Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Mul Kireedam
Roja Mul Kireedam
Roja Mul Kireedam
Ebook112 pages50 minutes

Roja Mul Kireedam

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Roja Mul Kireedam

Read more from Rajeshkumar

Related to Roja Mul Kireedam

Related ebooks

Related categories

Reviews for Roja Mul Kireedam

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Mul Kireedam - Rajeshkumar

    20

    1

    புஷ்பகிரி வேலாயுதசாமி கோயிலின் மலைகோபுர விளக்கு மட்டும் ஒரு வைரக்கல் மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்க - அந்தப் பகுதி முழுவதும் கரிச்சுரங்கம் மாதிரி இருண்டு கிடந்தது. நடுநிசி வானத்தில் நட்சத்திர குழந்தைகள் மேகக் குவியல்களுக்கு மத்தியில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க - எண்பது சதவீதம் தேய்ந்து போன நிலா வீரியமிழந்து தெரிந்தது. காற்று, மரங்களின் கிளைகளை அசைத்துப் பார்க்க - இருட்டான வயல் பரப்புக்கு நடுவே - அந்த இரண்டு பெண்களும் வேகம் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பேருமே இளம் பெண்கள்.

    இருவரும் வியர்த்திருந்தார்கள். கண்களில் பயம் இருந்தது. நிமிஷத்திற்கொருதரம் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்.

    சொர்ணம்...

    என்ன அகிலா...?

    இப்படி வயலுக்கு குறுக்கால பூந்து போனா... போலீஸ் ஸ்டேஷன் பக்கம்ன்னு சொன்னே...? பதினஞ்சு நிமிஷமா நடக்கிறோம். இன்னும் பொட்டு வெளிச்சத்தைக் காணோமே...

    இனி கொஞ்ச தூரம்தான்

    நாம தப்பிச்சு வந்ததை யாராவது பார்த்திருப்பாங்களா?

    "பார்த்திருக்க சான்ஸேயில்லை...’’

    இவ்வளவு நாளும் எப்படி ஏமாந்து போயிருக்கோம்... பாட்டு, பஜனை, ப்ளாக் போர்டுல எழுதி வைக்கிற பொன்மொழி, அருள் வாக்கு எல்லாமே வேஷம்...

    பேரைப் பாரு தவமணி தேவி...

    பழைய செருப்பை கரைச்சு வெச்ச சாணியில் தொட்டு முச்சந்தியில் அவளை நிக்க வெச்சு உச்சந்தலையில ‘மடேர் மடேர்’ன்னு அடிக்கணும்...

    நீ ஆசைபட்டபடி நாளைக்கே அடிக்கலாம்.

    தொலைவில் லாரி ஒன்று ‘ரொய்ங்ங்’ உறுமிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. சொர்ணம் சொன்னாள்.

    மெயின் ரோட்டை நெருங்கிட்டோம்...

    பார்த்து வா... இந்தப் பக்கம் சேறு... காலை எசகு பிசகா வெச்சுடாதே... முழங்கால் வரைக்கும் உள்ளே போயிடும்...

    அந்த தவமணி தேவியை இந்த சேத்துல போட்டு புரட்டி எடுக்கணும்... அவ இடுப்புல ஓங்கி ஓங்கி மிதிக்கணும்.

    நாளைக்கு செய்யத்தான் போறோம்...

    இருவரும் பிறகு வந்த பத்து நிமிஷங்களில் வயல் வரப்பைக் கடந்து மெயின் ரோட்டின் விளிம்புக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

    போலீஸ் ஸ்டேஷன் இங்கிருந்து எவ்வளவு தூரம்?

    அதோ...! மினுக் மினுக்ன்னு வெளிச்சம் தெரியுதே... அதான் போலீஸ் ஸ்டேஷன்.

    ரொம்ப தூரம் இருக்கும் போலிருக்கு?

    முக்கா கிலோ மீட்டர் இருக்கும்... நடையை எட்டிப் போடு... சீக்கிரமா போய் சேர்ந்துக்கலாம்...

    தினமும் ப்ரேயர் முடிஞ்சதும் அந்த தவமணி தேவி என்ன சொல்லுவா?

    மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

    அந்த சிரிப்பு, பேச்சு, கண்ல தெரியற பாசம் எல்லாமே பொய்யி...

    அவளை நினைச்சாலே பத்திகிட்டு எரியுது...

    அந்த மைல்கல்லு மேல கொஞ்ச நேரம் உட்காருவமா... காலெல்லாம் கெஞ்சுது...

    சாவகாசமா உட்கார்ந்து பெருமூச்சு விடற நேரமா இது...? நடையை எட்டிப் போடு... சீக்கிரமே ஸ்டேஷன் போயிடலாம்...

    இருவரும் பேசிக் கொண்டே - விசுக் விசுக்கென்று வேகமாய் நடந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனின் ‘மினுக் மினுக்’ வெளிச்சம் பெரிதாகிக் கொண்டே வந்தது. போர்டு தெளிவாய் - சமீபத்திய புது பெயிண்டில் பளபளத்தது.

    முத்தூர் காவல் நிலையம்.

    வாசலில் ஒரு பைக் நின்றிருந்தது.

    அப்பாடி! ஒரு வழியா ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்.

    இன்ஸ்பெக்டர்கிட்டே விபரத்தை நீதான் சொல்லணும். எனக்கு போலீஸைப் பார்த்தாலே நாக்கு மேலண்ணத்துல போய் ஒட்டிக்கும்...

    நானே சொல்றேன். வா...

    ஸ்டேஷன் வாசலை மிதித்தபோது - கான்ஸ்டபிள் ஒருவர் மறித்தார்.

    ஏய்... யார் நீங்க...?

    அய்யா! நாங்க இன்ஸ்பெக்டரை பார்க்கணும்...

    என்ன விஷயம்...?

    அதை அவர்கிட்டதாங்க சொல்லணும் அகிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே - உள்ளேயிருந்து அந்த நரைகிராப் இன்ஸ்பெக்டர் எட்டிப் பார்த்தார்.

    வாசல்ல யார் பொன்னுசாமி...?

    ரெண்டு பொண்ணுங்க ஸார். உங்களை பார்க்கணும்னு... வந்திருக்கு...

    உள்ளாற விடு...

    கான்ஸ்டபிள் நகர்ந்து கொள்ள - சொர்ணமும் அகிலாவும் வியர்த்த முகங்களை சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டு உள்ளே போய் அந்த நடுத்தர வயது இன்ஸ்பெக்டரைப் பார்த்து கும்பிட்டார்கள். அவருடைய தலைக்கு மேலே புஷ்பகிரி வேலாயுதசாமியின் படம் மாட்டப்பட்டு மல்லிகைச் சரமொன்று கும்மென்று மணத்துக் கொண்டிருந்தது.

    இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தான் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஃபைலை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்தார். கண்களில் கனிவு இழையோட கேட்டார். வாங்கம்மா... என்ன விஷயம்...?

    அகிலா மறுபடியும் கும்பிட்டாள். அய்யா! நாங்க ரெண்டு பேரும்... மலையடிவாரத்துக்குப் பக்கத்துல இருக்கிற ‘தாய் உள்ளம்’ அநாதை விடுதியைச் சேர்ந்த பெண்கள். முணு மாசத்துக்கு முன்னாடிதான் அந்த அநாதை விடுதியில் வந்து சேர்ந்தோம்...

    ‘‘சரி..."

    அந்த அநாதை விடுதியை நிர்வாகம் பண்ணிட்டு வர்ற தவமணி தேவி அம்மாவை நல்லவங்கன்னு நினைச்சிட்டிருந்தோம். ஆனா...

    தணிகாசலம் நிமிர்ந்தார்.

    ஆனா...?

    அந்த அம்மா ரொம்பவும் மோசமான பொம்பளைங்க... அநாதை விடுதின்னு பேரை வெச்சுகிட்டு விபச்சார விடுதியை நடத்திட்டிருக்கா...

    தணிகாசலம் நாற்காலியினின்று விருட்டென்று எழுந்தார். என்னது... விபச்சார விடுதியா...?

    ஆமாங்கய்யா...! ஒரு மணி நேரத்துக்கு முந்தி இந்தப் பொண்ணு சொர்ணம் பாத்ரூம் போகணும்ன்னு சொல்லி என்னை எழுப்பினா. எந்திரிச்சு ரெண்டு பேரும் போனோம். நாங்க வராந்தா இருட்டுல போய்கிட்டிருக்கும் போதே - வாட்ச்மேன் காம்பெளண்ட் கேட்டை திறக்கிற சத்தமும் - உள்ளே ஒரு கார் வர்ற சத்தமும் கேட்டது. இந்நேரத்துக்கு கார்ல யார் வர்றாங்கன்னு.... யோசிச்சு, அப்படியே நின்னுட்டோம்.

    இன்ஸ்பெக்டர் தணிகாசலம் பதட்டமானார்.

    ம்... சொல்லு.... அப்புறம்...?

    "கார் ஓரமா போய் நின்னதும்... அதிலிருந்து தவமணி தேவியும் ஒரு ஆளும் இறங்கினாங்க. அந்த ஆள் நீட்டா

    Enjoying the preview?
    Page 1 of 1