Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirunthivittal Divya!
Thirunthivittal Divya!
Thirunthivittal Divya!
Ebook84 pages35 minutes

Thirunthivittal Divya!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604251
Thirunthivittal Divya!

Read more from Devibala

Related authors

Related to Thirunthivittal Divya!

Related ebooks

Related categories

Reviews for Thirunthivittal Divya!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirunthivittal Divya! - Devibala

    http://www.pustaka.co.in

    திருந்திவிட்டாள் திவ்யா!

    Thirunthivittal Divya!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    குபுக்கென வாந்தி எடுத்து விட்டாள் ரத்னா. உணவு மேசையில் உட்கார்ந்து ஹரி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அங்கேயே அவனுக்கு வெகு அருகில் சடக்கென வாந்தி எடுத்து விட்டாள் ரத்னா.

    ஹரி திரும்பினான்.

    மேலும் நிற்க முடியாமல் வாஷ் பேசினுக்கு ஓடினாள் ரத்னா.

    அவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே சரிந்தவளைத் தாங்கிக்கொண்டான் ஹரி. அப்படியே தூக்கி எடுத்து வந்து படுக்கையில் கிடத்தினான்.

    டெலிபோனை நெருங்கி, டாக்டருக்கு டயல் செய்தான். விவரம் சொன்னான். கையோடு ஆபீசுக்கு, டெலிபோன் செய்து லீவுக்கும் சொல்லி விட்டான்.

    சற்று நேரத்தில் டாக்டர் வந்து விட்டார்.

    பரிசோதித்தார். நாடி பிடித்துப் பார்த்தார்.

    மறுபடியும் நாட்கள் தள்ளிப் போயிருக்கா ஹரி?

    தெரியலை டாக்டர். கேட்கணும் ரத்னாவை!

    கர்ப்பத்துக்குள்ள அறிகுறி தெரியுது. ஒரு யூரின் டெஸ்ட் பார்த்துரலாம். தெளிஞ்சதும் நர்சிங் ஹோமுக்கு கூட்டிட்டு வந்துருங்க. நான் வர்றேன்!

    டாக்டர் போய்விட்டார்.

    பதினைந்து நிமிடங்களில் ரத்னா கண் விழித்தாள்.

    நாள் தள்ளிப் போயிருக்கா ரத்னா?

    இன்னைக்கு என்ன தேதி?

    பிப்ரவரி - 15.

    டிசம்பர் -15 ம் தேதி குளிச்சேன்.

    அறுபது நாள் ஆயிருக்கா மறுபடியும்? யூரின் பார்க்கணும்னு சொன்னார் டாக்டர்!

    என்ன லாபம்? இது எத்தனை நாளைக்காக?

    அவள் குரலில் வெறுப்பு இருந்தது.

    ஷ்! சொன்னதை செஞ்சிரலாமே. ரெஸ்ட் எடு நீ. சரியானதும் புறப்படு. நானும் லீவு போட்டாச்சு!

    கண்களை மூடிக் கொண்டாள் ரத்னா.

    சாயங்காலம் போகலாம்!

    ஹரி எழுந்து பால்கனிக்கு வந்தான். சாலையில் ஓடும் வாகனங்களை சற்று நேரம் நின்று பார்த்தான்.

    அவர்களுக்கு திருமணம் முடிந்து சென்ற மாதம் எட்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.

    ஹரி தனியார் இரசாயன நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரி. ஓரளவு சொத்து பத்து உள்ளவன்.

    ரத்னா நல்ல அழகி. திருமணமான புதிதில் ஒரு வங்கியில். உத்தியோகத்தில் இருந்தாள். ஹரி வேண்டாமென்று சொல்ல ராஜினாமா செய்து விட்டாள்.

    ஆரம்ப நாள் முதலே தனிக் குடித்தனம்.

    ஓரிரு வருடங்கள் குழந்தைகள் எதுவும் இல்லாமல் போக, மெளனமாக இருந்து விட்டார்கள். ஒருநாள் இயல்பாக டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள, லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும் என்றார் டாக்டர்.

    முடிந்தது.

    அடுத்த மாதமே நாட்கள் தள்ளிப்போனது ரத்னாவுக்கு.

    அறுபது நாட்களைக் கடந்துவிட, வாந்தி ஆரம்பமானது. உற்சாகமானார்கள். யூரின் தேர்வில் பாஸிடிவ் வந்துவிட்டது. கர்ப்பம் என ஊர்ஜிதமாக, ஹரி அவளைத் தாங்கோ தாங்கினான்.

    ரத்னாவின் அப்பா, அம்மா அவளைப் பார்க்க வந்துவிட்டரர்கள். மேலும் பதினைந்து நாட்கள்!

    75-வது நாள் காலையிலிருந்தே ரத்னா சரியாக இல்லை. ஒரு மாதிரி வயிற்று வலி இருப்பதாகச் சொன்னாள். லேசான ரத்தப் போக்கை உணர்ந்தாள். மதியத்துக்குள் அது தீவிரப்பட்டு, மாலை அழத் தொடங்கி விட்டாள்.

    டாக்டரிடம் கொண்டு சென்றான் ஹரி.

    அதற்குள் கருச் சிதைவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து மருத்துவமனை - ரத்னாவின் அழுகை.

    ஒரு வருடம் கழித்து மறுபடியும் இதே போல 60 நாட்களில் விலகினாள்!

    இந்த எட்டு வருடத்தில் நாலைந்து முறை இதுபோல அனுபவம் கிடைத்துவிட, இருவருமே ஒடிந்து போனார்கள்.

    அதிக பட்சம் 75 நாட்கள்.

    அதற்குமேல் தாண்டுவதே இல்லை.

    டாக்டர் சொல்லி விட்டார் திட்டவட்டமாக.

    கர்ப்பப்பை சின்னது. வலுவில்லை. அதனால் சிசுவைத் தக்க வைச்சுக்க போதிய சக்தி இல்லை!

    அப்படீன்னா எனக்கு குழந்தையே பிறக்காதா டாக்டர்?

    அதை நான் எப்படிம்மா சொல்ல முடியும்? எனக்கும் மேல ஒரு சக்தி இருக்கில்லையா?

    ஹரி ஆரம்பத்தில் ஓரளவு பாதிக்கப்பட்டுத்தான் இருந்தான். இப்போது தேற்றிக்கொண்டு விட்டான்.

    அவளையும் சமாதானப் படுத்துவான்.

    "நம்ம கிட்ட என்ன வசதி இல்லை?

    Enjoying the preview?
    Page 1 of 1