Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thavarukkum Thavaraana Thavaru
Thavarukkum Thavaraana Thavaru
Thavarukkum Thavaraana Thavaru
Ebook109 pages1 hour

Thavarukkum Thavaraana Thavaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Thavarukkum Thavaraana Thavaru

Read more from Rajeshkumar

Related to Thavarukkum Thavaraana Thavaru

Related ebooks

Related categories

Reviews for Thavarukkum Thavaraana Thavaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thavarukkum Thavaraana Thavaru - Rajeshkumar

    17

    1

    விடியற்காலை - ஐந்து மணி. தியாகி குமரன் மார்க்கெட் வாழைத்தார் மண்டி அருகே - கை வண்டிகளோடு அந்தச் சிறிய கும்பல் காத்திருந்தது

    ராமசாமியண்ணே! என்ன, லாரியை இன்னமும் காணோம்?

    வரும்... வரும்...

    எப்ப வரும்? நாலு மணியிலிருந்து இதையே தான் சொல்லிட்டிருக்கே. இனி லோடு வந்து இறக்கி - எங்களுக்கெல்லாம் பட்டுவாடா பண்றதுக்குள்ளே பொழுது சுரீர்ன்னு விடிஞ்சிடும் போலிருக்கே?

    சோழவந்தான் லோடு... கொஞ்சம் முன்ன பின்னதான் ஆகும்.

    இன்னிக்கு லாரி டிரைவர் யாரு...?

    மருதப்பன்.

    அப்ப சரிதான்.

    ஏன்?

    அவன் ஒட்டன்சத்திரத்துல லாரியை நிறுத்திட்டு - தாராபுரம் ரோட்டில் இருக்கிற கூத்தியா வீட்டுக்குப் போய்ட்டுத்தானே வருவான்?

    எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கும்போதே - தெருமுனையில் ஹெட்லைட் வெளிச்சம் பளீரென்று அடித்தது. தொடர்ந்து ஒரு லாரியின் உறுமல் சத்தம்.

    லாரி வந்தாச்சு...

    ராமசாமியண்ணே! என்னை மொதல்ல கவனிச்சு அனுப்பிடு... இல்லேன்னா சத்தியமங்கலம் போற பஸ் எனக்குக் கிடைக்காது.

    எல்லாரும் வரிசையா நில்லுங்க. கை வண்டிகளையெல்லாம் ஓரமா நிறுத்தி வையுங்க. டேய் பழனி...

    அய்யா...!

    லாரி வந்து நின்னதும் மளமளன்னு லோடை எண்ணிக் கீழே இறக்கணும். மொத்தம் எழுநூத்தி அம்பது வாழைத்தார். நூறு இலைக் கட்டு...

    சரிங்கய்யா...

    அந்தப் பழனி தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டு – நான்கைந்து ஆட்களோடு - லாரியை எதிர் கொள்ளத் தயாரானான்.

    லாரி பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சங்களோடு - மண்டி அருகே வந்து நின்றது. எஞ்சின் அணைந்ததும், லாரி டிரைவர் மருதப்பன் கீழே குதித்தான்.

    மண்டி ஓனர் ராமசாமி கேட்டார்:

    என்ன மருதப்பா... லோடு வர இவ்வளவு லேட்?

    லெவல் கிராசிங்ல மாட்டிக்கிட்டேன்.

    பொய் சொல்லாதே! ஒட்டன்சத்திரத்துல ஹால்ட் பண்ணிட்டு... சரோஜா வீட்டுக்குப் போய்ட்டு வந்திருப்பே!

    அட... ஏண்ணே வயித்தெரிச்சலைக் கிளப்பறீங்க? அந்த சரோஜா கள்ளச் சாராய கேஸ்ல மாட்டிக்கிட்டு... மதுரை ஜெயில்ல இருக்கா...

    அப்படியா சங்கதி! சரி... வா... இப்படி வந்து உட்காரு. டீ சாப்பிடறியா?

    வேண்டாம்.

    ஏன்?

    பொள்ளாச்சியிலதான் நானூறு மில்லி அடிச்சேன். சரியான கலக்கல் போலிருக்கு. உடம்பு பூராவும் திமுதிமுன்னு இருக்கு. நான் போய் மண்டிக்குள்ளாற ஓரமா படுத்துக் கட்டையைப் போடறேன். ஏழு மணிக்கு மேல எழுப்பு:

    சரி... போ!

    ராமசாமி, மருதப்பனை மண்டிக்குள்ளே அனுப்பி விட்டு... லாரி அருகே வந்தார். பழனியும் இன்னும் நான்கைந்து பேரும் - லாரியின் உச்சியில் நின்று கயிறுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அண்ணே! லோடுல ரஸ்தாளி இருக்கா?

    இருக்கு!

    எனக்கு இருபது தார் வேணும்...

    தர்றேன்... தர்றேன்... மொதல்ல லோடு இறங்கட்டும். டேய் பழனி! ஜல்தியா இறக்குடா...

    பழனி லாரியின் மேற்பரப்புக் கயிற்றுக் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு - இலைக் கட்டுகளையும் தார்களையும் இறக்க ஆரம்பித்தான்.

    அப்பால... தள்ளி நில்லு... மேல கீழே விழுந்து தொலைக்கப் போவுது. ஒவ்வொரு வாழைத்தாரும் எருமை குட்டி போட்ட மாதிரி செம கனம் கணக்குது.

    சோழவந்தான் ரஸ்தாளின்னா... சும்மாவா?

    டேய் பார்த்துடா... மெதுவா எறக்கு. இப்படி ‘பொத் பொத்’ன்னு போட்டா... காய் நாசமாயிடும்.

    பார்த்துதாண்ணே... எறக்கறேன்... - சொன்ன பழனி, வாழைத்தார்களை எடுத்து எடுத்து... கீழே நின்றிருந்த கூலியாளுக்குக் கடத்தினான்.

    கிட்டத்தட்ட பாதி லாரி லோடு கரைந்திருந்த போது -

    அந்தப் பெரிய வாழைத்தாரை நகர்த்துவதற்காக - அதன் அடித் தண்டைப் பற்றினான்.

    கை பிசுபிசுத்தது.

    திடுக்கிட்டுப் போய் - தண்டை விட்டுவிட்டு - இரண்டு உள்ளங்கைகளையும் உயர்த்திப் பார்த்தான்.

    ரத்தம்!

    சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட், காலை ஏழு மணி.

    ‘டாக்டர்ஸ் அசோஸியேஷன் வெல்கம்ஸ் யூ’ - தங்க நிற எழுத்துக்கள் பொறித்த நீலநிற பேனர் - ஒரு கிராமத்துப் பெண் மாதிரி நாணிக் கோணி - காற்றில் ஆட... லெளஞ்சில் ட்ரை க்ளினர்ஸுக்குப் போய் வந்த சூட்களில் -

    டாக்டர் வர்க்கம் கைகளில் லில்லி மலர் மாலைகளோடு காத்திருந்தது.

    டாக்டர்ஸ் அசோஸியேஷனின் தலைவர் ராமரத்னம் பத்திரிகை நிருபர்களுக்கு மத்தியில் திணறிக் கொண்டிருந்தார்.

    "டாக்டர் சற்குணம் அமெரிக்காவில் ஒரு மாத காலம் தங்கி எய்ட்ஸ் நோயைப் பற்றியும் அதனை எதிர்க்கும் முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்காக இந்திய அரசால் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்.

    அவருடைய அமெரிக்க விஜயம் எந்த அளவுக்கு நமக்கு உபயோகப்படும்

    என்று நினைக்கிறீர்கள்? - ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் கேள்வியைக் கேட்க - அவர் பக்கமாய்த் திரும்பினார் ராமரத்னம்

    எய்ட்ஸ் நோய் இதுவரைக்கும் வெளிநாட்டில் மட்டுமே இருந்த நிலைமாறி - நம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. அதிலும் நம் தமிழ்நாட்டில் அதிகம். இதுவரை நூற்றி ஏழு பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேர் வெளிநாட்டினர். இவர்களையெல்லாம் அரசு ஐஸோலேட்டட் ஏரியாக்களில் வைத்து சிகிச்சையளித்து... அவர்கள் மூலம் மேற்கொண்டு நோய் பரவாமல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நோயைச் சகலவிதங்களிலும் முறியடிக்க - அமெரிக்க டாக்டர்கள் கலந்து ஒரு மெடிசன் ஃபார்முலாவைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி - இந்தியாவிலும் மருந்துகளைத் தயாரிக்கவே - டாக்டர் சற்குணம் அவர்களை அரசு அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.

    அவர் அந்த மெடிக்கல் ஃபார்முலாவோடுதான் வருகிறாரா?

    ஆமாம்...

    அந்த ஃபார்முலாவின் சக்சஸ் பர்சண்டேஜ் எவ்வளவு?

    Enjoying the preview?
    Page 1 of 1