Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha October 14
Andha October 14
Andha October 14
Ebook104 pages49 minutes

Andha October 14

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404263
Andha October 14

Read more from Rajesh Kumar

Related to Andha October 14

Related ebooks

Related categories

Reviews for Andha October 14

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha October 14 - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    அந்த அக்டோபர் 14

    Andha October 14

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    ஆபட்ஸ்பரி கல்யாண மண்டபம் ஒரு அரை சொர்க்கமாய் மாறியிருந்தது. மண்டபத்தின் எல்லா திசைகளிலும் இல்யூமேஷன் பல்புகள் சரம் சரமாய் வழிய உள்ளே - மணவறை - காஷ்மீரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ரோஜாக்களினால் உருவாகியிருந்தது. ஒரே மாதிரி யூனிபார்ம் அணிந்த வேலையாட்கள் மண்டபம் முழுவதும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்கள்.

    அந்த அக்டோபர் 14-ம் தேதி காலை - விடிவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் முழுசாய் இருந்தது. அருணன் வேலையாட்களை விரட்டினான்.

    ‘முதல்வரிசை பூராவும் குஷன் சேர்தான் போடணும். ரெண்டாவது வரிசை பிரம்பு சேர்... மூணாவது வரிசையிலிருந்துதான் ஸ்டீல் சேர்...’

    ‘அப்படித்தான் அய்யாவும் சொன்னார் ஸார்.'

    ‘சரியா நாலு மணிக்கு மண்டப வாசலில் இருந்து - உள்ளே ஹால் வரைக்கும் ரெட் கார்ப்பட்டை விரிக்கிற வேலை பரசுராமா! உனக்குத் தான்.’

    'சரி... ஸார்.’

    ‘கிருஷ்ணன்!’

    ‘ஸார்.’

    ‘உனக்கு என்ன வேலை தெரியுமா?’

    ‘சொல்லுங்க ஸார்.’

    ‘ரிஸப்ஷன் முடிகிற வரைக்கும் இந்த ரோஜா மணவறையை விட்டு நீ நகரக் கூடாது. இந்த ரோஜா மணவறையை செட் பண்ண அம்பதாயிரம் ரூபா செலவாயிருக்கு. நாம கொஞ்சம் அசந்தாலும் குழந்தைங்க இதை மேய்ஞ்சுக்குவாங்க. கண் கொத்தி பாம்பா பார்த்துக்கணும்...’

    ‘சரி... ஸார்.’

    அருணன் டைனிங் ஹால் பக்கமாய் நகர முயன்ற அதே விநாடி மண்டப வாசலில் - மெளனமாய் அந்த போலீஸ் ஜீப் வந்து நிற்பதைப் பார்த்தான். லேசாய் முகம் மாற வாசலை நோக்கிப் போனான்.

    இன்ஸ்பெக்டர் ஒருவர் கீழே இறங்கி - ஜீப் டிரைவரிடம் ஏதோ சொல்லிவிட்டு - மண்டபத்துக்குள் நுழைய அருணன் அவரை எதிர்கொண்டான்.

    ‘வாங்க இன்ஸ் பெக்டர்...’

    ‘இது யார் வீட்டு கல்யாணம்?'

    'மூணாறு எஸ்டேட்ஸ் ஓனர் சங்கரலிங்கத்தோட சன் தீபனோட மேரேஜ் ஸார்...'

    'பொண்ணு யாரு...?'

    அருணன் சில விநாடிகள் தயங்கி விட்டு சொன்னான். ‘பொண்ணு எஸ்டேட்ல வேலை பார்த்துட்டிருந்த ஒரு ஏழை கங்காணியோட பொண்ணு ஸார். பேரு நித்யா.’

    'காதல் கல்யாணமா?’

    ‘அதெல்லாம் இல்ல... ஸார். பெரியவராப் பார்த்து முடிச்சது தான்.’

    ‘நீங்க யாரு... பெரியவருக்கு சொந்தமா?’

    ‘இல்ல... ஸார்... நான் பெரியவரோட எஸ்டேட் விவகாரங்களைப் பார்த்துக்கிற மானேஜர். எம் பேர் அருணன்.’

    ‘இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுங்கிறதுல ஆர்வம் காட்றவங்க யாராவது இருக்காங்களா...?’

    ‘எதுக்கு ஸார் இதெல்லாம் கேக்கறீங்க...?’

    ‘பின்னாடி சொல்றேன். மொதல்ல என்னோட என்கொய்ரியை முடிச்சுக்கிறேன்... சொல்லுங்க... இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுங்குறதுல யார்க்கு ஆர்வம்?'

    "அ... அது வ... வந்து...’

    ‘எதுவாயிருந்தாலும் சொல்லுங்க.’

    ‘மனசுல ரொம்ப பேருக்கு காழ்ப்புணர்ச்சி இருக்கு ஸார். தீபன் கோடிக் கணக்கான ரூபாய்க்கு அதிபதி. பொண்ணு ஒரு சாதாரண நர்ஸ். அந்த பொண்ணுக்கு வாய்ச்ச அதிர்ஷ்டத்தைப் பத்தி இன்னிக்கும் மூணாறு எஸ்டேட் ஜனங்க பேசிட்டிருக்காங்க ஸார்.’

    ‘சங்கரலிங்கத்துக்கு தீபன் ஒரே சன்னா...?’

    ‘ஆமா... ஸார்... ஆனா... தீபனுக்கு ஒரு சிஸ்டர் இருக்காங்க’

    ‘சிஸ்டர்ன்னா எல்டரா... யங்கரா...?'

    ‘யங்கர் ஸார்.’

    ‘பேரு...’

    ‘யாமினி...’

    ‘யாமினிக்கு கல்யாணமாயிருச்சா...’

    'ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணமாச்சு மாப்பிள்ளை ஒரு டாக்டர் நந்தகோபால்...'

    ‘அப்போ... மண்டபத்துல... அவங்களும் இருக்காங்களா?’

    'இருக்காங்க ஸார்.’

    ‘முகூர்த்தம் எத்தனை மணிக்கு?’

    ‘ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளே ஸார்.’

    ‘இந்த முகூர்த்த நேரத்தை இன்னும் கொஞ்சம் முன்னாடி வெச்சுக்க முடியாதா...?'

    ‘ஸார்... நீங்க என்ன சொல்ல வர்றீங்க...? முகூர்த்தத்தை முன்னாடி வெச்சுக்கிறதா...?’

    ‘ஆமா... ஒரு முன்னெச்சரிக்கைக்காக...’

    ‘எனக்கு புரியலை ஸார்.’

    ‘இந்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கிறது நீங்க தானே?'

    'ஆமா... ஸார்...’

    இன்ஸ்பெக்டர் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து - அருணனையும் உட்காரச் சொன்னார். குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

    'மிஸ்டர் அருணன்! ஒரு மணி நேரத்துக்கு முந்தி எனக்கொரு போன் கால் வந்தது. பேசினது ஒரு ஆண் குரல் ஆபட்ஸ்பரி கல்யாண மண்டபத்தில் நடக்கப் போகிற

    Enjoying the preview?
    Page 1 of 1