Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirodu Vilayadu
Uyirodu Vilayadu
Uyirodu Vilayadu
Ebook262 pages2 hours

Uyirodu Vilayadu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100704482
Uyirodu Vilayadu

Read more from Indira Soundarajan

Related to Uyirodu Vilayadu

Related ebooks

Related categories

Reviews for Uyirodu Vilayadu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirodu Vilayadu - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    உயிரோடு விளையாடு

    Uyirodu Vilayadu

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    மொட்டை மாடியில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான் பார்த்தி என்கிற பார்த்திபன். ஆறடி உயரம் - மாநிறம் - சுருட்டைத்தலைமுடி... தோள் பட்டையும் புஜங்களும் செதுக்கியது போல இருக்க, கழுத்து, மார்பில் வியர்வைப் பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.

    காலை மணி எட்டு இருக்கும். சூரியன் அப்போதே அனலைக் கக்கத் தொடங்கிவிட்டான். மனிதர்களின் பூமி, வாகனங்களின் பூமியாக மாறிவிட்டதன் எதிரொலி!

    வியர்த்து வடிய அவன் உடற்பயிற்சி செய்வதை, பக்கத்து மொட்டை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா! அவள் கையில் ஒரு மாத நாவல் இருந்தது. அதில் ஒரு வரி படிப்பதும் திரும்பி அவனைப் பார்ப்பது என்றும் அவளிடம் ஒரு மெல்லிய தவிப்பு. அவள் பார்வை அவ்வப்போது நாலாபுறமும் பார்த்தது. யாராவது தங்களைக் கவனிக்கிறார்களோ என்று அவளிடம் ஒரு மெல்லிய அச்சமும் தெரிந்தது.

    பார்த்திபனிடம் அதெல்லாம் இல்லை. அவன் அவளை கவனிக்கவேயில்லை. அவளோ அவன் கவனிக்க மாட்டானா... என்று தவித்தாள். எப்போதும் வாலிபத்தில் ஆண்பிள்ளைகள்தான் பருவப் பெண்களின் பார்வைக்காக தவித்துப் போய் தண்ணீர் குடிப்பார்கள். இங்கே தலைகீழாக இருந்தது. இந்நிலையில் பிருந்தா அவன் கவனத்தை தன்பக்கம் திருப்பியே தீருவது என்பது போல ஒரு முடிவுக்கு வந்தாள். அந்த மொட்டை மாடியில் ஒரு இடத்தில் சிறிய கல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து அவனை நோக்கி எறிந்தாள். அது அவன் மேல் படாமல் தவறிப்போய் விழுந்தது. அவளுக்குள் அதனால் எரிச்சல் பீறிட்டது.

    இடையில் யாரோ வரும் சத்தம்.

    உடனே அவள் மாத நாவல் படிப்பது போல பாவனை காட்டத் தொடங்கினாள்.

    பார்த்திபனை தேடிக்கொண்டு அவன் தங்கை தேவி தான் வந்திருந்தாள். அவள் கையில் நீராகார மண்கலயம் இருந்தது. அதை பக்குவமாய் பிடித்தபடி வந்திருந்தாள்.

    அண்ணே...

    வெச்சிட்டு போம்மா...

    சீக்கிரமா வாண்ணே... உன் போன் ஒயாம அடிச்சி கிட்டே இருக்குது...

    அடிக்கட்டும், அடிக்கட்டும்... அவன் அவள் முகம் பார்க்காமல் பதில் சொன்னான். தேவியின் பார்வை அப்படியே பக்கத்து மொட்டை மாடி பக்கமாய் பிருந்தா மேல் சென்றது. அவளும் தேவியை பார்க்காத மாதிரி பார்த்தாள். தேவிக்கு புரிந்துவிட்டது.

    அண்ணே...

    என்ன?

    பிருந்தா...

    அதுக்கென்ன...?

    உன்னையே பாத்துக்கிட்டு பாவமா நிக்கிற மாதிரி தெரியுதுண்ணே...

    நீ எதுக்கு அவளைப் பாக்கறே... கீழே போ... உயிரே போனாலும் நான் அவளைப் பார்க்கமாட்டேன். நாமெல்லாம் பிச்சைக்காரங்க இல்லையா?

    அவன் கை கால்களை மடக்கி நீட்டியபடியே சன்னமான குரலில் சோகம் ததும்பிட பேசியதை கேட்ட தேவி, எதுவும் பேசாமல் அங்கிருந்து திரும்பத் தொடங்கினாள்.

    கீழே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள் அன்னம். கண்ணீரே வரவில்லை. அந்த வெங்காயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நவீன ரகம். நிறைய காய்க்கும் ஆனால் வெங்காயத்தின் காரம்தான் இருக்காது!

    இந்த பாழாப்போன வெங்காயத்தை வாங்கிட்டு வந்ததுக்கு பேசாம வந்துருக்கலாம். ஹூம் இது பேர்ல தான் வெங்காயம். உள்ள ஒரு மண்ணுமில்ல என்று அவள் முணுமுணுக்கவும், தேவி அவள் எதிரில் வந்து நின்றாள். ஒரு மாதிரி பார்த்தாள்.

    என்னடி விசயம்... மேல பிருந்தாவை பாத்தியோ...? பளிச்சென்று கேட்டாள்.

    ஆமாம்... அவ பாக்கறது உனக்கும் தெரியுமா...?

    பாக்கறது மட்டுமா... இந்த வீட்டுக்கு வாழ்க்கைப் பட்டுவர அவ துடிச்சுகிட்டு இருக்கா. ஆனா எல்லாம்தான் இங்க கெட்டு குட்டிசுவரால்ல இருக்கு...

    அப்ப, மாமா வீட்டோட நம்ம உறவு அறுந்ததுதானாம்மா...?

    அப்படித்தானே ஒவ்வொரு நாளும் விவகாரம் வளர்ந்து கிட்டே போகுது. நான் என்னத்த பண்ணுவேன். கடனா வாங்கின காசை சீர் செஞ்சதா நினைச்சுக்கோன்னு உன் அப்பா எப்ப சொன்னாரோ அப்பவே எல்லாம் போச்சேடி...

    ஏம்மா, அப்பா அப்படி சொன்னாரு...?

    எல்லாம் கொழுப்புதான்... வேற என்ன?

    நீயே இப்படி சொன்னா எப்படிம்மா?

    இதோ பார்... நீ இப்ப எதுக்கு அந்த குப்பையை கிளற்றே... அது முடிஞ்சுபோன விஷயம். காசு பணம் இருந்தா எல்லாத்தையும் சரி செய்துடலாம். அதான் இல்லாம போயிடிச்சே...? எதைப்பத்தி பேசி என்ன புண்ணியம்?

    -அன்னம் இறுதியாக பணம் காசு என்று அதனிடம் வந்து நின்றாள். வியர்வையைத் துடைத்தபடியே பார்த்திபனும் மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

    சிரமப்பட்டு எஞ்ஜினியரிங் கல்வியை முடித்து விட்டான். ஆனால் நல்ல வேலை கிடைக்கவில்லை. கிடைக்கும் வேலைக்கான சம்பளமோ ஏழாயிரம், எட்டாயிரம் என்று இடிக்கிறது. பார்த்திபனைப் பொருத்தவரையில் அவனுடைய ஒரே லட்சியம், பெரும் பணக்காரனாக ஆவதும், கோடீஸ்வரனாக ஆவதும் தான்... அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் பணம் பணம் என்றுதான் துடித்துக்கொண்டிருக்கிறது.

    காரணம் - அதனால் அவனுக்கு ஏற்பட்ட அவமானம்! அதுவும் சொந்த தாய்மாமனிடமே அந்த அவமானம் ஏற்பட்டு விட்டது. உதவாக்கரை அப்பா என்ற வகையில் பார்த்திபன் பக்கத்திலும் தப்பு இருக்கிறது. அவனைப் படிக்க வைக்க செலவான போது மாமாவானவர் நிறையவே தந்தார். அவர் அள்ளித்தருவதை பார்த்து பார்த்திபனின் அப்பா மூர்த்தி தன் பங்குக்கென்றும் பணம் கேட்க, மாமாவால் மறுக்க முடியவில்லை.

    ஆயிரம் பத்தாயிரம் என்று கொடுத்த தொகை லட்சத்தை தொட்டுவிட்டது. பார்த்திபன் அப்பா மூர்த்தியோ அந்த பணத்தை சூதாட்டத்தில் கொண்டுபோய் தொலைத்துவிட்டார். இது தெரியவும் தான் மாமாவுக்கு ஆத்திரம் வர ஆரம்பித்தது. உதவி செய்வதை நிறுத்தத் தொடங்கினார். ‘சூதாடி குடும்பம் உருப் படாது...’ என்று குத்தலாக பேச ஆரம்பித்தார். சிறுவயதிலேயே அவர் மகள் பிருந்தாவை பார்த்திபனுக்கு கொடுப்பது என்று முடிவாகியிருந்தது. பிருந்தாவும் பார்த்திபன் மேல் தனித்த காதலோடு இருந்தாள். ஆனால் மாமாவின் மன மாற்றம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பிருந்தாவையும் பெண் பார்த்து முடிவு செய்ய வெளியில் இருந்து ஒரு மாப்பிள்ளை வர இருக்கிறான். அதுதான் மாடியில் பிருந்தா தவிக்கவும் காரணம்.

    கீழிறங்கிவந்த மகனை அன்னம் மேலும் கீழுமாய் பார்த்தாள். அவன் முகத்தில் பயிற்சிக் களைப்பை மீறி ஒரு வாட்டம்.

    நீச்சத்தண்ணி குடிச்சியா கண்ணு...

    உம்

    இனி மாடிப்பக்கம் போவாதே... ஆமா, உன் சினேகிதன் ஒருத்தன் வீடு கட்டி குடிபோயிருக்கான். போய் பார்த்துட்டு வரணும்னியே... எப்ப போகப் போறே...?

    ஏம்மா... நான் இன்னிக்கு வீட்ல இருக்கக்கூடாதா...? வெளிய போறது நல்லதுன்னு படுதா? பார்த்திபன் பாய்ன்ட்டாக கேட்டான்.

    அது வந்துப்பா... அன்னமும் வழிய ஆரம்பித்தாள்.

    என்ன விஷயம்... பிருந்தாவை பொண்ணு பாக்க வராங்களா?

    ஆமாம்பா...

    அதுக்கும் நான் இங்க இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?

    அது... அது...

    சொல்லும்மா...

    அவ நீ இருந்தா இங்க வந்தாலும் வந்துடுவாப்பா... ஒரு மஞ்சக் கயித்தை கொடுத்து உன்ன தன் கழுத்துல கட்டச் சொன்னான்னு வை...

    அப்படியெல்லாம் கூடவா நடக்கும்?

    அவ சொல்லியிருக்கா அப்படி...!

    அந்த கழுதைக்கு இந்த வேலைவெட்டி இல்லாதவன் மேல அவ்வளவு பாசமா?

    என்னமோ காலமெல்லாம் இப்படியே இருக்கப் போறவன் மாதிரி பேசறியேடா... உன் ஜாதகப்படி நீ குபேரனா மாறப்போற காலம்னு ஒண்ணு இருக்குடா...

    அம்மா... இந்த ஜாதகம், ஜோசியம்னுல்லாம் என்கிட்ட பேசாதே, ஒருவேளை நீ சொல்ற மாதிரி இனிமேல் வரும் காலத்துல நான் குபேரனா ஆனாலும் இப்ப என் மனசுல இருக்கற ரணம் ஆறாதும்மா...

    பாத்தியா... உனக்கு வாலிப வயசு. இப்ப இப்படித் தாண்டா பேசுவே... ஆனா வாழ்க்கை மாறிகிட்டே இருக்கற ஒரு விஷயம் போகப்போக எல்லாம் சரியாயிடும். சொந்தங்களுக்குள்ள சண்டை போட்டுக்காத குடும்பமே உலகத்துல கிடையாதுடா...

    நான் சண்டை போட்டுகிட்டதுக்காக கூட வருத்தப்படலம்மா... இன்னமும் திருந்தாத உன் புருஷனை நினைச்சு தான் வருத்தப்பட்றேன். ஒருத்தனுக்கு அவன் தாய் தந்தை தான் பெரிய செல்வம். ஆனா என் விஷயத்துல அப்பாங்கற ஸ்தானம் எவ்வளவு பெரிய ஓட்டைன்னு உனக்கே தெரியுமே...?

    உனக்கு அப்பான்னா எனக்கு புருஷன்டா... உன்னவிட எனக்குத்தாண்டா இம்மட்டுல அதிக வருத்தம். என்னடா செய்ய... இது குடியும் கூத்துமான நாடாவே இருக்கு... எல்லாம் நம்ம தலையெழுத்துடா... தலையெழுத்து...

    தலையெழுத்தாவது, கால் எழுத்தாவது... எல்லாத்தையும் மாத்திக்காட்றேன் பார்...

    நீ என்னடா சொல்றே?

    நான் எதையும் சொல்லப்போறவன் இல்லம்மா, செய்யப் போறவன்...

    நீ பேசறதே புரியலடா எனக்கு!

    போகப்போக புரியும். நீ போய் உன் வேலையைப்பார். நான் நீ சொன்னமாதிரி என் நண்பன் வீட்டைப்போய் பாத்துட்டு வரேன்.

    - பார்த்திபன் பேசிக்கொண்டே பாத்ரூம் நோக்கி செல்லத் தொடங்கினான். அப்போது அவனை அவன் கைபேசி அழைத்தது. திரும்பி வந்து அதை எடுத்தான். மறுமுனையில் இருந்து சொரசொரப்பான குரல்...

    பார்த்திபா... அய்யா இன்னிக்கு வந்துட்டாருப்பா...

    சந்தோஷம், அப்ப நான் எப்ப வரட்டும்?

    நீ எப்ப வேணாவா. அய்யா இன்னிக்கு வீட்லயேதான் இருக்கார். எங்கேயும் போகல அவர்...

    நல்லது. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.

    வரும்போது தெளிவான முடிவோடுவா. அவருக்கு எதிரா எதையும் பேசாதே. உனக்கு அவர் தரப்போறது உயிருக்கு ஆபத்தான வேலைதான். அதேசமயம் துணிஞ்சு நீ சாதிச்சிட்டா, நீ வாழ்க்கைல ஜெயிச்சிடுவே...

    நான் எப்பவோ செத்துட்டேங்க... இப்ப நான் சுமந்துகிட்டு திரியறது என் பிணத்தைத்தான். இப்ப எனக்கு ஒரே லட்சியம் தான். நான் திரும்ப செத்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவை பணம்! அதுலபட்ட கடன், படாத கடன்னு எல்லாத்தையும் அடைச்சிட்டு அந்த பணத்தால் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு...

    - என்று மிக உருக்கமாகவும், உக்ரமாகவும் பேசிவிட்டு திரும்ப பாத்ரூம் நோக்கி செல்லத் தொடங்கியவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் அன்னம்.

    அவன் யாரிடம் பேசினான்? எதற்காக இப்படி பேசினான்? என்கிற கேள்விகளும் அவளுக்குள் ஓடத் தொடங்கின.

    ஒரு பதினைந்து நிமிட அளவில் குளித்து முடித்தவனாக, தலையை துவட்டிக்கொண்டு வந்தவனிடம் அன்னம் கேட்டாள்.

    பார்த்தி யாருப்பா அது போன்ல?

    ஏம்மா, நான் பேசுதை எல்லாம் கேட்ட உடனேயே பயம் வந்துடிச்சா?

    எப்பவும் இப்படி வெடுக்குன்னே பேசினா எப்படிப்பா...?

    நான் அப்படித்தான்மா பேசுவேன். என்னை எதுவும் கேட்காதே. ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ. நான் நல்லா வாழ்ந்து காட்டிட்டுத்தான் நிஜமா சாவேன். நீ போ... போய் உன் வேலைய பார்...

    - என்று பேண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.

    தெருவில் இறங்கி நடந்தவனை மாடியில் இருந்து கண்ணீரோடு பார்த்தபடியே இருந்தாள் பிருந்தா!

    அவன் உருவம் கண்களை விட்டு மறையும்வரை பார்த்தவள் திரும்பி வந்து தன் அறைக்கதவை தாழிட்டுக் கொள்ளப் போனாள். அப்போது ஓடி வந்தாள் அவள் தங்கை செல்வி.

    என்ன டி?

    மாப்ள வீட்டுக்காரங்க புறப்பட்டுட்டாங்களாம்...

    அதனால் என்ன?

    உன்ன நினைச்சா பாவமா இருக்குக்கா. பார்த்தி அத்தான் கூட பேசினியா?

    ஊஹும்...

    என்னக்கா பண்ணப் போறே...?

    அத்தான் கூட பேசாட்டி என்னடி... வந்துகிட்டிருக்கற மாப்ளை கிட்ட பேசறேன்...

    என்னக்கா சொல்றே?

    நீ போய் உன் வேலைய பார்... என் விருப்பப்படிதான் கல்யாணம் நடக்கும். என் புருஷன் பார்த்திபன் அத்தான் தான். அதை யாராலயும் மாத்த முடியாது.

    புரியுதுக்கா... ரோஜா சினிமா படத்துல வர்ற மாதிரி மாப்ள கிட்ட பேசி அவர் வாயால உன்னை பிடிக்கலேன்னு சொல்ல வைக்கப் போறியா...?

    பரவாயில்ல... நீ கூட கரெக்டா கெஸ் பண்றேடி...

    இந்த மாப்ள அந்த அரவிந்த்சாமி மாதிரி இல்லாட்டி...?

    வாய வெச்சிகிட்டு சும்மா இருடி...

    ஓ.கே... ஓ.கே... ஆல் த பெஸ்ட்...

    - செல்வி அரை மனதாகத்தான் சொன்னாள்.

    நேரமும் உருளத் தொடங்கியது. பிருந்தா தவித்துத் தவித்து தத்தளித்தபடியே இருக்க, மாப்பிள்ளை வீட்டாரின் கார் சப்தமும் கேட்டது.

    பக்கத்து வீடாகையால் அன்னமும் ஆவலை அடக்க முடியாமல் ஜன்னல் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியே பார்த்திட, அவளருகில் தேவியும் வந்து நின்று கொண்டாள்.

    இருவர் முகத்திலும் இனம்புரியாத சோகம்.

    வெளியே கார் கதவைத் திறந்துகொண்டு எல்லோரும் இறங்கிட, மாப்பிள்ளையும் இறங்கினான்.

    மாப்பிள்ளையை பார்த்த நொடி அன்னம், தேவி இருவரும் திகைக்க, அங்கே பிருந்தாவின் தாய் தந்தையோடு தங்கை செல்வி உட்பட சகலரும் விதிர்த்துப்போக, மாப்பிள்ளை கூலிங் கிளாசை கழட்டினான். முகம் இப்போது முழுமையாக தெரிந்தது. அது பார்த்திபன்!

    2

    காரில் இருந்து இறங்கிய பார்த்திபனைப் பார்த்த பிருந்தாவின் அப்பாவான ராமதுரைக்கு பகீர் என்றது. அதற்கு மேல் இருந்தது பிருந்தாவின் அம்மாவான பத்மாவிற்கு. செல்விக்கோ இன்பத் திகைப்பு.

    திகைப்பு அவர்களுக்கு மட்டுமா...?

    இந்தப் பக்கமாய் பார்த்திபனின் அம்மாவுக்கும், தங்கை தேவிக்கும் கூடத்தான்!

    பார்த்திபன் அலட்சியமாக மாமா ராமதுரையைப் பார்த்தான். அவரிடம் அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பம்.

    பார்த்திபனோடு சேர்ந்து காரில் இருந்து இறங்கியிருந்த வயதான தம்பதிகளான ரங்கநாதன். சந்திரா என்கிற இருவரும் பளபளப்பான உடையில் ஜொலித்தபடியே வீட்டினுள் நுழையக் காலெடுத்தனர். அவர்களோடு வந்திருந்த ஒருவர் ஒரு தட்டு நிறைய பூ, பழம் சகிதம் நகைப்பெட்டி ஒன்றும் வெளியே தெரியும்படியாக உள்நுழைய தயாராக நின்றார். அவர்கள் இறங்கிக்கொண்ட நிலையில் காரும் சற்று ஓரமாக நிற்பதற்காக ஒதுங்கிக்கொண்டது.

    மாமா ராமதுரையிடம் மட்டும் திகைப்பு விலகியிராத நிலையில் ரங்கநாதன் பேசினார்.

    என்னங்க திகைச்சுப்போய் நின்னுட்டீங்க... பார்த்திபனை நீங்க எதிர்பார்க்கல இல்ல? பார்த்திபன் யாரோ இல்ல... என் வளர்ப்பு மகன். சட்டப்பூர்வமான வளர்ப்பு மகன். என் சொத்தெல்லாம் எங்களுக்குப் பிறகு பார்த்திபனுக்குத்தான். மத்த விஷயங்கள் உள்ளே போய் உட்கார்ந்து பேசிக்கலாமா? என்றார்.

    அதற்குள் அக்கம் பக்கமும் திரளாய் திரண்டுவிட ராமதுரை வாங்க... வாங்க என்று உள் நுழைந்தார்.

    பக்கத்தில் தன் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு அதைக் கேட்டிருந்த அன்னத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்தது.

    அவளது ஒரே பிள்ளையான பார்த்திபனை அந்த பணக்காரரான ரங்கநாதன் தன் வளர்ப்பு மகன் என்றால், அவளுக்கு இனிக்குமா என்ன?

    செல்விக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1