Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jannal Seethaikal
Jannal Seethaikal
Jannal Seethaikal
Ebook89 pages27 minutes

Jannal Seethaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466077
Jannal Seethaikal

Read more from Rajeshkumar

Related to Jannal Seethaikal

Related ebooks

Reviews for Jannal Seethaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jannal Seethaikal - Rajeshkumar

    21

    1

    சென்டரல்.

    தாதர் எக்ஸ்ப்ரஸ் பத்தாவது பிளாட்பாரத்தில் தன் நீளமான உடம்பை நுழைக்க - சுற்றி பிளாட்பாரத்துக்கு உடனே உயிர் வந்தது. போர்ட்டர்கள் கம்பார்ட்மெண்ட்டோடு ஓடி வந்தார்கள். இட்லி பூரி தள்ளு வண்டிகள் உருண்டன. பிளாட்பார சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்த டி.வி. பெட்டிகள் சோளி கே பீச்சே க்யா ஹை என்று கேட்டுக் கொண்டிருக்க ஒரு கூட்டம் வென்று பார்த்தது.

    கம்பார்ட்மெண்ட்களிலிருந்து இறங்கியவர்களும் பிளாட்பாரத்தில் காத்திருந்தவர்களும் சுற்றி ஜனகும்பலில் தங்களுக்கு வேண்டிய முகங்களை பரஸ்பரம் தேடிக் கொண்டார்கள். சுற்றிலும் சலசலவென்று பேச்சு சத்தம்.

    என்ன பம்பாய்ல மழையா...?

    செம போடு... ரெண்டு பகல் ரெண்டு ராத்திரி ஓயாமே மழை. பம்பாய் இப்போ சாம்பார்ல ஊறின வடை மாதிரி இருக்கு.

    வா... வா... ஆறு மாசம்ன்னு லெட்டர் போட்டிருந்தே...! வயிறே தெரியலேயே...?

    புடவையை அப்படி சுத்தியிருக்கா.

    ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்...

    அவுட்டர்ல அரை மணி நேரம் நிறுத்தி கொன்னுட்டான்.

    S-5 கோச்சிலிருந்து மேற்கண்ட சம்பாஷனைகளை காதில் வாங்கிக் கொண்டு - ஒரு பெரிய சூட்கேஸோடு இறங்கினாள் சில்பா.

    சந்தன நிற டீ ஷர்ட்டும் இருட்டு நிற ஜீன்ஸும் அந்த இருபத்திமூனு வயது வெல்வெட் உடம்பை தத்து எடுத்திருந்தது. பொன்னிறம் என்று சத்தியம் செய்யலாம். உதடுகளை ரோஜா ஸ்பான்ஸர் செய்திருந்தது.

    கும்பலில் இடிபடாமல் நடந்து-பார்வையால் கற்பழித்தவர்களை பொருட்படுத்தாமல் சற்றே வேகமாய் நடைபோட்டாள்.

    ஐந்து நிமிஷ நடையில் ஸ்டேஷனின் ஆரவாரங்களை தொலைத்து விட்டு வெளியில் வந்தாள்.

    சென்னை நியான் வெளிச்சங்களில் இருந்தது.

    மஞ்சள் வண்டிகளாய் ஆட்டோ வரிசை.

    அம்மா... ஆட்டோ வேணுமா...

    டி. நகர் போகணும்...

    வாங்கம்மா...

    மீட்டர் போடணும்... மீட்டர் காட்டற பணத்துக்கு மேல ஒத்தை ரூபாயை தர மாட்டேன்...

    ஏறி உட்கார்மா...

    சூட்கேஸை ஆட்டோவில் தூக்கிப் போட்டு - தானும் உட்கார்ந்தாள். கிக்கர் உதைக்கப்பட்டது.

    டி. நகர்ல எங்கேம்மா போகணும்?

    டேனியல் ஸ்ட்ரீட்...

    ஆட்டோ நகர்ந்தது. போக்குவரத்தில் கலந்து உற்சாகமாய் பீறிட்டது. சில்பா சீட்டுக்குள் நன்றாய் சாய்ந்து உட்கார்ந்தாள்.

    மனசுக்குள் எண்ணம் ஓடியது.

    எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென யாமினியின் முன்னால் போல் நிற்கப்போகிறேன். அவளுக்கு எப்படி இருக்கும்? அட சில்பா...! என்று பாய்ந்து கட்டிக் கொள்வாள்.

    என்னடீ திடீரென்று... வந்து நிக்கறே...? ஒரு லெட்டர் போட்டுட்டு வரக்கூடாது...?

    உனக்கு ஒரு ப்ளஸண்ட் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் திடீரென்று புறப்பட்டு வந்தேன்...

    நீ ஒரு பத்திரிகையில சீஃப் ரிப்போர்ட்டர். காரணம் இல்லாமே மெட்ராஸ் மண்ணை மிதிக்க மாட்டியே… மூணு வருஷத்துக்கு முன்னாடி போனவ. இன்னிக்குத்தான் வர்ரே என்ன விஷயம்...?

    நான் வேலை செய்யற பத்திரிகையில் புதுசா ஒரு தொடர் கட்டுரை ஆரம்பிச்சேன். கட்டுரையோட தலைப்பு என்ன தெரியுமா?

    என்ன?

    சந்தோஷ தம்பதிகள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தம்பதியைப்பற்றி எழுதப்போறேன். அதுல முதல் கட்டுரை உன்னையும் உன் கணவரையும் பற்றித்தான்..."

    என்னைப்பத்தியா!

    ஆமா...! என்னை பொறுத்தவரைக்கும் நீயும் உன்னோட கணவரும்தான் சந்தோஷமான தம்பதி. மூணு வருஷத்துக்கு முந்தி உன்னைப் பார்க்க வந்தப்பவே நான் நெனச்சிட்டேன்... அப்பப்பா... நான் ஒருத்தி வீட்ல இருக்கிறதைக்கூட பொருட்படுத்தாமல் உன் கணவர் என்னமா கொட்டம் அடிக்கிறார். அவர் அடிச்ச கொட்டத்துக்கு நீ குடுத்த ஒத்துழைப்பு இருக்கே... அதை மறக்க முடியுமா...?

    சீ… போடி...

    உங்க சந்தோஷமான வாழ்க்கைக்கு எது காரணம்ன்னு தெரிஞ்சு கட்டுரை எழுதத்தான் நான் பம்பாயிலிருந்து வந்திருக்கேன். பத்திரிகையோட அட்டைப் படத்தை நீயும் உன்னோட கணவரும் தான் காவல் காக்கப் போறீங்க..."

    இதெல்லாம் வேண்டாண்டி...

    பேசக்கூடாது... ரெண்டு நாள் உன் கூட தங்கறேன். கட்டுரையோட பம்பாய்க்கு போறேன்...

    சிவப்பு சிக்னலுக்கு கட்டுப்பட்டு ஆட்டோ நின்றது.

    யாமினிக்கு இப்போது எத்தனை குழந்தைகள் இருக்கும்?

    ஒன்னா... இரண்டா...?

    ஆட்டோ கிளம்பி தி.நகருக்குள் நுழைகிறபோது

    Enjoying the preview?
    Page 1 of 1