Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalai Katcheri
Naalai Katcheri
Naalai Katcheri
Ebook106 pages37 minutes

Naalai Katcheri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604221
Naalai Katcheri

Read more from Devibala

Related to Naalai Katcheri

Related ebooks

Related categories

Reviews for Naalai Katcheri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalai Katcheri - Devibala

    http://www.pustaka.co.in

    நாளை கச்சேரி

    Naalai Katcheri

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அந்த ஊர் வாழ்வதே அம்மன் கோயில் காரணமாகத்தான்.

    திருத்தணியிலிருந்து உள்ளே முப்பது கிலோ மீட்டர் தூரம் போனால், அந்த ஊர் அம்மன்குடி! அங்குள்ள அம்மன் செல்லியம்மன். சக்தி வாய்ந்த அம்மன்!

    சின்ன ஊர்தான். மக்கள் என்று பார்த்தால் அதிகபட்சம் இருநூறு பேர்தான். விவசாயம்தான் பிரதானம்!

    ஆனால் செழிப்பான ஊர் அம்மன்குடி! 'மக்கள் முழுவதும் அந்த ஊரைச் சார்ந்து வாழ்பவர்கள். எந்த ஒரு கஷ்டமும் இல்லை! திருப்திகரமாக வாழும் ஊர். பெரிதாக குறை எதுவும் இல்லை

    செல்லியம்மன் கோயில் குருக்கள் பரமேஸ்வரன்! அந்த ஊரில் முப்பது வருடங்களாக பூஜை செய்து வரும் மனிதர். அவரது சுவாசமே கோயில்தான். அவரது மனைவி பார்வதி! கணவனுக்கு கட்டுப்பட்டு வாழும் ஒரு நல்ல பெண்மணி! எந்த நேரமும் கோயில் சிந்தனைதான். ஆறுகால பூஜை, அபிஷேக ஆராதனை என எல்லாம் நடக்கும். வசதி படைத்தவர்கள் அங்கு வாழ்வதால், கோயில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. எல்லாமே சிறப்பாக நடக்கும்.

    குருக்கள் பரமேஸ்வரனுக்கு ஒரே மகன் கதிரேசன் என்ற கதிர். அவனுக்கு படிப்பு ஏறவில்லை! அதனால் 15 வயது முதலே அவனை கோயில் பூஜைக்கு அப்பா பழக்கி விட்டார். சலமும் கற்றுக் கொடுத்து விட்டார். எட்டாவதுக்கு மேல் அவன் படிப்பு ஏறாமல் நிறுத்தி விட அம்மா பார்வதிக்கு வருத்தம்தான்.

    பிள்ளை நன்றாகப் படித்து, பட்டம் பெற்று, பெரிய உத்யோகத்துக்கு போக வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டாள்.

    கதிர் தொடர்பாக ஆயிரம் கனவுகளை வைத்திருந்தார்.

    எதுவும் எடுபடாமல் போனது!

    கதிர் பெரிதாக அழகில்லை. களையாக இருப்பான். உயரம் குறைவு! குண்டாக இருப்பான்.

    பார்த்ததும் சுண்டி இழுக்கும் வசீகரம் இல்லை.

    அதனால் இளம் பெண்களுக்கு அவனிடம் ஈர்ப்பு இல்லை. ஆண்மை நிறைந்த அழகு, அறிவு, தங்கிய புலமை, நல்ல நிறம் இதெல்லாம்தானே ஆணுக்கு அழகு.

    'அந்த எதுவும் கதிருக்கு இல்லை’

    அவனையும் பூஜைக்கு அப்பா பழக்கி விட்டதால், கட்டுக் குடுமி வைத்து விட்டார்.

    எந்த நேரமும் கோயில் பூஜை!

    அம்மாவுக்கே இதில் மனக்குறைதான்

    அவனை திசை திருப்பு அம்மா முடிந்தவரை பிரயத்தனப்பட்டாள். நடக்கவில்லை

    ஆனால் ஆலயப் பணிகளில் அவன் காட்டிய சிரத்தை அப்பாவை மகிழ வைத்தது அவர் நெகிழ்ந்து போனார். அவனது மென்மையான குணமும், எப்போதும் சிரித்த முகமும், பவ்யமும், பணிவும், அந்த ஊர் மக்களிடம் அவனுக்கு நல்ல பேரை வாங்கித் தந்திருந்தது!

    பரமேஸ்வரனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை என சகலமும் இருந்ததால், அடிக்கடி அவர் வராமல் போன கதிர்தான் பெரும்பாலும் ஆலயப் பொறுப்பை ஏற்று நடத்தினான்.

    ஒரு நாள் கூட பூஜையில் குறையில்லை. மந்திர உச்சாடனங்கள் கணீரென ஒலிக்கும்.

    ஒலி பெருக்கியே வேண்டாம். அதிகாலையில் ஊரில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கதிரின் குரல் ஒலிக்கும். அதுதான் அந்த ஊருக்கு சுப்ரபாதம்!

    கதிர் மேல் அம்மாவுக்கு உயிர். ஒரே பிள்ளை என்பதால் அளவு கடந்த பாசம்!

    இப்போது கூட அவனைக் குளிப்பாட்டி சாப்பாடு ஊட்டி ஒரு பச்சைப் பிள்ளை போல அவனை பராமரிப்பாள்.

    அம்மா! நான் சின்னப் பையன் இல்லை! எனக்கு வயசு இருபத்தி ஏழு... மறக்காதே

    எனக்கு நீ எப்பவும் குழந்தைதாண்டா!

    பார்வதி அவன் பேசாது உனக்குப் புரியலியா? 27 வயசாச்சு! எனக்கும் கல்யாணம் செஞ்சு வைனு சொல்லாம் சொல்றான்!

    இல்லைப்பா அந்த அர்த்தத்துல தான் பேசல, நான் கேக்கவும் மாட்டேன்

    கேட்டா தப்பில்லடா! அந்தந்த வயசுல அது நடக்கணும். எனக்கு 19 வயசுல கல்யாணம் உங்கம்மாவுக்கு பதினைஞ்சு! என்னோட இருபதாவது வயசுல நீ பிறந்தாச்சு! உனக்குப் பிறகு இன்னொரு குழந்தை வேணும்னு நாங்க நினைக்கவேயில்லே. உனக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்! நான் ஏற்பாடு பண்றேன்.

    ஆமாம் சாமி! நான் அம்மாகிட்ட பேசிட்டே இருக்கேன்! சொன்னது ஆண்டாள்.

    இந்த முப்பது வருடங்களாக ஆண்டாளும் இவர்கள் காலடியில் கிடக்கும் ஒரு நன்றியுள்ள நாய்!

    இங்கே கதிர் பிறந்து 3 வயதாக இருக்கும்போது ஆண்டாளுக்கு அவளது அத்தை மகனைக் கட்டி வைத்தார்கள்.

    ஒரே வருடத்தில் புஷ்பா பிறந்தாள்.

    அதன் பிறகு குடிப்பழக்கம், தப்பான சகவாசம் என அவளது கணவன் முருகன் திசைமாறி கெட்டு சீரழிந்தான்.

    மதுமட்டுமில்லாமல், தப்பான பெண்களுடன் உறவு, அழகான பெண்களை ஊரில் பார்த்தால், உடனே நெருங்கிப் பழகத்துடிப்பது என பிரச்னை பெரிதாகி ஒரு பெண் மேல் கை வைத்து போலீஸ் வரை போய். ஓரிரு வருடங்களில் ஊரை விட்டே ஓடி விட்டான் முருகன். ஆண்டாளுக்குப் பிறந்த வீடும் இல்லை! புகுந்த வீட்டு மனிதர்களும் இல்லை! கையில் பெண் குழந்தையுடன் அனாதையாக நின்றவளுக்கு அடைக்கலம் தந்தது பார்வதி தான்!

    தன் வீட்டோடு வைத்துக் கொண்டாள்.

    ஆண்டாள், பார்வதி வீட்டு வேலைகளையும் கோயிலைப் பெருக்கி, சுத்தப்படுத்தி, அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வந்து கோயிலின் ஒட்டு மொத்த வேலைகளையும் கவனித்துக் கொண்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1