Appusamiya? Sirippu Samiya?
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Appusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Human Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Seitha Kidney Thaanam Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Virumbiya Arputha Kattalaigal Rating: 0 out of 5 stars0 ratingsSeethobadesam Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Bharathi Naarkaaliyum Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsSirithe Ahavendiya Chinna Chinna Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsKurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsSirippum Sinthanaiyum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Appusamiya? Sirippu Samiya?
Related ebooks
Appusami Hee… Hee… Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsYen Indha Asatuthanam! Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsManitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsManathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsVazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsPaper Padikkum Erumbu Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Sorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKuppaikku 'Good Bye'! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Appusamiya? Sirippu Samiya?
0 ratings0 reviews
Book preview
Appusamiya? Sirippu Samiya? - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
அப்புசாமியா? சிரிப்பு சாமியா?
Appusamiya? Sirippu Samiya?
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அப்புசாமியா? சிரிப்பு சாமியா?
2. அப்புசாமியின் ஜூ ஜூ! ஜி ஜீ!
3. 'பாபா' தாசன் அப்புசாமி
4. கிக்கோரி மகன் சக்கோரியும் அப்புசாமியும்
5. அப்புசாமியின் ரத யாத்திரை
6. திடீர் டெரரிஸ்ட் அப்புசாமி
7. டேஸ்ட் மாஸ்டர் அப்புசாமி
8. இரண்டெழுத்தில் என் மூச்சிருக்கும்!
9. அப்புசாமியின் ஆனந்தக் கழுநீர்
10. அப்புசாமியிக்கு ஆயில் தண்டனை
1. அப்புசாமியா? சிரிப்பு சாமியா?
அப்புசாமி எந்த நிபந்தனைக்கும் தயாராக இருந்தார்.
பாருவதி பெத்தண்ணாவை நீங்க என்ன சொல்லிக் கூப்பிடுவீங்க? டெல் மி ஃபர்ஸ்ட்!
என்றாள் சீதாப்பாட்டி.
அம்மானு கூப்பிடுறேன். அதை விட உயர்ந்த வார்த்தையை கற்காலத் தமிழனாகட்டும், தற்காலத் தமிழனாகட்டும்....இன்னும் கண்டுபிடிக்கலையே!
நோ.... நோ.... கர்நாடகாவில் தடுக்கி விழுந்தால் அம்மாதான். கிருஷ்ணம்மா, பஸவம்மா, பூவம்மா, அசுவத்தம்மா....அதனாலே பத்து அம்மாவோடு பதினொண்ணு மாதிரி கூப்பிடக்கூடாது. யூ ஷட் அட்ரஸ் அவர் ஹோஸ்ட் ஆஸ் 'மேடம்' ஒன்லி. புரியுதா?
சரி, மேடம்!
அமெரிக்காக்காரனை எப்பவும் மனசுக்குள்ளும் அபூர்வமாகச் சில சமயம் வெளிப்படையாகவும் திட்டிக் கொண்டே அவனுடைய உதவிகளை வாங்கிக் கொள்கிற நாடுகளின் நிலையில் அப்புசாமி இருந்தார்.
என்ன பண்ணுவது? காரியம் ஆக வேண்டியிருந்தது. 'சென்னை' கொதித்துக் கொண்டிருந்தது - நூற்றுப் பன்னிரண்டு, நூற்றுப் பதின்மூன்று என்று செல்ஷியஸை இரண்டரையால் பெருக்கி ஃபாரன்ஹீட் டிகிரி கண்டுபிடித்துப் பயந்துகொண்டு இருந்தனர் சென்னைவாசிகள்.
தொண்ணூறு வருடம் காணாத வெயிலில் மண்டை காய்வதைவிட, மனைவியோடு பெங்களூரில் போய் சற்றுக் குறைவான உஷ்ணத்தில் மூளையை இளவறுப்பாக வறுத்துக் கொள்ளலாமே என்ற சுயநலத்தினால், இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் பரோட்டா மாவின் நிலையில் அப்புசாமி இருந்தார்.
மைண்ட் யூ...கவனமாக் கேட்டுக்குங்க.... நாம் போறது ஒரு கண்டலென்ஸ் விஷயமாக. அண்டர்ஸ்டாண்ட்?
சூப் எப்போ வரும்? சுடச் சுடச் சொம்மா சல்லுனு இருக்கும்
என்றார் அப்புசாமி.
ரயிலுக்குள் தொடர் ஓட்டமாக வந்து கொண்டிருந்த அயிட்டங்களில் நேயர் விருப்பம் மாதிரி அவரது விருப்பமான சூப்புக்கு ஏங்கிக் கொண்டு இருந்தார்.
அனதர் திங்.... நீங்கபாட்டுக்கு அங்கே பேக்கரி பக்கம் லாய்ட்டர் பண்ணிட்டு இருக்கக்கூடாது. வாசனை மூக்கைத் துளைத்தது, காதைத் துளைத்தது, கேக் எப்படிப் பண்றாங்கனு வேடிக்கை பார்க்கப் போனேன், அது இது என்று....
சீதே! போண்டா....போண்டா...ஆஹா....எத்தா சோடு பஜ்ஜி!
சீதாப்பாட்டி கடுகடுத்தாள் - தான் அக்கறையாகச் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களைக் கவனிக்காமல் அவர் பலகார ஸ்மரணையாகவே இருக்கிறாரே என்று.
முக்கியமாக, நீங்க அங்கே இருக்கும்போது - பர்ட்டிகுலரா, மேடம் பெத்தண்ணாவின் ப்ரசென்ஸிலே முகத்தைக் கூடுமானவரை சோகமாக ஐ மீன் - மெலன்கலிகல் மூடில் - வைத்துக் கொள்ளணும். ஏன்னா......அவள் ரொம்ப துக்கத்திலிருக்கிறாள்....
சீதே! போளி! போளி! ஐயோ போளி!
ஐ'ம் டாக்கிங் சீரியஸ்லி.... வேண்டுமென்கிற அயிட்டம்ஸ் நீங்க சாப்பிட்டாயிற்று. டோன்ட் ஓவர் டூ திங்ஸ்....நான் என்ன சொன்னேன்....சொல்லுங்க பார்க்கலாம்...
என்னத்தப் பெரிசாச் சொல்லிட்டே. அந்தப் பொம்பளையை நான் அம்மானு கூப்பிடக்கூடாது. மேடம்னு கூப்பிடணும்....அதானே...
அப்புறம் ரொம்ப இம்பார்ட்டண்ட்டா ஒண்ணு சொன்னேனே...
ஹய்யா! மறுபடி சூப்! யோவ் டொமாட்டோ சூப்! வாய்யா இங்கே!
பேக்கரி பெத்தண்ணா என்பவர் பெங்களூரில் பெரிய புள்ளி. அவரது மனைவி பாருவதி பெத்தண்ணா பிரபல சமூக சேவகி.
ஆரம்ப காலத்தில், கணவரின் பேக்கரியில் அன்றாடம் மிஞ்சும் ரொட்டி, பன், கேக் சேதாரங்களை, அவள் காலையில் வாக்கிங் போகிற கிராஸ் தெருக்களிலுள்ள சகலவிதமான அஸார்ட்டட் ரக நாய்களுக்கு விநியோகித்ததன் மூலம், நாய்க் கடிகளிலிருந்து தன்னைச் சாமர்த்தியமாகக் காத்துக் கொண்டதோடு, 'தெரு நாய்களின் தெய்வீகத் தாய்' என்று ஒரு பட்டத்தையும் ரோட்டரி கிளப்பின் ஒரு கிளை மூலம் அடைந்து விட்டாள். தன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நாய் மேன்ஷன் ஒன்று ஏற்படுத்தி, அதில் நாற்பத்தொரு தெரு நாய்களைப் பராமரித்து வந்தாள்.
அந்த நாற்பத்தொரு நாய்களில் லீனியரான தாய்நாய் அன்னம்மா நேற்று முன்தினம் காலமாகிவிட்டது. என்னதான் பராமரிப்புக் கொடுத்து வளர்த்தாலும், அரை டஜனுக்கும் அதிகமான நாய் டாக்டர்கள் வந்து கவனித்துக் கொண்டாலும், நாய்க்கு ஆயுசு பதினாலு வருஷமோ பதினாறு வருஷமோதான் என்ற விஷயம் தெரிந்திருந்தாலும் அன்னம்மாவின் பிரிவு
அவளைப் படுசோகத்தில் ஆழ்த்தி விட்டது.
அன்னம்மா எப்பேர்ப்பட்ட புத்திசாலி, அவளின் சிறப்பு இயல்புகள், எப்படி அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வாள், ஊர் சுற்றாமல் கட்டுப்பாடான பதிவிரதாத் தன்மை, எஜமானி வெளியூர் போய்விட்டால் அத்தனை நாளும் இரை எடுக்காமல் இருக்கும் உறுதி, எஜமானி வந்ததும் தானே தாவிப் போய், கதவைத் திறக்கும் கெட்டிக்காரத்தனம் (அதற்கு வசதியாக ஓரொரு கதவிலும் பிரத்தியேகத் தாழ்ப்பாள் அமைக்கப்பட்டிருந்தது).
அன்னம்மாவுக்குச் சாதமோ, ரொட்டியோ, நாய் பிஸ்கெட்டோ, பிரியாணியோ எது வைத்தாலும், தட்டின் முன் அமர்ந்து ஐந்து நிமிஷம் கண்களை மூடிய நிலையில் தியானம் செய்துவிட்டுத்தான் ஆகாரத்தைத் தொடும்.
மாதத்தில் இரண்டு ஏகாதசிகளில் ஒன்றுமே சாப்பிடாது. அன்னம்மா, ஒரு ஏகாதசி வெச்சுக்கோ போதும்
, என்று மிஸஸ் பெத்தண்ணா எவ்வளவோ மன்றாடியும், அன்னம்மா பிடிவாதமாக இரண்டு ஏகாதசியும் பட்டினி இருந்து விரதம் காத்தது.
கண்ட இடத்தில் பாத்ரூம் போகாது. டாய்லெட்டில்தான் போகும். கால் அலம்பிக் கொண்டுதான் வீட்டுக்குள் வரும். அன்னம்மாவைப் பற்றி 'அன்னம்ம கதெகளு' என்று ஒரு டாகுமென்ட்ரி எடுக்கும் உத்தேசம் பாருவதி பெத்தண்ணாவுக்கு இருந்தது. அதை இயக்கும் பொறுப்பை கன்னட சாகித்திய விருது பெற்ற யாராவது ஒரு கலைஞரிடம் விடும் எண்ணமும் இருந்தது. படங்களையும், வீடியோக்களையும் தொகுத்து 'டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் அன்னம்ம லீலைகளு டாட் காம்' என்று ஒரு வெப்தளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தாள் பாருவதி பெத்தண்ணா.
இந்த நிலையில் தான் அன்னம்மா மண்டையைப் போட்டுவிட்டது. தன் வாழ்க்கையை வீடியோவில் பார்த்துவிட்டு அன்னம்மா தன் அடி சேர்ந்திருக்கக் கூடாதா (அன்னம்மா இறந்தது பாருவதி அம்மாவின் பாதாரவிந்தத்தில்தான்) என்று வருந்தினாள் பாருவதி.
குதூகலத்திலும் பங்கு கொள்ள வேண்டும். சோகத்திலும் பங்கு கொள்ள வேண்டும். அதுதானே நல்ல நட்புக்கு அடையாளம்! பிரிய நாய் அன்னம்மா இறந்த துக்கத்தை விசாரித்தாற் போலவும் இருக்கும்....சென்னை வெயிலுக்குத் தப்பினாற் போலவுமிருக்கும் என்று சிநேகிதியைப் பார்க்க ஓடோடி வந்துவிட்டாள் சீதாப்பாட்டி.
நாய் ஆல்பத்தைப் பார்த்த வாறு பால்கனியில் விடிகாலையில் உட்கார்ந்தாளானால் மாலைச் சூரியன் தன் மேல் படும்வரை லவலேசமும் அசையாமல் அடித்து வைத்த ஆபிரஹாம் லிங்கன் சிலை போல அப்படியே அமர்ந்திருப்பாள் பாருவதி பெத்தண்ணா. பதினையாயிரம் சதுர அடி பங்களாவில் அந்தச் சின்ன பால்கனிதான் அவள் வசிப்பிடமாகிவிட்டது, - அன்னம்மாவின் மறைவுக்குப் பின்.
ப்ளீஸ் பாரு! அட்லீஸ்ட் யு ஷூட் மூவ் டு நெக்ஸ்ட் பால்கனி. த ஒன் தட்ஸ் ஃபேஸிங் த டெம்பிள். ஒரு சேஞ்ச் ஆக இருக்கும்
என்று சீதாப்பாட்டி சொல்லிப் பார்த்தாள்.
ஊஹும்..... என் அன்னம்மா எப்பவும் இந்த பால்கனியிலிருந்துதான் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பாள். என் கார் ஓசை தெரு முனையில் கேட்டதுமே கேட்டுக்கு ஓடி வந்து விடுவாள். இதே பால்கனியில்தான் அவள் உயிர் பிரிந்தது. என் மகிழ்ச்சியும் பிரிந்தது
என்ற பாரு, தன் ஈரம் படர்ந்த கண்களை சீதாப்பாட்டியின் மேல் படரவிட்டாள். அவள் ஏதோ ஓர் அந்தரங்கமான விஷயம் சொல்ல விரும்புகிறாள் என்பதை ஃபேஸ் ரீடிங்கில் கெட்டிக்காரியான சீதாப்பாட்டி நொடியில் புரிந்து கொண்டுவிட்டாள்.
எஸ்..... பாரு.... அவுட் வித் யூ. சொல்லும்மா....உன் துக்கத்துக்கு அன்னம்மாவின் பிரிவு மட்டும் காரணமில்லை. வேறு ஏதோ ஒண்ணும் காரணம்னு நினைக்கிறேன்....இஃப் ஐ'ம், கரெக்ட்- உன் சோகத்துக்குள்ளே ஒரு இரிடேஷனையும் என்னால் பார்க்க முடிகிறது
என்றாள் சீதாப்பாட்டி.
சீதேம்மா! நீவு ஒரு ஜீனியஸ்! மனோதத்துவ நிபுணியம்மா நீவு. சென்னை மூளை சென்னவா வேலை செய்யுது. உங்க ஊகம் கரெக்ட்! என்னுடைய சோகத்திலே ஒரு எரிச்சலும் கலந்திருக்கிறது என்பது ரொம்ப ரொம்ப உண்மை. நாளைக் காலை ஆறு மணிக்கு அது என்னவென்று உங்களுக்குச் சொல்கிறேன்!
அப்புசாமிக்கு பெங்களூரை மிகவும் பிடித்திருந்தது. அங்கே அதிகாலையில் சுறுசுறுப்பாக நவீன உடைகளில் இளசுகள் ஆணும் பெண்ணுமாக பிரிஸ்க் வாக் போவதையும், அவர்களது வேக நடையையும், விண்ணென்ற உடையையும் ரசித்தபடி உற்சாகமாக அவர் நடந்து கொண்டிருந்தார்.
திடீரென்று எந்த மூலையிலிருந்தோ ஒரு பயங்கரச் சிரிப்புச் சத்தம், இடைவெளி விட்டுவிட்டு இடிக்கும் இடியோசை போலிருந்தது அந்தச் சிரிப்பு. மின்னல்களில்லாத மினி இடிகள்....மெகா சிரிப்புகள்....
சிரிப்பு அலை வந்த திசை நோக்கி முன்னேறினார் அப்புசாமி.
உயர உயரமான தடியன்களைப் போல நின்றிருந்த மரங்களினூடே நடந்தார். சினிமாவில் வில்லனிடமிருந்து தப்பி, கதாநாயகி புகுந்து புறப்பட்டு ஓடி ஒளியத் தோதான இடம்.
அந்த மரக் கூட்டத்தின் நடுவே ஒரு சிறிய பொட்டலில் சுமார் ஐம்பது பேர் வட்டமாக நின்றுகொண்டு பயங்கரமாகச் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாக, எல்லா வயதினரும் அந்த வட்டத்தில் இருந்தனர்.
ஒரு பெண்மணி கீச்சுக் குரலில், நெள. ஸ்பிரிங் லாஃப்ட்டர்!
என்று குரல் கொடுத்தாள்.
அவ்வளவுதான்....அடுத்த விநாடி கிழவன் - கிழவிகள், குமரன் - குமரிகள்