Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koondukkul Appusami
Koondukkul Appusami
Koondukkul Appusami
Ebook153 pages1 hour

Koondukkul Appusami

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112304157
Koondukkul Appusami

Read more from Bakkiyam Ramasamy

Related to Koondukkul Appusami

Related ebooks

Related categories

Reviews for Koondukkul Appusami

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koondukkul Appusami - Bakkiyam Ramasamy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    கூண்டுக்குள் அப்புசாமி

    Koondukkul Appusami

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆயிரம் வாலா அப்புசாமி

    அப்புசாமியின் குதிரை

    அப்புசாமியின் ‘ஓட்டு’ உரிமை

    அப்புசாமியும் நாலு கறுப்பு சுவர்களும்

    ஸெல்லின் செல்வர் அப்புசாமி

    கனவுமாமணி அப்புசாமி

    கொள்ளைக்கார அப்புசாமி

    கூண்டுக்குள் அப்புசாமி!

    (கு)லுக் ஹியர் அப்புசாமி!

    பாட்டி முதுகில் பார்ட்டி நடத்திய அப்புசாமி

    ஆயிரம் வாலா அப்புசாமி

    A picture containing text, linedrawing Description automatically generated

    அப்புசாமி தீபாவளிக் கவலையினால் மிகவும் மெலிந்து, சற்றே தாடி, மீசையுடன், பளபளப்பும் செழுமையும் குறைந்து, தள்ளாடும் நடையும் தட்டுச் சுற்ற வேட்டியும், கிழட்டுக் கண்களில் மேலும் ஒளி குன்றி, சுருக்கமாக, விடுதலையான எஸ்.டி.எஸ். போலக் காட்சி தந்தார்.

    எல்லாருக்கும் தீபாவளி வந்தால் அவருக்கு வருவது தீரா வலி. சீதேக் கிழவியுடன் பட்டாசுப் பிரச்சினைக்காக அவரும் மண்டையில் முடி முளைத்ததாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

    இந்த வருஷம் அவருக்கு, அவள் பட்டாசுக்காக எத்தனை ரூபாய் பிச்சை போடப் போகிறாள்? மர்மம்.

    என்றைக்குத் தருவாள்? அது இன்னும் மர்மம்.

    தீபாவளி நாளைக்கு என்றால் நாலு நாள் முன்னதாகவாவது கொடுத்தால்தானே அதைப் பார்த்து இதைப் பார்த்து வாங்கலாம். சில தனியார் கம்பெனிகளில் தீபாவளி நாளைக்கு காலையில் என்றால் இன்றைக்கு ராத்திரி பத்து மணிக்குத்தான் போனஸ் தருவார்கள். அதுவும் செக்காக! பட்டாசு வாங்குவது என்றால் முன்கூட்டியே துட்டு தர வேண்டாமா?

    பட்டாசுகளுடைய திரிகளை செக்கப் செய்ய வேண்டாமா?

    மூணு நாலு பட்டாசுகளுக்கு முடிச்சுப் போட்டுக் கூட்டு வெடிவெடிக்கத் தயார் செய்வது ஒரு சுவாரசியம்.

    கேப் வெடிக்க அனுமதிப்பாளா?

    ரொம்பக் குழந்தைத்தனம் என்று தடை விதித்து விடுவாளா?

    அவளது தடையை மீறி ரகசியமாக கல்லை வைத்துக் கொட்டுவதானால் தோதான கல்லாகத் தேடி எடுக்க வேணாமா? துப்பாக்கி ஒன்று வாங்கி ரகசியமாக இன் டிராயரில் போட்டுக் கொள்ளலாமா?

    சிலபேர் காய்கறி வாங்கப்போனால் முதலில் ஒரு வெள்ளோட்டமாக மார்க்கெட்டில் இந்தக் கடைசியிலிருந்து, அந்தக் கடைசிவரை உள்ள அனைத்துக் கடைகளையும் சர்வே செய்துக்கொண்டு போவார்கள், தர நிர்ணயம் செய்துகொள்ள, முருங்கைக்காய் அந்தக் கடைசியிலே வாங்கிக்கலாம், தக்காளி இங்கேதான் வாங்கணும். உருளைக்கிழங்கு பளீர்னு இருப்பது பலான கடையிலே. மனசில் கணக்குப் பண்ணிக் கொள்வார்கள்.

    அப்புசாமி ஐம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்குவது என்றால்கூட ரசித்து ரசித்துப் பல கடைகளில் ஏறி இறங்கி, இறங்கி ஏறி, இறங்கி இறங்கி, ஏறி ஏறி, இறங்கி இறங்கி வாங்குவார்.

    பிறத்தியார் கட்டுக் கட்டாக வாங்கி இன்புறுவது கண்டு ‘அவர் உடைமை அம்மா பெரிது!’ என்று அகமகிழ்வார். அவர்கள் வாங்கிய பட்டாசுகள் பற்றி அக்கறையாக விசாரிப்பார். விளக்குவார். பொறுப்போடு தகவல்களைக் கூறுவார்.

    ஏன் சார், டிரெயினா? கட்டறதுக்கு நூல் இருக்கா? திரி முனையைக் கிள்ளிட்டு அப்புறம் விடுங்க. கயிறைவிடக் கம்பி மேலு… கயிறுன்னா சில சமயம் பத்திண்டு போயிடும். அப்புறம் முக்கியமாக் கவனியுங்கோ, படால்னு சில சமயம் வெடிச்சுத் தொலைக்கும். ஓடாத ரயிலைத் தயவுசெய்து தூக்கிப் போட்டுடாதீங்க. மருந்தையெல்லாம் மறுபடி திணிச்சு, புதுத் திரி வெச்சாப் பிரமாதமா ஓடும்.

    பகவான் நாமாவை விதவிதமாகப் பஜனை செய்து மகிழும் பக்தர்கள்போல் அப்புசாமிக்குப் பட்டாசுகளின் திவ்ய நாமாக்களையும் கல்யாண குணங்களையும் கேட்டால், இன்பம். அவற்றைத் தொட்டால் இன்பம். வெடித்தாலோ பேரின்பம்.

    நீண்ட நாளாக அவருக்கு ஓர் ஆசை. நீண்ட பட்டாசு சரம் கொளுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை.

    தௌஸண்ட் வாலா, டென் தௌஸண்ட் வாலா, எல்லாம் போய், ஒன் லாக் வாலா (லட்சம் பட்டாசு) சரம்கூட இப்போது வந்துவிட்டது. கேபிள் டி.வி. வீடியோவெல்லாம் வந்த பிறகு இன்னமும் பாதையோரம் பயாஸ்கோப் பார்ப்பவருண்டா? அவர் இன்னும் சாதாக் கட்டு வெடிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள சராசரி இந்தியனாகவே இருக்கிறார்.

    ‘ஒன்றே வெடித்தாலும் அதை நன்றே வெடி. அதுவும் தீபாவளி அன்றே வெடி’ என்பது அவரது கொள்கை. சிஷ்யப் பிள்ளைகளையும், காற்றாடித் தோழனாக மாஞ்சா தடவிக் கொண்டு இருந்த ரசகுண்டுகூடச் சமையல் காண்ட்ராக்ட் அது இது என்று எடுத்து கபகபவென்று முன்னுக்கு வந்துவிட்டான்.

    கிழவி ஏதாவது கொழுப்பெடுத்துப் பைசா தராவிட்டால் நண்பன் ரசகுண்டுவைத்தான் டச் செய்ய வேண்டும் என்று எண்ணியவாறு சிந்தனையுடன் பாண்டி பஜார் பக்கமாக நடந்துக் கொண்டிருந்தார்.

    இந்தியாவின் தொண்ணூறே கால் கோடி ஜனத்தொகை ப்ளஸ் இரு சக்கர, மூணு சக்கர, நாலு சக்கர வாகனங்களும், தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட்டு விலா எலும்பை முறித்துவிடும்போல ஒரு கூட்டம் பஜாரில்.

    இந்தத் தங்க, வெள்ளி நகைக் கடைகளில் அடேயம்மா! நம்ம தேசமா வறுமையான நாடு? செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை. கடையே இல்லை என்று விளம்பரங்கள் அலறின. கடைகளுக்கு வாசப்படி இருக்கிறதோ இல்லையோ, எல்லாக் கடைகளிலும் தள்ளுபடி.

    ‘பட்டுப் புடவைகள் யார் இப்போ உடுத்துகிறார்கள். எல்லோரும் சல்வார் கமீஸ்தான். சுடிதார்தான்’ என்று ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்தாலும் பட்டுப் புடவைக் கடைகளில் நெரிசலோ நெரிசல்.

    ‘ஆ! அடியே! சீதேக் கியவி! உன்னோட குருவித் தலைபோல ஏதோ தெரிகிறதே!’ அப்புசாமியின் கண்கள் உற்றுக் கவனித்தன.

    ‘சீதேக் கிழவியேதான். கூட்டத்தில் டால் அடிக்கிறாளே.’

    கிழவி! என்று ஒரு நிமிடம் பெருமைப்பட்டாலும் குமுறினார்.

    ‘பட்டுப் புடவை எடுக்கப் பதவிசாக வந்திருக்கிறயாடீ பத்தினியே… இதுக்கெல்லாம் மட்டும் உனக்கு நேரமிருக்கு. புத்தியிருக்கு. வசதியிருக்கு. பட்டாசுக்குத் துட்டுத்தர மட்டும் நேரமில்லை. பார்த்துடறேண்டி இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு.’ அப்புசாமியின் ரத்த அழுத்தம் பூண்டி நீர்த்தேக்கம் மாதிரி கிடுகிடுவென ஏறியது.

    கும்பலில் கஷ்டப்பட்டு முண்டி அடித்துச் சீதாப்பாட்டியின கார் பார்க் செய்யப்பட்டிருந்த இடத்துக்குப் போய் உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்காகக் காத்திருந்தார். மனைவி மீது கோபம் கோபமாக வந்தது.

    வீட்டுக்காரி மீது வந்த கோபத்தை அவளது கார்மீது காட்டினார். காரைக் கொஞ்சம் நகத்தால் கிள்ளினார். கீறினார். காரின் மேல் குட்டினார். அதை லேசாக உதைத்தார். துளி எச்சில்கூடத் துப்பினார். அடியே! எனக்குத் தர்றதுன்னா மட்டும் முடியலே… வாங்கிக்கடி! பட்டுப்புடவையா வாங்கிக் கட்டிக்க…

    அப்புசாமி காத்திருந்தார், காத்திருந்தார், காத்திருந்தார். புடவை வாங்கிக்கொண்டு சீதாப்பாட்டி காரில் ஏற வரவே இல்லை.

    இரவு பத்தரை மணி ஆகியும் ஆளைக் காணோம்.

    ‘நான் இங்கு கோபமாக நிக்கறதைக் கவனிச்சிட்டுக் கிழவி ஜகா வாங்கிக்கினு போயிட்டாளா? அப்படியெல்லாம் அந்தப் பிடாரி பயப்படறவ இல்லியே. எவனாவது கடத்திக்கிட்டுப் போயிட்டானா?’

    மனைவியைக் காணோம் என்ற கவலையைவிட, பட்டாசுக்குத் துட்டு தராமல் பாவி காணாமல் போய்விட்டாளே என்ற சோகமே அதிகமாயிருந்தது.

    ‘அத்துடன் டி.வி-யில் காணாமல் போனவர்கள் பற்றி விளம்பரம் செய்ய வேணுமானால், குறிப்பிட்ட காணாமல் போனவர், காணாமல் போன சமயம் இன்ன கலர் புடவையோ, ரவிக்கையோ அணிந்திருந்தார் என்று சொல்ல வேண்டுமே. மனைவி எந்தப் புடவை கட்டிக் கொண்டிருந்தாள் என்று பார்த்து வைத்துக் கொள்ளவில்லையே எனப் பதட்டப்பட்டார். பின்புறக் கழுத்தருவே சின்ன மச்சம் இருக்குமே! வயது எத்தனை என்று தெரிவிப்பது? அதிக வயசைச் சொல்லிவிட்டால், கிடைத்த பிறகு, ‘ஏன் அத்தனை வயசு கொடுத்தீர்கள்?’ என்று சத்தாய்ப்பாளா?

    சே! இதையெல்லாம் முன்கூட்டியே ரெடியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனோமே’ என்று வருந்தினார்.

    ‘இப்போது வீட்டுக்குப் போவதா, போலீஸ் ஸ்டேஷன் எதற்காவது போய்க் கம்ப்ளெயிண்ட் தந்துவிட்டுப் போவதா, சுடச்சுட இட்லி கொத்சு தயார் என்று ஓர் ஓட்டலில் அறிவிப்புப் பலகையில் ஆவி பறக்கிறதே, அங்கே போய் சுடச்சுட நாலு இட்லி, கொத்சு அடித்துவிட்டு அப்புறம் பிற விஷயங்களை யோசிப்பதா?’

    அப்புசாமி வீடு

    Enjoying the preview?
    Page 1 of 1