumbiya Arputha Kattalaigal

Read more from Bakkiyam Ramasamy

Related to Appusami Virumbiya Arputha Kattalaigal

Related ebooks

Related categories

Reviews for Appusami Virumbiya Arputha Kattalaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusami Virumbiya Arputha Kattalaigal - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமி விரும்பிய அற்புதக் கட்டளைகள்

    Appusami Virumbiya Arputha Kattalaigal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. துளசி - சுப்ரபா

    2. பால்காரர் அப்புசாமி

    3. அப்புசாமி பால் குடிக்கிறார்!

    4. கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி

    5. அப்புசாமியின் தீபாவளிப் போராட்டம்

    6. என் புருஷன்

    7. அப்புசாமியின் பொன்னாடை

    8. அப்புசாமி அரங்கு ஏறுகிறார்

    9. பலகாரத் திருவிழாவில் அப்புசாமி

    10. அப்புசாமி விரும்பிய அற்புதக் கட்டளைகள்

    1. துளசி - சுப்ரபா

    அப்புசாமிக்குக் கை துறுதுறுத்தது - அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது மறியல் பொறியல் செய்ய அவ்வப்போது துடிக்குமே அதுபோல.

    ஆனால் துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. காரணம் அவர் துடைக்க நினைத்தது ஓர் இளம் அழகிய பெண்மணியின் கண்ணீரை - அதுவும் சீதாப்பாட்டியின் எதிரில். நடக்கிற காரியமா? (அப்புசாமியின் கணக்குப்படி 'இளம்' என்பது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து அகவைக்குட்பட்ட பருவத்தினர்.)

    வந்த பெண்மணியின் பெயர் மிஸ் துளசி. நிறமும் நல்ல சிவப்பு. கட்டவுட்டான சரீரம். பெட்டியிலே வந்து இறங்கிய பெரிய சைஸ் பெங்களூர்த் தக்காளிபோலக் கன்னம். அப்புறம் கழுத்துக்குக் கீழே சாண்டில்ய அழகுகளின் சண்டப் பிரசண்டம். ஆனால் அழகியின் கண்களிலே கண்ணீர்! புகையிலை தடவிய கார்க் கண்ணாடியில் தயங்கித் தயங்கித் தண்ணீர் வழுக்குவது போல ஸ்லோமோஷனில் கண்ணீர் வழியப் பார்த்தது.

    ஓர் அழகிய பெண்மணி - அதுவும் திருமணமாகாத கட்டிளம் - அல்லது கட்டமுடியாத இளம், பெண்மணி கண்ணீர்விடலாமா?

    சீதாப்பாட்டி மட்டுமே அழகிக்கு ஓரடி தூரத்தில் அமர்ந்திராவிட்டால் அப்புசாமி, அழகி துளசியின் கண்ணீரை மட்டுமல்ல, மூக்கு நீரைக்கூட அரண்மனைக் கிளி ராஜ்கிரண் பாணியில் அன்பாகத் துடைத்து விட்டிருப்பார்.

    துளசியின் 'பம்'மென்ற ஸமூசாக் கன்னங்களை அப்புசாமியால் கவனிக்காமலிருக்க முடியவில்லை. ஸமூசாவின் மீது அபிஷேகிக்கப்பட்ட தக்காளி ஸாஸ் மாதிரி உதட்டுச் சாயம்.

    சீதாப்பாட்டி, சிந்தனையை முகத்தில் தேக்கியவாறு மிஸ் துளசியின் ரிப்போர்ட்டுக்குக் காதுகொடுத்துக் கொண்டிருந்தாள்.

    மேடம்ஜி, அபவாதம்! அபவாதம்! அபவாதம்! மிஸ் துளசி விக்கினாள்.

    சீதாப்பாட்டி துன்பத் துளசியை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

    அப்புசாமி வாஷ்பேஸினருகே ஷேவ் எடுத்துக்கொள்பவர்போல் கடைக் காதால் மனைவிக்கும், துளசிக்கும் நடக்கும் உரையாடலை உன்னிப்பாகக் கேட்டவாறிருந்தார்.

    மேடம், என் தோழி எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டியதுகூட எனக்குப் பொருட்டில்லை. பொறாமையால் தாலியைத் திருடியதாகக் கூறுகிறாளே, அதைத்தான் பொறுக்க முடியவில்லை. எங்கள் சினேகம், இன்று நேற்றா? எத்தனை வருஷ காலமாக நாங்கள் ஆருயிர் தோழிகள்? எந்தப் பாவிகளின் கண்பட்டதோ? நானும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். தோழி மாதிரி ஒரு ஜட்ஜ் மனைவி என்ற அந்தஸ்து இல்லாமலிருக்கலாம். ஆனால் என் தாத்தா வக்கீலாயிருந்தபோது இவள் அப்பா அவரிடம் வக்கீல் குமாஸ்தாவாக இருந்து அப்புறம் அவர் கருணையால் லா கிராஜுவேட் ஆகி ஜட்ஜ் பதவிக்கு வந்தார் என்பதையெல்லாம் மறந்துவிட்டாள். விக்! விக்! விக்!

    யு லீவ் த என்ட்டயர் திங் டு மீ.... காட் இஸ் கிரேட்! புரிகிறதா? உங்கள் உயிர்த் தோழிக்கு உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகம் நீங்கி, உங்கள் ஃப்ரண்ட்ஷிப் பழையபடி நீடிக்க என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன். இட் வில் டேக் ஸம் டைம்....உங்கள்மீது குற்றம் சாட்டிவிட்டாளே என்பதற்காக அவளுடன் உறவைக் கத்தரித்துக் கொண்டு விடாதீர்கள்!

    ஐயோ அப்படி நினைத்தாலும் என்னால் முடியாது. அவள் என் உயிர். நான் அவள் உயிர் கேவினாள். நேற்றுக்கூட என் தலைவலிக்குத் தைலம் தடவி விட்டாள் - இத்தனை சண்டையிலும்.

    அப்புசாமி, நீங்களும் உசிரு. அவளும் உசிருன்னா உடம்பு யாரு? ஹி ஹி! என்றார்.

    சீதாப்பாட்டி அப்புசாமி மீது ஒரு ஸ்கட் ஏவுகணை பார்வையை ஏவியதும் நைஸாக அடுத்த அறைக்கு நழுவினார்.

    சீதாஜி, நீங்கள்தான் எங்கள் நட்பு பழையபடி இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கைக்குட்டையால் அகல முகத்தைத் துடைத்துக்கொண்டே காரில் ஏறிப் புறப்பட்டாள்.

    மிஸ் துளசியும், ஜட்ஜ் சம்சாரம் சுப்ரபா சுலைமானும் நெருங்ங்ங்ங்கிய சினேகிதிகள் என்பதை ஊரே அறியும். பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தில் சமீபத்தில் சேர்ந்த வி.ஐ.பி. சுப்ரபா சுலைமான்.

    சீதாப்பாட்டியின் மதிப்புக்குரிய ஒரு சில உறுப்பினர்களில் சுப்ரபா சுலைமான் ஒருத்தி. சேர்ந்து கொஞ்ச நாளாயிருந்தாலும் கணிசமான ஒரு தொகையைக் கொடுத்து, பா.மு.கழக ஆடிட்டோரியத்துக்கு மயிலாப்பூரில் ஒரு கிரவுண்ட் வாங்கிப்போட உதவி செய்தவள்.

    அதைவிட, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கும் அம்மையார் கழகத்தில் உறுப்பினராயிருப்பதில் சீதாப்பாட்டிக்குப் பெருமிதம். இந்திய அரசின் மதச்சார்பின்மைக் கொள்கையை எங்கள் கழகம் கடைப்பிடிக்கிறதாக்கும், மதச்சார்பற்ற கொள்கையை பா.மு.க. அனுசரிக்கிறது என்பதற்கு எங்கள் உறுப்பினர் சுப்ரபா சுலைமான் ஒரு நடமாடும் உதாரணமாக்கும் என்றெல்லாம் சீதாப்பாட்டி சொல்வாள்.

    ஜட்ஜ் சுலைமான் ஓய்வு பெற்று ஒன்பது வருஷமாயிற்று. ஆனாலும் 'ஜட்ஜ் மனைவி' என்ற பெயருக்கு ரிட்டயர்மெண்ட் கிடையாது.

    மிஸ் துளசியும், சுப்ரபாவும் அண்ணாமலை படத்து ரஜினியும் சரத்பாபுவும் மாதிரி சின்ன வயதிலிருந்தே சினேகிதிகள்.

    இரண்டு பேருமே ஜப்பானிய மல்யுத்த வீரர்கள் மாதிரி 'கிண்' என்று தோற்றம் தருபவர்கள். சுப்ரபா சுலைமான் ஐஸ்க்ரீம் ப்ரியை. ஸ்வீட்தான் இஷ்ட தெய்வம். பாதம் அல்வாவும், பிஸ்தா கேக்கும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளுவதில் ஆர்வமுடையவள். தோழிக்குச் சற்றும் சளைக்காமல் துளசியும் சாப்பாட்டில் கம்பெனி கொடுப்பாள். மாருதி ஆம்னியின் பின் லீட்டில் இரண்டு பேருமே உட்கார்ந்தாயிற்று என்றால் ஒரு பேப்பர்கூட அங்கே சொருக முடியாது.

    நகமும் சதையும்போல, கட்சிகளும் சின்னங்களும், வேட்பாளர்களும் சாதிகளும், பாபரும் மசூதியும், அயோத்தியும் அத்வானியும் போல -

    இரண்டு தோழிகளுக்கும் நெருக்கமோ நெருக்கம். அப்படி இருந்த நெருக்கத்தில் 'படார்' என்று ஒரு முறிவு.

    வெளி உலகத்துக்கு இந்த முறிவு இன்னும் தெரியாது. சங்கதி தெரிந்திருந்தால் முழுப் பக்கச் செய்தியாகப் போட்டிருப்பார்கள்.

    சுப்ரபா, முஸ்லீம் கணவரை மணந்திருந்தாலும் தன் சாதி சம்பிரதாயப்படி தாலி அணிந்திருப்பார். கணவர் ஐந்து வேளை தொழுகை செய்வார். சுப்ரபா மேல் மருவத்தூர் கோவிலுக்குத் தவறாமல் போய் அடிகளாரின் ஆசி பெற்று வருவார். தாம்பத்தியம் வேறு, மத சுதந்திரம் வேறு என்ற பரந்த கொள்கை கொண்ட கலப்புத் திருமணம் அவர்களுடையது.

    மிஸ் துளசிக்கு சைதாப்பேட்டையில் பெரிய வசதியான பங்களா இருந்தாலும் திருமணமாகாத நிலையில் அங்கே தனியாக இருக்க விரும்பவில்லை. சுப்ரபாவும் தோழி தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பினாள். தனது வசதியான பங்களாவின் மூன்றாம் மாடியைத் துளசிக்கென்று ஒதுக்கிவிட்டாள்.

    மிஸ் துளசி ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை, அல்லது அவள் திருமணம் ஏன் தள்ளித் தள்ளிப் போயிற்று என்பதெல்லாம் நமக்கு வேண்டாத விவகாரம். வயசும் நாற்பது தாண்டிவிட்டதால் திருமண ஆசை மிஸ் துளசியின் மனத்தில் மிஸ்ஸாகிக் கொண்டிருந்தது.

    இந்த நிலையில்தான் கொஞ்ச நாளாகத் தோழிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படலாயிற்று.

    திடீரென்று ஒரு நாள் வெள்ளிக் கிழமை, பத்து மணி பத்து நிமிஷத்துக்கு சுப்ரபா பரபரப்புடன், துளசி! துளசி! என்று குளித்து முடித்துக் கட்டின டவலுடன் அரைகுறைக் குளியலோடு அவசரமாகக் கரையேறிய ஹிப்போ மாதிரி அவளிடம் மூச்சிரைக்க வந்தாள். என் தாலியைப் பார்த்தியா?

    தாலியா?

    ஆமாம் தாலி, என் தாலியைக் கேட்கிறேன். உனக்குத்தான் தாலியே இல்லையே. உன் தாலியையா கேட்கிறேன். என் தாலியை!

    என்ன சுப்பு, இவ்வளவு காரமாகப் பேசறே! உனக்கு என்ன ஆச்சு?

    எனக்கு என்ன ஆகணும்? சரி, சரி தாலியை நீ விளையாட்டுக்கு ஒளிச்சிவெச்சிருந்தாலும் சரி, திருடி ஒளிச்சு வெச்சிருந்தாலும் சரி, என் கைக்கு அஞ்சு நிமிஷத்தில் வந்தாகணும்.

    சுப்பு! வார்த்தையை நீ தெரிஞ்சுதான் பேசறியா? திருடி என்கிறே, தாலி என்கிறே! பைத்தியம் பிடிச்சிட்டுதா?

    "எனக்கேன் பிடிக்கிறது? உனக்குத்தான் பொறாமைப் பேய் பிடிச்சிருக்கு. நான் கட்டுக் கழுத்தியாத் தாலி தழையத் தழைய நடமாடறது உனக்கு எரிச்சல்! முட்டாள்தனமாத் திருடியிருக்கே? வீட்டில் உன்னைத் தவிர யாரும் இல்லை. யாரும் வரவில்லை. விவகாரம் பெரிசாகறதுக்கு முன்னே, தாலியைக் கொடுத்துவிடு. அவர் காதில் நான் போட விரும்பவில்லை. என்ன இருந்தாலும் நீ என் சினேகிதிதான். ஆனால் பிரண்ட்ஷிப் வேறு. தாலி விஷயம் வேறு. எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கப் போகுமுன் தாலியையும் கழற்றி வெச்சிட்டுப் போனேன் பார்....என் புத்தியைச் செருப்பாலடித்துக்கொள்ளணும்....ஆனால் ஒண்ணு, நீ என்றைக்கும் என் சினேகிதி, சினேகிதிதான். உன்னைத் திருத்தணும், உன் பொறாமையை நீ காட்டிக்கொண்ட விதம் சரியில்லைன்னு இப்படிக் கடிந்து பேசினேன்...புரிந்துகொள்....ஆனால் தாலி வந்தாகணும்....தாலி விவகாரம் தவிர மற்ற விஷயத்தில் நாம் பழையபடி பிரண்ட்ஸ்தான்! அதில்

    Enjoying the preview?
    Page 1 of 1